நாகை அரசு ஆதரவற்ற குழந்தை கள் காப்பகத்தில் "குட் டச், பேட் டச்' குறித்து சொல்லிக் கொடுக்க வந்த மனநல ஆலோசகரே, குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதாகியிருப்பது பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாகப்பட்டினம் சாமந்தான்பேட் டையில் இயங்கிவருகிறது அன்னை சத்யா அரசு பெண் குழந்தைகள் காப்பகம். சுனாமியின்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணனின் பெருமுயற்சியால் கொண்டுவரப்பட்டது இக்காப்பகம்.
காப்பகத்திலுள்ள பெண்பிள்ளை கள் அருகருகேயுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். காப்பகத்தின் கண்காணிப் பாளர் சசிகலா. குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட 3 பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் சத்திய பிரகாஷ்.
தமிழக அரசே அனைத்து வசதி களையும் செய்துதரும் இந்த காப்பகக் குழந்தைகள், ஏதோ ஒருவகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மனஉளைச்சலுக்கு ஆளாகிவந்திருப்பதும், காப்பகத்திலுள்ள பெண் குழந்தைகள் தற்கொலைக்கு முயற்சிப்பதும், காப்பகத்திலிருந்
நாகை அரசு ஆதரவற்ற குழந்தை கள் காப்பகத்தில் "குட் டச், பேட் டச்' குறித்து சொல்லிக் கொடுக்க வந்த மனநல ஆலோசகரே, குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதாகியிருப்பது பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாகப்பட்டினம் சாமந்தான்பேட் டையில் இயங்கிவருகிறது அன்னை சத்யா அரசு பெண் குழந்தைகள் காப்பகம். சுனாமியின்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணனின் பெருமுயற்சியால் கொண்டுவரப்பட்டது இக்காப்பகம்.
காப்பகத்திலுள்ள பெண்பிள்ளை கள் அருகருகேயுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். காப்பகத்தின் கண்காணிப் பாளர் சசிகலா. குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட 3 பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் சத்திய பிரகாஷ்.
தமிழக அரசே அனைத்து வசதி களையும் செய்துதரும் இந்த காப்பகக் குழந்தைகள், ஏதோ ஒருவகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மனஉளைச்சலுக்கு ஆளாகிவந்திருப்பதும், காப்பகத்திலுள்ள பெண் குழந்தைகள் தற்கொலைக்கு முயற்சிப்பதும், காப்பகத்திலிருந்து தப்பிச்செல்வதும், பள்ளிக்கு செல்வதாகக் கூறிவிட்டு காணாமல்போவதும், பின்னர் தேடிக்கண்டுபிடித்து அவர்களை மீட்டுக் கொண்டுவருவதும் நடந்திருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ரகசிய விசாரணை நடத்தியது. விசா ரணையில், காப்பகத்தில் தங்கியுள்ள மாணவிகளுக்கு பாலியல்ரீதியாக துன் புறுத்தல் நடந்துவருவதை உறுதி செய் துள்ளனர். பிறகு குழந்தைகள் நலக்குழு வினர் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். 5 மாணவி கள் மனநிலை ஆலோசகர் சத்தியபிரகாஷ் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர். அதன்பிறகே நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காப்பகத்தின் கண்காணிப்பாளர் சசிகலா புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வேம்பரசி வழக்குப் பதிவு செய்ததோடு, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வுசெய்து, சத்தியபிரகாஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார். இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என விசாரணை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காப்பக ஊழியர் ஒருவரிடம் விசாரித் தோம்.. “"காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. காப்பகத்திற்கு உண்டான உணவுப் பொருட்களில் பெரும்பகுதியை கண்காணிப் பாளர் சுரண்டிவிடுவார். நன்கொடையாளர் களால் தினசரி சாப்பாட்டுக்கான உதவிகள் கிடைத்துவிடும். பலமுறை கெட்டுப் போன உணவைச் சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம். மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்து அதிகாரி ஒருவர் ஆய்வுக்கு வந்தார். அந்த அதிகாரி ஆய்வுசெய்தால் இவர் களின் லட்சணம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால், இது பெண்பிள்ளைகள் இருக்கும் காப்பகம். இங்க நீங்க ஆய்வுசெய்ய அனுமதிகிடையாது என அவரை ஆய்வு செய்யவிடாமல் தடுத்தார். ஆனாலும் பிடிவாதமாக ஆய்வை மேற்கொண்ட அதிகாரிக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. காப்பகத்தில் ஆணுறைகளையும், பீர் பாட்டில்களையும் கண்டிருக்கிறார்.
குட் டச், பேட் டச் எது என சொல்லிக் கொடுத்து குழந்தைகளை பாலியல் அத்துமீறலிலிருந்து மீட்கவேண்டியது, மனநல ஆலோ சகரான சத்தியபிரகாஷ் பொறுப்பு. ஆனால் அவரே கண்ட இடத்தில் கைவைப்பதாக குழந்தைகள் எங்களிடம் சொல்லும்போது "உங்களுக்கு நியாயம் கேட்க யாருமே வரமாட்டாங்கம்மா, நீங்கதான் சூதானமா இருக்கணும்' என கூறுவோம். மனநல ஆலோசகர் மட்டும்தான் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கிறார். இன்னும் நிறைய பேருக்கும் தொடர்பிருக்கு. தீர விசாரித்தால் காப்பாளரே சிக்குவார்.
அடிக்கடி காப்பகத்திலுள்ள பிள்ளைகள் தப்பிக்க முயற்சித்துள்ளனர். கடந்த ஜூலை 30 இரவு நேரத்தில் 8 குழந்தைகள் காணாமல் போனார்கள். அவர்களை நாகூர் போலீசார் சென்னையிலிருந்து மீட்டுவந்தனர். பிறகு ஐந்து பிள்ளைகள் தற்கொலை முயற்சிசெய்தனர். பிறகு இரண்டு பிள்ளைகள் அதிக டோஸ் கொண்ட பேரசிட்டமால் மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். குழந்தைகள் அனைவருமே சொல்வது "எங்களுக்கு காப்பகத் தில் பாதுகாப்பில்லை, மனசுக்கு ஒப்பாத காரியங்களையெல்லாம் வற்புறுத்தி செய்ய வைக்கிறாங்க. அதில் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். பாதிக்கப்பட்ட 5 பேரிடம் புகார் பெற்றுள்ளதாகவும், யார் தவறுசெய்திருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம், அவர் களுக்கு கடுமையான தண்டனை பெற் றுத் தர முயற்சிப்போம் என்று விசா ரணை அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் தெரிகிறது''’என்றார் அந்த ஊழியர்.
காப்பகக் கண்காணிப்பாளர் சசிகலாவிடம் விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி. அருண்கபிலனோ, “"இது போன்ற அவலம் 3 வருடங்களாக நடந்துவருவதாகத் தெரிகிறது. உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது. இதற்கு நீங்களும் உடந்தையா?''’ என கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷோ, "பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான மனரீதியான ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மனநல மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்கிறார்.
சமூக ஆர்வலரான ஓ.எஸ்.இப்ராஹிம், "இங்குள்ள அதிகாரிகள் விசாரித்தால் சக அதிகாரிகளைக் காப்பாற்ற, நடந்த தவறை மறைக்க முயற்சிக்கலாம். இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் நீதிபதி தலைமையிலான குழுவைக்கொண்டு விசாரணை செய்ய வேண்டும்''” என்கிறார்.