ராங்கால் தவறாக வழி நடத்திய அதிகாரிகள்! -அதிர்ச்சியில் கவர்னர் சூடுபிடித்த தேர்தல் களம்! ஜெ பொருட்கள் ஏலம் ! கர்நாடகா அதிரடி! களத்தில் 13 அமைச்சர்கள்! சூடுபிடித்த இடைத்தேர்தல் மேட்ச்!

stalin

"ஹலோ தலைவரே, இடைத்தேர்தலைச் சந்திக்கும் ஈரோடு கிழக்கில், இப்ப காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிங்கிளா ஓடிக்கிட்டு இருக்கார்.''”

"ஆமாம்பா, எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இப்போதைக்கு சிங்கிள் ஓட்டம்தான் கண்ணில் தெரியுது. அதிலும் அங்கே காங்கிரஸை விட தி.மு.க. தரப்புகிட்டதான் தீவிரம் தெரியுது.''”

ff

"உண்மைதாங்க தலைவரே, இந்தத் தொகுதியின் வெற்றியை தி.மு.க.வின் வெற்றியாகக் கருதுகிறார் ஸ்டாலின். அதனால்தான் 23-ந் தேதி, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட நாம் விட்டுக் கொடுத்திருந்தாலும் அங்கே தி.மு.க. போட்டியிடுவதாகத்தான் பொதுவெளியில் பேச்சு அடிபடுது. அது உண்மையும் கூட. அதனால் இந்த வெற்றிங்கிறது நம் ஆட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கும். அதேநேரம், வெறும் வெற்றி மட்டும் போதாது. எதிர்த்து நிற்பவர்கள் அனைவருக்கும் டெபாசிட் இழக்கும்படியான வெற்றியாக இருக்கணும்னு வலியுறுத்தி இருக்கார். இடைத்தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 13 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் ஸ்டாலின் அமைத்திருக்கிறார்.'' ”

"தேர்தல் செலவைக்கூட காங்கிரஸிடம் எதிர்பார்க்கக் கூடாதுன்னு கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் சொல்லி இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, இது நம்ம இமேஜை நிரூபிக்கிற தேர்தல். அதனால், தி.மு.க.வினர் யாரும் தேர்தல் செலவுக்கு காங்கிரஸிடம் கை நீட்டக் கூடாது. அவர்களை காசுக்காகத் தொந்தரவு செய்யவும் கூடாதுன்னு அமைச்சர் நேருவிடம் கறாராகச் சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின். அதேபோல் இந்த இடைத்தேர்தலுக்கான செலவு முழுவதையும் அமைச்சர்கள் நேருவும், செந்தில்பாலாஜியும்தான் செய்யணும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்காராம். அதனால் தேர்தல் களம் இப்பவே தகிக்கக் தொடங்கிடிச்சி. இந்தத் தேர்தல் பணிக்குழுவில் இருக்கும் 11 அமைச்சர்களும் தொகுதியை முற்றுகையிட்டு விறுவிறுப்பா தேர்தல் வேலைகளைக் கவனிக்கிறாங்க.

"ஹலோ தலைவரே, இடைத்தேர்தலைச் சந்திக்கும் ஈரோடு கிழக்கில், இப்ப காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிங்கிளா ஓடிக்கிட்டு இருக்கார்.''”

"ஆமாம்பா, எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இப்போதைக்கு சிங்கிள் ஓட்டம்தான் கண்ணில் தெரியுது. அதிலும் அங்கே காங்கிரஸை விட தி.மு.க. தரப்புகிட்டதான் தீவிரம் தெரியுது.''”

ff

"உண்மைதாங்க தலைவரே, இந்தத் தொகுதியின் வெற்றியை தி.மு.க.வின் வெற்றியாகக் கருதுகிறார் ஸ்டாலின். அதனால்தான் 23-ந் தேதி, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட நாம் விட்டுக் கொடுத்திருந்தாலும் அங்கே தி.மு.க. போட்டியிடுவதாகத்தான் பொதுவெளியில் பேச்சு அடிபடுது. அது உண்மையும் கூட. அதனால் இந்த வெற்றிங்கிறது நம் ஆட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கும். அதேநேரம், வெறும் வெற்றி மட்டும் போதாது. எதிர்த்து நிற்பவர்கள் அனைவருக்கும் டெபாசிட் இழக்கும்படியான வெற்றியாக இருக்கணும்னு வலியுறுத்தி இருக்கார். இடைத்தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் 13 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் ஸ்டாலின் அமைத்திருக்கிறார்.'' ”

