"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும்னு தகவல் வருது.''”
"வழக்கில் சிக்கியிருக்கும் சில அமைச்சர்களின் நிலையை உத்தேசித்தும் இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொல்லப் படுதே?''”
“"ஆமாங்க தலைவரே, நீங்க சொல்றதும் உண்மைதான். பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாராம். சென்னையில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்த உடனேயோ, அல்லது பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பிறகோ, இது நடக்கும் என்கிறது அறிவாலயத் தரப்பு. அப்போது, தம்மி டம் இருக்கும் உள் துறையை கவனிக் கும் பொறுப்பை உதயநிதிக்கு கூடு தல் பொறுப்பாக ஸ்டாலின் வழங்க இருக்கிறாராம். மேலும், சீனியர் மந்திரிகள் சிலரின் இலாகாவையும் அவர் மாற்றியமைக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதேபோல் ஒன்றுக்கும் மேற் பட்ட துறைகளை வைத்திருக்கும் அமைச்சர் களிடமிருந்து, அவற்றை நிரந்து கொடுக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம். இது எல்லாவற்றையும்விட முக்கியமான தகவல் என்னவென்றால், துணை முதல்வர் பொறுப்பும் உதயநிதிக்கு வழங்கப்படலாம் என்றும் காதைக் கடிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், முதல்வர் ஸ்டாலின் ஒரு மாத காலம், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். அதனால்தான் இந்த ஏற்பாடெல்லாம் என்கிறது கோட்டைத் தரப்பு.''”
"திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பி.எஸ். படாதபாடு பட்டார்னு சொல்லப்படுதே?''”
"ஆமாங்க தலைவரே, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பன்னாட்டு முனையத்தை திறந்து வைப்பது, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது உட்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத்தான் பிரதமர் மோடி திருச்சிக்கு வந்திருந்தார். அவரை எப்படி யாவது ஐந்து நிமிடமாவது தனியாக சந்திச்சிடணும்னு ஆசைப்பட்ட ஓ.பி.எஸ்., அதற்காக எவ்வளவோ முட்டிமோதிப் பார்த்தார். அவருக்கு அனுமதி தரப்படவில்லை. கடைசியாக, மோடியை வரவேற்கவும், வழியனுப்பவும் வரிசையில் நிற்கும் வி.வி.ஐ.பி.க்களில் ஒருவராக ஒட்டிக்கொண் டார் ஓ.பி.எஸ். மோடி தன்னருகே வந்ததும் ரோஜா மாலையைக் கொடுத்த அவர், தனிப்பட்ட முறையில் உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்று ஒரு கடிதத்தையும் அதோடு சேர்த்து ஒரு ஃபைலையும் மோடியிடம் கொடுத்தார். "என்னிடம் பேசணும்னா, முறைப்படி அப்பாயின்ட் மெண்ட் வாங்கி, டெல்லியில் வந்து பாருங்கள்' என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாராம் மோடி.''”
"ஓ.பி.எஸ்., மோடியிடம் கொடுத்த ஃபைலில் அப்படி என்ன இருந்ததாம்?''”
"இதே கேள்வியை ஓ.பி.எஸ்.ஸிடமே பத்திரிகையாளர்கள் கேட்டப்ப, ஒண்ணு மில்லை, பிரதமருக்கு வாழ்த்துச் செய்தி களைத்தான் கொடுத்தேன் என்று மழுப்பலாகச் சொன்னார். அதே சமயம் அவர் தரப்பில் தீவிரமாக விசாரித்தபோது, தனது அரசியல் எதிரியான எடப்பாடி பற்றிய ஊழல்கள் குறித்தும், பினாமி பெயரில் அவர் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் குறித்தும் சுருக்கமான தகவல்களைக் கொடுத்து, அவர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் வைத்திருக்கிறாராம். மேலும், நேரில் சந்திக்கும்போது, தான் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைத் தந்து விளக்குவதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறாராம். எனவே, பொங்கல் முடிந்ததும் டெல்லியில் இருந்து அவருக்கு அழைப்பு வரும் என்றும், அப்போது டெல்லி செல்லும் அவர், பா.ஜ.க.வுடனான தங்கள் கூட்டணியை உறுதி செய்வதோடு, எடப்பாடி தரப்புக்கு சரியான ஆப்பு வைப்பார் என்றும் அவர் தரப்பினர் பில்டப் கொடுக்கிறார்கள்.''”
"பொன்முடி மேல்முறையீடு செய் திருக்கிறாரே?''”
"சொத்துக்குவிப்பு வழக்கை மறுபடியும் கிளறி, அவரைக் குற்றவாளி என்று அறிவித்த சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டு சிறைத் தண்ட னையையும் அபராதத்தையும் விதித்ததோடு, மேல்முறையீடு செய்ய, ஒருமாத காலம் அவகாசத்தையும் கொடுத்திருந்தது. இதனால் பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவியும் அமைச்சர் பதவியும் கேள்விக்குறி ஆனது. 30 நாட்களுக்குள் அவர் மேல்முறையீடு செய்யாவிட்டால், அவரே சரணடைய வேண்டும். இல்லையேல் அவர் கைதுசெய் யப்படுவார் என்ற நிலை ஏற்பட்டிருப்பதால், சிறப்பு நீதிமன்றம் கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கடந்த 3ஆம் தேதி உச்சநீதிமன்றம் சென்றிருக்கும் பொன்முடி, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், அல்லது முத லில் அதற்குத் தடையாவது கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமா? அவர் கோரிக்கை நிறைவேறுமா? என்கிற விவாதங் கள் தி.மு.க. வழக்கறிஞர்கள் மத்தியிலேயே பலமாக எதிரொலிக்கிறது. அதேசமயம், குற்றவியல் வழக்கு களில் அனுபவம் பெற்ற வழக்கறிஞர் களோ, பொன்முடி எதிர்பார்க்கும் ஸ்டே உடனடியாக கிடைக்காது என்றே சொல்கிறார்கள்.''”
