ந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்யத் தடையில்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத் திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞ ரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், நக்கீரன் இதழ் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் வெறுப்பு கருத்துக்களைப் பேசியிருந்தார். தி.மு.க.வின் ஆதரவால்தான் நக்கீரன் ஆசிரியர் இப்படிச் செயல்படுவதாகவும், அக்கட்சி என்றென்றைக்குமாக ஆட்சியில் தொடராது. ஆட்சி மாறும்போது நக்கீரன் ஆசிரியரைக் கைதுசெய்து விலங்கிடுவோம் எனவும், இப்படிப் பேசும் அவரது நாக்கை வெட்டுவேன் எனவும் தரக்குறைவாகப் பேசிய அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவந்த னர். இதனைத் தொடர்ந்து, அதனை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுனரும், தி.மு.க. உறுப்பினருமான ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். தன்மீது போடப்பட்டுள்ள வழக்கில் தன்னைக் கைதுசெய்யாமல் இருப்பதற்காக, முன்ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ss

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் தான் பேசி அவதூறு பேச்சுக்கு தானாக முன்வந்து மன்னிப்புக் கோரினால், முன்ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றுகூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் இந்த மனு மீண்டும் நவம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓம்கார் பாலாஜி தரப்பில் மன்னிப்புக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ஐகோர்ட்டின் உத்தரவின்படி மன்னிப்புக் கேட்பதாகக் கூறியிருந்தார். இதைப் படித்துப் பார்த்த நீதிபதி, “"ஐகோர்ட் மன்னிப்பு கேட்கவேண்டும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தானாக முன்வந்து மன்னிப்பு கேட்கலாம் என்றுதான் கூறியுள்ளது. எனவே தாமாக முன்வந்து மனுதாரர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக மனு தாக்கல் செய்யலாம்'’ என்றார். இதையடுத்து பிற்பகலில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மன்னிப்புக் கேட்டு புதிய மனு தாக்கல்செய்ய விருப்பமில்லை என்று ஓம்கார் பாலாஜி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வரும் நவம்பர் 19-ஆம் தேதிக்கு விசா ரணையை ஒத்திவைத்து உத்தரவிட் டார் நீதிபதி.

Advertisment

நீதிபதி, அரசு வழக்கறிஞரைப் பார்த்து "வழக்கு விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அதுவரை சர் ஒய்ற்ங்ழ்ண்ம் டழ்ர்ற்ங்ஸ்ரீற்ண்ர்ய்''என உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றத் தை விட்டு வெளியில் வந்ததும் நிச்ச யம் நம்மைக் கைது செய்துவிடுவார் கள் என்பதனால் என்ன செய்வது என்று புரியாமல் உயர் நீதிமன்றத்திற் குள்ளே அங்கும் இங்குமாய் திரிந்த ஓம்கார் பாலாஜி, ஒருகட்டத்தில் எப்படியாவது வெளியில் போலீஸ் பார்வையில் சிக்காமல் சென்றுவிட வேண்டும் என திட்டமிட்டு வழக் கறிஞர் கோட் அணிந்துகொண்டு வழக்கறிஞர்போல நழுவிச்செல்ல முற்பட்டார். நீதிமன்றத்திற்கு வெளியி லிருந்த போலீஸைக் கண்டு மீண்டும் நீதிமன்ற வளாகத்துக்கு வந்து காலத்தைக் கடத்த முற்பட்டார்.

இந்நிலையில், "நாளை காலை கோவையில் சரணடைந்துவிடுகிறேன். சரணடைய கால அவகாசம் வேண் டும். ஆனால் போலீசார் பின்தொடர்ந்து வரு கிறார்கள்''’என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஓம்கார் பாலாஜி சார்பில் முறையீடு செய்யப் பட்டது. அதற்கு நீதிபதி, "எந்த ஒரு இடைக்கால உத்தரவும் வழங்க முடியாது'' என மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் 7.25 மணிக்கு நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைதுசெய்து அவரை பி-2 காவல்நிலையத்தில் வைத்திருந்து, பிறகு கோவைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

ஏற்கெனவே ஓம்கார் பாலாஜி மீது கோவை, கெம்பட்டி காலனி பாரதியார் திடலில் ஆகஸ்டு 08, அன்று பொதுஅமைதி மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசி, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிய வழக்கு ஒன்றும் விசாரணை யில் உள்ளது.

Advertisment

-சே

_______

இறுதிச்சுற்று!

தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!

ssநடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கஸ்தூரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய முயற்சித்தபோது, அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடிவரும் நிலையில், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் கஸ்தூரி. இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். தெலுங்கு மக்கள் குறித்து தாம் பேசியதற்கு கஸ்தூரி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என அவர் சார்பில் சொல்லப்பட்டது. அதேசமயம், கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என போலீசார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனது தீர்ப்பை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனையடுத்து, கஸ்தூரியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டுவதைத் தொடர்ந்து கைதிலிருந்து தப்பிக்க மேல்முறையீடு செய்துள்ளார் கஸ்தூரி.

லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான அர்ஜுன் ரெட்டி ஆகியோருக்குத் தொடர்புடைய சென்னை, கோவை, சிக்கிம் ஆகிய இடங்களில் உள்ள பங்களா மற்றும் அலுவலகங்களில் வியாழக் கிழமை (14-11-24) அதிரடி ரெய்டு நடத்தியது அமலாக்கத்துறை. இவர் களுக்கு எதிராக ரெய்டு நடத்துவது சமீபகாலங்களில் இது இரண்டாவது முறை. வரி ஏய்ப்பு, வருமானத்துக்கு எதிராக சொத்துக் குவிப்பு, கறுப்புப் பணம் பதுக்கல், விஜய்யின் த.வெ.க. மாநாட்டுக்கு நிதி உதவி உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி பற்றிய செய்திகளை நக்கீரன் இதழில் பதிவு செய்து வந்தோம். கடந்த இதழில் கூட தமிழக அரசியலைக் கலக்கும் லாட்டரி மார்ட்டின் என அட்டைப் பட செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதுவே ரெய்டுக்கு முக்கிய காரணம்.

-இளையர்