"தேர்தல் செலவைக்கூட காங்கிரஸிடம் எதிர்பார்க்கக் கூடாதுன்னு கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் சொல்லி இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, இது நம்ம இமேஜை நிரூபிக்கிற தேர்தல். அதனால், தி.மு.க.வினர் யாரும் தேர்தல் செலவுக்கு காங்கிரஸிடம் கை நீட்டக் கூடாது. அவர்களை காசுக்காகத் தொந்தரவு செய்யவும் கூடாதுன்னு அமைச்சர் நேருவிடம் கறாராகச் சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின். அதேபோல் இந்த இடைத்தேர்தலுக்கான செலவு முழுவதையும் அமைச்சர்கள் நேருவும், செந்தில்பாலாஜியும்தான் செய்யணும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்காராம். அதனால் தேர்தல் களம் இப்பவே தகிக்கக் தொடங்கிடிச்சி. இந்தத் தேர்தல் பணிக்குழுவில் இருக்கும் 11 அமைச்சர்களும் தொகுதியை முற்றுகையிட்டு விறுவிறுப்பா தேர்தல் வேலைகளைக் கவனிக்கிறாங்க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் பலமாக இருக்கும் நிலையில், நடிகர் கமல் ஹாசனும், "தனது மக்கள் நீதி மய்யம், காங்கி ரஸின் வெற்றிக்குப் பாடுபடும்'னு அறிவிச்சிருக் கார். ராகுலின் நட்புக்காகத்தான் கமல் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.''”

stalin

"அடுத்தடுத்த திட்டங்களை காங்கிரஸ் வகுத்துக்கிட்டு இருக்குதே?''”

"இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, எந்த சிக்கலும் இல்லாம தி.மு.க.வே காங்கிரஸை ஜெயிக்க வச்சிடும்னு, அவங்க தரப்பு கான்பிடன்ஸோட இருக்குது. அதனால் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்ற பிறகு, செல்வப்பெருந்தகையிடம் இருக்கும் சட்ட மன்றக் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பறித்து, இளங்கோவனிடம் கொடுக்கவேண்டும் என்று கட்சியின் சீனியர்கள் இப்பவே முடிவெடுத்திருக்காங்க. இதற்கு அவங்க சொல்லும் காரணம் என்னன்னா, அதிரடியாகப் பேசும் வல்லமை பெற்றவரான இளங் கோவன், சட்டமன்றத்தில் காங்கிரஸின் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்வார். அது கட்சியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்கிறார் கள். அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலின்போது, தொகுதிப் பங்கீடு விவகாரத்தால் தி.மு.க.வுடனான காங்கிரஸின் கூட்டணி உடையுமானால், அப்போது இளங்கோவனைப் போன்ற ஒருவரால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ராகுல்காந்திக்கு இருக்கிறது. அதனால்தான் விடாப்பிடியாக அவரை ராகுல் களமிறக்கினார் என்கிற பேச்சும் அவர்கள் தரப்பிலேயே இருக்கிறது.''”