"தீயணைப்புத்துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.ஸாக பதவி உயர்வு பெற்றதன் பின்னணி குறித்து புதுசு, புதுசா தகவல்கள் வெளியில் வருகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, வரலாற்றிலேயே இல்லாதபடி தீயணைப்புத்துறை அதிகாரியாக இருக்கும் பிரியா ரவிச்சந்திரனுக்கு ஐ.ஏ.எஸ்.ஸாக புரமோசன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரது கணவரான ரவிச்சந்திரன், அமலாக்கத்துறையில் பவர்ஃபுல் அதிகாரியாக இருக்கிறார். எனவே, தி.மு.க. தரப்பு மீது அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யமுடியும் என்று பிரியா கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, அவரது இந்த பதவி உயர்வுக்கு தமிழக அரசின் சைடில் இருந்து க்ரீன் சிக்னல் காட்டப்பட்டி ருக்கிறது என்றும் தகவல் கசிகிறது. அதே அம லாக்கத்துறை பா.ஜ.க. பிரமுகருக்காக களமிறங்கி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த இரு விவசாயிகளுக்கு சம்மன் கொடுத்து சர்ச்சையில் சிக்க, அமலாக்கத்துறைக்கு வக்காலத்து வாங்கியிருக்கும் பா.ஜ.க. அண்ணாமலையோ, அந்த விவசாயிகள் மீது ஏற்கெனவே காட்டெருமையைத் தாக்கியதாக வழக்கு இருக்கிறது என்று சொல்லி, ஒட்டுமொத்த விவசாயிகளின் கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார்.''”
"காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவுக்கு பிரமோஷன் கொடுக்கப்பட்டது குறித்த புகைச்சலும் இன்னும் அடங்கலையேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்த அறிக்கையின் மீது அரசு விறுவிறுப்பாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அதே அறிக்கையில் அந்த சம்பவம் நடந்தபோது அந்தக் குழுவில் இருந்த சைலேஷ்குமார் யாதவ், சம்பவ ஸ்பாட்டில் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். எனினும் பெரும் சர்ச்சைக்குரிய விவகாரத்தில் அடிபட்ட சைலேஷ்குமார் யாதவிற்கு அண்மையில் பதவி உயர்வு கொடுக்கப்பட, அந்த விவகாரம் விசுவரூபம் எடுத்திருக்கிறது. இந்த பதவி உயர்வுக்குப் பின், விசாரணை அறிக்கையைக் காரணம் காட்டி, சம்பவ ஸ்பாட்டுக்கு போகாததால், சைலேஷ்குமார் யாதவ் தன் பணியில் பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்ற ரீதியில் அவருக்கு தற்போது சார்ஜ் கொடுத்திருக்கிறதாம் காவல்துறை. இந்த குற்றச்சாட்டை முன்னதாகவே கொடுத்திருந் தால், அவருக்குப் பதவி உயர்வே கொடுத்திருக்க முடியாது. எனவே சைலேஷ்குமாருக்கு சாதகமாக நடத்தப்பட்டிருக்கும் இந்த கண்ணாமூச்சு ஆட்டத்தில், சர்ச்சைக்குரிய காவல் அதிகாரியாக இருந்த ஜாபர்சேட் பெரும்பங்கு வகித்திருக்கிறார் என்கிற டாக் காவல்துறையிலேயே அடிபடுகிறது.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். ஜாமீனுக்கு கீழமை நீதிமன்றத்தையே அணுக லாம் என்று கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொல்லியிருந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி அல்லியோ, 8ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார். இந்தமுறை ஜாமீனை எப்படியும் வாங்கி விடலாம் என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நம்பிக்கையூட்டியிருக்கிறார்களாம். இதற்கிடையே செந்தில் பாலாஜியிடம் முதல்வர் பேசியிருக்கிறார். அப்போது அக்கறையோடு அவரிடம் நலம் விசா ரித்ததோடு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தை யும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். எனக்கு ஜாமீன் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையே போய்விட்டது என்று செந்தில்பாலாஜி கதறி அழ, அவரை ஸ்டாலின் தேற்றியுள்ளார். அதேபோல, அமைச்சர்கள் யாருமே தன்னைக் கண்டுகொள்ள வில்லை என்றும் முதல்வ ரிடம் வருந்தினாராம் செந்தில்பாலாஜி.''
__________
இறுதிச் சுற்று!
நந்தனம் YMCA கல்லூரி வளாகத்தில் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி 3, புதன்கிழமை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வச்சிருக்கார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், அன்பில்மகேஸ் பொய்யாமொழி, மேயர் ப்ரியா மற்றும் பபாசி நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க. தென்னிந் திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் (இஆடஆநஒ) சார்பில் ‘"முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி'’ விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கி வாழ்த்தினார்கள். ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகக் கண்காட்சி, ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆயிரம் அரங்குகளில், லட்சக்கணக்கான நூல்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. நம் நக்கீரன் அரங்குகளில், நக்கீரன் ஆசிரியரின் "போர்க்களம் 5ஆம் பாகம்', "இலக்கியத் தலைவர் கலைஞர்', "இயர்புக் 2024', "பெரியார் பார்வையில் கல்வியும் கலையும்' உள்ளிட்ட பல புதிய நூல்களும், புதுப்பிக்கப்பட்ட அட்டைக்கட்டு நூல்களும் புத்தக ஆர்வலர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. "2024ஆம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி, ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படும்'னு அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி அறிவிச்சிருக்கார்.
-கீரன்