"ஹலோ தலைவரே, புதுவை பெண் அமைச்சர் சந்திரபிரியங்காவின் ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறதே.''”
"ஆமாம்பா, ஒரு பெண் அமைச்சரே தனக்கு சாதி ரீதியிலான தாக்குதலும் பாலின ரீதியிலான டார்ச்சரும் இருப்பதாகச் சொல்லி அதிரவைத்திருக் கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, புதுவை முதல்வர் ரெங்கசாமியின் குட்புக்கில் இருந்த அமைச்சர் சந்திரபிரியங்காவே, தனக்கு சாதி ரீதியான சங்கடங்கள் தரப்படுவதாகவும், பாலின ரீதியான நெருக்கடிகள் தொடர்வதாகவும் கூறி ராஜினாமா செய்திருப்பது, அகில இந்திய அளவில் பகீரைக் கிளப்பி இருக்கிறது. அண்மைக் காலமாகவே, சந்திரபிரியங்காவை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஒரு வணிகப் பிர முகரை அவர் நாற்காலியில் அமர்த்த வேண் டும் என்று அங்கு பவரை கையில் வைத் திருக்கும் பா.ஜ.க. காய் நகர்த்திவந்தது. இதனால், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மூலம் பா.ஜ.க.வில் இணையும் முயற்சியில் இருந் தார் சந்திரபிரியங்கா. இருந் தும் இவரை நீக்குவதற்கான அழுத்தத்தை பா.ஜ.க. தரப்பு முதல்வர் ரெங்கசாமிக்குக் கொடுத்துவந்த நிலையில் தான், சந்திரபிரியங்கா மேற் படியான பரபர குற்றச் சாட்டுகளுடன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக் கிறார். இது குறித்த விவா தம் சூடாக எழுந்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தலித் விரோதப் போக்கு இவர் விசயத்தில் வெளியே வந் திருப்பதாக எதிர்க்கட்சி கள் இப்போது குற்றம் சுமத்துகின்றன.''”
"இரட்டை இலையை முடக்குவோம் என்று கூறி ஓ.பி.எஸ் தரப்பு, எடப்பாடி தரப்பின் நிம்மதியை குலைத்து வருகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.கவின். தலையெழுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. எடப்பாடி நடத்திய பொதுக்குழுவின் தீர்மானங்கள் செல்லாது என்று ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கில், எடப்பாடி விளக்கம் அளிக்கவேண்டும் என்று அங்குள்ள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக் கிறதாம். இப்போது நீதிமன்றங்கள் எந்தமாதிரி யான தீர்ப்பைத் தரும் என்று அனுமானிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை நாங்கள் முடக்கிவிடுவோம். இதன்மூலம் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்று ஓ.பி.எஸ். தரப்பு இப்போது அழுத்தமாகச் சொல்லத் தொடங்கி இருக்கிறது. இதனால், உள்ளபடியே இரட்டை இலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எடப்பாடி தூக்கத்தைத் தொலைத்திருக்கிறாராம்.''”
"அ.தி.மு.க. நியமன விவகாரத்தில் நீதிபதி ஒருவர் தலையிட்டதாக செய்தி வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. மா.செ.க்கள் நியமனம் தொடர்பாக, அங்கே ஒரு சுவாரஸ்ய மான செய்தி உலவுகிறது. அதாவது, மா.செ. பதவி கிடைக்காத கட்சிப் பிரமுகர்கள் சிலர், எடப் பாடியை நேரில் சந்தித்து, அதுகுறித்து தங்கள் ஆதங்கத்தை அவரிடம் கொட்டித் தீர்த்திருக் கிறார்கள். அப்போது அவர்களிடம் பேசிய எடப்பாடி, "கட்சி மா.செ.க்கள் நியமனத்தைக் கூட என்னால் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. நான் ஒரு பெரிய நீதிபதியின் பேச்சைக்கேட்டு சிலரை மா.செ.க்களாக நியமிக்கவேண்டி இருந்தது. அவர் எனக்கு செய்த சட்டரீதியான உதவிக்காக, நான் அவர் சொல்வதை எல்லாம் கேட்க நேர்ந் தது'’ என்று சொல்லி இருக்கிறார். இதைக்கேட்ட அந்தப் பிரமுகர்கள், கட்சி நியமன விவகாரத்தில் நீதிபதியின் பரிந்துரையா? என ஆச்சரியத்தில் வாயைப் பிளந்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த நீதிபதி விவகாரம் வீதிக்கு வந்திருக்கிறது.''”
"ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் தி.மு.க.வைக் குறிவைத்துப் பாய்கிறதே?''”
"தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு தேர்தல் நிதி கொடுத்து வருகிறவர்களைக் குறிவைத்து அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் ரெய்டு நடவடிக்கைகளில் இறங்கிவருகின்றன. அந்த வகையில்தான் ஜெகத்ரட்சகனும் குறிவைக்கப்பட் டார். இதேபோல் தி.மு.க. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 வகை சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியிருக் கிறது. தி.மு.க.வுக்கு நெருக்கமான மணல் மற்றும் ஜல்லி சப்ளையர்களும் குறி வைக்கப்பட்டிருக் கிறார்கள். இப்படி தி.மு.க.வின் தேர்தல் பணிகளுக்கு பக்க பலமாக இருப்பவர்களை எல்லாம் முடக்கும் நோக்கத்தில், மோடி அரசு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது என்று புகார் தெரிவிக் கிறார்கள் தொழில்துறை பிரமுகர்கள்.''’
"முதல்வர் ஸ்டாலினை பா.ம.க. தலைவர் அன்புமணி கோட்டையில் சந்தித்திருக்கிறாரே?''”
"அன்புமணிக்கு கடந்த 9ஆம் தேதி பிறந்த நாள் என்பதால், அன்று முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அவரை அன்போடு வரவேற்ற ஸ்டாலின், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது, எங்கள் வன்னியர் சமூகத் திற்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு சட் டத்தை, நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற் றித் தாருங்கள் என்றபடி கோரிக்கைக் கடிதத்தை யும் அன்புமணி, ஸ்டாலினிடம் கொடுத்தார். கொடுத்துவிட்டு, இந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தால் உங்களையும் தி.மு.க.வையும் வன்னியர் சமூகம் மறக்காது என்று சொல்லிவிட்டு அன்புமணி கிளம்பியிருக்கிறார்.''”
"ஆனால் இந்தக் கூட்டத்தொடரில் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லையே?''”
’"நடப்புக் கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது. இதில் பா.ம.க. அன்புமணியின் கோரிக்கை பேரவையில் கொண்டுவரப்படவில்லை. காரணம், இது குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் ஆலோசித்த போது, இந்த இடஒதுக்கீட்டு விவகாரத்தை நாம் கிடப்பில் போடுவதுதான் நல்லது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத் தால், ஒவ்வொரு சமூகமும் தங்களுக் கும் உள் இடஒதுக்கீடு கேட்டுக் கொடி பிடித்து, நெருக்கடியைக் கொடுக்கும். அதையெல்லாம் எப்படி நாம் நிறைவேற்ற முடியும்? இது தேர்தல் காலம் என்பதால் இதில் அவசரம் காட்டவேண்டாம் என்று அவர்கள் எடுத்துச் சொல்ல, முதல்வர் அமைதியாகி விட்டாராம்.''”
"தே.மு.தி.க. நிர்வாகிகள் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்திருக்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, தே.மு.தி.க.வின் மாநில நிர்வாகி கள் மற்றும் மா.செ.க்கள் சிலரை அழைத்து, தேர்தல் தொடர் பாக ஆலோசித்திருக்கிறார், அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா. குறிப்பாக, பூத் கமிட்டிகளை உருவாக்கும் முயற்சி யில் இறங்கிவிட்டீர்களா? என அவர்களிடம் பிரேமலதா விசாரித்தார். இதைத் தொடர்ந்து கூட்டணி குறித்த ஆலோ சனை நடந்திருக்கிறது. அப்போது பேசிய கட்சி நிர்வாகிகள், "தனித்துப் போட்டி என்கிற முடிவை மட்டும் எடுத்துவிடா தீர்கள். போட்டி போட நம் கட்சியில் யாருமே முன்வரமாட் டார்கள். ஏனெனில் யாரிடமும் தேர்தல் செலவுகளை கவனிக்கும் அளவிற்கு வசதி இல்லை. சட்டமன்றத் தேர்தல் என்றாலாவது எப்படியாவது சமாளிக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் வருவது எம்.பி. தேர்தல். இதற்கு செலவு செய்யும் தெம்பு நம் ஆட்களிடம் இல்லை' என்று சொல்லியிருக்கிறார் கள். இதைக்கேட்ட பிரேமலதா, "தனித்துப் போட்டி என்பதில் எனக்கும் விருப்பம் இல்லை. ஆனால், தி.மு.க. கூட்டணியில் சேரலாம் எனில் நம்மை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அ.தி.மு.க.வும் நம்மைப் புறக்கணிக்கிறது. பா.ஜ.க.வுடனாவது கூட்டணி வைக்கலாம் என்று கவர்னரிடமும் பேசினேன். அதுவும் பலிக்கவில்லை. நமக்கு எந்தக் கதவு திறக்கும் என்று தெரியவில்லை'’என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.''”
"கடைசியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் என்ன சொன்னார்களாம்?''”
"கவர்னர் மூலம் பா.ஜ.க.வை நாம் அணுக நினைத்ததே தவறு. அவர் சரியான சாய்ஸ் இல்லை. அதனால் இடைத்தரகர் கள் எவரையும் நம்பாமல், நீங்களே டெல்லிக்கு சென்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டாவையும் நேரடியாகச் சந்தித்துப் பேசுங்கள். அப்போதுதான் நமக்கு பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று கட்சி நிர்வாகி கள் பிரேமலதாவிடம் சொல்லி இருக் கிறார்கள். அவர்களில் சிலர், பா.ஜ.க. வும் வேஸ்ட்டுதான். அ.தி.மு.க. கூட் டணிக்கு முயலலாம். அதனால் நீங்கள் எடப்பாடியை நேரில் ஒருமுறை சந்தி யுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார் களாம். இதனால் பிரேமலதா, குழப்பத் தில் இருக்கிறாராம். இதற்கிடையே, பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ், இரண்டு கட்சியையும் நாம் சம தூரத்தில் வைக்கலாம். இப்போதைக்கு 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். தேர்தல் முடியட்டும் அதன் முடிவுகளை பொறுத்து நாம் முடிவெடுக்கலாம் என, தன் சகோதரியிடம் அறிவுறுத்தி இருக்கிறாராம்.''
"நெல்லை மேயர் சிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கிவருகிறாரே?''”
"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டைப் பகுதியில் சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பிலான 540 கடைகள் கொண்ட நவீன அடுக்குமாடி கட்டிடத்தை கட்டிவந்த ஜி.வி. கன்ஸ்ட் ரக்சன்ஸ் என்ற நிறுவனத்திடம், நெல்லை மேயர் சரவணன் கையூட்டுப் பெற்றதாக வீடியோக்களும், ஆடியோக் களும் வெளியாகி பரபரப்பானது. இதைத் தொடர்ந்து அறிவா லயத்தால் அவர் கடுமையாகக் கண்டிக்கப்பட் டார். இப்படி யான சூழலில், இந்த ஊழல் மேயர் எங்களுக்கு வேண் டாம் என தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். நெல்லைக்கு விசிட் அடித்த அமைச்சர் நேருவோ, மேயர் சரவணனைக் கூப்பிட்டு டோஸ் விட்டு எச்சரித்தார். அதேபோல் அவ ருக்கு எதிராகக் கொடி பிடித்த கவுன் சிலர்களை அழைத்து "இனிமேல் ஒழுங்கா இருப்பார்'’என சமாதானப் படுத்திவிட்டுச் சென்றார். இந்த நிலை யில் கார்ப்பரேசன் பெண் அதிகாரி ஒருவர், மேயர் தனக்கு பாலியல் நோக்கில் டார்ச்சர் கொடுப்பதாக பிரச்சினை கிளப்ப, இது நெல்லையை சூடாக்கி இருக்கிறது.''”
"காவல்துறை அதிகாரிகள் மாற்றம் நடந்திருக்கிறதே?''”
