அ.தி.மு.க. ஆட்சியில் ஆவினில் நடந்த ஊழல்களை தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதனால் பால்வளத்துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக் கும் உரசல்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கிற ஆவின் நிறுவனம், பல்வேறு மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை, சென்னைக்கு கொண்டு வர டேங்கர் லாரிகளை வாடகைக்கு அமர்த்தும் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்கிறது. அந்த வகையில், 320 கோடி ரூபாய் மதிப்பில் 375 டேங்கர் லாரிகளை 2022-2025 ஆகிய 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொள் ளும் டெண்டரை கடந்த மே மாதம் 6-ந்தேதி அறிவிக்கிறது ஆவின். ஆனால், அந்த டெண்டரை இறுதி செய்யாமலே 6 மாதம் கழித்து ரத்து செய்திருக்கிறார் ஆவின் நிர்வாக இயக்குநரான சுப்பையன் ஐ.ஏ.எஸ்.
பால் டேங்கர் லாரிக்கான இத்தகைய டெண்டர்களை இதுவரை 5-வது முறையாக ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை தருகிறது என்கிறார்கள் பால் வளத்துறையினர். இதன் பின்னணியில் சுமார் 500 கோடி ரூபாய் ஊழல் ஒளிந்திருப்பது பகீர் ரகம்.
பால்வளத்துறையின் அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசிய போது, "பால் டேங்கர் லாரிகளை சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாக ஒப்பந்தம் செய்துள்ள டெண்டர் கடந்த 2018-ல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, டெண்டர் விதிகளுக்குப் புறம் பாக 2019-ல் அறிவிக்கப்பட்ட டெண்டரில் நடக்கவிருந்த 350 கோடி ரூபாய் ஊழலை நக்கீரன் அம்பலப்படுத்த, விவகாரம் கோர்ட்டுக்குப் போனது. டெண்டரில் விதிமீறல் இருப்பது நிரூபிக்கப்பட, டெண்டரை ரத்து செய்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன். நக்கீரனில் எழுதப்பட்ட டெண்டர் ஊழல் குறித்த செய்தி அன்றைக்கு நீதிமன்ற வளாகத்திலும் பேசுபொருளானது.
அதன்பிறகு 2021 வரை இதே டெண்டர் விடப்படுவதையும், டெண்டரை இறுதி செய்யா மலே ரத்து செய்வப்படுவதையும் வாடிக்கையாக வைத்திருந்த ஆவின் நிர்வாகம், கடந்த எடப்பாடி ஆட்சியில் 4 முறை இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அந்த 4 ஆண்டுகளும், கொட்டேசன் முறையில் லாரிகளை அமர்த்தி பாலை சென்னைக்குக் கொண்டுவந்தது ஆவின் நிறுவனம்.
அதாவது, துறையின் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர் களிடம் குறிப்பிட்ட விலைக்கு கொட்டேஷன் வாங்க மாவட்ட பால் ஒன்றியங்களிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார்கள். அதன்படி கொட்டேஷன் வாங்கப்படும். கொட்டேஷனில் குறிப்பிட்டுள்ள தொகைக்கு அவர்களோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்கள்.
இத்தனைக்கும், 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகைகொண்ட டெண்டராக இருந் தால், கொட்டேஷன் முறையை நடைமுறைப் படுத்தக்கூடாது என டெண்டர் ட்ரான்ஸ்ஃபரன்சி சட்டவிதிகள் சொல்கிறது. அந்த சட்டத்தையெல் லாம் மதிக்காமல், சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை வெறும் கொட்டேஷன் மூலமாகவே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இந்த நிலையில்தான் தி.மு.க. ஆட்சியில் கடந்த மே மாதம் முறையாக டெண்டர் விடப்பட்டது. அதையும் தற்போது ரத்து செய்து விட்டனர். கொட்டேஷன் முறையில் லாரிகளைக் கையாள வேண்டுமென்பதற்காகவே இப்படி டெண்டர் விடுவதும், அதனை ரத்து செய்வதும் என கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடு கிறது ஆவின் நிர்வாகம்.
