தமிழகத்துக்கு மிகக்குறுகிய காலத்தில் மூன்றாம் முறையாக கடந்த 4-ந் தேதி விசிட் அடித்த பிரதமர் மோடி, சென்னைக்கு அருகே உள்ள கல்பாக்கம் அணுஉலை ரியாக்டர் மேம்பாடுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்தத் திட்டத்தை இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க விஞ்ஞானி களுக்கும் அதிகாரிகளுக்கும் கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் மிகஆபத்தானது என்றும், தமிழர்களை சோதனை எலிகளாக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணிகளை ஆராய்ந்தபோது, ஏகத் துக்கும் பகீர் தகவல்கள்!
ஒன்றிய அரசின் அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது கல்பாக்கம் அணுமின் நிலையம். இங்குள்ள அணுஉலை வளாகத்தில், 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, மாதிரி அதிவேக ஈனுலையை அமைத்துள்ளது பாவினி நிறுவனம். திரவ சோடி யத்தை குளிர்விப்பதற்காக பயன்படும் இந்த ஈனுலையை இந்தியாவில் அமைப்பது இதுவே முதல் முறை என் கிறார்கள்.
இதுகுறித்து அறிவியல் ஆய்வாளர்களிடம் விசாரித்தபோது, "இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2004-ல் தொடங்கப் பட்டது. இதனை 2010ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தின் தொழில்நுட்பம் வெற்றி பெறவில்லை. அதாவது, சர்வதேச நாடுகள் இதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்திப் பார்த்த நிலையில், வெற்றிகரமான ரிசல்ட் கிடைக்காததாலும், ஆபத்து நிறைந்
தமிழகத்துக்கு மிகக்குறுகிய காலத்தில் மூன்றாம் முறையாக கடந்த 4-ந் தேதி விசிட் அடித்த பிரதமர் மோடி, சென்னைக்கு அருகே உள்ள கல்பாக்கம் அணுஉலை ரியாக்டர் மேம்பாடுத் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்தத் திட்டத்தை இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க விஞ்ஞானி களுக்கும் அதிகாரிகளுக்கும் கட்டளை பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் மிகஆபத்தானது என்றும், தமிழர்களை சோதனை எலிகளாக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணிகளை ஆராய்ந்தபோது, ஏகத் துக்கும் பகீர் தகவல்கள்!
ஒன்றிய அரசின் அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது கல்பாக்கம் அணுமின் நிலையம். இங்குள்ள அணுஉலை வளாகத்தில், 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, மாதிரி அதிவேக ஈனுலையை அமைத்துள்ளது பாவினி நிறுவனம். திரவ சோடி யத்தை குளிர்விப்பதற்காக பயன்படும் இந்த ஈனுலையை இந்தியாவில் அமைப்பது இதுவே முதல் முறை என் கிறார்கள்.
இதுகுறித்து அறிவியல் ஆய்வாளர்களிடம் விசாரித்தபோது, "இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2004-ல் தொடங்கப் பட்டது. இதனை 2010ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தின் தொழில்நுட்பம் வெற்றி பெறவில்லை. அதாவது, சர்வதேச நாடுகள் இதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்திப் பார்த்த நிலையில், வெற்றிகரமான ரிசல்ட் கிடைக்காததாலும், ஆபத்து நிறைந்ததாக இருந்ததாலும் இந்த தொழில்நுட்பத்தைக் கைவிட்டுவிட்டன. இதனால் மத்திய அரசும் திட்டத்தை தாமதப்படுத்தியது.
மத்தியில் பாஜக அரசு 2014-ல் வந்ததும் இந்தத் திட்டத்தில் மீண்டும் கவனம் செலுத்தியது அணுசக்தித் துறை. அதன்படி, 2024 டிசம்பருக்குள் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர தீர்மானித்து அதற்கான பணிகள் மிக ரகசியமாக நடந்துவந்தன. ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கான செலவுத் தொகை 3,450 கோடி ரூபாய். தற்போது, 7,700 கோடியாகத் திட்டச் செலவு அதிகரித்துள்ளது''’ என் கிறார்கள் அறிவியலாளர்கள்.
இதற்கிடையே, பிரதமர் மோடி பார்வை யிட்டுச் சென்றிருக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராக குற்றம்சாட்டுகிறது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நீண்ட காலமாக போராடி வரும் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப் பாளரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற் பாட்டாளருமான சுந்தர்ராஜனிடம் இந்த திட்டம் பற்றி நாம் பேசியபோது,‘"கல்பாக்கம் அணுஉலை வளாகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படும் இந்த திட்டத்தின் தொழில்நுட்பம் ஆபத்தானது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது ஆகிய காரணங்களால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கைவிட்டுவிட்டன.
