"ஹலோ தலைவரே, பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே, ஒருவழியாக புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடந்து முடிஞ்சிருக்கு.''”
"ஆமாம்பா, அங்கே நாட்டப்பட்டிருக்கும் நம் தமிழகத்தின் செங்கோல் பற்றி ஒரு பின்னணிக் கதையே இருக்குதே?''
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் 1947-ல், செய்து வழங்கிய அந்த செங்கோல், இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக அன்றைய பிரதமர் நேருவின் கைகளில் தரப்பட்ட சிறப்புக்குரி யது. அதை ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் சைவ சித்தாந்தம் கொண்ட ஒரு டீம், நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்கான முயற்சியில் இறங்கியது. அதற்குக் கைகொடுத்தவர் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராம். இதுபற்றி அவர் பிரதமர் மோடியிடம் நயமாக எடுத்துச் சொல்ல, மோடியும் இதில் ஆர்வமாகிவிட்டார். இதன்படிதான் அன்று இந்த வைபவத்தில் முக்கிய இடம்பெற்ற அதே தருமபுர ஆதீனத் தின் முன்னிலையில், ஏனைய நம் தமிழக ஆதீனங்கள் மனமுருகி ‘"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி'’ என்கிற ஞானசம்பந்தரின் திருவாசகப் பாடலைப் பாட, மோடியிடம் அந்த செங்கோல் தரப்பட்டு, கோலாகலமாக நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.''”
"தமிழக ஆதீனங்கள் இதில் முக்கியத்துவம் பெறக் கூடாதுன்னு ஒரு சிலர் வலை பின்னினாங்களே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த செங்கோல் விவகாரம் காதுக்கு வந்ததுமே, காஞ்சியிலும், பூரியிலும், சிருங்கேரியிலும் இருக்கும் பிராமண சங்கராச்சாரியார்களின் முன்னிலையில்தான் அந்த நிகழ்ச்சி நடக்கவேண்டும் என்றும், அதிலும் காஞ்சி விஜயேந்திரர்தான் தன் கைகளால் பிரதம ரிடம் கொடுக்கவேண்டும் என்றும், பா.ஜ.க. பிரமுக ரான பி.எல்.சந்தோஷ் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தரப்பு கடும் முயற்சியில் இறங்குச்சு. இதற்காக ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மூலமும் காய் நகர்த்தப்பட்டது. எனினும், இதில் நிர்மலா சீதாராமனை மீறி முடிவெடுக்க பிரதமர் தரப்பு விரும்பவில்லை. ஜக்கியையும் சங்கராச்சாரி யார்களையும் அந்த விழாவுக்கு அழையுங்கள் என்று ஆடிட்டர் தரப்பு கொடுத்த அழுத்தத்தை ஏற்காத மோடி, இவர்கள் அனைவருக்கும் விழாவுக் கான அழைப்பைக் கூட முறையாக அனுப்பவில்லை யாம். இதில் அவாள் தரப்பு அதிர்ந்துபோயிருக்கு.''’
"அப்ப ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் சைவத் திருமுறை டீம்தான் இதில் வெற்றி பெற்றி ருக்குன்னு சொல்லு.''”
"ஆமாங்க தலைவரே, இதில் தமிழக ஆதீனங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை கோவையில் இருக்கும் இன்னொரு சாமியார் தான் முன்னெடுத்தாராம். ஆதீனங்களில் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவரான மதுரை ஆதீனம், ஏறத்தாழ ஆர்.எஸ்.எஸ்.வாதியாகவே மாறிவிட்டா
"ஹலோ தலைவரே, பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே, ஒருவழியாக புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடந்து முடிஞ்சிருக்கு.''”
"ஆமாம்பா, அங்கே நாட்டப்பட்டிருக்கும் நம் தமிழகத்தின் செங்கோல் பற்றி ஒரு பின்னணிக் கதையே இருக்குதே?''
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் 1947-ல், செய்து வழங்கிய அந்த செங்கோல், இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக அன்றைய பிரதமர் நேருவின் கைகளில் தரப்பட்ட சிறப்புக்குரி யது. அதை ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் சைவ சித்தாந்தம் கொண்ட ஒரு டீம், நாடாளுமன்றத்தில் நிறுவுவதற்கான முயற்சியில் இறங்கியது. அதற்குக் கைகொடுத்தவர் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராம். இதுபற்றி அவர் பிரதமர் மோடியிடம் நயமாக எடுத்துச் சொல்ல, மோடியும் இதில் ஆர்வமாகிவிட்டார். இதன்படிதான் அன்று இந்த வைபவத்தில் முக்கிய இடம்பெற்ற அதே தருமபுர ஆதீனத் தின் முன்னிலையில், ஏனைய நம் தமிழக ஆதீனங்கள் மனமுருகி ‘"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி'’ என்கிற ஞானசம்பந்தரின் திருவாசகப் பாடலைப் பாட, மோடியிடம் அந்த செங்கோல் தரப்பட்டு, கோலாகலமாக நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.''”
"தமிழக ஆதீனங்கள் இதில் முக்கியத்துவம் பெறக் கூடாதுன்னு ஒரு சிலர் வலை பின்னினாங்களே?''”
"ஆமாங்க தலைவரே, இந்த செங்கோல் விவகாரம் காதுக்கு வந்ததுமே, காஞ்சியிலும், பூரியிலும், சிருங்கேரியிலும் இருக்கும் பிராமண சங்கராச்சாரியார்களின் முன்னிலையில்தான் அந்த நிகழ்ச்சி நடக்கவேண்டும் என்றும், அதிலும் காஞ்சி விஜயேந்திரர்தான் தன் கைகளால் பிரதம ரிடம் கொடுக்கவேண்டும் என்றும், பா.ஜ.க. பிரமுக ரான பி.எல்.சந்தோஷ் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தரப்பு கடும் முயற்சியில் இறங்குச்சு. இதற்காக ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மூலமும் காய் நகர்த்தப்பட்டது. எனினும், இதில் நிர்மலா சீதாராமனை மீறி முடிவெடுக்க பிரதமர் தரப்பு விரும்பவில்லை. ஜக்கியையும் சங்கராச்சாரி யார்களையும் அந்த விழாவுக்கு அழையுங்கள் என்று ஆடிட்டர் தரப்பு கொடுத்த அழுத்தத்தை ஏற்காத மோடி, இவர்கள் அனைவருக்கும் விழாவுக் கான அழைப்பைக் கூட முறையாக அனுப்பவில்லை யாம். இதில் அவாள் தரப்பு அதிர்ந்துபோயிருக்கு.''’
"அப்ப ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் சைவத் திருமுறை டீம்தான் இதில் வெற்றி பெற்றி ருக்குன்னு சொல்லு.''”
"ஆமாங்க தலைவரே, இதில் தமிழக ஆதீனங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை கோவையில் இருக்கும் இன்னொரு சாமியார் தான் முன்னெடுத்தாராம். ஆதீனங்களில் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவரான மதுரை ஆதீனம், ஏறத்தாழ ஆர்.எஸ்.எஸ்.வாதியாகவே மாறிவிட்டார் என்கிறார்கள். பிரதமர் அலுவலகமே பி.எல். சந்ஷோஷ் தரப்பிடம், "நீங்கள் வக்காலத்து வாங்கும் ஜக்கி, உண்மையான சாமியார் இல்லை. அவர் ஒரு ஆன்மீக வியாபாரி. கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றும் கார்ப்பரேட் ஆசாமி' என்று திடீரென டோன் மாற்றிச் சொன்னதைக் கேட்டு, நிர்மலே திகைத்துப்போய் விட்டாராம். ஜக்கியின் சாயம் அங்கே வெளுத்திருக்கிறது. அதோடு, பிரதமர் தரப்பு, ஜக்கி, குருமூர்த்தி, சங்கராச்சாரியார்கள் என எவரையும் டெல்லி நிகழ்ச்சிக்கு அழைக்க வில்லையாம். எது எப்படியோ, செங்கோல் விவகாரத்தில் சங்கரமடக் கும்பலை, ஆ.எஸ்.எஸ். துணையோடு தமிழ் ஆதீனங்கள் வென்றிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.''”