காரணம், ஆவின் அதிகாரிகள் பலரும் பினாமி பெயர்களில் டேங்கர் லாரி பிசினெஸை நடத்தி வருகின்றனர். தவிர, கொட்டேஷன் சிஸ்டத் தில் புழங்கும் கோடிகளில் கணிசமான கோடிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படு கின்றன''’என்கிறார்கள் மிக அழுத்தமாக. ஆவின் நிறுவன வட்டாரங்களில் விசாரித்தபோது, "கொட்டேஷன் முறையில் நடக்கும் கோடிக்கணக் கான ஊழல்களை ஒழித்துக்கட்ட, சட்டவிதிகளின் படி வெளிப்படையான டெண்டர் மூலம் டேங்கர் லாரிகளை ஒப்பந்தம் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார் அமைச்சர் நாசர்.
இதற்காக, டெண்டர் கண்டிசன்களை உரு வாக்கினார் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் ஐ.ஏ.எஸ். இதற்கு, பால்வளத்துறையின் ஆணைய ராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ். மற்றும் துறையின் செயலாளராக இருந்த ஜவஹர் ஐ.ஏ.எஸ். ஆகியோர் ஒப்புதலும் தந்தனர். ஒரு கட்டத்தில், பிரகாசை மாற்றிவிட்டு அவர் வகித்த ஆணையர் பதவியை சுப்பையனிடமே ஒப்படைக்கிறார்கள். அதேபோல, ஜவஹரை மாற்றிவிட்டு துறையின் செயலாளராக கார்த்தி ஐ.ஏ.எஸ்.ஸை நியமிக்கிறது தி.மு.க. அரசு. இந்த நிலையில் 5-வது முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதில் பல நிறு வனங்கள் கலந்துகொண்டன. அந்த நிறுவனங் களின் டெக்னிக்கல் பிட்டை ஓப்பன் செய்து ஆராய்கிறது ஆவின் நிர்வாகம். அதில் 93 நிறுவனங் கள் தகுதியுள்ளதாக தேர்வு செய்யப்படுகின்றன. இதனையடுத்து, 9 பேர் கொண்ட ஸ்க்ரூட்னி கமிட்டி, 93 நிறுவனங்களின் ப்ரைஸ் பிட்டை (விலைப்புள்ளி) ஓப்பன் செய்யவும், அதில் எல்-1 ஆக வருகிற நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கவும் அனுமதிக்கிறது.
டெக்னிக்கல் பிட் ஓப்பன் செய்யப்பட்டால் அடுத்த 90 நாட்களில் ப்ரைஸ் பிட்டை ஓப்பன் செய்தாக வேண்டும் என்பது விதி. ஆனால், ஸ்க்ரூட்னி கமிட்டி அனுமதியளித்த பிறகும் ப்ரைஸ் பிட்டை ஓப்பன் செய்யாமல் 180 நாட்கள் வரை கிடப்பில் வைத்திருந்துவிட்டு, டெண்டர் விதிகளில் தவறு இருப்பதாக போர்டு லெவல் கமிட்டி (பி.எல்.டி.சி.) உத்தரவிட்டதைச் சொல்லி, திடீரென டெண்டரையே ரத்து செய்கிறார் சுப்பையன் ஐ.ஏ.எஸ். ப்ரைஸ் பிட்டை ஓப்பன் பண்ணாமல் டெண்டரை ரத்து செய்வது சட்டவிதிமீறல்” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஆவின் அலுவலர்கள்.
போர்ட் லெவல் கமிட்டியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பால்வளத்துறை செக்ரட்டரி கார்த்தி, உறுப்பினர்களாக ஆவின் சுப்பையன், கால்நடைத்துறை கமிஷனர் ஞானசேகரன், நிதித் துறையின் கூடுதல் செயலர் அருண்சுந்தர்தயாளன் இருக்கிறார்கள். இதில் கமிட்டியின் சேர்மன் கார்த்தி. மற்றவர்கள் உறுப்பினர்கள். ஒரு டெண்டரின் ப்ரைஸ் பிட் ஓப்பன் செய்யப்பட்டு, அதில் எல்லி1 ஆக வரும் நிறுவனம் குறிப்பிட்டிருக்கும் தொகை சந்தை மதிப்பை விட கூடுதல் தொகையாக இருந்தால் மட்டுமே, போர்ட் லெவல் கமிட்டிக்கு டெண்டர் முடிவுகளை எடுத்து செல்லமுடியும். அந்த சூழலில்தான் கமிட்டி தலையிட முடியும்.
