ட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் பெற்ற 3.72 சதவீதம் வாக்குகள் பெரிய அரசியல் கட்சிகளாலும், புதிய கட்சிகளாலும் கவனிக்கப்பட்டன. ஆனாலும் அதன்பிறகு வந்த இடைத்தேர்தல்- உள்ளாட்சித் தேர்தல்களை புறக்கணிக்கவே செய்தார் கமல். சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அவரது வியூகம் என்கிறார்கள் ம.நீ.ம. நிர்வாகிகள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை சந்தித்தது, கஜா புயலின்போது நிவாரணப் பொருட்கள் வழங்கியது என களப்பணிகளில் கமல் ஈடுபட்டாலும், ட்விட்டர் அரசியல்தான் அவருக்கு முதன்மை என்கிற விமர்சனம் தொடர்கிறது. பொதுக்கூட்டத்திற்கான டிஜிட்டல் போர்டுகள், ஹைஃபை மேடைகள் என டெக்னிக்கல் சமாச்சாரங்களில் ஸ்ட்ராங்காக இருக்கும் அளவுக்கு, கட்சிக் கட்டமைப்பில் பலம் உள்ளதா என்ற கேள்வியும் உண்டு.

kamal

சினிமாவில் எதையும் முன்கூட்டி செய்பவர் கமல். அரசியலிலும் இன்று கொரோனா கால ஊரடங்கால் கமலின் டிஜிட்டல் வழி யைத்தான் பல கட்சிகளும் பின் பற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்கள் தங்கள் தேவை களுக்காக எந்த நேரமும் மய்யத்தை அணுகலாம் என்பதற்காக ‘நாமே தீர்வு‘ என்ற திட்டத்தை அறிவித்தார் கமல். யார் யாரிடமிருந்து உதவி கிடைத்தது, யார் யாருக்கு உதவி செய்யப்பட்டது என்பது மய்யத்தின் வெப்சைட்டில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது என்கிறார் கள் கட்சிக்காரர்கள்.

Advertisment

மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைனில் நடந்த கூட்டத்தில், கிளைச் செயலாளர்களை நானே நேரடியாக தேர்வு செய்வேன் என கமல் சொல்லியிருக்கிறா ராம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

""கட்சிக்குள் யாருக்கு எந்த நெருக்கடி நேர்ந்தாலும், நேரடியாக தன்னை அணுகத் தயங்கவேண்டாம். சினிமாதான் எனக்கு வேலை என்றாலும், இப்போதிருக்கிற அரசியல் சூழ் நிலையில் ஒரு மாற்றத்தை விரும்பி வந்திருக்கிறேன், அந்த எண்ணத்தோடு இருக்கிறவர்கள் மட்டும் என்னோடு இருங்கள்'' என்று வகுப்பெடுத்து வருவதை சொல்லி கட்சி பொறுப்பாளர்கள் குதூகலிக்கிறார்கள்.

""யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் என்னோடு நேரில் தொடர்பில் இருப்பதையே விரும்புகிறேன்'' என்று சொல்கிறாராம் கமல். கூட்டம் போடுவது மட்டுமே அரசியல் கட்சியின் வேலை அல்ல, டாஸ்மாக் திறக்கக் கூடாது என்று சட்டப்போராட்டம் நடத்தியதில் நமக்கு வெற்றி கிடைத்தது, அதுபோல இன்னும் மக்கள் தேவைக்கான பல விஷயங்களில், நாம் சட்டப்போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று கட்சிக்காரர்களிடம் சொன்ன கமல், அதற்காகவே வழக்கறிஞர்கள் குழுவை தன் நேரடி கண்காணிப்பில் தயார் செய்திருக்கிறாராம்.

Advertisment

கமலின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என்ற சந்தேகப் பார்வை இருப்பதைப் பற்றியும் கட்சிக்குள் விவாதிக்கப்பட்டுள்ளது. "இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து' என்று கமல் சொன்னதுதான் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் விவாதமானது. அதனால் பாஜகவை எதிர்ப்பதற்கான மனநிலையில் முழுமையாக அவர் இருக்கிறார் என்று நம்புகிறார்கள் தொண்டர்கள். அதே நேரத்தில், தனது கடவுள் மறுப்புக் கொள்கையையும் கட்சியினர் மீது கமல் திணிப்பதில்லை. கந்த சஷ்டி கவசம் போன்ற மதரீதியான சர்ச்சையில் கூட, பகுத்தறிவாளார்கள் பண்பை இழக்கலாமா? என்றுதான் கேள்வி எழுப்பியிருந்தார்.

சென்னை வெள்ளம், வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல் என மீனவர்களின், விவசாயிகளின், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் ஒவ்வொரு ஆண்டும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படுகிறது. அப்படியான நெருக்கடிகளை சமாளிப்பதற்காக, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று எடப்பாடி அரசை நோக்கி கமல் கேள்வி எழுப்புகிறார். கமல் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பினால் அமைச்சர்கள் பலரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து பதில் தருவதும் தொடர்கிறது.

பேரிடர் காலம் முடிந்து இயல்பு வாழ்க் கைக்கு மக்கள் திரும்பும்போது அரசியல் களமும் பழைய பாணிக்கு வந்துவிடும். அப்போது இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் தனது கட்டமைப்பை பலமாக வைத்திருந்தால் சட்டமன்றத் தேர்தல் களத்தில் சாதிக்க முடியும்.

-பெலிக்ஸ்

__________________

நான் எந்த முடிவும் எடுக்கவில்லை!

அனாதீனம் நிலத்தை ஆட்டைய போடும் ஆளுந்தரப்பு பற்றி கடந்த இதழில் வெளியான கவர் ஸ்டோரியில் தன்னைப் பற்றிய செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் பெல் சொசைட்டி செயலாள ராக இருந்த தங்கராஜ். அதில், 2013-ஆம் ஆண்டுமுதல் பெல் சொஸைட்டியில் பாண்டியன் என்பவர் தலைவராகவும், ஹேமச்சந்திரன் என்பவர் பொருளாளராகவும், நான் செயலாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தோம். சொசைட்டியின் செயல்பாடுகள் அனைத்தும் விதிகளின்படியே நடந்தன. 2019-ல் எனக்கு ஹார்ட்அட்டாக் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாண்டியன்-ஹேமச்சந்திரன் இருவரும் வேறு சிலருடன் சேர்ந்து குறுக்கு வழியில் தலைமையைக் கைப்பற்றிக்கொண்டனர். தனிப்பட்ட முறையில் நான் (தங்கராஜ்) செயலாளர் என்ற முறையில் தன்னிச்சை யாக எந்த முடிவையும் எடுக்கவோ, நிறைவேற்றவோ இல்லை. பாண்டியன் தலைமையிலான நிர்வாகக்குழு தான் எல்லா வேலைகளையும் செய்தது. எனவே என்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார்.

-(ஆர்)