கடலூர் மாவட்டம் பெண்ணா டத்தில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது இங்கிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இப்பகுதி யிலுள்ள அரியராவி கிராமத்தைச் சேர்ந்த நாகசுந்தரம் என்ற விவசாயியை, பத்தாயிரம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்க மறுத்ததால் மின்வாரிய ஊழியர்கள் பாடாய்ப்படுத்து வதாக நமக்குத் தகவல் கிடைத்தது.
அவரிடம் நேரில் விசாரித்தபோது, நாகசுந்தரம் வீடு கட்டவுள்ள மனையின் குறுக்கே, ஆளில்லாத நேரத்தில் ஒரு மின் கம்பத்தை நட்டு மின்சார லயனை உருவாக்கியுள்ளனர். அதுகுறித்து, பெண் ணாடம் துணை மின் நிலைய அதி காரிகளைச் சந்தித்து முறையிட்டபோது, "அப்படித்தான் செய்வோம். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் புகாரனுப்புங்கள்'' என்று தெனாவெட்டாகப் பதில் கூறி யிருக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி யுள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி
கடலூர் மாவட்டம் பெண்ணா டத்தில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது இங்கிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இப்பகுதி யிலுள்ள அரியராவி கிராமத்தைச் சேர்ந்த நாகசுந்தரம் என்ற விவசாயியை, பத்தாயிரம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்க மறுத்ததால் மின்வாரிய ஊழியர்கள் பாடாய்ப்படுத்து வதாக நமக்குத் தகவல் கிடைத்தது.
அவரிடம் நேரில் விசாரித்தபோது, நாகசுந்தரம் வீடு கட்டவுள்ள மனையின் குறுக்கே, ஆளில்லாத நேரத்தில் ஒரு மின் கம்பத்தை நட்டு மின்சார லயனை உருவாக்கியுள்ளனர். அதுகுறித்து, பெண் ணாடம் துணை மின் நிலைய அதி காரிகளைச் சந்தித்து முறையிட்டபோது, "அப்படித்தான் செய்வோம். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் புகாரனுப்புங்கள்'' என்று தெனாவெட்டாகப் பதில் கூறி யிருக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி யுள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியும், பெண்ணாடம் துணை மின் நிலைய அதிகாரிகள் அந்த புகாரைச் சட்டைசெய்யவில்லை.
அடுத்து நாகசுந்தரம் மனைவி சுமதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, மங்கையர்க் கரசி என்பவர் தாழ்வாக செல்லும் மின் பாதையை மாற்றியமைக்கக் கேட்டதன் அடிப்படையில், புதிய மின் கம்பம் நட்டு, மின்சார லயன் இழுக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்த மேலும் சில கேள்விகளுக்கு பதில்தர மறுத்துள்ளனர். "எங்கள் பட்டா இடத்தில், எங்கள் அனுமதியில்லாமல் மின் கம்பம் நடுவது சட்டப்படி தவறல்லவா?" என்று பெண்ணாடம் துணை மின்நிலையத்தில் கேட்டபோது, "உங்களிடம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை" என்று வயர்மேன் கண்ணன், முத்து, உதவி மின் பொறியாளர் பழனிவேல், உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, சூப்பிரண்ட் சதாசிவம் உள்ளிட்ட பெண்ணாடம் மின்நிலைய அதிகாரிகள் அனைவரும் கூறியதோடு, "பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் மின்கம்பத்தை மாற்றி அமைப்போம். இல்லாவிட்டால் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று பகிரங்கமாக மிரட்டி யிருக்கிறார்கள்.
"ஏன் இப்படி லஞ்சம் கேட்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்டால், "மாற்று வழியில் கொண்டு கொண்டு செல்ல வேண்டுமானால் லஞ்சமாகப் பணம் தர வேண்டும்'' என்கிறார்கள். மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தியபின்னும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பின்னர், திட்டக்குடி டிவிஷனல் பொறியாளர் அலுவலகத்தில், மின்சார நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில், கடலூரிலிருந்து வந்திருந்த செயற்பொறியாளர் சதாசிவத்திடம் புகாரளித்து முறையிட்டோம். அவரோ, எனது புகாரை வாங்கிப் படிக்காமலேயே, அங்கிருந்த அலுவலர்களின் பேச்சை மட்டும் கேட்டுவிட்,டு "எந்த இடத்தில் வேண்டுமானாலும் மின்சாரக் கம்பத்தை நட்டு, மின் பாதையைக் கொண்டுசெல்ல எங்களுக்கு அதிகாரம் உள்ளது. யாரிடத்திலும் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை'' என்று கோபமாகப் பேசி வெளியே அனுப்பினார்.
அதன்பிறகு திட்டக்குடி டிவிஷனல் அதிகாரி வள்ளி, பெண்ணாடம் உதவி மின்பொறியாளர் பழனிவேல், உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி ஆகியோர் எங்கள் வீட்டுமனையில் நடப்பட்ட மின் கம்பப் பகுதிகளைப் பார்வையிட்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள். இரு வாரங்கள் கழித்து, "உங்கள் இடத்திற்கான வருவாய்த்துறை ஆவணங் களைக் கொடுங்கள்'' என்று புதுக்குண்டைப் போட்டார்கள். எங்கள் இடத்தில் அனுமதியில்லாமல் மின் கம்பத்தை நட்டுவிட்டு, இப்போது எங்கள் வீட்டு மனை என்பதற்கான ஆதாரத்தைக் கேட்பது அதிர்ச்சியாக இருந்தது.
கொட்டாரம் துணை மின் நிலையத்தின் உதவி மின் செயற்பொறியாளர் பழனிவேலிடம், "ஒருவருடைய வீட்டு மனைப் பட்டாவில் மின் கம்பத்தை நட்டுவிட்டு அதை எடுக்காமல் பிரச்சனை செய்வது தவறு. விரைவாக அந்த மின் கம்பத்தை எடுங்கள்'' என்றதற்கு, கொஞ்சமும் மதிப்பளிக்காமல், "உங்களிடம் பேசத் தயாராக இல்லை எங்கள் உயர் அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள்'' என்றார். அதேபோல், பெண்ணாடம் உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமியிடம் இதுகுறித்து கேட்டபோது, "பத்திரிக்கை, மீடியாக்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது'' என்று மறுத்துவிட்டார். வயர்மேன் கண்ணனிடம் அவர்மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, "எனக்கு அந்த ஏரியாவே கிடையாது. அப்பகுதியில் மின் கம்பம் நட நான் போகவேயில்லை'' என்கிறார்.
அதே அரியராவி கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின் இடத்திலும் இதேபோல் மின் கம்பத்தை நட்டுவிட்டு பிரச்சனை செய்திருக்கிறார்கள் மின்வாரியத் தினர். "சர்வாதிகாரப் போக்கில் இங்குள்ள மின்சார வாரிய அதிகாரிகள் செயல்படு கிறார்கள். வாடிக்கையாளர்களை, அதி காரிகளும், அலுவலர்களும் ஒரு புழு பூச்சியைவிட கேவலமாகப் பார்ப்பதும் அவமானப்படுத்துவதுமாக இருக்கிறார்கள்'' என்கிறார் பெண்ணாடம் மின்நுகர்வோர் சங்க பொறுப்பாளர் சோமசுந்தரம். ஏற்கனவே பெண்ணாடம் மின்வாரிய அலுவலகத்தில் பணி செய்த ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை. அதன் பிறகும் இவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை