தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள் கட்டமைப்பை வலிமைப் படுத்துவதற்கும் மிக முக்கியமானது சாலை வசதிகள். அதனை உருவாக்குவதற்கான திட்டங் களை செயல்படுத்த இயங்குகிறது நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை. தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சியில் எப்படி இருக்கிறது நெடுஞ்சாலைத்துறை?
நெடுஞ்சாலைத்துறையின் செட்டப்!
எ.வ.வேலுவை அமைச்சராகக் கொண்ட தமிழக அரசின் நெடுஞ் சாலைத்துறையின் உயர்பதவியில் 10 தலைமைப் பொறியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் முதன்மை இயக்குநராக (நிர்வாகம்) குமார், இயக்கு நராக (நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்) கோதண்டராமன் இருக் கின்றனர். வடிவமைப்பு (டிசைன்) தலைமைப் பொறியாளர் பதவி காலியாக இருப்பதால் இந்த பதவியை கூடுதல் பொறுப்பாக குமாரிடமே ஒப்படைத்திருக்கிறார் அமைச்சர் வேலு. இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம், சென்னை-கன்னியாகுமரி தொழில் தடத் திட்டம், பெருநகரம், திட்டங்கள் ஆகிய பிரிவுகளில் முறையே தலைமைப் பொறியாளர்களாக பாலமுருகன், சந்திரசேகர், கீதா, சாந்தி, செல்வன், கோதண்டராமன் (பொறுப்பு), முருகேசன் உள்ளனர். 112 கோட்டப் பொறியாளர்கள் இயங்குகிறார்கள். துறையின் அமைச்சர் வேலு, செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். தவிர மேற்கண்ட உயர்பதவியில் இருக்கும் அதிகாரி களும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் உள்ள 9 வட்டங்களில் உள்ள கண் காணிப்பு பொறியாளர் களும் வைத்ததுதான் துறையின் சட்டம்.
அமைச்சர் வேலுவின் அதிரடி ஆக்ஷன்!
துறையின் அமைச்ச ராக பொறுப்பேற்றுகொண்டதும் பொறியாளர்கள் மற்றும் காண்ட் ராக்டர்களுடன் தனித்தனி ஆலோ சனைக் கூட்டம் நடத்தினார் எ.வ.வேலு. அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட துறையில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பாலங்களுக்காக நில எடுப்புப் பிரச்சனைகள்தான் ஏராளம் என்று அதிகாரிகள் விவரித்தபோது, அதற்கு என்ன பண்ணலாம் என அமைச்சர் வேலு கேட்க, நில எடுப்புப் பணிகளைக் கவனிக்க நம்மிடம் விபரம் தெரிந்த அதிகாரிகள் இல்லை. வருவாய்த்துறையிலுள்ள டி.ஆர்.ஓ. ரேங்க் அதிகாரிகள் நம்மிடம் இருந்தால் நிலஎடுப்பு விவகாரங்கள் எளிதாக முடியும் என்று தெரிவித்தனர். மீட்டிங் முடிந்த மறுநாளே முதல்வர் ஸ்டாலினிடம் பேசி, வருவாய்த்துறையிலிருந்து 5 ஸ்பெஷல் டி.ஆர்.ஓ.க்களை டெபுடேஷனில் நெடுஞ்சாலைத்துறைக்கு கொண்டுவருகிறார் வேலு. மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விவாதித்து அமைச்சர் ஆக்சனில் இறங்க, திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ளன. அதேபோல, காண்ட்ராக்டர்கள் மீட்டிங்கில் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அதனைக் களைந்துள்ளார் வேலு.
நிதி ஒதுக்கீடும் கமிஷனும்!
நெடுஞ்சாலைத்துறைக்கான நிதி கட்டமைப்பு வலிமையானது. இது குறித்து நம்மிடம் பேசிய துறை அதிகாரிகள்,’"தமிழகத்தில் 63,956 கி.மீ. நீளமுள்ள சாலைகளை பராமரிக்கிறது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு. இதற்கான நிதியை பட்ஜெட் மூலம் ஒதுக்கீடு செய்கிறது மாநில அரசு. தவிர, தமிழகத்திலுள்ள 6,606 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,511 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளை துறையின் தேசிய நெடுஞ் சாலை அலகும், மீதமுள்ள 5,095 கி.மீ. நீளமுள்ள சாலைகளை இந்திய நெடுஞ்சாலைகளின் தேசிய ஆணையமும் பராமரிக்கின்றன. நடப்பு நிதியாண்டுக்கு 18,211 கோடி ரூபாயை ஒதுக்கியிருக் கிறது தி.மு.க. அரசு. இதில் கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாய் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் பட்ஜெட்டில் இந்த பிரிவுக்கு மட்டுமே சுமார் 50% நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கு காரணம் கமிஷன் பின்னணிகள் நிறைய உண்டு''’என்கிறார்கள்.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்!
