ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. வங்கக்கடலில் மையம்கொண்டிருந்த புயலால் புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் தத்தளித்தன. கடைசி நேரத்தில் இந்த புயல் திசைமாறி திருவண்ணாமலை மாவட்டம்வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு சென்றதால் மழைநீர் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

nd

கர்நாடகா மாநிலம் நந்திதுர்க்கத்தில் உருவாகும் தென்பெண்ணை பெங்களுரு மாநகரம் வழியாக தமிழ்நாட்டுக்குள் ஓசூர் அருகே நுழைந்து வங்கக்கடலில் கலக்கிறது. ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம், கிருஷ்ணகிரி அணை, நெடுங்கல் அணை, சாத்தனூர் அணை, திருக் கோவிலூர் அணை, எல்லீஸ் அணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் அணைகள் உள்ளன.

நவம்பர் 29, 30, டிசம்பர் 1ஆம் தேதிகளில் சாத்தனூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கல்வராயன்மலை, போச்சம்பள்ளி, பாரூர், நெடுங்கல் பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

Advertisment

டிசம்பர் 1-ஆம் தேதி மாலை புயல் கர்நாடகா மாநிலத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் அன்றைய இரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் படிப் படியாக மழை குறைந்தது. ஆனால் மதியத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளுத்துக் கட்டியது. சில மணி நேரத்திலேயே ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை பகுதிகளில் 50செ.மீ. அளவுக்கு மழை பொழிந்தது. இந்த பெருமழையால் கிருஷ்ணகிரி அணை, வாணியாறு அணை, பாம்பாறு அணை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப் பட்டதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. டிசம்பர் 1ஆம் தேதி தேதி இரவு 7 மணிக்கு அணையிலிருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் திறக்கப்பட் டது. அன்றைய இரவு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து அணையின் கொள்ளளவு அபாயகட் டத்துக்கு வந்ததால் நள்ளிரவு 12.45 மணிக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறந்துவிட்டது. அப்போதும் நீர்வரத்து குறையாததால் 3 மணிக்கு 1.68 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. டிசம்பர் 2-ஆம் தேதி 1.80 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. அதன்பின் படிப்படியாக அளவு குறைக்கப்பட்டது.

dd

தென்பெண்ணையாற்றில் அதிகமாக தண்ணீர் செல்லும்போது அது சிறுமதுரை என்ற ஊர் அருகே உற்பத்தியாகிச் செல்லும் மலட்டாறுக் கும் தண்ணீர் வழங்கும். அந்த மலட்டாறு கள்ளக் குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தின் பல கிராமங்களை ஊடுருவிச் செல்லும்போது பல ஏரிகளை நிரப்பி கடலூர் அருகே தென்பெண்ணை யாற்றில் மீண்டும் கலந்துவிடும். பெருமழை மற்றும் சாத்தனூர் அணையில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தென்பெண்ணையாற்றின் இருகரை, மலட்டாறு கரைகளிலிருந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட் டத்தின் திருவெண்ணைநல்லூர், பையூர், பேரங்கி யூர், சேத்தூர், கொங்கராயனூர், குச்சிபாளையம், இடையார், மழவராயனூர், சிறுமதுரை, இருவேல் பட்டு, அரசூர் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை துவம்சம் செய்து தனித் தீவுகளாக்கி யது. தென்பெண்ணையாற்றில் கரைபுரண்டு வந்த நீர் கடலூர் மாவட்டத்தில் நுழைந்தபின், கடலூர் நகரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூழ்கி பெரும்பகுதி தனித்தீவு போலாகின.

Advertisment

மழை மற்றும் ஆற்றுநீரால் பயிர்கள், வாகனங் கள், கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுடுகாடுகள் சிதைந்துபோயின. திருவெண்ணைநல் லூர் தீயணைப்பு நிலையம், பெண்கள் பள்ளி, இரு வேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் மூழ்கியது. விடுதியில் சிக்கிக்கொண்ட பள்ளி மாணவிகளை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்தனர். மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து போர்க்களக் காட்சிகளாகின. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரசூர் அருகே மலட்டாறு பாலம் உடைப்பெடுத்து தேசிய நெடுஞ்சாலையில் ஆளுயரத்திற்கு தண்ணீர் சீறிப்பாய்ந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போனது. உள்ளூர் இளைஞர்கள், தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், இரவுபகல் பாராது மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் தத்தளிக்கும் மக்களுக்கு பால், உணவு வழங்க தன்னார்வலர்கள் சிரமப்பட்டனர். மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியதால் மீட்புப் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது.

