"தி.மு.க.வும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள்! தி.மு.க.வை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தமிழகத்தின் வளர்ச்சி பற்றி கேட்டால் தி.மு.க.வினரிடம் பதில் இல்லை. எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அரசு இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. ஆனால் கடன்களை வாங்கிக் குவிப்பதில் முதலிடம் வகிக்கிறது. தி.மு.க.வினர் எங்கள் திட்டங்களுக்கு புதிய பெயர்களைக் கொடுத்து அதை அவர்களுடைய திட்டங்கள் என்று சொல் கிறார்கள்'' என்று தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டங்களில் சரமாரியான குற்றச்சாட்டுக் களை தி.மு.க. மீது சுமத்தினார் பிரதமர் மோடி. மோடியின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கிறதாவென மருத்துவர் காந்தராஜிடம் கேட்டபோது, "வந்தார் பேசினார் வென்றார் என்றில்லை, வந்தார் பேசினார் கவிழ்ந்தார் என இருந்தது. பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் நீங்கள் வேலை யை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் அம்மாநிலத் தொழி லாளர்கள் ஏன் இங்கு வருகிறார்கள்? ஒரு காலத்தில் தென் னாட்டிலிருந்து பாம்பே, டெல்லி எனப் போனார்கள்.
இன்று எல்லோரும் இங்கு வருகிறார் கள். பல்லடத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றது திருப்பூர் பகுதியில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள்தான். வடக்கு வாழவே இல்லை. பத்து வருடத்தில் எல்லாம் அழிந்துபோனது. மோடி ஓட்டு கேட்டு இங்கு அடிக்கடி வரக் காரணம், அங்கு பா.ஜ.க. பொழப்பு லாட்டரி அடிக்குது. தெற்கே ஏதாவது தேறுமா எனப்பார்க்கவே வருகிறார். தி.மு.க., காங்கிரஸ் இருக்கும் வரை பா.ஜ.க. வளராது என்பதால் அழிக்க வேண்டும் என்கிறார். தி.மு.க.வால் இண்டியா கூட்டணி வலிமை அடைகிறது. அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக ஸ்டாலின் இருக்கிறார். ஆகையால்தான் தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்கிறார் மோடி. மோடி பிரதமராக இருக்கும் போதுதானே ஜெயலலிதா சிறைக்குப் போனார்? நல்லாட்சி கொடுத்திருந்தால் ஏன் சிறைக்கு அனுப்பப்பட்டார் ஜெயலலிதா? ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் பிரதமராக இருந்த மோடி? பா.ஜ.க. மாநிலத் தலைவர், ஜெ.வை ஊழல் செய்ததாகச் சொன்னதை மறந்துவிடுவார்களா அ.தி.மு.க.வினர்?'' என்று கேள்விகளை அடுக்கினார்.
தோழர் சுந்தரவள்ளியிடம் கேட்டபோது, "கனிமொழி பெயரைச் சொன்னால் ஓட்டாக மாறி விடுமென்று பயப்படும் மோடி, இங்கு தி.மு.க.வை காணாமல் செய்யப் போகிறாரா? அத்திவரதரை பார்ப்பதற்கும், முருகனுக்கு காவடி தூக்கவும் கோடிக்கணக்கான மக்கள் போகிறார்கள். ஆனால், பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. காரணம், இந்த மக்கள் அரசியலும், ஆன்மீகமும் நன்கு அறிந்தவர்கள்.
தமிழ்நாட்டிலிருந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கினோம் என்பவர்கள்தான், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெண் என்பதாலும், கைம்பெண் என்பதாலும் தீட்டென ஒதுக்கிவைத்தார்கள். கடந்த 10 ஆண்டு காலத்தில் தலித்துகளும், பழங்குடிகளும் மிகப் பெரிய வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்கள் மீதான வன்கொடுமை 47% உயர்ந்துள் ளது. வட இந்தியாவில் பழங்குடிகள், சிறுபான்மை யினர், தலித் ஆகியோர்களுக்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டு, அவர்கள் பள்ளிக்கே செல்ல முடியாத நிலையை உருவாக்கியிருக் கிறார்கள்'' என்றார்.