"சிவில் சப்ளை சி.ஐ.டி.யாக இருந்த வன்னியபெருமாள் மீது ஏகத்துக் கும் கிளம்பிய புகார்கள் குறித்து நக்கீரன் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறது. இப்போது காவல்துறை மாற்றத்தின் போது, வன்னியபெருமாள் மாற்றப்பட்டு அவர் இடத்தில் ஜோசி நிர்மல்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் நீண்ட நாட்களாக காலியாக இருந்த நெல்லை கமிஷனர் நாற்காலியில் மகேஸ்வரி அமரவைக்கப்பட்டிருக்கிறார். எடப்பாடியின் செக்யூரிட்டி அதிகாரி யாக இருந்த சுரேஷ்குமார், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்தார். இவ ரும் இப்போது மாற்றப்பட்டிருக்கிறார். டேவிட்சன் தேவஆசிர்வாதத்திற்கு நெருக்கமான தென்காசி எஸ்.பி. சாம்ஸனும் மாற்றப்பட்டிருக்கிறார். இந்த மாற்றங்களை காவல்துறையே உற்சாகமாக வரவேற்கிறதாம்.''”
"மணல் திருட்டுக்கு உதவிய அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, மணல் நிறுவன அதிபர்களைக் குறிவைத்து அண்மையில் அதிரடி ரெய்டு நடவடிக்கைகள் பாய்ந்த நிலையில், தற்போது அவர்களின் மணல் குவாரிகள் கோமா நிலைக்குச் சென்றிருக்கின்றன. இந்த நிலையில், கனிம வளத்துறையின் திருச்சி அடிஷனல் டைரக்டர் பாலசுப்பிர மணியனும், திண்டுக்கல் அடிஷனல் டைரக்டர் மாரியம்மாளும் சட்டவிரோதமாக மணல் திருடும் ஒரு கும்பலுக்கு உதவியாக இருந்து, அவர்களை ஊக்குவிப்பதாக முதல்வர் அலுவலகத் துக்கு ஏகத்துக்கும் புகார்கள் சென்றன. இது குறித்து ரகசிய மாக விசாரிக்கப்பட்ட நிலையில், மணல் திருடுவது உறுதி யானது. இதைத் தொடர்ந்து அந்த இரண்டு அதிகாரிகளும் தற்போது கடுமையாக எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.''”
"மதுபான பார் அசோசியேசன் நிர்வாகிகளுடன் டாஸ்மாக் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறதே?''”
’"உண்மைதாங்க தலைவரே, டாஸ்மாக் கடைகளுக் கான பார்களை முறைப்படி டெண்டர் அறிவித்து நடத்த வேண்டும் என்று, கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், டெண்டரில் அதிக தொகை கோட் பண்ணுகிறவர்களிடம் பார் நடத்துவதற்கான என்.ஓ.சி. இல்லை எனில், அதிகத் தொகைக்கு டெண்டரை கேட்டவர் களில் என்.ஓ.சி. வைத்திருக்கும் அடுத்த லெவல் நபர்களுக்கு பார் லைசன்ஸ் ஒதுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதன் அடிப்படையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள பார் அசோசியேசன் நிர்வாகிகளை அழைத்து, டாஸ்மாக் அதிகாரிகள் விவாதித்தனர். அப்போது, அதிக தொகையை கோட் செய்தவர்களிடம் என்.ஓ.சி. இல்லை என்றால், அதற்கு அடுத்து வருகிறவர்களிடம் என்.ஓ.சி. இருக்கும் பட்சத்தில், அவர்களில் முதல் நபர் கோட் செய்த தொகையை ஏற்க முன்வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதை அசோசியேசன் தரப்பு ஏற்க மறுத்ததால், டெண்டரையே 3 மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்போகிறோம் என்று டாஸ்மாக் தரப்பு கறாராகச் சொல்லிவிட்டதாம்.''”
"நானும் இது தொடர்பான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பார் டெண்டர் தொடர்பாக முடிவு எட்டப்படாத நிலையில், 3 மாத காலத் திற்கு டெண்டர் ஒத்திவைக்கப்பட இருக்கிறது. இந்த இடைப்பட்ட நாட்களில், அசோசியேசன் நிர்வாகிகளைக் கொண்டு லைசென்ஸ் இல்லாம லேயே பார்களை நடத்த வைத்து, அதன் மூலம் கமிஷன் வசூலிக்க, அதிகாரிகளும் ஒரு சில தி.மு.க. பிரமுகர்களும் திட்டமிடுகிறார்களாம். இதையறிந்த பார் சங்கத்தினர், இது குறித்து நீதிமன்றத்தில் முறையிடலாமா? என்று ஆலோசித்து வருகிறார்கள்.''”