ஆபரேஷன் 3.0! சிக்கிய எஸ்.ஐ.! கோவை பரபரப்பு!

s

கோவை ரத்தினபுரி 7-ஆவது வீதியில் கஞ்சா வியாபாரம் செய்ததாக 10 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவியதாக 11வது நபராக சிக்கியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் சைபர் க்ரைமில் பணியாற்றும் எஸ்.ஐ. ஒருவர். இது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த, "சிக்கியது எஸ்.ஐ. அந்தஸ்திலான அதிகாரி மட்டுமென எண்ணாதீர்கள். இன்னும் உயரதிகாரிகள் சிக்குவார்கள்' என்கின்றனர் உளவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள்.

"ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கோவை ரத்தினபுரி 7வது வீதி தொடர்ச்சி ரூட்ஸ் கம்பெனி அருகிலுள்ள வீட்டில் பதுக்கி வைத்து, சில்லறை விற்பனைக்காக மாவட்டம் முழுவதும் அனுப்ப உள்ளனர் என்கின்ற தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்த நிலையில், 20-1-2023 மாலை 5.30 மணியளவில் அங்கு சென்று கஞ்சா விற்பனை செய்த காரமடை அண்ணா வீதியை சேர்ந்த சந்திரபாபுவை கைது செய்து விசாரிக்கையில், அவனது கூட்டாளிகளான ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மண

கோவை ரத்தினபுரி 7-ஆவது வீதியில் கஞ்சா வியாபாரம் செய்ததாக 10 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவியதாக 11வது நபராக சிக்கியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் சைபர் க்ரைமில் பணியாற்றும் எஸ்.ஐ. ஒருவர். இது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த, "சிக்கியது எஸ்.ஐ. அந்தஸ்திலான அதிகாரி மட்டுமென எண்ணாதீர்கள். இன்னும் உயரதிகாரிகள் சிக்குவார்கள்' என்கின்றனர் உளவுப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள்.

"ஆந்திராவிலிருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கோவை ரத்தினபுரி 7வது வீதி தொடர்ச்சி ரூட்ஸ் கம்பெனி அருகிலுள்ள வீட்டில் பதுக்கி வைத்து, சில்லறை விற்பனைக்காக மாவட்டம் முழுவதும் அனுப்ப உள்ளனர் என்கின்ற தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்த நிலையில், 20-1-2023 மாலை 5.30 மணியளவில் அங்கு சென்று கஞ்சா விற்பனை செய்த காரமடை அண்ணா வீதியை சேர்ந்த சந்திரபாபுவை கைது செய்து விசாரிக்கையில், அவனது கூட்டாளிகளான ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மணிகண்டன் ஆகியோரை கை காண்பித்தான். அத்துடன் அவர்களிடமிருந்து 8 கிலோ எடையுள்ள கஞ்சாவும், பச-37 ஈழ 9108 பதிவெண் கொண்ட டூவீலர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. பெரிய அளவிலான கஞ்சா வேட்டை என்பதால் சிரத்தை எடுத்து கஞ்சாவை எங்கிருந்து..? எப்படி..? கோவைக்குள் கொண்டு வருகிறீர்கள்.? என்கின்ற தொடர் விசாரணையில் முதல் குற்றவாளி சந்திரபாபு தனக்கும், ஈரோடு சைபர் க்ரைம் எஸ்.ஐ.மகேந்திரனுக்கும் உள்ள தொடர்பைக்கூற, இருவருக்குமிடையே உள்ள பணப் பரிவர்த்தனைக்கான ஆவணத்தைக் கைப்பற்றி மகேந்திரனை கைது செய்தோம்'' என்றனர் ரத்தினபுரி போலீஸார்.