"சரிப்பா, ராஜ்பவன் மனநிலையில் நம்பமுடியாத அளவுக்கு மாற்றம் வந்திருக்குதே? அவசரப்பட்டு தி.மு.க. அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து விட்டோமோன்னு கவர்னர் ஆர்.என். ரவி யோசிக்கிறாராமே?''”

rnravi

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. அரசோடும், முதல்வர் ஸ்டாலினோடும் தனக்கு உரசல் வந்ததற்குக் காரணம், ராஜ்பவனில், தனது முதன்மைச் செயலாளராக இருக்கும் விஷ்ணு ஆனந்த் பாட்டில் ஐ.ஏ.எஸ்.ஸும், அவருக்குக் கீழுள்ள அரசு அதிகாரிகளும்தான்னு கவர்னர் ரவி தெரிஞ்சிக்கிட்டாராம். அவர்கள்தான், தன்னைத் தவறாக வழி நடத்தி தி.மு.க. அரசுக்கு எதிரானவராகத் தோற்றம் தர வைத்தார்களாம். அதுக்குக் காரணம், ராஜ்பவனின் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களை தமிழ்நாடு அரசு ஒதுக்குகிறது. இது குறித்து அரசு கணக்குக் கேட்பதில்லை. அதனால் இதுநாள்வரை ராஜ்பவனில் உள்ள அரசு அதிகாரிகள் அந்த நிதியில் புகுந்து விளையாடினார்களாம். இதற்கு முந்தைய கவர்னர்கள் இது குறித்தெல்லாம் கவலைப்பட்டதில்லையாம். ஆனால், ஆர்.என்.ரவி இங்கு கவர்னராக வந்த பிறகு, ராஜ் பவனுக்கு அரசு ஒதுக்கும் நிதி, முறையாகக் கையாளப்படுகிறதான்னு கவனித்தாராம். அந்தக் கோபத்தில்தான் அதிகாரிகள் தரப்பு, அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் போக்கை உருவாக்கி, கவர்னரின் கவனத்தை திசை திருப்பியதாம்.''’

’"கவர்னருக்கு ராஜ்பவன் குழறுபடிகள் எப்படித் தெரிந்ததாம்?''”

’"ராஜ்பவனில் நடந்த பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவுத் தொகை, சம்பந்தப்பட்ட காண்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு செல்லாமல் நிலுவையிலேயே இருந்திருக்கிறது. இது அவர்களால் கவர்னரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, உடனே தன் முதன்மைச் செயலாளர் பாட்டீலிடம் கவர்னர் இதுகுறித்து கேட்டிருக்கிறார். அதற்கு, தலைமைச் செயலகத்தில் இருந்து நிதி வரவில்லை என்று தி.மு.க. அரசு மீது அவர் பழியைப் போட்டி ருக்கிறார். இதனால் அரசு மீது எரிச்சலானாராம் கவர்னர். அண்மையில் இவர் இது குறித்து, அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தொகை ராஜ்பவனுக்காக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது என்கிற புள்ளி விபரத்தைக் கொடுத் திருக்கிறார். இதனை அறிந்து தன் செயலர்கள் மீது கோபமடைந்த அவர், காண்ட்ராக்டர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக ரிலீஸ் செய்திருக்கிறாராம்.''”

"பரவால்லயே...''”

"அதுமட்டுமில்லீங்க தலைவரே, பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் முத்திரை இல்லாமல் இந்திய அரசின் முத்திரை இடம்பெற்றதற்கும் ராஜ்பவன் அதிகாரிகள்தான் காரணம் என்று கண்டறிந்துள்ள கவர்னர் ரவி, ராஜ்பவன் அதிகாரிகளைக் கூண்டோடு மாற்றவும் திட்டமிட்டிருக்கிறார் என்கிறது ராஜ்பவன் தரப்பு. அதற்கான அரசாணை விரைவில் வெளிவருமாம். அதேவேளை... கவர்னர் பேசும் கூட்டங்களில் இந்துத்வா முகமாக சனாதனத்தை ஆதரித்துப் பேசுவதையும், தமிழ்நாட்டின் வரலாறே தெரியாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையும் நிறுத்தினால்தான் தமிழக மக்கள் மத்தியிலும் தமிழக அரசிடமும் அவருக்கு எதிரான மனநிலை மாறுமென்று இன்னொரு தரப்பு கூறுகிறது.''

"கோட்டை அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு தெரியுதே?''”