குறிப்பாக, இந்தவகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படும் திரவ சோடியம் கசிந்ததால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, அந்த அணுஉலை மூடப்பட்டதுடன் திட்டத்தையும் கைவிட்டது ஜப்பான். அதேபோல பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர் பீனிக்ஸ் ஈனுலையும் பல்வேறு ஆபத்துகளால் இழுத்து மூடப்பட்டது. இப்படி பல்வேறு நாடுகள் இந்த தொழில்நுட்பத் திட்டத்தை மூடிவிட்டன.
அணுஉலைகளில் உருவாகும் பயன் படுத்தப்பட்ட எரிபொருளான ப்ளூட்டோனி யத்தை அதிவேக ஈனுலைகளில் பயன்படுத்தி அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த ஈனுலை களுக்கு பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதால், இந்த உலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள், அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படலாம் என அணுசக்தித் துறை நிபுணர்கள் ஏற்கனவே சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கல்பாக்கம் அணுமின் மைய வளாகத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியம் ஆகிய பிரிவுகள் உள்ளன. தற்போது முன்மாதிரி அதிவேக ஈனுலை திட்டம் (பாமினி அணுமின் திட்டம்) தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதே கல்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில் அதிவேக ஈனுலை எரிசக்தி மறுசுழற்சி மையத்தை திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. இப்படி தொடங்கப்படும் நிறைய அணுஉலை சம்பந்தப்பட்ட திட்டங்களாலும், அணுஉலை களின் எல்லை பரப்புகளை விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாலும் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யாவுக்குச் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாட்டில் கூடங் குளம் அணுமின் நிலையத்தில் எதிர்காலத்தில் கூடுதல் அணு அலகுகள் அமைப்பது தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறோம் என சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில், கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலைத் திட்டத்தை இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிரமாக இயங்குகிறது ஒன்றிய மோடி அரசு. இந்தத் திட்டம் மனித குலத்துக்கு எதிரானது. இதில் வெளியேறும் கழிவுகள் மிக மோசமானவை. தமிழகத்தின் நலன்களுக்காக எந்த பங்களிப்பையும் செய்யாத மோடி அரசாங்கம், ஆபத்தானது என கருதி உலகநாடுகள் கைவிட்ட ஒரு தொழில் நுட்பத்தை கல்பாக்கத்தில் துவக்குகிறது. இதன் எதிர்வினைகள் தமிழர்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும்.
இதனை உணர்ந்தும்... திட்டத்தை தமிழகத்துக்குள் கொண்டுவருகிறார்கள். தமிழர்களை சோதனை எலிகளாக பரிசோதிக்கும் மோடி அரசின் சூழ்ச்சி இது. அதனை முறியடிக்க வேண்டியது அவசர அவசியம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலிருந்து அணு உலைகளுக்கும், அணுக் கழிவுகளுக்கும் எதிர்ப்பு வந்தால், உடனே திட்டங்களை கைவிடும் பா.ஜ.க. மோடி அரசு, தமிழ்நாட்டில் மட்டும் எந்த எதிர்ப்பு வந்தாலும் கைவிடுவ தில்லை. தமிழகத்தை அணு உலைகளின் வேட்டைக்காடாகவும், தமிழர்களை சோதனை எலிகளாகவும் மாற்றத் துடிக்கின்றனர்''’என்று குற்றம்சாட்டுகிறார் சுந்தர்ராஜன்.
இந்தத் திட்டத்தின் ஆபத்தை உணர்ந்து, இதனைக் கைவிட பிரதமர் மோடி யை முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும் என்கிற எதிர் பார்ப்பு தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது.
________
இறுதிச்சுற்று!
இரண்டுநாள் பயணமாக மயிலாடுதுறைக்குச் சென்றுவிட்டு 4லிந்தேதி சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். மயிலாடுதுறையில் புதியதாக ரூபாய் 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை 4-ந் தேதி காலையில் திறந்து வைத்தார் முதல்வர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஒரே வருடத்தில் திறக்கப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டதோடு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கான ரூ.656 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.423 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார் ஸ்டாலின். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், "மண் மணமும் நெல் மணமும் வீசுவது டெல்டா மாவட்டங்களின் சிறப்பு. பழமையான திருக்கோயில்களின் மாவட்டமாக மயிலாடுதுறை திகழ்கிறது. தேர்தல் வரவிருப்பதால் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் மோடி. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு ஒரு பைசா கூட மோடி நிதி தரவில்லை'' என்றவர், என்னென்ன திட்டங்கள் செயல் படுத்தப்படவிருக்கிறது என்பதை பட்டியலிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
-சஞ்சய்