விசுவ ஹிந்து பரிஷத்தின் அறவழி காட்டும் ஆன்றோர்கள் பேரவை சார்பாக மதுரையில் துறவியர் மாநாடு ஜூன் 4-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி யது.
இதில் விசுவ ஹிந்து பரிஷத் தின் அகில உலக பொதுச்செயலாளர் ஸ்ரீமலிந்த் பராண்டே, அகில உலக இணைப் பொதுச்செயலாளர் ஸ்ரீ.கோ. ஸ்தாணுமாலயன் தலைமையில், மதுரை ஆதீனம், திருவாரூர் ஆதீனம், மருதாச்சல அடிகளார் சீரவை ஆதீனம், இராம கிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத் மானந்தா, பரமானந்தசுவாமி, இராமானந்த குமரகுரு ஆதீனம் திருவேடகம் பரமானந்த சுவாமி, சின்மயா மிஷன் சிவயோகானந்தா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தமிழக துறவிகளும் கலந்துகொண்டனர்.
மிகபெரிய வட்டமேஜை உள்ளரங்கு மாநாட்டில் பத்திரிகையாளர்கள் உள்பட வேற்று நபர்கள், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் களுக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக போலீஸார், உளவுத்துறையினரும் வெளியேற்றப்பட்டனர். இந்த மாநாட்டுக் கான அனைத்து ஏற்பாடுகளும் தினமலர் நிறுவனர் கோபால்ஜீயால் செய்யப்பட்டி ருந்தன.
ஆதீனங்களோடு தொடர்பிலிருக்கும் ஒரு முக்கிய நபரிடம் உள்ளரங்கில் என்னதான் நடந்ததென விசாரித்தோம். “"உள்ளே சமீபத்தில் நடந்த செஞ்சட்டை பேரணியின் முக்கிய காட்சிகளையும் திராவிட இயக்க தலைவர்கள் இந்து மதத்திற்கு எதிராக பேசிய சில கருத்துகளையும் திரையில் காட்டினார்கள். மேலும் வட இந்தியாவில் விசுவஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் பேசிய காட்சிகள் போட்டுக் காண்பிக்கப்பட்டன. அதன்பின் எங்களைப் போன்றவர்களையும் வெளியேற்றிவிட்டனர்.
எனினும் வெளியில் சத்தம் கேட்டது. விசுவஹிந்து பரிசத்தின் அகில உலக பொதுச்செயலாளர் ஸ்ரீமலிந்த் பராண்டே பேசினார். "தமிழக அளவில் சைவ மடாலயங்களை ஒன்றிணைத்து இந்து மதம் என்ற ஒரே குடையின்கீழ் கொண்டுவரவேண்டும். தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதன்கீழ் 57 கோயில்களும் இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும், 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது.
இந்த மடங்கள் அனைத்தும் தமிழ் மரபுப்படி இயங்குபவையாக இருக்கின்றன மேலும் சனாதனத்திற்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்டும் இங்கு இருக்கும் தமிழ்த் தேசியம் மற்றும் திராவிட சித்தாந்தத் தலைவர் களிடத்திலும் மிக நெருக்கமான உறவு கொண்டும் இருக் கின்றன. இவற்றை உடைக்கும் முயற்சியில் சைவ மடாலயங்கள் எங்களுக்கு கை கொடுக்கவேண்டும்''” என்றார்.
அப்போது, விசுவ ஹிந்து பரிஷத்தின் இணைச் செயலாளர் ஸ்தாணுமாலயன் குறுக்கிட்டு, “"தமிழகத்தில் இருக்கும் 231 கிராம அம்மன் கோயில்களின் பூசாரிகள், 120 கிராம குலதெய்வ, காவல் தெய்வங்களின் கோயில்களான அய்யனார், கருப்பணசாமி, சுடலைமாடன், மதுரைவீரன், இடும்பன், முனியாண்டி, பாண்டி ராக்காயி, நல்லதங்கா பதினெட்டாம்படி கருப்புச்சாமி, இசக்கியம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்கள், அவற்றை கும்பிடும் கிராம மக்கள் அனைவரை யும் சேர்த்து ஒரு மிகபெரிய விழா ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இவையனைத்தையும் ஒற்றைக் குடையின்கீழ் கொண்டுவரவேண்டும் இந்தியாவில் எங்கும் இல்லாதபடி தமிழகத்தில் திராவிடம், தமிழ் என்று மொழி வெறியைப் புகுத்தி பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்து மக்களை 50 வருடங்களாக மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். இதை உடைத்து எறியவேண்டுமென்றால் துறவிகளான உங்களால் மட்டுமே முடியும். இவ்வளவு நாட்கள் நாம் வேறுபட்டு இருந்தோம். நீங்களும் இங்கிருக்கும் இந்துமதத்திற்கு எதிரான அரசோடு இணைந்து செயல்பட்டதால் கடவுளுக்கு எதிரான போக்கு காணப்படுகிறது. இதை உடைத்தெறிவது நம் கையில்தான் இருக்கிறது''’என்றார்.