நெடுஞ்சாலைத்துறையில் பணம் காய்க்கும் மரமாகவும் ஊழல்களின் ஊற்றுக்கண்ணாகவும் பார்க்கப்படுகிறது இந்த திட்டம். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலமான 2004-ல் துவக்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்ட 3,064 கோடி ரூபாய்க்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. 5,106 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டிற்காக 4,947 கோடி ரூபாய் இத்திட்டத் திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளில் இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு 44,643 கோடி ரூபாய். நிஜமாகவே இந்த சாலைகள் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதா என யோசிப்பதில்லை. நிதி ஒதுக்கீடு மட்டுமே முக்கியம். சாலைகள் போடப்படாமலேயே 30 சதவீத தொகையும், சாலைகள் போடப்பட்டால் 100 சதவீத தொகையும் சுருட்டப்படுகின்றன.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்!
"எடப்பாடி ஆட்சியில் சேலம், திருப்பூர், நெல்லை, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் 4 வழிச்சாலைகளை 6 வழிச்சாலைகளாக மாற்றும் சாலைப் பணிகள் உலக வங்கி நிதி உதவியுடன் தொடங்கப்பட்டு, 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மதுரை, நெல்லை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகப் போக்கு வரத்து கொண்ட மாநில நெடுஞ்சாலைகளிலிருக் கும் 2 வழிச் சாலைகளை 4 வழிச்சாலைகளாக (400 கி.மீ.) மாற்ற உலக வங்கியிடம் 6,000 கோடி ரூபாய் கடன் கேட்கப்பட்டுள்ளது. அதனை பெறுவதற்கான நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்த சாலை மேம்பாடு திட்டம், சென்னை-கன்னியாகுமரி தொழிலக செயல்திட்டம், சென்னை எல்லை திட்டம் ஆகியவை களுக்காக வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடந்த ஆண்டு 3,300 கோடி கடன் பெற்றுள்ளது. இப்படி வெளிநாட்டில் கடன் பெறுவதற்கு பதிலாக, ஊழல்களுக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் வீணாக்கப்படும் நிதியை இந்த திட்டத்திற்கு ஒதுக்கலாம். கடன் சுமை குறையும்'' என்கிறார்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
தேசிய நெடுஞ்சாலை அலகு!
தமிழக அரசு பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக் கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறது. மொத்தம் 4,958 கோடி ரூபாய் மதிப்பிலான வேலைகளில் வெறும் 1,151 கோடிகளுக்கான வேலைகள் மட்டுமே கடந்தாண்டில் நடந்திருக்கிறது. இதற்கு காரணம் தலைமைப் பொறியாளர் பாலமுருகன்.
பேக்கேஜ் சிஸ்டமும் ஆன்லைன் டெண்டரும்!
சிறிய காண்ட்ராக்டர்களை ஒழித்துக்கட்டி பெரிய காண்ட்ராக்டர்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் நாலைந்து வேலைகளை ஒன்றாக இணைத்து டெண்டர் விடுவதே பேக்கேஜிங் சிஸ்டம். டீலிங் பேசுவதற்கு வசதியாக அ.தி.மு.க. அரசால் கண்டுபிடிக் கப்பட்ட முறை இது. இந்த பேக்கேஜ் சிஸ்டத்தை நீக்குவேன் என சட்டப்பேரவையில் அறிவித்தார் தற்போதைய அமைச்சர் வேலு. பேக்கேஜிங் என்கிற பெயர் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறது; மற்றபடி மாற்றம் ஏதுமில்லை என்கிறது இன்ஜினியர்கள் தரப்பு. அதேபோல, வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டது. ஆன்லைனில் டெண்டர் போட்டாலும், டெண்டரின் இறுதி நாளுக்கு முன்பாக நேரடியாகவும் டாகுமெண்டுகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். தரவில்லையெனில் அவரது டெண்டர் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டுவிடும் என கண்டிசன் போடப்படுகிறது. அப்போது 3 நபர்களின் டாகுமெண்டுகளை மட்டுமே நேரில் அதிகாரிகள் வாங்குகிறார்கள். அதேபோல கோட்டப்பொறியாளரால் தரப்படவேண்டிய தரச்சான்றிதழும் கூட குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இது சந்தேகத்தை உருவாக்குகிறது.
பவர்ஃபுல் பதவியில் ஊழல் அதிகாரிகள்!
துறையில் இருக்கும் 10 தலைமைப் பொறியாளர்களில் முதன்மை இயக்குநர் குமார் தவிர மற்றவர்கள் அனைவரும் எடப்பாடி ஆட்சியில் ஊழலில் கோலோச்சி யவர்கள்தான். அ.தி.மு.க. ஆட்சியின் சூழல்களே தி.மு.க. ஆட்சியிலும் நீடிக்கிறது என் கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.
எகிறும் கமிசன் பெர்சண்டேஜ்! அதிருப்தியில் காண்ட்ராக்டர்கள்!