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் மதிவாணன் கூறுகையில், "திட்டங்கள் தடுக்கப் படுகிறது என்கிறார் பிரதமர். எந்தத் திட்டங்கள், எந்த அடிப்படையில் தடுக்கப்படுகிறது என்பதை சொல்ல வேண்டும். அதே பிரதமர் இங்கு ஜல்ஜீவன் திட்டம் ஒரு கோடி பேருக் கும், உஜ்வாலா திட் டத்தை 40 லட்சம் பேருக்கும் நடை முறைப்படுத்தியிருக் கிறோம் என்கிறார். நாங் கள் தடுத்திருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தியிருக்க முடியுமா? ஸ்டிக்கர் ஒட்டுவதைப் பற்றி பிரதமர் பேசுகிறார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நகர்ப்புறத்தில் ஒன்றிய அரசு ரூ.1.5 லட் சமும், தமிழக அரசு ரூ.7.5 லட்சமும் வழங்குகிறது. அதேபோல் கிராமப்புறத் தில் 72 ஆயிரம் ரூபாய்தான் ஒன்றிய அரசு கொடுக் கிறது. மீதி 1.68 லட்ச ரூபாய் தமிழக அரசு கொடுக் கிறது. இது எப்படி ஒன்றிய அரசு திட்டமாகும்? மதுரை எய்ம்ஸுடன் ஆரம்பித்த அனைத்து எய்ம்ஸும் திறந்துவிட்டார்கள். மதுரை எய்ம்ஸுக்கு மட்டும் நம்மை வெளிநாடுகளில் கடன் வாங்கச் சொல்கிறார்கள். இது நியாயமா? மழை வெள்ளத்திற்கு கேட்ட 37 ஆயிரம் கோடி யில் ஒரு ரூபாய் கூட அவர்கள் கொடுக்கவும் இல் லை, கொடுக்கத் தயாராகவும் இல்லை. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி நிதி கேட்டு, இதுவரைக்கும் கொடுக்கவில்லை.
தி.மு.க. அழிந்துவிடும் எனச் சொன்னவர்கள் எல்லாம் இன்று அழிந்து போயுள்ளனர். நீங்கள் ஆட்சிக்கு வரும்போது உலக அரங்கில் பசிக் குறியீட்டு எண்ணில் இந்தியா 111வது இடத்தில் இருந்தது. இன்று 125ஆவது இடத்தில் உள்ளது. இப்படி பல்வேறு விஷயங்களில் தோற்ற மோடி பிரதமர் பதவியில் இருக்க வேண்டுமா? 2024 தேர்தலில் அவரை மக்கள் வீட்டுக்கு அனுப்பு வார்கள்'' என்றார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறிய போது, "திருப்பூருக்கு வந்த மோடி ஏன் இந்தியில் பேசினார்? அவர் இந்தியில் யாருக்காக பேசினார்? அந்த பொதுக்கூட் டத்திற்கு அப்பகுதியிலுள்ள தொழிற் சாலை உரிமையாளர்கள், தங்கள் வடமாநிலத் தொழிலாளர்களை வேன், பஸ்கள் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மக்களுக்காக திருப்பூரில் பிரச்சாரம் செய்திருக்கிறார். திருப்பூரில் தொழில் நலிவடையக் காரணம் மோடிதான். தூத்துக்குடி, ஏரல், நெல்லையில் மழைவெள்ள பாதிப்புக்கு கேட்ட 37 ஆயிரம் கோடி யில் ஒரு ரூபாய் கூட மோடி அரசு கொடுக்கவில்லை. அந்த இடத்திலேயே மோடி, அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று கூச்சமில்லாமல் பேசுகிறார்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 75 சதவீதம் மாநில அரசு கொடுக்கிறது. அதற்கு ஸ்டாலின் வீடு கட்டும் திட்டம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும். அல்லது, ஸ்டாலின் - மோடி வீடு என்று வையுங்கள். காங்கிரஸ் கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களுக்கும் இந்தியில் பெயரை மாற்றிவிட்டு, நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று பா.ஜ.க. சொன்னால் வடநாட்டவர்கள் நம்பலாம். தமிழக மக்கள் ஏமாறமாட்டார் கள்'' என்றார்.
ம.ம.க. கட்சியின் புதுமடம் ஹலீம் கூறுகையில், "பெரும்பாலான வட இந்திய மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் நிலையிலும், தனிநபர் வருமானத்தில் அகில இந்திய அளவீட்டைவிட தமிழகம் மேலோங்கி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டை மட்டம்தட்டும் மோடியின் பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கின்றன.
தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட அதிகமான நிதிப் பங்கீட்டைக் கொடுப்பதாக மோடி தமிழகம் வரும்போதெல்லாம் பேசிவருகிறார். ஆனால் பா.ஜ.க. ஆளு கின்ற உத்தரபிரதேச மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழகம் குறைவான நிதிப்பங்கீட்டை மட்டுமே பெறுகின்றது என்பதை அவர் சொல்வதில்லை. தற்போதுகூட ஒன்றிய அரசு தமிழகத் திற்கு ஐந்தாயிரம் கோடியை விடுவித்திருக்கிறது. அதே நேரத்தில் உத்தரபிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரம் கோடி, பீகாருக்கு 14 ஆயிரம் கோடி என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்கிற முதல்வரின் குற்றச்சாட்டு வலுப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி அரசு விழாவில் கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரின் பெயரைக்கூட உச்சரிக்க மனமின்றி ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியைப் போன்று நடந்து கொண்டிருக்கிறார் மோடி. கஜினி முகமது போன்று அவர் தமிழ்நாட்டிற்கு படை எடுத்து வருகிறார். கஜினி முகமதுக்கு 17வது முறை வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் தமிழ்நாட்டில் தோல்விதான் கிடைக்கும்'' என்றார். ஆக, மோடியின் பேச்சுக்கள் எதிலும் உண்மையில்லை என்பதை புள்ளி விவரத்தோடு விளக்கியுள்ளனர்.
-வே.ராஜவேல்