தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியிடையே அவ்வப்போது உரசல் நீடித்துக்கொண்டேதான் இருக்கிறது. டெல்லியிலுள்ள தலைமையுடன் அ.தி.மு.க. இணக்கமாக இருந்தாலும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே அவ்வப்போது வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
"என் மண் என் மக்கள்'’என்ற கோஷத் துடன் அண்ணாமலையின் பேருந்துப் பயணத்துடன் கூடிய பாதயாத்திரை 9-வது நாள் பயணம் மதுரையில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற நிலையில், 7-ஆம் தேதி மாலை பழங்காநத்தம் பகுதியில் நடக்கவிருந்த பொதுக்கூட்டம் ரத்துசெய்வதாக அறிவிக்கப்பட் டது. திடீரென அண்ணாமலை சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்லப்போகிறார் என்ற தகவல் வந்தது.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மதுரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தார். தென்மாவட்டங்களை மையமாக வைத்து நடக்கவிருந்த முதல் பொதுக் கூட்டமே ரத்துசெய்யப்பட்டது அக்கட்சியின் தொண்டர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்... “"ஆபரேஷன் திராவிடாஸ்'’ என்ற அஸ்திரத்தை பா.ஜ.க. கையில் எடுத்திருப்பதாக செய்தி கசிகிறது. இதுகுறித்து பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளி ஒருவர் மனம் திறந்தபோது...
"சார் அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கிவைக்க வந்தபோது தமிழகத் தின் அனைத்து பா.ஜ.க. மாவட்டச் செயலாளர்களிடமும் அ.தி.மு.க. கூட்டணி குறித்து கருத்து கேட்க, ஏறத்தாழ அனைவருமே தனித்துப் போட்டியிடத்தான் வலியுறுத்தி னார்கள். ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத பா.ஜ.க. கூட்டணி 19% வாக்குகள் வாங்கியிருந்ததை தலைவர் அண்ணாமலை எடுத்துரைத்திருந்தார். அதையெல்லாம் பொறு மையாகக் கேட்டுக்கொண்டவர், சரி பார்க்க லாம் என்று சொல்லி டெல்லி புறப்பட்டார்.
செல்லூர் ராஜு போன்றவர்களின் பேச்சுக்குப் பிறகு, ’"ஆபரேஷன் திராவிடாஸ்' திட்டத்தை இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆரம்பிக்கலாம் என்றிருந்த நிலையில் இப்போதே தொடங்கினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் நடைபயணத்தின் முதல் கூட்டத்தையே ரத்து செய்துவிட்டு உடனடியாக அண்ணாமலையும் இரா. சீனிவாசனும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மிக முக்கிய புள்ளியும் டெல்லிசென்று ஆலோ சனையில் கலந்து கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க. இருக் கும்வரை பா.ஜ.க. தமி ழகத்தில் வளரமுடி யாது. எனவே மஹா ராஷ்ட்ரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் செய்ததுபோன்று தமிழகத்திலும் ஆப ரேஷன் திராவிடாஸ் என்ற அஸ்திரத்தை கையிலெடுத்து அ.தி.மு.க.வின் 60 எம்.எல்.ஏ.க் களில் 30 பேரை வெளியில் இழுத்து எடப்பாடி யையும் அ.தி.மு.க.வையும் ஆட்டம்காண வைத்து, தி.மு.க.வுக்கு அடுத்து பா.ஜ.க.தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டது பா.ஜ.க. தலைமை''’என அடித்துச் சொல்கிறார்.
இந்த ஆபரேஷன் திராவிடாஸின் ஹைலைட்டாக தென்மாவட்ட தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளை வளைக்கவும் பேச்சு வார்த்தையைத் தொடங்கிவிட்டதாகத் தெரி கிறது. அமைச்சர் பி.டி.ஆரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று அது தோல்வியில் முடிய, மதுரையில் மேயராக இருந்து கொடிகட்டிப் பறந்த செனா என்று செல்லமாக தி.மு.க.வினர் அழைக்கும் செ.ராமச்சந்திரனை மடக்கி விட்டதாகப் பேச்செழுகிறது.
"இதே மதுரையில் இன்னும் 10 நாட்களில் மிகப்பெரும் மாநாட்டை அறிவிக்கப் போகிறோம். அப்போது சில ஆச்சரியப் படத்தக்க விசயங்கள் நடக்கப்போகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 25 தொகுதிகளிலும் பா.ம.க., தே.மு.தி.க., ஐ.ஜெ.கே., புதிய தமிழகம், அதிருப்தியிலிருக்கும் தினகரன், ஓ.பி.எஸ். என மற்றவர்களுக்கு 15 தொகுதிகள் விட்டுக் கொடுத்து மாபெரும் கூட்டணி உருவாகப் போகுது''’என்றார் அந்தப் புள்ளி.
தென்மாவட்ட நடைபயணத்தில் தொடர்ச்சியாக கூடவே இருந்த பா.ஜ.க. மதுரை மாவட்டச் செயலாளர் சுசீந்திரனைத் தொடர்பு கொண்டு, "நடைபயணத்தை திடீரென பாதியில் நிறுத்தி, முதல்கூட்டமே ரத்துசெய்தது ஏன்? அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடர்வது குறித்து பேசத்தான் அண்ணாமலை மேலிடத்தால் அழைக்கப்பட்டிருக்கிறாரா?'' என்ற தற்கு “"ஆமாம், அ.தி.மு.க. ஒன்றும் பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்த கட்சி அல்ல. எடப்பாடி ஒன்றும் எம்.ஜி. ஆரும் அல்ல. அ.தி.மு.க.வே நான்கு துண்டாக உடைந்துகிடக்கிறது. தென்மாவட்டத்தில் ஓ.பி. எஸ்., தினகரனின் செல்வாக்கு ஓங்கியிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஜெயக்குமார் போன்றோர் வரம்புமீறி எங்கள் தலைவரை பொதுவெளியில் பேசுவதை இனியும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கூட்டணியை இப்படியே இழுத்துக்கொண்டு போய் தேர்தல் நேரத்தில் எங்களை கழட்டிவிடும் எண்ணத்தில் அ.தி.மு.க. இருப்பதாகப் படுகிறது. எங்களைப் பொறுத்த வரை இந்தமுறை அமித்ஷா தமிழகம் வந்த போது, அனைத்து மாவட்டச் செயலாளலர் களும் நாம் தனித்தே புதிய கூட்டணியை அமைப்போம். அப்போதுதான் பா.ஜ.க.வை தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவாக்கமுடியும் என்று சொன்னோம். கொஞ்சம் பொறுத் திருந்து பாருங்கள். தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. விஸ்வரூபம் எடுத்து நிற்கப்போகிறது''’என்று சூசகமாகத் தெரிவித்தார்.