மலைப் பகுதிதானே என அலட்சியம் செய்யாமல் வாக்குப்பதிவில் சாதித்துள்ளனர் அதிகாரிகள். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குள் வருகிறது கல்வராயன் மலை. இந்த கல்வராயன் மலை ஒன்றியத்தில் ஆரம்பூண்டி, இன்னாடு, கரியாலூர், கிளாக்காடு, குண்டியாநத்தம், மணியார்பாளையம், மேல்பாச் சேரி, பாச்சேரி, பொட்டியம், சேராப்பட்டு, தொரடிப்பட்டு, வெள்ளிமலை, வெங்கோடு, வஞ்சிகுழி என 14 ஊராட்சிகளும், 144 கிராமங்களும் உள்ளன. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இங்குள்ள 31,363 வாக்காளர்களுக்கு, 38 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 24 வாக்குச்சாவடி மையங்கள் செல்போன் தொடர்புகூட கிடைக்காத கிராமங்களில் அமைந்திருந்தன. வாக்குப்பதிவு குறித்த தகவலை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, தேர்தல் ஆணையத்தின் மொபைல் ஆப்பில் பதிவேற்ற வேண்டும், தேர்தல் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
செல்போன் சிக்னலே கிடைக்காத வாக்குச்சாவடியிலிருந்து தகவல்களை எப்படிப் பெறுவது என ஆலோசித்தார் கள்ளக்குறி
மலைப் பகுதிதானே என அலட்சியம் செய்யாமல் வாக்குப்பதிவில் சாதித்துள்ளனர் அதிகாரிகள். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குள் வருகிறது கல்வராயன் மலை. இந்த கல்வராயன் மலை ஒன்றியத்தில் ஆரம்பூண்டி, இன்னாடு, கரியாலூர், கிளாக்காடு, குண்டியாநத்தம், மணியார்பாளையம், மேல்பாச் சேரி, பாச்சேரி, பொட்டியம், சேராப்பட்டு, தொரடிப்பட்டு, வெள்ளிமலை, வெங்கோடு, வஞ்சிகுழி என 14 ஊராட்சிகளும், 144 கிராமங்களும் உள்ளன. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இங்குள்ள 31,363 வாக்காளர்களுக்கு, 38 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 24 வாக்குச்சாவடி மையங்கள் செல்போன் தொடர்புகூட கிடைக்காத கிராமங்களில் அமைந்திருந்தன. வாக்குப்பதிவு குறித்த தகவலை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, தேர்தல் ஆணையத்தின் மொபைல் ஆப்பில் பதிவேற்ற வேண்டும், தேர்தல் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
செல்போன் சிக்னலே கிடைக்காத வாக்குச்சாவடியிலிருந்து தகவல்களை எப்படிப் பெறுவது என ஆலோசித்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார். மாவட்டங்களில் சில திட்டப்பணிகளுக்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வாக்கிடாக்கி பயன் படுத்துகின்றனர். அதனை வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தலாமென முடிவுசெய்தனர். 24 வாக்குச்சாவடி மையங்களில் ஸ்பெஷலாக வாக்கிடாக்கி கன்ட்ரோல்ஸ் அமைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கிடாக்கி வழியாக தகவலனுப்பி வெற்றிகரமாக வாக்குப்பதிவை முடித்தனர். இதன்மூலம் 25,533 வாக்குகள் (81.41%) பதிவாகியிருந்தது. இது தேர்தல் ஆணையம் முதல், உயரதிகாரிகள் வரை பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. "எங்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இதுபோல் நடவடிக்கை எடுப்பார்களா?'' எனக் கேள்வி எழுப்புகின்றனர் கல்வராயன் மலை மக்கள்.