dd

அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னஞ்செடி கென்னடி என்பவர் கூறும்போது, "கடந்த மூன்று நாட்களாக எங்க பகுதியில் வரலாறுகாணாத மழை. புயல் கடலோர மாவட்டங்களில்தான் தாக்கும்னு நினைச்சோம். இந்த மாதிரி வடதமிழகத்துல வரும்னு எதிர்பார்க்கலை. 35 செ.மீ முதல் 50 செ.மீ மழை பெய்ததால் கடுமையான பாதிப்பு. என்னைப் போன்ற தேங்காய் விவசாயிகள், இந்தப் பருவத்துல லட்சக்கணக்குல, ஆயிரக்கணக்குல தேங்காய்களை நடவுசெய்திருப்போம். கடுமையான மழையினால எங்களோட விதைத் தேங்காய்கள் அனைத்தையும் மழைத்தண்ணீர் அடித்துச்சென்றுவிட்டது. இதை தோட்டக் கலை அதிகாரிகள் வந்து பார்வையிட்டுப் போனாங்க. உரிய நிவாரணம் தர்றதா சொல்லியிருக்காங்க. இதைத்தாண்டி நெற்பயிர்கள், விவசாய நிலங்களில் மழை நீர்புகுந்து பாதிப்பாகியிருக்கிறது. அரசாங்கத்தோட ஆதரவை எதிர்பார்க்குறோம்''’ என்றார்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, பன்னீர்செல்வம், வேலு, செந்தில்பாலாஜி, சிவசங்கர், கணேசன், உயரதிகாரிகள் கொண்ட பெரும்படையை களத்தில் இறக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக வந்து ஆய்வுசெய்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியவர், உடனடியாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம், விவசாயிகளுக்கு, மழையால் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார். ஆளும்கட்சியின ரும், அரசும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகள், நிவாரண பணிகளை செய்துகொண்டுள்ள அதேநேரத்தில் அதிகாரிகள் விரைந்துவந்து தங்கள் பகுதிகளைப் பார்த்து தங்கள் சிரமத்தைப் போக்கவில்லை என்ற கோபத்தில் விழுப்புரம் - செஞ்சி பகுதிகளில் கிராம மக்கள் சாலைமறியல் செய்தனர். அரசூர், இருவேல்பட்டு கிராமங்களுக்கு அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆளும் கட்சியினர், அதிகாரிகள் சென்றபோது, பா.ஜ.க.வைச் சேர்ந்த இருவர் சேறு வாரியடித்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர்.

dd

சாத்தனூர் அணையிலிருந்து நீரை வெளி யேற்றுவதற்கு முன்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கவேண் டும். அப்படியொரு எச்சரிக்கை தாமதமாக விடப்பட்டதால் கரை யோரத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் மழைநீரோடு சேர்ந்து ஆற்று நீரும் புகுந்து பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஆளும்கட்சி கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, “"அணையில் அதிகளவு தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுத்தபோது நள்ளிரவு நேரம். அந்தநேரத்திலும் உயரதிகாரிகள், அமைச்சர், முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்புகொண்டு அடுத்தடுத்து உத்தரவுகளை வாங்கி அணையிலிருந்து படிப்படியாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை தொடங்கியதுமே கரை யோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக் குப் போய்விட்டார்கள். கூடுதல் தண்ணீர் திறப்பு தொடர்பாக அடுத்தடுத்து எச்சரிக்கை தகவல் அனுப்பினோம். அப்போது மழை பெய்துகொண்டி ருந்தது, விடியற்காலை நேரம் தகவல் மக்களைச் சென்று சேருவதில் சில சிக்கல்கள் இருந்தன. அதைச் சரிசெய்யும் வரை அணை தாங்காது. அணை திறக்கப்பட்டால் அந்த மழைநீர் எவ்வளவு மணி நேரத்தில் எந்தெந்தப் பகுதியைக் கடக்கும் என திட்டமிட்டு அணை திறக்கப்பட்டதோடு, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அலர்ட் அனுப்பப்பட்டது''’என்றனர்.

எச்சரிக்கும் நிபுணர்கள்?

என்ன செய்யப்போகிறது அரசு?

