ல்யாண வீடுகளில் விடியவிடிய சீட்டாடிய காலம்மாறி, தனியறையில் அமர்ந்துகொண்டு, ஆன்ட்ராய்ட் போன் மூலமாக ஆன்லைன் ரம்மி விளையாடி ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணத்தை இழப்பது வாடிக்கையாகிவருகிறது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டுமே தமிழ்நாட் டில் மூன்று சம்பவங்கள், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக செய்திகளில் வெளியாகியுள்ளன.

rummy

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற தனியார் வங்கி அதிகாரி, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக் கணக்கில் பணத்தை இழந்தார். கடன் கொடுத்தவர்கள் நெருக்க, இது தொடர்பாக கணவன் மனைவிக் குள் அடிக்கடி சண்டை ஏற்பட, மன உளைச்சலில் மனைவி யையும், இரு குழந்தை களையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள் ளார். திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலை யத்தில், டிக்கெட் வழங்கும் பணியிலிருந்த டீக்காராம் என்ற பணியாளரைக் கட்டிப்போட்டு, 1.25 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை தீவிர புலன் விசாரணை நடத்தியதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் இழந்த டீக்காராம், மனைவியோடு சேர்ந்து நாடகமாடியது தெரிய வந்து கைது செய்யப்பட்டார். அடுத்ததாக, சென்னை, கோயம் பேடு பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்திவந்த தினேஷ் என்ற இளைஞர் ஆன் லைன் ரம்மி சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்ததால் மன உளைச்சலாகி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இப்படியாக ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தைத் தொலைப்பதும், தற்கொலை, திருட்டு போன்றவற்றில் இறங்குவதும் தினசரிச் செய்தியாகிவருகிறது. ஆன்லைன் சூதாட்டச்செயலி எப்படி பொதுமக்களை ஈர்க்கிறது, அது எப்படி செயல்படுகிறது, அதனைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று பேங்க் ஆப் சார்ஜாவின் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர் (ஈட்ண்ங்ச் ஒய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) விமலாதித்தன் மணியிடம் கேட்டபோது, "எளிய மனிதர்களும் விரல் நுனியில் பட்டன்களைத் தட்டி தங்கள் செல்போன் மூலம் விளையாடும் இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் யாரும் எளிதில் அறிய முடியாத அளவுக்கு தொழில்நுட்பச் சூட்சுமங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டவை என்பதை நம்மில் பலர் அறிவதில்லை.

இன்றைய ஆன்லைன் சூதாட்டச் செயலி களில் பெரும்பான்மையானவை சூடோ ரேண்டம் நம்பர் ஜெனெரேட்டர் (டள்ங்ன்க்ர் தஹய்க்ர்ம் ய்ன்ம்க்ஷங்ழ் ஏங்ய்ங்ழ்ஹற்ர்ழ்) என்னும் தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. இந்தத் தொழில்நுட்பம் திரை மறைவில் என்ன தில்லாலங்கடி வேலை செய்கிறது என்றால், விளையாடும் நபரின் ஆட்ட நகர்வுகள், மௌஸ் கிளிக்ஸ் மற்றும் கீ போர்ட் கிளிக்ஸ் போன்றவற்றை சர்வர் மூலமாகவும், இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பிரத்யேக செயலிகள் மூலமாகவும் கண்காணித்து, ஒரு ஆட்டத்தில் எந்த கார்டை எப்போது இறக்க வேண்டும் என்று முடிவு செய்யும் திறமை கொண்டது. சொல்லப்போனால், ஒரு ஆட்டம் தொடங்கும் முன்பே யார் வெல்வார்கள் என்பதையும் முடிவு செய்யக்கூடிய வல்லமை படைத்தது.

Advertisment

rr

இந்த தொழில்நுட்பத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களான டேட்டா சயின்ஸ், ஆர்ட்டிபீஷியல் இன்டெலி ஜென்ஸ், மெசின் லேர்னிங் போன்றவற்றைப் பயன்படுத்தி மனிதர்களுடன் சூதாடவென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதிமேதாவி ரோபாட்டுக்கள் உருவாக்கப்பட்டு, அவையும் திரை மறைவில் சூதாட்டக் களத்தில் இறக்கப்படுவதை ஆன்லைனில் சூதாடும் சாமானியர்கள் அறிவ தில்லை. கடைசியில் என்ன நடக்கும்? எந்திரன் ரஜினியால் அடித்து துவம்சம் செய்யப்படும் எதிரிகளைப் போல, நவீன ரோபாட்டுக்களால் இயக்கப்படும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை சாமானியர்கள், வெறி பிடித்தாற்போல திரும்பத் திரும்ப ஆடித் தோற்றுப் பணத்தை இழக்கின்றனர். ஆட்டத்தை புதிதாக ஆட ஆரம்பிப்பவர்களைக் கவர கவர்ச்சிகரமான ஆரம்ப போனஸ், புதிய நபர்களை அறிமுகப்படுத்துவோருக்கு போனஸ் போன்ற உத்திகளால்தான் தங்கள் வலையில் சாமானியர்களை வீழ்த்துகிறார்கள்.

