இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) நடைமுறைப்படுத்தியிருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் வெடிக்கின்றன.
தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் சட்டத்துக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் இந்த சட்டத்தை எதிர்க்கத் துணிந்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இந்தியாவின் அண்டை மாநிலங்களிலிருந்து 2014, டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள், புத்திஸ்டுகள், ஜெயினர்கள் உள்ளிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்கிறது இந்த சட்டத் திருத்தம். ஆனால், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடையாது.
இதனால், ’மதச்சார்பின் மையை உயர்த்திப் பிடிக்கும் இந்தியாவின் அஸ்திவாரத்தையே இந்த சட்டம் அழிக் கத் துடிக்கிறது. மதத்தை அடிப் படையாக வைத்து குடியுரிமை வழங்குவது பிரிவினையை உரு வாக்கும்; காவித் தீவிரவாதம் அதிகரிக்கும்”என்கிறார்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள்.
இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2019-ல் நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் நிறைவேற்றினார் உள் துறை அமைச்சர் அமித்ஷா. இந்த சட்டத்தை அ.தி.மு.க.வும், பா.ம.க. வும் ஆதரிக்காமல் இருந்திருந்தால் சட்டம் பாஸாகியிருக்காது. ஆனால், அக்கட்சிகள் இந்த சட்டத்தை ஆதரித்தன.
இதனையடுத்து நாடு முழு வதும் இச்சட்டத்திற்கு எதிரான குரல்கள் வலுத்தன; போராட் டங்கள் வெடித்தன; கொந்தளிப் புகள் அதிகமானது. ஆனாலும் அசரவில்லை பா.ஜ.க. சட்டத் தினை நடை முறைப்படுத்து வதற்கான வழி களை ஆராய்ந்து கொண்டிருந்தது. ஆனால், கொரோ னா பெருந்தொற்று தாக்குதல் உருவானதால் சட்டத்தை நடைமுறைப்படுத்து வதை தள்ளி வைத்தார் அமைச்சர் அமித்ஷா. போராட்டங்களும் நின்றன.
கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டி ருந்த இந்த சட்டத்தை நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் தற்போது கையில் எடுத்திருக்கிறது மோடி அரசு. இது குறித்து சமீபத்தில் பேசிய அமித்ஷா, "தேர்தலுக்கு முன்பாக 2024, மார்ச் 30-ந்தேதிக்குள் குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்'’என்றார். அதன்படி 11-ந் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத் திருத்தத்துக்கு 2019லேயே ஒப்புதலளித்தார் அன்றைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஜனாதிபதி ஒப்புதல் அளிக் கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் 6 மாதத்துக்குள் அமலுக்கு கொண்டு வர விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆறு மாதத்திற்குள் விதிகள் வகுக்கப் படவில்லை எனில், நாடாளுமன்ற கமிட்டியிடம் கால அவகாசம் பெறவேண்டும்.
அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு 6 மாதம் கடந்த பிறகும் இச்சட்டத்தை அமல் படுத்துவதற்கான காலநீட்டிப்பை பெற்றுவந்தார் அமைச்சர் அமித்ஷா. இந்த நிலையில்தான் சமீபத்தில் அமித்ஷா அறிவித்தபடி, தேர்தலுக்கு முன்பாக இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”"இச்சட்டத்திற் கான விதிகளை உருவாக்க இதுவரை 9 முறை கால அவகாசம் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இதனை நடைமுறைப்படுத்தி யிருப்பது அப்பட்டமான அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் வாக்காளர்களை வளைக்கத் திட்டமிடுகிறார்கள். இது அனைத்து வழிகளிலும் கண்டிக்கத்தக்கது''’என்கிறார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமைத் திருத்த சட்டம் போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத் தக்கதல்ல. தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்''’என்கிறார்.
இதனையடுத்து, அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், "பல்வேறு தரப்பு மக்களால் எதிர்க்கப்பட்ட குடியுரிமைச் சட்டத்தினை அவசர கதியில் நடைமுறைப்படுத்தி யிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும், இந்திய மக்களின் நலன்களுக்கும், பன்முகத் தன்மைக்கும், மதச்சார் பின்மைக்கும் எதிரானது. தமிழ் நாட்டைப் போல பல மாநிலங்களும் இச்சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. இந்த சட்டம் ரத்துசெய்யப்பட வேண்டிய ஒன்று. குடியுரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழக அரசு எந்த வகையிலும் இடமளிக்காது''’என மிக அழுத்தமாகத் தெரிவித்திருக் கிறார்.