ஆனால், இந்த பிரச்சனையில், ப்ரைஸ் பிட்டை ஓப்பன் பண்ணாமலேயே கமிட்டிக்கு கொண்டு சென்றுள்ளார் சுப்பையன். இது சட்டப் படி தவறு. அதேசமயம், டெண்டர் கண்டிசன் தவறு என கமிட்டி சொன்னால், அதனை மறுத்திருக்கவேண்டிய பொறுப்பு சுப்பையனுக்கு இருக்கிறது. காரணம், டெண்டர் விதிகளை உரு வாக்கியவரே சுப்பையன் என்பதால், மறுத்திருக்க வேண்டும். ஆனால், மறுக்கவில்லை.
மாறாக, தான் உருவாக்கிய விதிகளையே தவறு என சுப்பையனே கையெழுத்திட்டிருக்கிறார். அப்படி தவறு என்றால், தவறான விதிகளை உருவாக்கிய சுப்பையன், அந்த விதிகளுக்கு ஒப்புதல் தந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோரை போர்ட் லெவல் கமிட்டி தண்டித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. கார ணம், டெண்டர் ரத்து செய்யப்பட வேண் டும் என்பதும், பால் டேங்கர் லாரிகள் கொட்டேஷன் சிஸ்டத்திலேயே இயங்க வேண்டும் என்பதும் மட்டுமே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உள்நோக்கமாக இருந் திருக்கிறது. இந்த நிலையில், சட்ட விரோதமாக டெண்டர் ரத்து செய்யப் பட்டதால் டெண்டரில் கலந்துகொண்ட சில நிறுவனங்கள், அமைச்சர் நாசரிட மும், ஆவின் எம்.டி. சுப்பைய னிடமும் முறையிட்டன. சுப்பையனிடமும் அந்த நிறுவன உரிமையாளர்களிடமும் விசாரித் தார் அமைச்சர் நாசர். அப்போதுதான் டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதே நாசருக்கு தெரிந்து அதிர்ச்சியடைகிறார். உடனே சுப்பையனிடம், "350 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் என்பது அரசின் கொள்கை முடிவு. அந்த கொள்கை முடிவை ரத்து செய்வதற்கு முன்பு என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. அரசாங்கம்கிறது நாங்களா?, நீங்களா? கொள்கை முடிவை ரத்து செய்ய நீங்கள் யார்?
விதிகளை நீங்களே உருவாக்குவீங்க,… நீங்களே அது சரியில்லைன்னு ரத்து செய்வீங்க, அப்படின்னா தவறான விதியை உருவாக்கிய உங்களைத் தண்டிக்கலாமா? ப்ரைஸ் பிட்டை ஓப்பன்பண்ண ஸ்க்ரூட்னி கமிட்டி அனுமதி யளித்தப் பிறகும் நீங்கள் ஏன் ஓப்பன் பண்ண வில்லை? ஒப்பன் பண்ணாதபோது போர்ட் லெவல் கமிட்டியை ஏன் அணுகினீர்கள்? ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், கொட்டேஷன் சிஸ்டத்தையே அமல்படுத்த வேண்டுமென்கிற உள்நோக்கத்துடன் டெண்டரை ரத்து செய்திருக்கிறீர்கள். ஆவினில் நடக்கும் ஊழல்களை ஒழிக்கணும்னு நானும் படாதபாடு படுகிறேன். ஆனால், ஆவின் திருந்த மறுக்கிறது''’என்று சுப்பையனிடம் ஏகத்துக்கும் வெடித்திருக்கிறார் அமைச்சர் நாசர். இந்த டெண் டர் முறையாக இறுதி செய்யப்பட்டிருந்தால் ஆவின் நிறுவனத்துக்கு 60 கோடி ரூபாய் லாபம் கிடைத் திருக்கும். அந்தளவுக்கு மிகக்குறைந்த ரேட்டை கோட் பண்ணியிருக்கின்றன பல நிறுவனங்கள்.
