தென்மாவட்டங்களைப் பொறுத்தளவில் மொத்தம் 35 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் அ.தி.மு.க. செல்வாக்கு செலுத்தும் தொகுதிகள் அதிகம். எம்.ஜி.ஆரே முதன்முதலில் அருப்புக்கோட்டையில்தான் நின்றார். மதுரை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம் போன்ற தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம். இவையனைத்தும் அ.தி.மு.க.விற்கு சாதகமாகவே காணப்படும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி. தினகரன் மட்டும் ஏறத்தாழ 6 லட்சம் வாக்கு களைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, உசிலம்பட்டி, மேலூர் தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கியிருந்தார். தற்போது ஓ.பி.எஸ். வெளியே இருப்பதாலும் ஒரேயொரு சமூகத்துக்கு 10.5 சதவிகித இடஒதுக் கீட்டை பிரித்துக்கொடுத்ததாலும் எடப்பாடி மீது முக்குலத்தோர் சமூதாயம் அதிருப்தியில் இருப்ப தாக சொல்லப்படுகிறது. டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ். மூவரையும் ஓரங்கட்டியதிலும் அதிருப்தி நீடிக்கிறது.

dd

எனவே முதலில் தினகரன், ஓ.பி.எஸ். ஆதர வாளர்களையும், தென்மாவட்டங்களிலுள்ள கிரா மங்களில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தி.மு.க.வில் அதிகாரப் போட்டியில் இரண்டு கோஷ்டிகளாக இருப்பவர்களையும் தங்கள் பக்கம் வரவைப்பது, எங்கெல்லாம் தி.மு.க.விற்கு இணையான எண்ணிக்கையில் அ.தி.மு.க. கவுன்சிலர் கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊராட்சித் தலைவர்கள், நகராட்சி சேர்மன்களாக அ.தி.மு.க. வினர்களை கொண்டுவருவது எடப்பாடியின் திட்டம்.

Advertisment

தி.மு.க.வைப் பொறுத்தவரை கட்சிக்காரர் களைவிட அதிகாரிகளின் கையே ஓங்கியிருக்கிறது. இதனால் கிராமங்களில் ஊராட்சித் தலைவர்கள், சேர்மன்களின் சொல்லுக்கு மரியாதை இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் அதிருப்தியில் உள்ள கவுன் சிலர்களை பணத்தால் தூக்குவது எனும் திட்டத் தைக் கையிலெடுத்திருக்கிறார் எடப்பாடி. இதற்கு "ஆபரேஷன் முக்குலத்தோர்'’என்று பெயர் சூட் டப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

அ.ம.மு.க.வில் தினகரனுடன் நெருக்கமாக இரண்டாவது இடத்திலிருந்த உசிலம்பட்டி மகேந்திரனை கையிலெடுத்து இந்த திட்டத்தின் முதல் அடியை தொடங்கியிருக்கிறார்கள். அதன்படி மிகுந்த அதிருப்தியிலிருந்த உசிலம்பட்டி தி.மு.க. நகரமன்ற சேர்மன் சகுந்தலாவை அ.தி.மு.க.வில் இணையவைத்து தி.மு.க.வினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். தி.மு.க.வின் கட்டபொம்மன், தி.மு.க. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், முன்னாள் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சோலை ரவி உள்ளிட்ட பலர் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துள்ளனர்

இதன் பின்னணி குறித்து விசாரித்தோம். "உசிலம்பட்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள். அதில் தி.மு.க. 13 வார்டுகளில் வெற்றிபெற்றதும் தி.மு.க. தலைமை கவுன்சிலர் செல்வியை சேர்மனாக அறிவித்தது. இதை எதிர்த்து தி.மு.க.வைச் சேர்ந்த சோலை ரவி, தங்கமலை பாண்டியன் போன்றோர் கவுன் சிலர் சகுந்தலாவை சேர்மனாக முன்னிறுத்தி அ.ம.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரின் ஆதரவில் தி.மு.க. கவுன்சிலர் சகுந்தலாவை வெற்றிபெறவைக்க, அது தி.மு.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அவருக்கு ஆதரவாக இருந்த சோலை ரவி போன்றோர்களை கட்சியைவிட்டு நீக்கி பின்பு சேர்த்துக்கொண்டனர்.

Advertisment

அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் உசிலம்பட்டியில் இரு கோஷ்டிகளாக இருந்துவந்தனர். இவர்கள் சொல்லும் நபருக்குத்தான் எல்லா காண்ட்ராக்டுகளும் கிடைத்துவந்தன. தற்போதுகூட உசிலம்பட்டி பேருந்து நிலையம் கட்டப்பட்டு குளறுபடியாகி திறக்கப்படாமல் நிற்கிறது. ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அந்தந்த சேர்மன்கள் டம்மி ஆக்கப்பட்டு அமைச்சர், எம்.எல்.ஏ., அதிகாரிகளுக்கு அவர்களுக்கான கமிஷன் பணம் சரியாகப் போகிறது, தி.மு.க .கவுன்சிலர்களையும் சேர்மன்களையும் கெஞ்ச விட்டுவிடுகிறார்கள் என தி.மு.க.வினரே குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதை துருப்புச்சீட்டாக வைத்துதான் ஆர்.பி. உதயகுமார், மகேந்திரன் ஆகியோரின் முயற்சியில் அ.தி.மு.க. பக்கம் சேர்மன் சகுந்தலாவைக் கொண்டுசென்றுள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்களையும் இழுத்து அ.தி.மு.க. கோட்டையாக உசிலம்பட்டியை கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன''’என்கிறார்கள்.

dd

இதுகுறித்து கவுன்சிலர் செல்வியிடம் பேசி னோம். அவர், தி.மு.க. ஒன்றிய தலைவர் அஜித் பாண்டியிடம் பேசச்சொல்ல நாம் அவரிடம் பேசி னோம். ’"சார் செல்வி எங்க அம்மாதான். அவங்களைத் தான் தி.மு.க. தலைமை சேர்மனாக அறிவித்தது. அதை எதிர்த்துதான் தற்போதைய தி.மு.க. சேர்மனாகிய சகுந்தலா அ.தி.மு.க.வுக்குப் போயிருக்கிறார். கட்சிக்குத் துரோகம் செய்திருக்கிறார். இனி தி.மு.க.விலிருந்து எந்த கவுன்சிலரையும் அவர்கள் இழுக்கமுடியாது. மீண்டும் தி.மு.க.வைச் சேர்ந்தவரே சேர்மனாக வருவார். தென்மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு கிராம, நகராட்சிகளிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி தலைவர்களைத் தூக்கத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தி வருகிறது. அதை முறியடிப்போம்''’என்றார்

மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரோ, “"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் மதுரை எப்போதும் நெருக்கமாக இருந்தது. ஆனால், இங்கு ஈ.பி.எஸ்.க்கு முக்குலத்தோர் வாக்கு வங்கி இல்லை. காண்ட்ராக்ட் விவகாரத்தில் அதிருப்தியிலிருக்கும் நபர்களை அடையாளம்கண்டு எங்கள் பக்கம் கொண்டுவரும் வேலையில் இறங்கியிருக்கிறோம். உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள எழுமலையில், அங்கிருக்கும் தி.மு.க. கவுன்சிலர்களே தி.மு.க. ஊராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். உசிலம்பட்டியில் முதல் விக்கெட் விழுந்திருக்கு. இனி தென்மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு விக்கெட்டா விழும்''’என்று முடித்துக்கொண்டார்