அ.தி.மு.க. ஆட்சி யில் பவர்ஃபுல்லாக இருந்த காண்ட்ராக் டர்களே பெரும்பாலும் தி.மு.க. ஆட்சியிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தபோது,”எடப்பாடி ஆட்சியில் மேலிடத்துக்கு 10 சதவீதமும் அதிகாரிகளுக்கு 5 சதவீதமும் கமிசன் கொடுத்தோம். அ.தி. மு.க. மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொந்தரவு இருக்காது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டதால் மேலிடத்துக்கான சதவீதத்தை 13 ஆக உயர்த்தியதால் அதிகாரிகளுக்கு 7 சதவிதம் என மொத்தம் 20 சதவீதம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, தி.மு.க. மா.செ.க்களும் எம்.எல்.ஏ.க்களும் 5 சதவீதம் கேட்டு நச்சரிக் கிறார்கள். இதனை மேலிடத்தில் சொன்னால், அவர்களையும் கவனிச்சிடுங்கப்பா என கூலாக சொல்கிறார்கள்.
போடாத சாலைகளுக்கு பில் செட்டில்மெண்ட்!
கரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.170 கோடிகளுக்கான சாலைப்பணிகள் நடக்கின்றன. இதில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயல்படுத்தும் ரூ.140 கோடிக்கான காண்ட்ராக்ட் தி.மு.க.வைச் சேர்ந்த சங்கர்ஆனந்த் இன்ஃப்ரா என்ற காண்ட்ராக்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள ரூ.3.25 கோடி மதிப்பிலான 4 வேலைகளில் (ஒரே தொகுப்பாக), நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் பிரிவு செயல்படுத்தும் பணிகளில் 1.50 கோடி மதிப்பிலான 2 சாலைகளும் நல்லநிலையில் தரமாக இருக்கின்றன. புதிய சாலைகள் போடவேண்டிய அவசிய மில்லை. அதனால் சாலைகள் போடப்படாமலே பணத்தை செட்டில் செய்திருக்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். இதனை ஆதாரப்பூர்வமாக முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் அம்பலப்படுத்த, வில்லங்கம் பூதாகரமானது. உடனே அவசரம் அவசரமாக சாலைகளை போட்டார் சங்கர்ஆனந்த். இந்தநிலையில், கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன்சிங் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், காண்ட்ராக்டர் மீது எந்த ஆக்சனும் இல்லை.
ஊழல்களுக்கும் கமிஷனுக்கும் இடமில்லை -அமைச்சர் வேலு
நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் நடந்துவிடக்கூடாது என தமிழகம் முழுவதும் ஆய்வுப் பணிகளுக்கு அடிக்கடி கிளம்பிவிடுகிறார் அமைச்சர் எ.வ.வேலு. கட்டிங் மெஷினும் அவருடன் பயணிக்கிறது. சந்தேகம் வந்துவிட்டால் சாலைகளை வெட்டி தரத்தை பரிசோதிப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். துறையில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் வேலுவை தொடர்புகொண்டு கேட்டபோது,”"பேரவையில் உறுதியளித்தபடி பேக்கேஜ் சிஸ்டம் ஒழிக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு காண்ட்ராக்டர் என தமிழகம் முழுவதும் அமல்படுத்தியிருக்கிறோம். நாமினேசன் வொர்க் என்பதே கிடையாது. சின்ன வேலைகள் மட்டுமே தொகுப்பாக கொடுக்கப்படுகிறது. ஆன்லைன் டெண்டராக இருந்தாலும் நேரடி டாகுமெண்டுகள் கேட்பதற்கு காரணம், ஆன்லைனில் போகஸ் சர்டிஃபிகேட்டுகளை இணைத்து விடுகிறார்கள். அதை தவிர்ப்பதற் காகத்தான்! ஆன்லைன் டெண்டர் குறித்த குற்றச்சாட்டுகள் தவறானவை.
குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அதி காரிகள் இருக்கிறார்கள். அவர்கள் மீது துறைரீதியாக குற்றச்சாட்டுகள் இல்லாதபோது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இருப்பினும் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறேன். இருக்கிற அதிகாரிகளை வைத்துதான் வேலை வாங்க முடியும். அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் எடுத்தவர்கள் யாரும் டெண்டர் போடக்கூடாது என உத்தரவிட முடியாது. தகுதி யானவர்கள் டெண்டர் போடு வார்கள். அதேசமயம், தி.மு.க. ஆட்சியில் 385 காண்ட் ராக்டர்கள் புதிதாக வேலைகள் எடுத்துள்ளனர். இதன்மூலம் தமிழகம் முழுவதும் வேலைகள் பரவலாக்கப்பட்டிருக்கிறது. கரூர் விவகாரத்தைப் பொறுத்தவரை, 90 சதவீத வேலைகளை அந்த காண்ட்ராக்டர் முடித்து விட்டார். மீதம் 10 சதவீத வேலைகள்தான் பாக்கி. அதையும் ஓரிரு நாளில் முடித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பணத்தை செட்டில் செய்திருக் கிறார்கள். இது தவறுதான். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது. காண்ட்ராக்டர் தவறு செய்திருக்கிறாரா? என்பதை ஆராய விசாரணைக்குழு போடப்பட்டுள்ளது. தவறு செய்திருந்தால் அந்த கான்ட்ராக்ட் நிறுவனம் ப்ளாக் லிஸ்டில் வைக்கப்படும். மற்றபடி ஊழல்களுக்கும் கமிசனுக்கும் எனது துறையில் இடமே கிடையாது''‘என்கிறார் மிக அழுத்தமாக.