"பா.ஜ.க.வில் அண்ணாமலையின் அரசியல் டல் அடிக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, டெல்லியில் அண்ணாமலை யாரிடம் எப்படி வாங்கிக் கட்டினாரோ தெரியவில்லை, கொஞ்ச நாட்களாய் அப்செட்டில் இருக்கும் அவர், பெரும்பாலும் ’டி ஆக்டிவேட்’ மோடில் தான் இருக்கிறாராம். எதிலும் அவர் பெரிதாக பட்டுக்கொள்வதில்லை. கட்சி நிர்வாகிகளுடனும் அவர் அதிகமாகத் தொடர்பு வைத்துக்கொள்வதில்லையாம். அதேபோல் கட்சி அலுவலகமான கமலாலயத்துக்கு அவர் முன்புபோல் அதிகம் வருவதில்லை என்கிறார்கள். இதனால், ‘அண்ணாமலையைக் காணவில்லை என்று போஸ்டர் அடிக்கலாமா?’ என்று பா.ஜ.க.வினரே கேலிப்பேச்சு பேசுகிறார்கள். அதனால் அண்ணாமலைக்கு குட்பை சொல்லும் நேரம் நெருங்கிவிட்டது என்றும், அவர் இப்போது செயலிழந்துவிட்டார் என்றும் கருதும் பா.ஜ.க. வினர், அடுத்த தலைவராக பொன்னார் வருவார் என்று நினைத்தார்களாம். ஆனால் அவர் இதில் தீவிரம் காட்டாததால், தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்படு வாரா? என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.''”
"ஓ.பி.எஸ்.சுக்கு ஆளுக்கட்சித் தரப்பிடம் செல்வாக்கு அதிகரிக்குதுன்னு சொல்றாங்களே?''”
"ஒரு சம்பவத்தைச் சொல்றேங்க தலைவரே, உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்கா பூர்வலா பொறுப்பேற்றிருக்கிறார். இவ்ருக்கு கவர்னர் ரவி, 28 ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அப்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. அது என்னன்னா, இதில் கலந்துகொள்ள வந்த ஓ.பி.எஸ்.சை சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் முகம்மலர வரவேற்றனர். அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, பின் வரிசையில் உட்காரச் சென்ற ஓ.பி.எஸ்.சை, ’அட இங்கே வந்து உட் காருங்க’ என்று, அவர் மறுக்க மறுக்க, அவர் கையைப் பிடித்து இழுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரை முன்வரிசையில் உட்காரவைத்தார். ஓ.பி.எஸ்.சுக்கு தி.மு.க. தரப்பில் கொடுக் கப்பட்ட முக்கியத்துவம், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது.''”
"ஆமாம்பா, எதிரிக்கு எதிரி நண்பன்கிற மாதிரி, எடப்பாடிக்கு எதிரான வழக்கில் சாட்சி சொல்லும் நிலைக்கு ஓ.பி.எஸ். வந்திருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த எடப்பாடி, சொத்துக் கணக்கை மறைத்திருப்பதாகவும், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மிலானி என்பவர் வழக்கைத் தொடர்ந்திருந்தார். நீதிமன்றமும் அதை விசாரித்து, அதில் உண்மை இருப்பதாகத் தெரிந்தால், வழக்கைப் பதிவுசெய்யலாம் என்று கிரீன் சிக்னல் காட்டியது. எடப்பாடியோ, இப்படியொரு வழக்கு தன் மீது பதிந்துவிடக் கூடாது என்று சகல விதத்திலும் முயற்சித்தார். தனக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகள் எப்போதும்போல் இதிலும் தனக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்த்தார். எனினும், சேலத்தில் இருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரே, எடப்பாடி மீது அதிரடியாக வழக்கைப் பதிவு செய்து அவருக்கு முதற்கட்ட அதிர்ச்சியை கொடுத்தார்கள்.'' ”
"இந்த வழக்கிற்குத் தடை கேட்டு எடப்பாடி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டினாரேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, எடப்பாடியின் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உடனடியாக ஸ்டே கொடுக்கவில்லை என்றாலும், இதில் அவசரம் காட்டக்கூடாது என்றும், வழக்கு குறித்த போலீசாரின் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பிவிட்டு, வழக்கை ஜூன் 6-க்கு தள்ளி வைத்திருக்கிறது. இந்த சூழலில்தான், மிலானி புகாரில் ஓ.பி.எஸ்.சை சாட்சியாக சேர்த்திருக்கிறது காவல்துறை. எடப்பாடியின் வேட்புமனுவில் அன்று கட்சி யின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், கையெழுத்து போட்டவர் ஓ.பி.எஸ். அதனால், எடப்பாடியின் சொத்துக்கள் குறித்து அவரிடம் விசாரிப்பதற்காகவே அவர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். இதையறிந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். தனக்கு எதிராக சாட்சி சொல்வாரோ என்ற டென்சனில் இருக்கிறாராம். அதேபோல் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தரப்பும் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு வருகிற ஜூன் 6- ஆம் தேதியை, பலரும் பரபரப்போடு எதிர்பார்க்கிறார்கள்.''”
