கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நாஞ்சில் நாட்டு விவசாயத்துக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப் படுகிறது. கும்பப்பூ, கன்னிப்பூ என இரு பருவ சாகுபடிகளைக் கொண்ட நெல் விவசாயத்தில், தற்போது நடக்கும் கும்பப்பூ பருவ விவசாயத் துக்கு தண்ணீர் விடாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்..
செண்பகராமன்புதூர் விவசாய சங்கத் தலைவர் ராக்கிசமுத்து கூறுகையில்...’"கும்பப்பூ சாகுபடிக்காக நடவு நடக்கவுள்ள நிலையில், நெல் விதையை முளை கட்டிவிட்டு தோவாளை கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவாங்கன்னு விவசாயிகள் எதிர்பார்த்த நேரத்தில், எந்த முன்னறிவிப்புமின்றி கால்வாயை அடைச்சிட் டாங்க அதிகாரிகள். ஏன் இப்படி செய்றீங்கனு கேட்டதுக்கு கால்வாயை தூர்வாராமல் தண்ணீர் விடமுடியாது என்றனர்.
கால்வாயைத் தூர்வார இதுவா நேரம்? கோடைகாலத்தில் செய்ய வேண்டிய வேலையை இப்ப செய்கிறார்களே, தூர் வாருவதற்காக கோடையில் எத்தனை போராட்டத்தை நடத்தினோம், அப்ப அக்கறையில்லாமல் இப்ப சாகுபடி நேரத்தில் தண்ணியை விடாமல் விவசாயிகளின் வயித்தில் அடிக்கிறாங்க.
விவசாயிகள் முளை கட்டி வைத்திருந்த விதைகளெல்லாம் நாசமாகிப்போச்சு. ஒரு மூட்டை விதை 2,600 ரூபாய். இப்படி 10 கோட்டைக்கான விதைகள் மூட்டை மூட்டையாக விவசாயிகள் வீட்டில் கிடக்கிறது. இதேபோல் கடந்த கன்னிப்பூ சாகுபடி நேரத்தில் தூவச்சி பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தபிறகே தண்ணீர் தருவோம்னு சொன்ன அதிகாரிகள், பருவம் தொடங்கும்வரை உடைப்பையும் சரிசெய்யாமல், தண்ணீரும் தராமல் பயிர்கள் பட்டுப்போனதில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி உற்பத்தி வீணானது. விவசாயிகள்மீது அக்கறையில்லாத அதிகாரிகள் எதற்கு?''’எனக் கேட்டார் வேதனையுடன்.
அதிகாரிகளுக்கெதிரான போராட்டத்தில் இறங்கியுள்ள தோவாளை மற்றும் செண்பக ராமன்புதூர் விவசாயிகளோ, "அதிகாரிகளால் கன்னிப்பூ சாகுபடியில் பெருநட்டமானது. கும்பப்பூ சாகுபடியிலாவது இழந்ததை மீட்டுவிடலாமென நினைத்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிட மறுத்துட்டாங்க.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால் வாய்க்கு இங்கிருந்து தண்ணீர் விடுவதற்கு சபா நாயகர் அப்பாவு உத்தரவிட்டதால், அதற்கான தூர்வாரும் பணிக்காகத்தான் தண்ணீரைத் திறந்துவிடாமல் எங்க விவசாயத்தை பாழாக் கிட்டாங்க. ராதாபுரத்துக்கு தண்ணீர் கொடுப் பதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இப்போது, தண்ணீர் திறந்துவிட நட வடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறுகிறார். எங்க ளுக்கு தற்காலிகத் தீர்வு வேண்டாம், இதுபோல் எப்போதும் நடக்காதபடி நிரந்தரத் தீர்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்றனர்.
ராதாபுரம் பட்டணம் கால்வாய் நீரைப் பயன்படுத்துவோர் சங்க நிர்வாக மோகனசுந்தர் கூறுகையில், “"தமிழக அரசின் ஒப்பந்த உத்தர வுப்படி கோதையாறு பாசனத் திட்டத்தின்கீழ் ராதாபுரம் கால்வாய்க்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு முன் னிலையில் 25.9.2024 அன்று நிலப்பாறையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு, 20 நாட்கள் கடந்தும் தோவாளை கால்வாயை கடந்துவர வில்லை. இதற்கு காரணம், தோவாளை கால்வாய் பலமில்லாமல் இருக்கிறது. அதை பலப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் அதிகாரிகளிடம் முறையிட் டோம். அவர்கள் மெத்தன மாகச் செயல்படுவதால் தான் இவ்வளவு பிரச்சனை. எனவே அவர்களுக்கெதி ராகப் போராட்டத்தை கையிலெடுத்துள் ளோம்''’என்றார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் கூறும் போது,’ "விவசாயிகள் பயிர் வைத்து நாற்று நட்ட பிறகு தூர்வாருதல் என்ற அடிப் படையில் தோவாளை கால் வாயில் தண்ணீரை நிறுத்து வது விவசாயிகளை மனரீதி யாகப் பாதிக்கச் செய்துள்ளது.
திடீரென்று தோவாளை சானலை தூர்வாருவதற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி ஒதுக்கீடு விவ ரங்கள், தூர்வாரும் பணிகள் எத்தனை நாட் களில் முடியும் என்பது பற்றி சம்பந்தப்பட்ட மூன்று துறையினரும், விவசாயிகளிடம் தெரியப்படுத்தினார்களா? சாகுபடி நேரத்தில் தண்ணீரை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே தீரவேண் டும். தொடர்ந்து இந்த மாதிரி சம்பவங்களால் விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் நிலையுள் ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண, சட்டசபை யிலும் இதுபற்றிப் பேசி அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவிருக்கிறேன்''’என்றார்.
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது... "ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் போகவில்லையென்ற குற்றச்சாட்டு இருந்ததால் கண்காணிப்புப் பொறியாளர் கடந்த 15ஆம் தேதி தோவாளை கால்வாயை ஆய்வு செய்ததில், கால்வாயில் உள்ள பாசிகள் மற்றும் மண்சரிவுகளை அகற்றி தூர்வாரிய பிறகு தண்ணீர் விட நடவடிக்கை எடுத்ததால்தான் தோவாளை கால்வாயில் தண்ணீர் நிறுத்தப் பட்டது. மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை. உடனே தண்ணீர்விட நடவடிக்கை எடுக்கப் படும்''’என்றனர்.
தூர் வாரவேண்டிய நேரத்தில் தூர் வாராமல் இருந்ததற்கு காரணமான அதிகாரிகள்தான் சாகுபடி நேரத்தில் தண்ணீரையும் விடாததற்கு காரணமாக இருக்கிறார்கள்.
-மணிகண்டன்