2021-ல் நான்காவது முறையாக டெண்டர் விடப்பட்டபோது, 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரிக்கு ஒரு கிலோ மீட் டருக்கு 22.75 ரூபாய்க்கும், 9,000 லிட் டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரிக்கு 17 ரூபாய்க்கும் போர்ட் லெவல் கமிட்டி அப்ரூவல் செய்தது. இந்த ரேட்டுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு காண்ட்ராக்டை கொடுக்கலாம் என உத்தரவும் போட்டது. ஆனால், அந்த உத்தரவை அப்படியே 180 நாட்கள் கிடப்பில் வைத்திருந்துவிட்டு பிறகு டெண்டரையே ரத்து செய்தது ஆவின். அதேசமயம், 33.75 ரூபாய் முதல் 37.75 ரூபாய் வரை கொட்டேஷ னில் டேங்கர் லாரிக்கு கொடுத்து வருகிறார் கள் அதிகாரிகள். ஆக, ஒரு கிலோ மீட்ட ருக்கு குறைந்தபட்சம் 11 ரூபாயும் அதிக பட்சம் 15 ரூபாயும் அதிகமாக கொடுக்கிறது ஆவின் நிர்வாகம். இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக இயக்கப்படும் கொட்டேஷன் சிஸ்டத்தால் சுமார் 500 கோடி ரூபாய் ஆவினுக்கு இழப்பு. இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் போயிருக்கிறது.
டெண்டர் விதிகளில் தவறே இல்லாத நிலையிலும் தவறு இருப்பதாக இன்றைக்கு சுட்டிக்காட்டும் போர்ட் லெவல் கமிட்டி, 22.75 ரூபாய்க்கு கொடுக்க உத்தர விட்டதை புறந்தள்ளிவிட்டு, 37.75 ரூபாய்க்கு கொட்டேஷ னில் லாரிகளை 4 ஆண்டுகளாக ஓட்டிக்கொண்டிருக்கும் ஆவின் நிர்வாகத்தை ஏன் கேள்வி கேட்கவில்லை? ஏன்னா, கமிட்டியிலுள்ள ஐ.ஏ.எஸ்.களும் கவனிக்கப் பட்டே வருகிறார்கள். இந்த பின்னணியில்தான், 5-வது முறையாக அறிவிக்கப்பட்ட டெண்டரையும் தற்போது ரத்து செய்திருக்கிறார் சுப்பையன். ஆவின் பால் விலையை அரசு குறைத்ததால் அரசுக்கு சுமார் 240 கோடி ரூபாய் கூடுதல் செலவு. இந்த கொட்டேசன் சிஸ்டத்தை ஒழித் திருந்தாலே அந்த 240 கோடி ரூபாயை ஈடுகட்டியிருக்க முடியும். அதிகாரிகளின் கூட்டுச்சதியால் ஆவினில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதுகுறித்து கருத்தறிய சுப்பையனை பலமுறை தொடர்பு கொண்டும் நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவே இல்லை.
சட்டவிதிகளுக்கு உட்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் டெண்டர்கள் இறுதி செய்யப்பட வேண்டுமென்று அழுத்தமாக உத்தரவிட்டிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த உத்தரவை ஆவின் நிர்வாகம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
இந்த நிலையில், தங்களுக்கு அடங்காமல் தங்களைக்கேள்வி கேட்கும் அமைச்சர்களை கேபினெட்டிலிருந்து நீக்க வைக்கும் சதிகள் சத்தமில்லாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் பின்னப்பட்டு வருகின்றன.
____________
இறுதிச்சுற்று!
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த டிசம்பர் 1 வியாழன்று, சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரின் திருவுருவச்சிலை திறக்கப்பட்டதற்கும், ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனார் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டதற்கும் 7,500 கோடி ரூபாய் மதிப்பில், பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, டிசம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.