"கள்ளச்சாராய, விஷச் சாராய விவகாரங்களில் ஆளுங்கட்சிப் புள்ளிகளின் பெயர்கள் தொடந்து அடிபடுகிறதே?''”
"சில இடங்களில் இப்படிப்பட்ட செய்திகள் கிளம்புவது உண்மை தாங்க தலைவரே. குறிப்பாக, அண்மையில் மரக்காணம் பகுதியில் நடந்த விஷ சாராய விவகாரத்தில், மரூர் ராஜா என்பவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் இருந்த அவர், தி.மு.க. ஆட்சி வந்ததும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டு தி.மு.க.வில் ஐக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரின் தம்பி காஜா நசீர் உள்ளிட்டவர்களிடம் அவர் வைத்திருந்த நெருக்கம்தான், அவரை இத்தனை நாள் காப்பாற்றி வந்த தாம். இந்தப் பிரச்சினையில் டிரான்ஸ்பர் நடவடிக்கைக்கு ஆளானவரான எஸ்.பி. ஸ்ரீநாதாவிடம், இத்தனை நாளாக எப்படி மரூர் ராஜாவை விட்டு வைத்திருந்தீர்கள் என்று, கோட்டையில் இருந்தே விசாரித்திருக் கிறார்கள்.''”
"ம்''”
"அதற்கு எஸ்.பி.யான ஸ்ரீநாதா, அமைச்சரின் தொடர்பால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாராம். இதனால் அவரையும் எகிறி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான், முதற்கட்டமாக பேரூர் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த அமைச்சரின் தம்பி காஜா நசீரின் கட்சிப் பதவியை அறிவாலயம் அதிரடியாகப் பறித்திருக் கிறது. அடுத்து, அமைச் சரின் உதவியாளர் ரிஸ்வான் மீதும் கண்காணிப்புப் பார்வை விழுந்திருக்கிற தாம். இதேபோல் கள்ளக் குறிச்சி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் பெருக் கெடுப்பதாக மேலிடத்திற்கு உளவுத் துறை ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறதாம். அதில், இதன் பின்னணியில் சங்கராபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் இருப்பதாகக் குறிப்பிட்டு அது அதிரவைத்திருக்கிறது. இது போல் தமிழகம் முழுக்க சட்டவிரோத செயல்களுக்கு உதவி செய்கிற புள்ளிகளும் கண்காணிக் கப்படுகிறார்களாம். எனவே ஃபாரின் டூர் முடித்துத் திரும்பிவந்ததும், இது போன்ற விவகாரத்தில் முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்கிற டாக் கோட்டை வட்டாரத்தில் அடிபடுகிறது.''”
"தமிழக அரசு வைக்கம் போராட்ட நினைவகத்தில் நியமித்திருக்கும் அலுவலர் குறித்த சலசலப்பு இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, கேரள மாநிலத்தில் இருக்கும் வைக்கம் போராட்ட நினைவிடத்தில், கேர் டேக்கர் என்ற பணியில் செய்தித் துறையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தமிழக அரசால் நியமிக்கப் பட்டிருந்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஓய்வுபெற இருந்த அவருக்கு பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. காரணம், தமிழகத்தில் இருந்து அன்றைய அ.தி.மு.க. அமைச்சர்கள், அதிகாரிகள் கேரளாவுக்குச் சென்றால் அவர்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டவும், ஐய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய வைக்கவும் உன்னிதான் உதவுவாராம். மேலும் அன்றைய அமைச்சர்களுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் அவரே முன்னால் நின்று, கேரளாவில் சொத்துக்கள் வாங்கிக் கொடுத்தும் அவர்களைக் கவர்ந்திருக்கிறாராம். அந்த கரிசனத் தில்தான் அவருக்கு அப்போது பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. அப்படிப் பட்ட உன்னிக்கு, இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும், ’ப்ரோட்டக்கால் ஆபீசர்’ என்ற பெயரோடு பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.''”