கல்வி, சமூக வளர்ச்சிக்காக செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர் இனியன் ராமமூர்த்தி யிடம் பேசியபோது, "திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய முக்கிய மூன்று நகரங்களிலிருந்து கல்வராயன் மலையின் வெள்ளி மலைக்கு வரும் சாலைகள் தரமானதாக உள்ளன. மலையில் 13 உண்டு உறைவிடப்பள்ளி உட்பட அரசு உதவி பெறும் பள்ளி, ஏகலைவா பள்ளி இருக்கு. இப் பள்ளிகளில் 5 ஆயிரம் பிள்ளைகள் படிக்கின்றனர். தினமும் 3 முதல் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று படிக்கும் பிள்ளைகள் நூற்றுக்கணக்கில் இருக்காங்க. மலை யின் முக்கிய கிராம மான வெள்ளி மலை, கருமந் துரைக்கு தான் மற்ற கிராம மக்கள் வரவேண்டும். பல கிராமங்களிலிருந்து நடந்து மட்டுமே வரமுடியும். வெள்ளிமலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவேண்டுமென்றாலும் நடக்க வேண்டும், ஆம்புலன்ஸ் போகமுடி யாத கிராமங்களே அதிகம். பைக்குகள் கூட செல்லமுடியாத நிலையிலேயே வனத்துறை சாலைகள் உள்ளன. அப் பகுதிகளில் சாலை போட முடியாதபடி வனத்துறை சட்டங்கள் தடுக்கின்றன. மாவட்டம் பிரிந்தபின்பு இப்போது சில முயற்சிகள் எடுக்கப்படுகிறது. பி.எஸ். என்.எல் டவர் அமைக்கும் பணி தொடங்கியிருக்கு. இங்கு வேலை வாய்ப்புக்கான சூழ்நிலை இல்லாததால், வேலைக்காக 90 சதவிகித மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன் குமாரிடம் கேட்டபோது, "கடந்த தேர்தல் வரை மலையில் வாக்குப்பதிவு நடைபெற்றால் மாலையில் அலுவலர்கள் வந்து சொன்னால் மட்டுமே தெரியவரும். அதேபோல் இயந்திரம் பழுதானால் மாற்று இயந்திரம் பொருத்துவதில் சிக்கலாக இருந்துவந்துள்ளது. இந்த தேர்தலில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவை தேர்தல் ஆணையத்தின் ஆப்பில் பதிவிடவேண்டும். செல்போன் டவரே இல்லாத இடத்தில் என்ன செய்வதென ஆலோசித்து, மொபைல் வாக்கிடாக்கி கண்ட்ரோல்ஸை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இன்ஸ்டால் செய்தோம். சிக்னல் கட்டாகாமல் இருக்க மொபைல் கார்களில் ஆன்ட்டெனா வைத்தோம். வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு வாக்கிடாக்கியில் பயிற்சி தந்து ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை தகவல்களைப் பெற்று சிறப்பாக வாக்குப்பதிவை நடத்திமுடித்தோம். மலை மக்களின் முக்கிய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறோம்.
பி.எஸ்.என்.எல்.லில் யூ.எஸ்.ஓ.பி. திட்டத்தின்கீழ் கல்வராயன் மலையில் 32 இடங்களில் டவர் அமைக்கப்படுகிறது. ரிசல்ட்டுக்கு முன்பாகவே அது செயல்படத் துவங்கும். அதேபோல் இணைப்பு சாலைகள் ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி துவங்கவுள்ளது. சில சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளன. தாழ்த்தஞ்சடிப்பட்டு உட்பட இரண்டு இடங்களில் மழை பெய்தால் ஆற்றைக் கடந்து மக்கள் வரமுடியாது. அங்கே நபார்டு மூலமாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேராப்பட்டு உட்பட இரண்டு இடங்களில் மினி கிளினிக்குகள் மேம்படுத்தப்படவுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் தருவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். எஸ்.டியா என ஆய்வு செய்து ஒவ்வொரு குடும்ப ட்ரீ உருவாக்கினோம். எனக்கு தேவைப்படாதுங்க எனச் சொன்னவர்களுக்கும் "வாங்கிக்குங்க, தேவைப்படும்போது வாங்குவது கடினம்' எனச்சொல்லி சான்றிதழ் தந்துள்ளோம். வன உரிமைச் சான்றிதழும் அப்படித்தான் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்'' என்றார்.
நம்பிக்கை கீற்று தெரிகிறது.