SI

தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0 எனப் பெயரிடப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு கஞ்சா கலாச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போட்டது காவல்துறை. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0லிருந்து 2.0 ஆக முன்னேற்றம் அடைந்த காவல்துறை கஞ்சா வேட்டையில் 13,320 கஞ்சா வியாபாரிகளை கைது செய்தது. எனினும் கஞ்சா புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலாத காரணத்தால், கஞ்சா விற் பனைக்கு மறைமுக உதவியாக இருக்கும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் குறிவைத்து, 12-12-2022 அன்று ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 3.0 என கஞ்சா வேட்டையில் புதிய திட் டத்தை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு காவல்துறை.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0வில் பணி யாற்றும் அதிகாரி ஒருவரோ, "எதிர்பார்த்தபடி ஆப ரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நல்ல துவக்கத்தை தந்துள் ளது. ஆந்திராவிலிருந்துதான் தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தி வரப்படுகின்றது என்பது ஊரறிந்த உண்மை என்றாலும்... சிறு, சிறு வியாபாரிகள் மட்டுமே சிக்கிக்கொள்வார்கள். பெரும் கொள்முதல் வியாபாரிகள் எங்களிடம் சிக்குவதில்லை. எனினும் தொடர்ச்சியான விசாரணையில் ஆந்திரா -விசாகப்பட்டிணம் அருகிலுள்ள நரசிம்மபட்டியிலிருந்து கஞ்சா இங்கு சப்ளை செய்யப்படுகின்றது என்பதை அறிந்து அந்த கிராமத்தினை சுற்றி நான்குபக்கமும் வலைவிரித்து காத்திருந்தோம். அதன்படி அங்குள்ள மலைத்தொடர் வழியாக கர்நாடகா சென்று, பின் அங்கிருந்து கோவைக்கு கொண்டு வருகிறார்கள் என்பதையும் அறிந்தோம். ஆனால் எதில் வருகிறார்கள்?, எப்படி போலீஸ் செக்போஸ்ட்களை அனாயசமாக கடக்கின்றார்கள்? என்பது பிடிபடாததால், அதனைக் கண்டறிய அமைதி காத்தோம். அதில், போலீஸில் இருக்கும் அதிகாரிகள்தான் இவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் என்பது புலனானது.

இவ்வேளையில், ரத்தினபுரியில் பிடிப்பட்ட சந்திரபாபுவை விசாரிக்கும்போது, அந்த ஸ்டேஷனுக்கு, "சந்திரபாபுவிற்கு என்ன பிரச்சனை.? எவ்வளவு கஞ்சா கைப்பற்றியிருக்கிறீர்கள்?'' என சம்பந்த மேயில்லாமல் ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் எஸ்.ஐ.மகேந்திரன் பேசியது சந்தேகத்தை வலுப்படுத்த சந்திரபாபுவை இறுக்கினோம்.

அதில், "2018-லிருந்து 2020-வரை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் எஸ்.ஐ.யாக இருந்த மகேந்திரன் துவக்கத்தில் கஞ்சா வழக்கு ஒன்றில் என்னைக் கைது செய்து, பின் என்னை அவருடைய இன்பார்மராக்கினார். அதன்பின் கஞ்சா வரும் வழிகளை என்னிடம் கூறி என்னைக் கடத்த வைத்து, மாவட்டம் முழுமைக்கும் சப்ளை செய்ய வைத்தார். ஆந்திராவிலிருந்து கஞ்சா கொண்டு வரும்பொழுது இந்தந்த செக்போஸ்ட்களில் இன்னன்ன ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வளவு கொடுத்துவிட வேண்டும் என துண்டுச் சீட்டினைக் கொடுத்துவிடுவார். அதனைக் காண்பித்து செக்போஸ்டைக் கடப்போம். ஆந்திராவில் ரூ.2000-த்திற்கு வாங்கப்படும் கஞ்சா இங்கு 10 கிராம் பொட்டலம் ரூ.500-க்கு விற்பனையாகின்றது. இதில் ஒரு பொட்டலத்திற்கு ரூ.50 எஸ்.ஐ. மகேந்திரனுக்கு கொடுத்து வருகின்றோம்' என ஒப்பித்தான் அவன். அதன்படியே அவனை கைது செய்தோம். இருப்பினும் இதில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்வோம்'' என நம்பிக்கை தந்தார் அவர்.

இது இப்படியிருக்க, "ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை துவங்கும் முன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய ஏட்டு முதல் ஏ.டி.ஜி.பி. வரையிலான அதிகாரிகளின் லிஸ்டை தயாரித்து அவர்களின் பண பரிமாற்றத்தையும், சொத்துக்கள் பட்டியலையும் சேகரித்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 டீம். இதில் எத்தனை அதிகாரிகளின் தலை உருள உள்ளதோ?' என்கின்றது காவல்துறை வட்டாரம்.

nkn280123
இதையும் படியுங்கள்
Subscribe