"அந்த உன்னி கிருஷ்ணன் மீது ஏற்கனவே புகார்கள் இருந்ததே?''”
"ஆமாங்க தலைவரே, கேரள தலைமைச் செயலகத்தில் உளவு பார்த்தார் என இவர் மீது அங்குள்ள உளவுத்துறை ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்ததாம். அரசு அலுவலராக இருந்து கொண்டே பல்வேறு விவகாரங்களில் அவர் ஈடுபட்டு வந்தார் என்கிறார்கள். இவர் ஜாதகம் இப்படி இருக்க, டெல்லியைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் தமிழக அரசு சார்பில் இப்படி ஒரு அலுவலர் தனியாய் நியமிக்கப்படாதபோது, கேரளாவில் மட்டும் ஒரு அலுவலரை எதற்கு நியமிக்கவேண்டும்? அவருக்கே எதற்கு பணி நீட்டிப்புத் தரவேண்டும்? என்ற சர்ச்சை அப்போதும் எழுந்தது. இப்போதும் எழுகிறது. அதுமட்டுமல்லாமல், ஓய்வு பெறுபவர் களுக்கு பணி நீட்டிப்பு தரக்கூடாது என்று சொல்லி வரும் தி.மு.க. அரசு உன்னி விசயத்தில் ஏன் இப்படி தாராளம் காட்டுகிறது? என்ற கேள்வியும் இப்போது அதிகாரிகளாலேயே எழுப்பப்படு கிறது.''”
"செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கோப்புகள் தேங்குவதாக சலசலப்பு கேட்குதே?''”
"இந்தத் துறையின் இயக்குநரான மோகன் ஐ.ஏ.எஸ்., அண்மையில் ஒரு வாரம் தன் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று வந்தார். அவர் வந்த வேகத்திலேயே முதல்வரின் ஃபாரின் டூரில் சேர்ந்துகொண்டார். ஒரு துறையின் இயக்குநர் பணி நிமித்தமாகவோ, விடுப்பிலோ வெளியிலோ செல்ல நேர்ந்தால், துறையின் செயலாளரிடம் தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்து விட்டுச் செல்லவேண்டும் என்பது விதி. ஆனால், மோகன் ஐ.ஏ.எஸ். தனது பொறுப்புகளை அப்படி ஒப்படைக்கவில்லை என்கிறார்கள். இதனால், இயக்குநர் முடிவெடுத்து கையெழுத்து போடவேண்டிய கோப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. துறையின் செயலாளரோ, இயக்குநர் ஒப்புதல் இல்லை என்பதால், அவரும் கையெழுத்துப் போடுவதைத் தவிர்க்கிறாராம். கோப்புகள் தேங்கி நிற்பதால் செய்தித்துறையே ஸ்தம்பித்து நிற்கிறதாம்.''”
"நானும் ஒரு தகவலை உன்மூலம் பகிர்ந்துக்கறேன். விழுப்புரம் மாவட்டத்தில் 37 துணை வட்டாட்சியர்கள் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்காக இவர்களிடம் டி.ஆர்.ஓ. பரமேஸ்வரி, கலெக்ஷன் நடத்தியதாக முதல்வர் அலுவலகத்துக்குப் புகார்கள் பறந்திருக்கின்றன. வருவாய்த் துறையில் உள்ள இரண்டு சங்கத்தினரும் தங்களுக்கு வேண்டியவர்களைப் பரிந்துரை செய்தும், அவர்களை டி.ஆர்.ஓ. கண்டுகொள்ளாததால்தான் புகார்களுக்கு றெக்கை முளைத்திருக்கிறது.''