ஓ.பி.சி. எனப்படும் சமூகத்தில் பின்தங்கிய பி.சி., எம்.பி.சி உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ சீட்கள் வழங்குவதுபோல ஆல் இண்டியா கோட்டா எனப்படும் அகில இந்திய மருத்துவ இடங்களிலும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க.வைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளாலும் தொடரப்பட்ட வழக்கில், ""அகில இந்திய மருத்துவ சீட்களில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற எந்த ஒரு தடையும் இல்லை. மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
இதுகுறித்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், ""தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம், இந்த வருடமே அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கவேண்டும். ஆனால், ‘எத்தனை சதவீதம் இட ஒத
ஓ.பி.சி. எனப்படும் சமூகத்தில் பின்தங்கிய பி.சி., எம்.பி.சி உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ சீட்கள் வழங்குவதுபோல ஆல் இண்டியா கோட்டா எனப்படும் அகில இந்திய மருத்துவ இடங்களிலும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க.வைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளாலும் தொடரப்பட்ட வழக்கில், ""அகில இந்திய மருத்துவ சீட்களில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற எந்த ஒரு தடையும் இல்லை. மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
இதுகுறித்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், ""தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம், இந்த வருடமே அதை நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கவேண்டும். ஆனால், ‘எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு என்பதை முடிவுசெய்ய ஒரு குழு நியமித்து முடிவெடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித் திருப்பது மீண்டும் இடியாப்பச் சிக்கல்களுக்குத் தான் வழிவகுக்கும். ஜிப்மர் போன்ற மத்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஓ.பி.சி.க்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 12 வருடங்களாக அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் தமிழக அரசின் மருத்துவ இடங்களில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.
தற்போது 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் (இ.டபுள்யூ. எஸ்) முன்னேறிய வகுப்பினருக்குக்கூட அகில இந்திய மருத்துவ தொகுப் பில் இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இந்த வருடமும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டுவிட்டது. முதுநிலைப்படிப்பில் அகில இந்திய இடங்களில் 3.8 சதவீத சீட்கள்தான் ஓ.பி.சி. மாணவர்களுக்கு கிடைத்துள்ளன. அதுவே, முன்னேறிய வகுப்பினருக்கு 77 சதவீத மருத்துவசீட்கள் கிடைத்துள்ளன. ஓ.பி.சி. மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பா.ஜ.கவுக்கு எண்ணமில்லை. மீண்டும், அவர்களிடமே பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதால் ஓ.பி.சியினருக்கு சமூக அநீதி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்'' என்கிறார் வேதனையோடு.
உச்சநீதிமன்ற வழக்குகளை தவறாகக் காரணம் காட்டி ஓ.பி.சி மாணவர்களுக்கு மட்டும் 12 வருடங்களாக இட ஒதுக்கீடு மறுத்துவந்தது மத்திய அரசு. ஆனால், தற்போது பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி 10 சதவீத முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்தபிறகுதான் பிரச்சனை தீவிரமாக வெடிக்க ஆரம் பித்தது. திமுக, அதிமுக, மதிமுக, திக, கம்யூனிஸ்ட்கள், பா.ம.க., வி.சி.க., நா.த.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி களும் தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படை யில் பி.சி.+எம்.பி.சி.க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சனின் வாதமும் அதே கோணத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் மற்ற வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களாலும் இப்படியொரு தீர்ப்பு கிடைத்துள்ளது.
இதில் வி.சி.க.வோ ஆந்திர அரசு, அகில இந்திய தொகுப்பு சீட்களையே வழங்குவ தில்லை. அதேபோல, அதிக மருத்துவக் கல்லூரி களைக் கொண்ட தமிழக அரசும் மத்திய அரசுக்கு சீட்களை ஏன் வழங்கவேண்டும்? அப்படி, வழங்காமல் தமிழக அரசே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சீட் வழங்கினால் நிச்சயமாக ஓ.பி.சியினருக்கு 50 சதவீத சீட்கள் கிடைக்கும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
அகில இந்திய ஓ.பி.சி. பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கருணாநிதி நம்மிடம், “""இட ஒதுக்கீடு தர முடியாது என்பதும் உச்ச நீதிமன்றம்தான் அதுகுறித்து முடிவு செய்யும் என்றும் மத்திய அரசு வைத்த வாதத்தை நிராகரித்து விட்டது உயர்நீதிமன்றம். இதுவே, முதல் வெற்றிதான். மத்திய அரசு வழங்குவதாக கூறும் இட ஒதுக் கீட்டிற்கும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேட்டிருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு வேறுபாடு இருப்பதால் கூடி பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறது உயர்நீதிமன்றம்'' என்றார்.
இளைஞர் இயக்கத்தின் தலைவரும் பிரபல மருத்துவருமான டாக்டர் எழிலனோ, ""மத்திய அரசின் வரையறைக்குள் இட ஒதுக்கீடு வழங்க பேசி முடிவு செய்துகொள்ளுங்கள்'' என்று தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதிமன்றம். அப்படியென்றால், அகில இந்திய இடங்களில் எஸ்.சி., எஸ்.டியினருக்கு 22 சதவீதம், இ. டபுள்யூ. எஸ் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் போக மீதம் 18 சதவீதம்தான் உள்ளது. ஆக, சட்டத் திருத்தத்தின்படியே 27 சதவீதம்கூட வழங்க முடியாது. வழக்கில் கேட்டதுபோல 50 சதவீதம் வழங்கினால், 82 சதவீதம் எப்படி கொடுக்க முடியும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
ஆந்திராவைப்போல, மத்திய அரசுக்கு தமிழக அரசு சீட்களை வழங்கக்கூடாது. இல்லையென்றால், 10 சதவீத இட ஒதுக்கீட்டில் திருத்தம் செய்யப்படவேண்டும். இல்லை யென்றால், ஓ.பி.சியினருக்கான சமூக அநீதி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
- மனோசௌந்தர்