முதியவர் எலும்பு முறிப்பு! மகனுக்கு பார்வை போச்சு!! -எல்லைமீறும் எடப்பாடியின் காக்கிகள்!

dd

ச்சுஅசல்போல சாத்தான்குளம் காக்கிகள் போல பல இடங்களிலும் செயல்படுகிறார்கள் எடப்பாடி அரசின் சித்திரவதை காக்கிகள். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகேயுள்ள அரியாம் பாளையத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் கந்தசாமி. இவரது மகன் ராஜூவுக்கு 53 வயது. இதேபகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, 2.60 ஏக்கர் நிலத்தை, அனுபவ பாத்தியதையில் வைத் துள்ளது இவரது குடும்பம்.

dd

இந்த நிலத்திற்கு அருகிலேயே உத்தமசோழபுரம் ஊராட்சிமன்றத் தலைவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலமும் இருக்கிறது. இந்த இரண்டு நிலங்களையும் பிரிக்கும் ஓடையை பெருமாள் ஆக்கிரமித்திருக்கிறார். இதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பெருமாள். இது தொடர்பாக விசாரிப்பதாகக் கூட்டிச்சென்று தான் தந்தை, மகனை ஃபைபர் லத்தியால் வெளுத்து வாங்கியிருக்கிறார் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன்.

தாங்கள் அனுபவித்த டார்ச்சரை கண்ணீருடன் நம்மிடம் விவரித்த ராஜூ, ""10 அடி அகலமுள்ள அந்த ஓடையை

ச்சுஅசல்போல சாத்தான்குளம் காக்கிகள் போல பல இடங்களிலும் செயல்படுகிறார்கள் எடப்பாடி அரசின் சித்திரவதை காக்கிகள். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகேயுள்ள அரியாம் பாளையத்தைச் சேர்ந்த 83 வயது முதியவர் கந்தசாமி. இவரது மகன் ராஜூவுக்கு 53 வயது. இதேபகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, 2.60 ஏக்கர் நிலத்தை, அனுபவ பாத்தியதையில் வைத் துள்ளது இவரது குடும்பம்.

dd

இந்த நிலத்திற்கு அருகிலேயே உத்தமசோழபுரம் ஊராட்சிமன்றத் தலைவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் விவசாய நிலமும் இருக்கிறது. இந்த இரண்டு நிலங்களையும் பிரிக்கும் ஓடையை பெருமாள் ஆக்கிரமித்திருக்கிறார். இதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பெருமாள். இது தொடர்பாக விசாரிப்பதாகக் கூட்டிச்சென்று தான் தந்தை, மகனை ஃபைபர் லத்தியால் வெளுத்து வாங்கியிருக்கிறார் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன்.

தாங்கள் அனுபவித்த டார்ச்சரை கண்ணீருடன் நம்மிடம் விவரித்த ராஜூ, ""10 அடி அகலமுள்ள அந்த ஓடையை கொஞ்சம், கொஞ்சமாக சுரண்டி, ஒருகட்டத்தில் எங்கள் நில எல்லைக்கு வந்துட்டாரு. எங்க நிலத்தில் மரத்தை நாங்க வெட்டிய போது, பெருமாள் தகராறில் ஈடுபட்டார். இருதரப்புமே கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டோம். நாங்கள் திட்டியதை மட்டும் செல்போனில் ரெக்கார்டு செய்து, போலீசில் புகார் கொடுத்துவிட்டார் பெருமாள்.

ff

கொண்டலாம் பட்டி போலீசார் அழைத்ததன்பேரில், இருவரும் மார்ச் 30ந்தேதி காலையிலேயே காவல் நிலையம் சென்றோம். அப்போது பணியிலிருந்த எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், எந்தக் கேள்வியும் கேட்கா மல் எடுத்த மாத்திரத்தில் ஃபைபர் லத்தியால் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். என் தந்தை யை 80 வயதைக் கடந்தவர் என்றும் பார்க்கவில்லை. என்னையும் அவர் வெறிபிடித்து அடித்தபோது, கண்ணுக்கு அருகில் லத்தி பட்டதில், கண்ணே கலங் கியதுபோல் இருந்தது. அப்பாவுக்கு வலதுகையில் எலும்பு முறிந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெருமாள் கேட்டுக்கொண்ட பிறகே, அடிப்பதை நிறுத்தினார் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன்.

dd

மறுநாள் காலை, கொண்டலாம்பட்டி தரண் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்த எங்களை, பெருமாளின் உறவினரான பழனிசாமி, காவலர்கள் வில்லியம் ஜேம்ஸ், முருகேசன் ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் நெருக்கடி கொடுத்ததால், அன்று மதியமே டிஸ்சார்ஜ் செய்தார்கள்'' என்றார் விசும்பியபடி.