அடுத்த நாள் ஜூன் 5-ஆம் தேதி பழங்காநத்தத்தில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய மதுரை ஆதீனம் மிகவும் ஆவேசமாக, "பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே' என்று பாடியிருப்பார். ஆதீனங்கள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? அரசியல்வாதிகள் கோவிலில் தக்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோவிலுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் ஏன் அரசியல் பேசக்கூடாது?
திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது. தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம் திருக்கோவிலுக்குள் உள்ளது. நகையை உருக்குவதாகக் கூறுகிறார்கள். எங்கு உருக்குகிறார்கள் என தெரியவில்லை திராவிட பாரம்பரியம் என்று சொல்லும் அரசியல் வாதிகள், விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக் கொள்கிறார்கள். கடவுளை இழிவுபடுத்திப் பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி எனச் சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும்போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக்கூடாது?
இந்து அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள். அவை அந்தந்த கோவிலுக்குச் செல்வதில்லை, கோவில் நம்மைவிட்டுப் போனால் நமது சமயமும் நம்மைவிட்டுப் போய்விடும். கோவில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சி யினரும் எடுத்துக்கொண்டு குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது.
அரசியல்வாதிகளின் கொள்ளைக் கூடாரமாக திருக்கோவில்கள் உள்ளன. ‘அறநிலையத்துறையைக் கலைத்துவிட வேண்டும், கோவில்கள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலை யில் இயங்கவேண்டும். சாமியார்கள் யாசகம் பெற்றுச் சாப்பிட வேண்டும்’ எனக் கூறிய சு.வெங்கடேசன், என்னுடன் ஒரு வாரம் தங்கியிருந்தால் சுருண்டுபோய்விடுவார்''’ என்றார்.
மன்னார்குடி ஜீயர் பேசியபோது, "மதம் மாறியவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள். ஹிந்து விரோதமாக யார் பேசினாலும் எல்லாவிதத்திலும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்கள். அகண்ட பாரதத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷும் உள்ளது. அவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றி ஹிந்து ராஷ்டிரியம் அமைக்க வேண்டும்''’என்றார் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்ணன், "தமிழகத்தில் பா.ஜ.க.வால் ஒன்றும் செய்யமுடியாமல் கடைசியில் சாமியார்களை வைத்து மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் சைவ மடாலய ஆதீனங்களை சனாதனத்திற்குள் கொண்டுவந்து அவர்களை வைத்து தமிழகத்தில் வடநாட்டைப் போல மத மோதல்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள். இது பெரும் ஆபத்தாகப் போய்முடியும்.
மதுரை ஆதீனம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தரம் தாழ்ந்து விமர்சித் துள்ளார். முஸ்லீம்கள் தேசவிரோதிகள், கம்யூனிஸ்டுகள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்று பேசியுள்ளார்கள். இதை ஆதீனம் பேச என்ன உரிமை இருக்கி றது? ஆதீனம் அரசியல் பேசலாம். ஆனால் இஸ்லாமியர்களை தேச விரோதிகள் என பேசுவது என்னவிதமான அரசியல்? மோடிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசினால், ஆன்மீகப் பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பணிக்கு மாறி விட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது.
தமிழ் வளர்த்த ஆதீன மடங்கள் தற்போது மதவெறிக் கூடாரமாக மாறப் பார்க்கின் றன. அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துக்களை எல்லாம் ஒப்படைக்குமாறு கேட்கிறார்கள். ஆதீன மடங்கள் என்ன அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளா? தி.மு.க. அரசு பல கோவில் சொத்துக்களை மீட்டுள்ளது. ஆதீன மட சொத்துக்களின் கணக்கை எடுத்து விவாதிக்கத் தயாரா? கோவில்கள் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, அங்கு பல பொக்கிஷங் கள் இருக்கின்றன. அதை அரசுதான் பாதுகாக்க வேண்டும். ஆதீன பராமரிப்பிலிருந்த சொத்துக் களில் முறைகேடுகள் நடந்த காரணத்தால் தான் அறநிலையத் துறையே உருவாக்கப் பட்டது.
இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது. பா.ஜ.க. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத் தில் மத அடிப்படையில் மக்களை ஒருங் கிணைக்கும் நோக்கிலேயே விசுவ ஹிந்து பரிஷத், துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஏதோ சதியாலோசனை மேற்கொள்கிறது. இந்த முயற்சியை தமிழகத்திலுள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களும் ஒன்றுசேர்ந்து முறியடிக்க வேண்டும்''’என்றார்.
தனது "ஆபரேஷன் துறவாஸ்' திட்டம் மூலம் தமிழகத்தை உத்திரபிரதேசமாக மாற்றும் முடிவை துரிதப்படுத்தத் தொடங்கி யிருக்கின்றது பா.ஜ.க. அதற்கு ஸ்லீப்பர் செல்லாக செயல்பட பல்வேறு தரப்பினரையும் ஆயத்தப்படுத்துகிறது. ஆனால் இத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறி வதற்குப் பதில் தொடர் மௌனத்திலும் பின்வாங்கல் போக்கிலும் காணப்படுகிறது தமிழக அரசு. திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக அணி திரள்கிறது. என்ன செய்யப் போகிறது அரசு?