அதிகாரிகளின் போர்ஜெரி லீலைகள்! அரசு கேபிளுக்கு மூடுவிழா! -கோர்ட்டுக்குப் போகும் வில்லங்கம்!

dd

ரசு அதிகாரி களின் போர்ஜெரி லீலை களால் இழுத்து மூடும் சூழல்களுக்கு தள்ளப்பட்டிருக் கிறது தமிழக அரசு கேபிள் டி.வி. நிறு வனம். இதனால் பல லட்சம் பேரின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், செட்-டாப் பாக்ஸ் விவகாரத்தில் கிரிமினல் வேலையில் ஈடுபட்ட அதிகாரிகளால் தி.மு.க. அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அரசு கேபிள் டி.வி.க்காக செட்-டாப் பாக்ஸ்களை மந்த்ரா மற்றும் பாலாஜி ஆகிய 2 நிறுவனங்கள் சப்ளை செய்து வந்தன. இந்த பிசினஸில் ஏற்பட்ட கொடுக்கல்-வாங்கல் தகராறில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ராஜனை, பொய் வழக்கில் கைது செய்ய வைத்தனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதனால், அரசு கேபிள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. உண்மையான காரணத்தை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லாமல் மறைத்தனர். செட்-டாப் பாக்ஸ் வில்லங்கங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான நீரஜ்மிட்டல், ஜெயசீலன் மற்றும் கேபிள் டிவி நிறுவனத்தின் டெக்னிக்கல் ஆலோசகர் ரவிராபர்ட், கேபிள் டி.வி.யின் வரவு செலவுகளை கவனிக்கும் உலகநாதன் ஆகியோர்தான் காரணம் என முதல்வர் ஸ்டாலினுக்கு முழுமையாக தெரிய வந்தது. ஒட்டுமொத்த அதிகாரிகளையும் கூண்டோடு மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்த நிலையில், அவரைச் சுற்றியுள்ள முக்கிய அதிகாரி ஒருவரின் தலையீட்டால் ஜெயசீலனிடமிருந்த நிர்வாக இயக்குநர் பதவி மட்டும் பறிக்கப்பட்டது.

மற்ற அதிகாரிகள் காப்பாற்றப்பட்டனர். அப்படி காப்பாற்றப்பட்ட அதிகாரி களால்தான் தற்போது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் துவங்கியிருக்கிறது. அதாவது, அரசுக்கு தெரியாமல் போர்ஜரி லீலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள விவகாரம்தான் பிரச்சனை. அவர்கள் மீது கிரிமினல் ஆக்சன் எடுக்க களத்தில் குதித்திருக்கிறது சீன நிறு வனம். இந்த வி

ரசு அதிகாரி களின் போர்ஜெரி லீலை களால் இழுத்து மூடும் சூழல்களுக்கு தள்ளப்பட்டிருக் கிறது தமிழக அரசு கேபிள் டி.வி. நிறு வனம். இதனால் பல லட்சம் பேரின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், செட்-டாப் பாக்ஸ் விவகாரத்தில் கிரிமினல் வேலையில் ஈடுபட்ட அதிகாரிகளால் தி.மு.க. அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அரசு கேபிள் டி.வி.க்காக செட்-டாப் பாக்ஸ்களை மந்த்ரா மற்றும் பாலாஜி ஆகிய 2 நிறுவனங்கள் சப்ளை செய்து வந்தன. இந்த பிசினஸில் ஏற்பட்ட கொடுக்கல்-வாங்கல் தகராறில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் ராஜனை, பொய் வழக்கில் கைது செய்ய வைத்தனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதனால், அரசு கேபிள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. உண்மையான காரணத்தை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லாமல் மறைத்தனர். செட்-டாப் பாக்ஸ் வில்லங்கங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான நீரஜ்மிட்டல், ஜெயசீலன் மற்றும் கேபிள் டிவி நிறுவனத்தின் டெக்னிக்கல் ஆலோசகர் ரவிராபர்ட், கேபிள் டி.வி.யின் வரவு செலவுகளை கவனிக்கும் உலகநாதன் ஆகியோர்தான் காரணம் என முதல்வர் ஸ்டாலினுக்கு முழுமையாக தெரிய வந்தது. ஒட்டுமொத்த அதிகாரிகளையும் கூண்டோடு மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்த நிலையில், அவரைச் சுற்றியுள்ள முக்கிய அதிகாரி ஒருவரின் தலையீட்டால் ஜெயசீலனிடமிருந்த நிர்வாக இயக்குநர் பதவி மட்டும் பறிக்கப்பட்டது.

மற்ற அதிகாரிகள் காப்பாற்றப்பட்டனர். அப்படி காப்பாற்றப்பட்ட அதிகாரி களால்தான் தற்போது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சிக்கல் துவங்கியிருக்கிறது. அதாவது, அரசுக்கு தெரியாமல் போர்ஜரி லீலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள விவகாரம்தான் பிரச்சனை. அவர்கள் மீது கிரிமினல் ஆக்சன் எடுக்க களத்தில் குதித்திருக்கிறது சீன நிறு வனம். இந்த வில்லங்கம் கோர்ட் படிகளில் விரைவில் ஏறவிருக்கிறது.