இவர்கள் கொடுத்த புகாரின்பேரில், ஜூலை 27, 28 தேதிகளில் எஸ்.ஐ. ராமகிருஷ்ணனை நேரில் அழைத்து விசாரித்திருக்கிறார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன். இந்த விவகாரத்தில் புகார்தாரராகச் சொல்லப்படும் பெருமாளிடம் கேட்டோம், ""சர்ச்சைக்குரியதாக சொல்லப்படும் நிலம் எனக்குச் சொந்தமானது. ஒரிஜினல் பட்டாவில் உள்ளது. என் நிலத்தில் இருந்த மரத்தை ராஜூ தரப்பு வெட்டியது தொடர்பாக புகார் தந்தேன். போலீஸ் ஸ்டேஷனில் அவர்களுக்கு நடந்ததைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. 40 ஆண்டுகளாக தி.மு.க. கோட்டையாக இருந்த உத்தமசோழபுரம் பஞ்சாயத்தில், அ.தி.மு.க.காரன் ஜெயித்திருக்கிறேன். கட்சிரீதியில் எனக்குத் தொந்தரவு கொடுக்கிறார்கள். நிலம்தான் பிரச்சனை என்றால், சர்வேயரை வைத்து அளப்போம். ஓடை யாக இருந்தால், விட்டுவிடவும் தயார்'' என்றார்.

தந்தை, மகன் தாக்கப்பட்டது தொடர்பாக கொண்டாலம்பட்டி எஸ்.ஐ. ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ""பெருமாள் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், விசாரிக்க நேரில் சென்றபோது, போலீசார் முன்னிலையிலேயே புகார்தாரரை தகாத வார்த்தையில் பேசியதுடன், கொலைமிரட்டலும் விடுத்தார்கள். இதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. அவர்களை நான் அடித்ததாகச் சொல்வதில் உண்மையில்லை.

காவல்நிலையத்தில் இருந்து வீடுதிரும்பிய 40 மணிநேரத்திற்கு பிறகே, மருத்துவமனையில் அட் மிட்டானவர்கள், 24 மணிநேரத்தில் டிஸ்சார்ஜும் ஆகியுள்ளனர். அவர்களுக்கு வீக்கம் மட்டுமே இருந்ததாகவும், வெளிக்காயமோ, எலும்புமுறிவோ இல்லையென்று ஏ.ஆர். காப்பியில் உள்ளது. அவர்கள்மீது மூன்று பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கிறோம். விரைவில் நீதிமன்ற உத்தரவுடன் கைதுசெய்வோம்'' என்றும், ""இந்த விஷயத்தில் தான் தப்பு செய்யவில்லை'' என்றும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதாக தெரிவித்தார் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன்.

எஸ்.ஐ. சொல்வதுபோல் அல்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் 20 மணிநேரத்திற்கு உள்ளாகவே தரண் மருத்துவமனையில் அட்மிட் ஆனதும், அங்கு கந்தசாமியின் வலதுகையில் ‘1/3 லோவர்’ பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக ஆர்த்தோ மருத்து வர் நக்கீரன் என்பவரால் சிகிச்சையளிக்கப்பட்டதையும் நம் விசாரணையில் உறுதி செய்தோம்.

காவல்துறையினரின் மனித உரிமைமீறல் குறித்து, மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அசோகனிடம் கேட்டோம். ""புகார்தாரரின் குற் றச்சாட்டில் உண்மையிருப்பின், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட வரை 24 மணிநேரத்தில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதே உரிய சட்ட நடை முறை. அதுவும், நிலத்தகராறு விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பதே சட்ட விரோதம்தான். இதில் டார்ச்சர் நடந்தது உண்மை யெனில், மாநில மனித உரிமைக் கமிஷனை அணுகி, சட்டப்பூர்வ தீர்வுபெறலாம்'' என்றார்.

முதல்வர் பொறுப்பில் காவல்துறை உள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே காவல்துறை இப்படித் தான் உள்ளது.

- எஸ்.இளையராஜா

nkn080820
இதையும் படியுங்கள்
Subscribe