இனி நம் பாதை சிங்கப்பாதை! திருச்சியில் முதல்வர் பெருமிதம்!

ss

மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, கடந்த மே.8ஆம் தேதி காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, அருண் நேரு, துரை வைகோ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்து நேராக துவாக்குடி ஜி.பி.டி. வளாகத்திற்குச் சென்று ரூ.69 கோடியில் ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப் பறைகள், விடுதி வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியை முதல்வர் திறந்துவைத்தார்.

cm

மீண்டும் மாலை 6 மணிக்கு சுற்றுலா மாளிகையிலிருந்து டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாரதிதாசன் சாலை, அரசு மருத்துவமனை சாலை என்று சுமார் 7 கி.மீ. தூரம் நடந்துசென்று ரோடு ஷோ நடத்தினார். இருபுறம் திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம

மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, கடந்த மே.8ஆம் தேதி காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, அருண் நேரு, துரை வைகோ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்து நேராக துவாக்குடி ஜி.பி.டி. வளாகத்திற்குச் சென்று ரூ.69 கோடியில் ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப் பறைகள், விடுதி வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியை முதல்வர் திறந்துவைத்தார்.

cm

மீண்டும் மாலை 6 மணிக்கு சுற்றுலா மாளிகையிலிருந்து டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாரதிதாசன் சாலை, அரசு மருத்துவமனை சாலை என்று சுமார் 7 கி.மீ. தூரம் நடந்துசென்று ரோடு ஷோ நடத்தினார். இருபுறம் திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், பிரபுவின் மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

அதன்பின், அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர், தென்னூர் காவேரி மருத்துவமனை முன்பு இறங்கி, கே.டி. சிக்னல் வரை சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்றார். அப்போது, ஏராளமான மக்கள் முதல்வரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, மே 9ஆம் தேதி, பஞ்சப்பூரில் ரூ.236 கோடி மதிப்பில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.129 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அதன் முகப்பில் அமைக்கப் பட்டுள்ள அண்ணா சிலையையும் திறந்து வைத்தார். அதன் பின்னர், பஞ்சப்பூர் பகுதியில் ரூ.408 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார். அங்கு 20 அடி உயரத்தில் வெண்கலத்தில் அமைக் கப்பட்டுள்ள கலைஞரின் சிலையையும் திறந்து வைத்தார். பின்னர் பேட்டரி காரில் புதிய பேருந்து நிலையத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பஞ்சப்பூரில், ரூ.464 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.277 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நடை பெற்ற விழாவில், 50 ஆயிரம் பேருக்கு, ரூ.830.35 கோடி மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, "இரண்டு நாட்களுக்கு முன்பு, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களை சந்தித்துப் பேசினேன். இந்த 4 ஆண்டுகளில் நாம் செய்திருக் கின்ற முக்கியமான சாதனை களை, அதனால் தமிழ்நாடு அடைந்திருக்கக்கூடிய வளர்ச்சி யை அவர்களிடம் பகிர்ந்துகொண் டேன். அப்போது, அடேயப்பா! இவ்வளவு திட்டங்களை தொடங்கியிருக்கின்றோம் என்று எனக்கே மலைப்பாகத்தான் இருந்தது. ஊடக நண்பர்களும் ஆச்சரியப்பட்டார்கள். 2021, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், திருச்சியில் நடந்த 'விடியலுக்கான முழக்கம்' மாநாட்டில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான என்னுடைய கொள்கையை அறிவித்து, வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், அனை வருக்கும் அனைத்துமான தமிழகம் என ஏழு வாக்குறுதிகளை அளித்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றை 4 ஆண்டுகளிலேயே எட்டியிருக்கிறோம்.

cm

பொருளாதாரத்தைப் பொறுத்தவரைக்கும், 9.69 விழுக்காடு என்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத வளர்ச்சி! திராவிட மாடலின் வெர்சன் 2.0 இனிதான் லோடிங்! 4 ஆண்டுகளில், சரிவிலிருந்து நம்பர்-1 மாநிலமாகி சாதனை படைத்தோம்! இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும்! ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை அடுத்துவரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்'' என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாலையில் மீண்டும் சுற்றுலா மாளிகையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்திற்கு பொதுமக்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வந்தார். பின்னர் திருச்சி எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9-வது மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அதில், "திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்படும் மாபெரும் நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் பெயர் சூட்டப்படும். சென்னை பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித்தர நடவடிக் கைகள் எடுக்கப்படும்'' என்றார். நிகழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து இரவு 8 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

nkn140525
இதையும் படியுங்கள்
Subscribe