திருவண்ணாமலையில் சுமார் 40 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் தீபமலையில் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வரத்துவங்கின. மலையடிவாரத்திலுள்ள வ.உ.சி.நகரைச் சேர்ந்த ராஜ்குமார்-மீனா தம்பதி, அவர்களது பிள்ளைகள் கௌதம், இனியாவோடு பக்கத்துவீட்டுக் குழந்தைகள் மகா, விநோதினி, ரம்யா ஆகியோர் டி.வி.யில் கார்ட்டூன் சேனல் பார்த்துக்கொண்டிருந்தபோது, மழைநீர் காட்டாறு போன்று, மண், பாறைகளை அடித்துவந்து ராஜ்குமார் வீட்டின்மீது மோதியது. தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை, 25 மணி நேரத்துக்குப் பின்பே 7 பேரின் உடல்களையும் மீட்டனர்.

ss

தீபமலையில் 7 இடங்களில் அடுத்தடுத்து இப்படி மண்சரிவு ஏற்பட்டு உயிர்ப்பலி வாங்கியது. இதைவிட பெரிய பாறைகள் எப்போது வேண்டுமானாலும் உருண்டு வருவேன் என மிரட்டிக் கொண்டு இருக்கின்றன. கார்த்திகை தீபத்தன்று இந்த மலை உச்சியில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் அடிவாரத்திலிருந்து மலைமீது 500 மீட்டர்வரை மக்கள் ஆக்கிரமித்து வீடுகட்டி வாழ்ந்துவருகின்றனர். வீடுகள், ஆசிரமங்கள் கட்ட மலையை சமன்செய்தபோது சின்னச் சின்ன பாறைகளை அப்புறப்படுத்தினர், மரங்களை வெட்டியறிந்து வீடுகள் கட்டினர். இதனால் மலைமீது பெய்யும் மழைநீர் கீழே வருவதற்கான நீர்வழிப்பாதைகள் தடைப்பட்டன. சிலநூறு வீடுகளாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீடுகளாகப் பெருகியுள்ளன. இதனை வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி கண்டுகொள்ளவில்லை.

மண்சரிவு குறித்து ஐ.ஐ.டி. வல்லுநர்கள் குழு ஆய்வுசெய்தது. இங்கு பெருமழை பெய்துள்ளதால் மலையில் மண்ணின் தன்மை இலகுவாகிவிட்டது, அதனால் இப்படியொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், மீண்டும் ஒரு கனமழையை திரு வண்ணாமலை நகரம் எதிர்கொள்ளும்பட்சத்தில் தீபமலையில் மண்சரிவும், பாறைகளின் சரிவும் ஏற்படும். இதனால் வருங்காலத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனச்சொல்லியுள்ளார்கள்.

2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் தொல்லியல்துறை அண்ணாமலையார் கோவிலைக் கையகப்படுத்த முயன்றபோது உச்சநீதிமன்றத்தில் திருவண்ணா மலை நகராட்சி ஒரு உறுதி மொழிப் பத்திரம் தந்தது. அதில், மலைமீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மலை பாதுகாக்கப்படும் எனச் சொல்லியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் நகராட்சி அதற்கான முயற்சிகளை சிறிதளவுகூட எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத் தில் மலை ஆக்கிரமிப்பு, குளங்கள் ஆக்கிரமிப்பு, நீர்வழிப்பாதைகள் தடுப்பு என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணையில் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்த பின், கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் ஆக்கிர மிப்பைக் கணக்கெடுத்தது.

இம்மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி னால் ஓட்டுவாங்க முடியாது என இதில் அர சியல்வாதிகள் அரசியல் செய்தால் வருங்காலத்தில் பெரும் ஆபத்தை மக்கள்தான் சந்திப்பார்கள். அதனால் இவர்களுக்கு மாற்றிடங்கள் தந்து மலை யடிவாரத்திலிருந்து அகற்றவேண்டும்'' ’என் கிறார்கள்.

2024ஆம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திரு விழா டிசம்பர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. வரும் 14-ஆம் தேதி மலைச்சரிவு ஏற்பட்டுள்ள தீபமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மலையுச்சியில் பெரியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் மகாதீபம் ஏற்றும் பிரம்மாண்ட கொப்பரையை கொண்டு செல்லவேண்டும். அதேபோல் மலையுச்சியில் சிவன் பாதத்தை தரிசிக்க மகாதீபத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறுவார்கள். தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்தாண்டு பக்தர்கள் மலையேறத் தடை விதிக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது, பாதுகாப்பானது என அரசுக்கு பொதுநல அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பக்தர்கள் மலையேறுவதைத் தடை செய்யவேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

-எஸ்.பி.எஸ்., து.ராஜா

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்