சைனாவில் உள்ள ஆன்லைன் சூதாட்டச் செயலிகள், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படும். அதற்கேற்றாற்போல இணையதளச் சேவை 24 மணி நேரமும் அரசாங் கத்தால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப் படுகிறது. ஒரு நாளில் இவ்வளவு பணத்தை மட்டும்தான் சூதாட்டத்தில் செலவுசெய்ய முடியும் என்ற உச்ச வரம்பையும் அரசு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறது. அதேபோல, சிறார்களும், இளம் வயதினரும் விளையாட அனுமதி மறுக்கப் படுகிறது. இப்படி சீன அரசு செயல்படுவதால், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் அதீத பண இழப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. 4 மணி நேரம் ஆன்லைன் சூதாட்டம் ஆடினால் அடுத்த 4 மணி நேரத்துக்கு திருப்பவும் ஆட முடியாது.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியா விலும் பரிசீலித்தால், ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும்பணத்தை இழக்கும் நிலையைக் கட்டுப் படுத்தலாம். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் டெக்னாலஜி செயல்பாடு களைக் கட்டுப்படுத்துவதற் கும் (பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ் நற்ஹய்க்ஹழ்க்/ஏன்ண்க்ங்ப்ண்ய்ங்ள்) ஒழுங்கு முறைகள் உருவாக்கப் பட்டு, நிபுணர்களால் தொடர்ச்சியாகத் தணிக்கை செய்யப்பட வேண்டும். மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங் கள் ஆன்லைன் சூதாட்டம் ஆடுவோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பிரத்யேக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மொபைல் போன் களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவரலாம். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்'' என்கிறார்.

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஏற்கனவே 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தடை செய்தது. அதை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர். தமிழக அரசின் எதிர்வாதம் வலுவாக இல்லாததால், தமிழக அரசு கொண்டுவந்துள்ள தடைச் சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றுகூறி, 2021, ஆகஸ்ட் 3-ம் தேதி தீர்ப்பளித்தது. உரிய விதிமுறைகளைக் கொண்டுவந்து முறைப்படுத்தும்படியும் தனது உத்தரவில் தெரிவித்தது.

இந்நிலையில், தற்போதுள்ள தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வது சாத்தியமா என வழக்கறிஞர் சரண்ராஜிடம் கேட்டபோது, "மக்களின் நல்வாழ்வைக் காப்பதும், உறுதிப்படுத்துவதும்தான் அரசாங்கத்தின் கடமை. அந்த வகையில்தான் தொடர்ச்சியாகப் பொதுமக்களில் பலரின் வருமான இழப்புக்கும், தற்கொலை, கொலை, கொள்ளைக்கும் தூண்டுதலாக இருக்கக்கூடிய ஆன்லைன் சூதாட்ட ஆப்களைத் தடை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டச் செயலி நிறுவனங் கள், திறமையை வெளிப்படுத்தும் விளையாட் டாகத்தான் தங்களை முன்வைக்கின்றன. இதில் திறமையாக விளையாடுபவர்களால் வெற்றிபெற முடிகிறது என்றும், பலரின் மரணத்துக்குக் காரணமான ஜல்லிக்கட்டு விளையாட்டையே அனுமதிக்கும்போது இதை மட்டும் ஏன் தடுக்கிறார்கள் என்றும் வாதிட்டதால்தான் தமிழக அரசு விதித்த தடை நீக்கப்பட்டது.

எனவே, மீண்டும் தடையைக் கொண்டுவர வேண்டுமென்றால், இவை சூதாட்டச் செயலிகள்தான் என்பதையும், இவற்றிலுள்ள டெக்னிகல் மோசடிகளையும் தொழில்நுட்ப ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.

Advertisment

rr

அதேபோல, மத்திய அரசும் மாநில அரசின் பார்வையோடு ஒத்துப்போக வேண்டும். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் சூதாட்டங்களே என்பதையும், மோசடி நடக்கின்றது என்பதையும் மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு, தனது வாதத்தை வைக்க வேண்டும். மேலும், நீதிமன்றமும், இந்த செயலிகளால் பணத்தை இழந்து, தற்கொலை செய்யும் பொதுமக்களின் துயரை உணர்ந்து, இவ்வழக்கை அணுகும் பட்சத்தில், இந்தியா முழுமைக்கும் இச்செயலிகளைத் தடைசெய்ய வாய்ப்புள்ளது.

ஒருவேளை, இந்த ஆப்களை முழுமையாகத் தடை செய்ய முடியாவிட்டாலும், இவற்றைச் செயல்படுத்துவதில் கட்டுப்பாடு களையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவர முயற்சிக்கலாம். ஆன்லைன் சூதாட்ட ஆப்களும், மதுபான விற்பனையும் கிட்டத் தட்ட ஒன்றுபோலதான். பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, சமூகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் அதிகரிப்பதில் மதுபானங்களுக்கும் பங்கிருக்கிறது. எனினும், மதுபான விற்பனைக்கு வரம்பு நிர்ணயித்து அரசாங்கம் செயல்படுத்துவதுபோல் இதற்கும் வரம்பு நிர்ணயம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது'' என்கிறார்.

rr

ஆன்லைன் ஆப்களைப் பொறுத்தவரை, ஒன்றைத் தடுத்தால் மற்றொன்று என புற்றீசல்போல அவை கிளம்பிக்கொண்டேதான் இருக்கக்கூடும். பொதுமக்களுக்கு போதிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆன்லைன் சூதாட்ட ஆப்களின் செயல்பாடுகளை முறைப்படுத்திக் கண்காணிப்பதுமே வருங்காலத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க உதவும்.