இதுகுறித்து நாம் விசா ரித்தபோது, "இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பணிபுரிந்த தனது நண்பர் ரவி ராபர்ட்டை தமி ழகத்துக்குக் கொண்டுவர விரும்பி, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த நல்ல ஆலோசகர் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் துறையின் செயலாளர் நீரஜ்மிட்டல்.

ff

நீரஜ்மிட்டலின் கோரிக்கையை ஏற்று ரவிராபர்ட்டை அனுப்பி வைத்தது மத்திய பா.ஜ.க. அரசு. துறையின் ஆலோசகராக ரவிராபர்ட் நியமிக்கப்பட்டார். நீரஜ்மிட்டல், ஜெயசீலன், உலகநாதன் கூட்டணியில் இணைந்துகொண்டு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ரவிராபர்ட் செய்யும் அட்ராசிட்டி அதிகரிக்கத் தொடங்கியது. கேபிள் டி.வி. நிறுவனத்தை மட்டுமல்ல; தகவல் தொழில் நுட்பத்துறையையே ஆட்டிப் படைத்துக்கொண்டி ருக்கிறார் ரவிராபர்ட். டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி. சேவைக்கு செட்-டாப் பாக்ஸ் அவசியம். செட்-டாப் பாக்ஸ் இயங்குவதற்கு நஙந (சப்ஸ் க்ரைபர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்), ஈஆந (கண்டி சனல் ஆக்சஸ் சிஸ்டம்) ஆகிய இரண்டு தொழில் நுட்பங்கள் தேவை. செட்-டாப் பாக்ஸ் சப்ளை செய்ய டெண்டர் எடுக்கும் நிறுவனம், இந்த 2 சிஸ்டங்களையும் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டி ருக்க வேண்டும்.

அந்த வகையில், செட்-டாப் பாக்ஸ் உற்பத்தி செய்வதில் புகழ்பெற்ற சீனா நிறுவனமான ஹோஸ்பெல் டிஜிட்டல் டெக்னாலஜியிடம், செட்-டாப் பாக்ஸ் கொள் முதல் செய்வதற்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது டெண்டர் எடுத்திருந்த மந்த்ரா நிறுவனம். மேலும், சி.ஏ.எஸ். மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகிய 2 சிஸ்டத்தின் லைசன்ஸையும் (உரிமம்) வாங்கி வைத்திருக்கிறது மந்த்ரா.

இதன்மூலம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு செட்-டாப் பாக்ஸ்கள் சப்ளை செய்யப்பட்டு, கேபிள் சேவை ஆரோக்கியமாக நடந்துகொண்டிருந்த நிலையில் தான், மந்த்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜனை ஒழித்துக் கட்ட அதிகாரிகள் போட்ட நாடகத்தில் அவர் கைது செய்யப் பட்டார். கேபிள் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் வாடிக்கையாளர்களின் செட்- டாப் பாக்ஸ்களில் குளறுபடிகள் ஏற்பட்டன. குறிப்பாக, எஸ்.எம்.எஸ். என்பது கனெக்சன் எடுத் துள்ள வாடிக்கையாளரின் அனைத்து விபரங்களை யும் உள்ளடக்கியது. ஒரு வாடிக்கையாளர் கேபிளுக்குரிய மாதக் கட்டணத்தை 1-ந் தேதி கட்டவேண்டும் என வைத்துக்கொள்வோம். 1-ந்தேதி கட்டவில்லை எனில் அடுத்த செகண்ட் அவருக்கு சிக்னல் கிடைக்காமல் சேவை நிறுத்தப்பட்டுவிடும். பணம் கட்டிவிட்டால் உடனடியாக சிக்னல் கிடைத்துவிடும்.

அதேபோல, இந்த மாதத்திலிருந்து குறிப் பிட்ட சேனல் தனக்கு தேவையில்லை என ஒரு வாடிக்கையாளர் சொன்னால் உடனடியாக அந்த சேனலை மட்டும் நிறுத்திவிடும். இப்படிப்பட்ட பல்வேறு டெக்னாலஜிகளை உள்ளடக்கி இயக்குவதுதான் எஸ்.எம்.எஸ்.சின் வேலை. இவை இயங்கவேண்டுமாயின், காஸ் (ஈஆந) சிஸ்டம் அவசியம். இந்த நிலையில்தான், நீரஜ்மிட்டலின் உத்தரவின்படி, மந்த்ரா மற்றும் பாலாஜி நிறுவ னத்தின் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய் கிறார்கள். உடனடியாக புதிதாக ஒரு டெண்டரை அறிவித்து, நீரஜ்மிட்டலுக்கும், ரவிராபர்ட்டுக்கும் நெருக்கமான ஷோபாஸ் டெக்னாலாஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதிதாக ஒரு ஒப்பந்தத்தை சமீபத்தில் போட்டுக் கொண்டிருக்கிறது அரசு கேபிள் டி.வி. நிறுவனம்.