"’தமிழக அரசில் மிக முக்கியமாக 45 துறைகள் இருக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் செயலாளர் களாக இருக்கும் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4-பேருக்கும் இந்த 45 துறைகளை யும் கண்காணிக்கும் பொறுப்பு பிரித்துத் தரப்பட்டி ருந்தன. இந்த நிலையில் இப்போது இவர்களில் அனு ஜார்ஜ், தனிப்பட்ட காரணங்களுக்காக 3 மாதம் விடுப்பு எடுத்திருக்கிறார். அதனால் இதுவரை அவர் கவனித்து வந்த 12 துறைகளும் மற்ற 3 செயலாளர் களுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இது நிர்வாக ரீதியிலான நடைமுறைதான் என்றாலும், இப்படி ஒருவரின் துறையை மற்ற அதிகாரிகளுக்குப் பகிர்ந்து தருவதற்கு பதிலாக தனியாக ஒரு அதிகாரி யையே நியமித்து அவரிடம் அந்தத் துறைகளைக் கொடுக்கலாமேங்கிற பேச்சு எழுந்திருக்கு. அதேபோல் முதல்வரின் செயலாளர்களில் ஒருவர் கூட தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இல்லையேங்கிற ஆதங் கக் குரலும் அங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கு.''”

"தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வுபெறவிருக்கும் நிலையில், புதிய தலைமைச் செயலாளர் யார்னு முடிவுபண்ணிட்டாங்களா?''”

"ஜூனில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வுபெற இருக்கிறார். அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்த எந்தவித ஆலோசனையிலும் இதுவரை முதல்வர் ஸ்டாலின் இறங்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல; இந்தியாவிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சீனியாரிட்டி பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஹன்ஸ்ராஜ் வர்மாதான். ஆனால் அவர் தலைமைச் செயலாளராக வந்துவிடக்கூடாது என்று, முதல்வரின் இரண்டாம் நிலைச் செயலாளராக இருக்கும் உமாநாத் நினைக்கிறார். காரணம், நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தத் தனக்குத் தோதான ஒரு ஃப்ளெக்ஸிபில் அதிகாரியை தலைமைச் செயலாளராகக் கொண்டுவரணும்னு அவர் ஆசைப்படுகிறார். அதனால், அவரோட சாய்ஸ் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனாதானாம். இந்த நிலையில் உமாநாத் உள்பட முதல்வரின் செயலாளர்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடுகளையும் காய் நகர்த்தல்களையும் ஒன்றிய உளவுத்துறை கண்காணித்து வருகிறதாம்.''

"ஜெ.வின் சொத்துக்களை ஏலம்விடும் முயற்சியில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் இறங்கி இருக்குதே?''”

raa

"ஆமாங்க தலைவரே, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 66.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அரசு கைப்பற்றி அவற்றை அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் என்று ஏற்கனவே கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்காத நிலையில், கர்நாடக சிறப்பு நீதிமன்றமே முதற் கட்டமாக ஜெ.’வீட்டில் இருந்து கைப்பற்றப் பட்ட சேலைகள், காலணிகள், உள்ளிட்ட 27 வகைப்பொருட்களை ஏலம் விடும் பொறுப்புக்கு, ஒரு பப்ளிக் பிராசிக் யூட்டரை நியமித் திருக்கிறது. எனவே விரைவில் இதற்கான ஏல அறிவிப்பு வெளிவர இருக்கிறது. இதேபோல் அவரது தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களும், ஏனைய சொத்துக்களும் கூட ஏலத்துக்கு வர இருக்கிறதாம். இது ஜெ.’ அபிமானிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். திருவாருர் மாவட்டம் சுந்தரக் கோட்டையில் திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரி இருக்கிறது. இதன் 27-ஆவது ஆண்டு நிறுவனர் தினம் கடந்த 24-ஆம் தேதி விமரிசையாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சசிகலா கலந்து கொண்டார். அவரை வரவேற்க வைக்கப்பட்ட அனைத்து பேனர்களிலும், ஜெ.’படத்தைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, சசிகலா படத்தை மட்டுமே பொறித்திருந்தனர். அதேபோல் சசிகலாவின் புகழைப் பாடும் நிகழ்ச்சியாகவே அது நடந்து முடிந்தது. இது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.''

nkn280123
இதையும் படியுங்கள்
Subscribe