பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். பழனிநாதன் என்பவர் 1985-ஆம் ஆண்டு அனைத்து சத்துணவுப் பணியாளர்களையும் ஒருங் கிணைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தைக் கட்டமைத்தார். அரசு ஊழியர் சங்க நிர் வாகிகள் வழிகாட்டுதல் இருந்தால் சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர் களுக்கு அரசிடமிருந்து உரிமை களைப் பெற்றுத் தருவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்துடன். அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து செயல் பட்டு வந்தது சத் துணவு ஊழியர் சங்கம். இப்போது அந்த சங்கத்தில் ஒரு பிளவு நேர்ந்துள்ளது.
கடந்த 12, 13-ஆம் தேதிகளில் தூத்துக் குடியில் நடந்த மாநில மாநாட் டில் சுமார் ஒன்றரை லட்சம் சத்துணவு ஊழியர்கள் கூடினர். அங்கே சத்துணவு ஊழியர் சங்கத்தின் வழி காட்டியாக உள்ள அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பரசு ஆதரவோடு மாநில நிர்வாகிகள் பட்டியல் ஒன்றைத் தயார் செய்துள்ளனர். அந்த நிர்வாகிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சத்துணவு ஊழியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி யது. தள்ள
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். பழனிநாதன் என்பவர் 1985-ஆம் ஆண்டு அனைத்து சத்துணவுப் பணியாளர்களையும் ஒருங் கிணைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தைக் கட்டமைத்தார். அரசு ஊழியர் சங்க நிர் வாகிகள் வழிகாட்டுதல் இருந்தால் சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர் களுக்கு அரசிடமிருந்து உரிமை களைப் பெற்றுத் தருவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்துடன். அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து செயல் பட்டு வந்தது சத் துணவு ஊழியர் சங்கம். இப்போது அந்த சங்கத்தில் ஒரு பிளவு நேர்ந்துள்ளது.
கடந்த 12, 13-ஆம் தேதிகளில் தூத்துக் குடியில் நடந்த மாநில மாநாட் டில் சுமார் ஒன்றரை லட்சம் சத்துணவு ஊழியர்கள் கூடினர். அங்கே சத்துணவு ஊழியர் சங்கத்தின் வழி காட்டியாக உள்ள அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்பரசு ஆதரவோடு மாநில நிர்வாகிகள் பட்டியல் ஒன்றைத் தயார் செய்துள்ளனர். அந்த நிர்வாகிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சத்துணவு ஊழியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி யது. தள்ளுமுள்ளு, சேர்கள் உடைப்பு காரணமாக மாநாட்டில் கலந்துகொள்வதாக இருந்த அமைச்சர் கீதாஜீவன் மாநாட்டுக்கு வரவே இல்லை.
இந்த நிலையில் மாநாட்டு மேடையில் ஏறிய, சத்துணவு ஊழியர் சங்கத்தில் தற்போது பொதுச் செயலாளராக உள்ள நூர்ஜஹான் ஒரு நிர்வாகி பட்டியலை அறிவித்திருக்கிறார். நூர்ஜஹான் தலைமையில் ஒரு அணியும், மலர்விழி தலைமையில் ஒரு அணியும் என சத்துணவு ஊழியர் சங்கம் பிளவுபட்டு நிற்கிறது.