டெண்டர் ஒப்பந்தத்தில், நஙந மற்றும் ஈஆந சிஸ்டத்திற்காக கோஸ்பெல் நிறுவனத்திடம் எங்கள் இணை பார்ட்னரான யூனிடெக் நெட் வொர்க் நிறுவனம் டை-அப் வைத்துள்ளது என்கிற டாகுமெண்டை இணைத்திருக்கிறது ஷோபாஸ் நிறுவனம். ஆனால் அப்படி எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. அது ஒரு போர்ஜெரி டாகுமெண்ட்.

ss

இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு இந்தமாதம் 13-ந் தேதி மெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது கோஸ்பெல் நிறுவனம். அதில், ஷோபாஸ் மற்றும் யூனிடெக் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், எங்களிடம் டை-அப் வைத்திருப்பதாக அவர்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட எந்த டாகுமெண்டும் நாங்கள் தரவில்லை. அப்படி கொடுக்கப்பட்ட டாகுமெண்ட் போர்ஜரியானது. அதனால், போர்ஜரி டாகுமெண்ட் மூலம் எங்கள் பெயரைப் பயன்படுத்தியுள்ள அந்த நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடுமையாக சொல்லியுள்ளது.

அதேசமயம், மந்த்ரா நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அந்த நிறு வனத்தின் செட்-டாப் பாக்ஸ்கள் இயங்காதபடி அரசு கேபிள் டி.வி, நிறுவன அதிகாரிகள், ரவிராபர்ட் டின் உத்தரவின்படி, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சர்வரில் பிரச்சனையை உருவாக்கி வைத்திருக்கிறார் கள். இதனால், தமிழகம் முழுவதும் கேபிள் சேவை ஒளிபரப்புவதில் சிக்கல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, மாதக்கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த முயன்றால் செலுத்த முடியவில்லை. இதனால் அவர்களுக்குரிய கனெக்சன் கட் ஆகிவிடுகிறது. இதனால் லோக்கல் ஆபரேட்டர் களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மோதல் வெடித்தபடி இருக்கிறது. சரி செய்யவே முடி யாத அளவுக்கு இந்த சிக்கல்கள் அதிகரித் துள்ளதால் இந்த மோதல்கள் தெருவுக்கு வந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மாறும் அபாயம் இருக்கிறது”என்று விரிவாக சுட்டிக் காட்டுகிறார்கள் தகவல் தொழில்நுட்பத் துறையினர்.

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்த போது,”"நீரஜ்மிட்டல், ரவிராபர்ட் இருவரின் ஆலோசனையின் பேரில்தான் அந்த போர்ஜெரி டாகுமெண்ட் தயாரிக்கப்பட்டு டெண்டரில் இணைத்துள்ளது ஷோபாஸ் நிறுவனம். காரணம், பிரதமர் மோடியின் அலுவலகத்தோடும், தமிழக முதல்வரோடும் தங்களுக்கு மிக நெருக்கம் இருக்கிறது; அதை வைத்து கோஸ்பெல்லிடம் பேசி நஙந மற்றும் ஈஆந சிஸ்டத்தின் லைசன்ஸை வாங்கிவிடலாம் என்கிற தெனாவெட்டில்தான் கோஸ்பெல்லிடம் டை-அப் இருப்பதாக போர்ஜரி டாகுமெண்டை தயாரித்து இணைக்க ஷோபாஸ் நிறுவனத்திடம் நீரஜ்ஜும் ரவிராபர்ட்டும் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அதிகாரிகள் மற்றும் டுபாக்கூர் நிறுவனங்களின் கூட்டணி இந்த போர்ஜரியில் குதித்துள்ளது.

அதன்படி, லைசன்ஸை பெற கோஸ்பெல் நிறுவனத்தை அணுகிய அரசு அதிகாரிகள், பிர தமர் அலுவலகத்தின் பெயரையும், தமிழக முதல் வரின் பெயரையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு ஏன் அழுத்தம் தரவேண்டும் என கோஸ்பெல் நிறுவனம் சீரியஸாக ஆராய்ந்தபோதுதான், தங்கள் நிறு வனத்தின் பெயரில் போர்ஜரி டாகுமெண்ட்டை சமர்பித்துள்ள வில்லங்கம் தெரியவர, அதிர்ச்சி யடைந்திருக்கிறது கோஸ்பெல் நிறுவனம்.

அரசு அதிகாரிகளின் பித்தலாட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்த கோஸ்பெல் நிறுவனம், இதனை அம்பலப்படுத்தும் வகையில், கிரிமினல் ஆக்சன் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. போர்ஜரியில் தொடர்புடைய நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் ஆக்ஷனை தி.மு.க. அரசு எடுக்கவில்லை எனில், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர கோஸ்பெல் திட்டமிட்டுள்ளது. இந்த வில்லங்கம் கோர்ட் படிகளில் ஏறினால், முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் தின் நேர்மைக்கு சிக்கல் ஏற் படும்''’என்று விவரிக்கிறார்கள்.

nkn211222
இதையும் படியுங்கள்
Subscribe