இதனைத் தொடர்ந்து அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். நம்மிடம் பேசிய அரசியல் வியூக வகுப்பாளர் கள் பலர், "சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டம் என்றால், இஸ்லாமியர்களையும் இந்த சட்டத்தில் இணைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பாகிஸ்தான் அகமதியாக் களையும், மியான்மார் ரோஹிங்கியாக்களையும் இந்த சட்டத்தில் இணைத்து அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வழிவகை காணப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவர்களை இந்த சட்டம் விலக்கி வைத்திருக்கிறது. இதனை ஆராயும் போது, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் மதப் பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம். அதனால் இந்த சட்டத்தை மாநில அரசுகள் புறக்கணிக்க வேண்டும்''” என்கிறார்கள் ஆவேசமாக.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் கருத்துக்கு எதிராக பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் களும் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பு தரக்கூடிய இந்த சட்டத்தை விஜய் கண்டிப்பது கண்மூடித்தன மானது என்று விஜய்யை எதிர்க்கிறார்கள் பா.ஜ.க. அறிவுஜீவிகள்.
பா.ஜ.க.வினர் விஜய்யை எதிர்க்கும் அதேசமயம், மோடி அரசை விஜய் கண்டிப்பதுடன் இந்தச் சட்டத்தை இன்னும் கடுமையாக அவர் எதிர்த்திருக்க வேண்டும்; பா.ஜ.க.வை விமர்சிப்பதோடு நிற்காமல், இந்தச் சட்டத்தை ஆரம்ப நிலையிலிருந்து எதிர்த்துவரும் தி.மு.க. அரசை ஏன் அவர் இழுக்கிறார்? என்று தி.மு.க. வினரும் விஜய்யை கண்டிக்கிறார் கள். அந்த வகையில், விஜய்க்கு நெருக்கடிகள் அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், இது குறித்து தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘’"பா.ஜ.க.வை கருத்தியல் ரீதியாகவும், தி.மு.க.வை (ஆளும் கட்சி என்பதால்) அரசியல் ரீதியாகவும் எதிர்ப்பதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம். அதைத்தான் விஜய் செய்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்தோடு மக்கள் இருக்கும் சூழலில் மதப்பாகுபாடுகளின் பெயரால் அதனை சீர்குலைக்கும் வகையில் கொண்டு வரப்படும் எந்த சட்டமும் ஏற்புடையதல்ல என்பது மிகக் கடினமான வார்த்தைகள்.
அதாவது, "குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டும் அல்ல; மக்களின் நலன்களுக்கு எதிராக இனி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதனையும் நான் எதிர்ப்பேன்' என்பது இதன் பொருள். அதனால் விஜய்யின் எதிர்ப்பு வலிமையானது.
அதேபோல, தமிழகத்தில் இந்த சட்டத்தை ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தக்கூடாது என சொல்வதற்கு சில காரணம் இருக்கிறது. அதாவது, 7-வது அட்டவணையில் சேர்த்திருப்பதால் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து மாநில அரசுகள் விலகிட முடியாது. அதனால், இந்த சட்டத்திற்கு எதிரான என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதனை மாநில அரசு ஆராய வேண்டும்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நீதி மான்றங்களில் மாநில அரசு வழக்கு தொடரலாம். அந்த வழக்கு வெற்றி பெறுவதற்கேற்ப சட்ட பாயிண்டுகளை ஆராய்ந்து, அத்தகைய வலிமையான சட்ட பாயிண்டுகளுடன் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்பதை தி.மு.க. அரசுக்கு வலியுறுத்துவதற்காகத்தான், ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினார் விஜய்.
அந்த வகையில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக விஜய்யின் மூவ் கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலிமையானது. அதனை நிரூபிப்பது போல சர்வதேச ஊடகங்களும் கூட குடியுரிமைச் சட்டத்துக்கு விஜய் எதிர்ப்பு என ட்ரெண்டிங் செய்து நியூஸ் வெளியிட்டன''” என்று தெரிவிக்கின்றனர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
இதற்கிடையே, விஜய்யின் ஸ்டேட்மெண்ட் டை எப்படியாவது வாபஸ் பெற வைக்க வேண்டும் என்று பகீரத முயற்சி எடுத்துவருகிறார்கள் பா.ஜ.க. இண்டலெக்சுவல்கள். இதற்காக, இந்தச் சட்டம் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு தரக்கூடியது என்றும், எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது இல்லை என்றும் விஜய்யை மிரட்டி கன்வின்ஸ் செய்யத் துடிக்கின்றனர்.
ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் ஆபத்துகளையும், இஸ்லாமியர்களை இந்த சட்டம் தனிமைப்படுத்துகிறது என்பதையும், அனைவருக் கும் சமத்துவம் என்கிற அரசியலமைப்பின் 14-வது பிரிவை மத்திய அரசு மீறுகிறது என்பதையும் விஜய் உணர்ந்திருப்பதால் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் கருத்திலிருந்து பின்வாங்கப்போவ தில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய் என்கிறார்கள்.
இஸ்லாமிய மதத்திற்கு எதிரான இந்த சட்டத்தின் மூலம் தேர்தல் ஆதாயத்தைப் பெறத் திட்டமிடுகிறது பா.ஜ.க. இதனை முறியடிக்கவும், மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்தியா கூட்டணி வலிமையாக வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.