இதுகுறித்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோலையிடம் கேட்டபோது, "120 சத்துணவு ஊழி யர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கத்துடன் ஒருங் கிணைந்து செயல்படுகின்றன. அரசு ஊழியர் சங்கமோ எங்களை அடிமைகளாக மட்டுமே வைத்திருக்கிறார்கள். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று குரல்கொடுத்து வரு கிறோம். சத்துணவு ஊழியர்களது கோரிக்கைகள் பற்றி அரசிடம் கொண்டுசெல்வதே இல்லை. தொகுப்பூதிய அடிப்படையிலேயே 38 ஆண்டு களாக பணி செய்து வருகிறோம். எங்களுக்குப் பிறகு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்தவர் கள் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு, அரசு ஊழி யர்களுக்கு இணையான சலுகைகளைப் பெற்றுவரு கிறார்கள். மதிப்பு ஊதியம் தொகுப்பூதியம் என்ற நிலையிலேயே உள்ள எங்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். எங்களில் நிறைய பட்டப் படிப்பு படித்தவர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெறும்வரை சத்துணவு ஊழியர் களாகவே இருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். நாங்கள் ஓய்வு பெறும்போது மாதம் தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும் தொகை 2000 ரூபாய். இதைப்பற்றி அரசு ஊழியர் சங்கம் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதியிடம் அப்போதைய அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி எங்களுக்காக குரல் கொடுத்தார். அரசு ஊழியர் சங்கத் தில் இருந்த சில முன்னோடிகள் அது நடக்காமல் சதி செய்தனர். எங்களை அவர்கள் போராட்டத் திற்கு கூட்டம் சேர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சங்கப் பொறுப்பாளர்களை தேர்தல் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்க அவர்கள் தயாராக இல்லை''’என்றார்.
"அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களென அரசு அறிவித்துள்ளது. ஆனால் சத்துணவு மையங்களில் வேலை செய்யும் பெண் பொறுப்பாளர்கள், சமையலர் உதவியாளர்களுக்கு 6 மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு. மாவட்ட சங்கமே அரசிட மிருந்து சில உரிமைகளைப் பெற்றிருக்கும்போது மாநிலத்தில் ஒன்றரை லட்சம் பேர் உள்ள எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து அரசிற்கு கோரிக்கை விடுத்தால் அரசு அதை நிறைவேற்றும். அதற்குத் தடையாக இருப்பது அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்தான். இது வேதனையிலும் வேதனை''’என்கிறார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர் சவீதா. "சத்துணவு ஊழியர் சங்கத் திற்கு தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பெரிய கட்டிடம் உள்ளது. அதில் வரும் வருமானம், எங்கள் ஊழியர்களி டம் இருந்து பாதுகாப்பு நிதியாக சேர்க்கப்பட்ட சுமார் 45 லட்சம் இதற்கெல்லாம் முறையாகக் கணக்கு காட்டப்படுவதில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக அரசு ஊழியர் சங்கம், சத்துணவு ஊழியர்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை அதன் எதிரொலியாகத்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களை நியமிக்க கடும் எதிர்ப்பு உருவானது. தற்போதைய பொதுச்செயலா ளர் நூர்ஜஹான் மாவட்டவாரியாக சுற்றுப்பய ணம் செய்து எங்களின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துக்கூறி நிறைவேற்ற முயற்சி செய்துவருகிறார். பெரும்பாலான மாவட்டப் பணியாளர்கள் அவர் பின்னே அணிவகுத்துள்ளனர்” என்கிறார் ஒருவர்.
நூர்ஜஹான் அணியின் மாநில தலைவராக உள்ள சந்திரசேகர், "எங்களது சத்துணவு ஊழியர் சங்கத்திற்கு என்று தனி கொடி, விதிமுறைகள் உள்ளன. அதன்படி சங்கத்தை நடத்துவதற்கு அரசு ஊழியர் சங்கம் மிகப்பெரும் தடையாக உள்ளது. விரைவில் ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் உள்ள நிர்வாகிகள் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நகர்வு பற்றி முடிவெடுக்க உள்ளோம்''’என்கிறார்.
அரசு ஊழியர் சங்க ஆதரவோடு பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள மலர்விழியிடம் தூத்துக்குடி மாநாட்டுக்குப் பிறகு சங்கம் பிளவுபட்டதன் காரணம் என்ன என்று கேட் டோம். நாங்கள் "பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளோம். அவர்கள் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டு களைக் கூறிவிட்டு வெளியே செல்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் சத்துணவு ஊழியர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்'' என்றார்.