ராமநவமியை முன்னிட்டு டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக ஹாஸ்ட-ல் அசைவ உணவு தயாரிக்கக்கூடாது எனக் கூறி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவர்கள் 60 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மோடி தலைமையி லான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து, நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இந்துத்வாவை திணித்து வருகின்றது ஒன்றிய அரசு. குறிப்பாக, இடதுசாரிகளின் செல்வாக்குமிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மீது ஒரு கண் வைத்து செயல்பட்டுவருகின்றனர் பா.ஜ.க.வினர்.

dd

Advertisment

ராமநவமியை முன்னிட்டு ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தின் காவேரி விடுதியில் ஏ.பி.வி.பி. மாணவர் சங்கத் தினர் அசைவ உணவுக்குத் தடை விதிக்க முயன்றனர். பிற மாணவர்கள் அதற்கு எதிராக நின்றபோது ஏ.பி.வி.பி.யினர் வன்முறைத் தாக்குதலில் இறங்கினர். ஏப்ரல் 10-ஆம் தேதி மதியமே, இன்று விடுதியில் அசைவ உணவு சமைக்கக் கூடாது என ஏ.பி.வி.பி.யினர் ஒரு கும்பலாக வந்து பிரச்சினையைக் கிளப்பினர். இதற்கு மாணவர்கள் அமைப்பின் சார்பாக கண்டனம் தெரிவித்தனர்.

ஜே.என்.யூ. மாணவர் அமைப்பின் தலைவரான கோஷ் கூறுகையில், “"ஒவ்வொருவரின் விருப்பத்தின் அடிப்படையில் உணவுத் தேர்வு அமையவேண்டும். மாறாக, ஏ.பி.வி.பி. குறிப்பிட்ட உணவைத் திணிக்க முயல்கிறது. மெஸ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் வெளியி லிருந்து இறைச்சியைக் கொண்டுவர முயன்றபோதே தள்ளுமுள்ளு நடைபெற்றது. மெஸ்ஸின் செயலாளரையும் அவர்கள் தாக்கினர். மாணவர்களின் உணவு உரிமையில் ஏ.பி.வி.பி. தலையிடுகிறது''’என்றார். அன்று இரவு 8 மணியளவில் ஏ.பி.வி.பி.யினர், மெஸ்ஸில் உணவு சாப்பிடவந்த மாணவர்களை கடுமையாகத் தாக்கினர். கல்வீச்சும் நடைபெற்றது. இத்தனை நடைபெற்றபோது காவல்துறையினரும் உடனிருந்தனர். அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருந்தனரே தவிர, பிரச்சினை செய்தவர் களைத் தடுக்கவில்லை என்கிறார்கள் மாண வர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

மாறாக, ஏ.பி. வி.பி. மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த ரோகித்குமாரோ, "ராமநவமி கொண்டாட்டத்துக்கு எதிராக இடதுசாரி மாணவர் அமைப்பினர் இருந்தார்கள். அசைவ உணவு தொடர்பான பிரச்சினையே எழவில்லை''’என்கிறார்.

மாணவிகள் மதுரிமா, அக்தாரிஸ்தா அன்சாரி இருவரும் ரத்தம் கொட்டு மளவு படுகாயமடைந்து உள்ளனர். ஆஒநஆ அகில இந்திய தலைவர் சாய்பாலாஜியும் காயமடைந்துள்ளார். டெல்லி போலீஸ் (வசந்த் விஹார் காவல் நிலையத்தினர்) அங்குதான் இருந்தனர். ஆனால் தாக்கியவர் கள் யாரையும் கைது செய்யவில்லை.

டெல்லி கமிஷனரோ, "நிலவரம் இப்போது அமைதியாக இருக்கிறது. இரு தரப்பு புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்கிறார்.

உமர் காலித் விவகாரம் மட்டும் போதாதா? எத்தகைய நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் எடுக்கும் என்பதற்கு!