""ஹலோ தலைவரே, டெல்லியை முற்றுகை யிட்ட விவசாயிகள் போராட்டம் மோடியின் பா.ஜ.க. அரசைக் கிடு கிடுக்க வச்சிருக்கு.''
""ஆமாம்பா, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்ட திருத்த மசோதா மூன்றையும் வாபஸ் வாங்கனும்னு இந்திய விவசாயிகள் போராட்டக்குழு தீவிரமா களமிறங்கிடிச்சி.''
""உண்மைதாங்க தலைவரே, இந்த வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தும், அதைப் பொருட் படுத்தாமல் விடாப்பிடியா பா.ஜ.க. அரசு கொண்டு வந்துடுச்சு. இதைக் கண்டு கொதித்துப்போன பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் குடும்ப சகிதமா, டெல்லி நோக்கிப் பேரணியாகக் கிளம்பிட்டாங்க. கிட்டத்தட்ட 1 லட்சம் டிராக்டர்களிலும் ஏராளமான மற்ற வாகனங் களிலும் 1 கோடி விவ சாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். கொரோனா நெருக்கடியும், இப்ப வீசும் கடும் குளிரும் வாட்டினாலும் அதைவிட தங்கள் வாழ்க்கையையே பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதில் முனைப்பாயிட்டாங்க. ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகளைப் பாத்து மோடி அரசு மிரண்டு போயிடுச்சு. அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் துரத்த முயற்சி நடந்தது. இருந்தும் விவசாயிகளின் மன உறுதிக்கு முன்னால் அதிகாரத்தின் அடக்குமுறை எடுபடலை. அதனால் அவர்களை டெல்லிக்குள் இருக்கும் புராரி மைதானத்திற்குள் அனுமதிச்சிருக்காங்க.''
""பி.ஜே.பி.க்கு எதிராக அங்கே விவசாயிகள் போராடும் நேரத்தில், இங்கே அ.தி.மு.க. அரசை எதிர்த்து பா.ஜ.க.வே போராட்டம் நடத்தியிருக்கே?''
""ஆமாங்க தலைவரே, கொரோனாவைக் காரணம் காட்டி, மதுரை சித்திரைத் திருவிழாவை ரத்து செய்துட்டு, கோயில் திருக்கல்யாண உற்சவத்தை ஆன்லைனில் ஒளிபரப்பிய மாதிரி, திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்கு பக்தர்களை அனுமதிக்காத மாதிரி, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிலும் பொதுமக்களை அனுமதிக்கலை. போலீஸ் மூலம் மலையேறவும் எடப்பாடி அரசு தடை விதிச்சிடுச்சி. அதனால் அங்கே 2,668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றும் விழா ஆரவாரமின்றி நடந்தது- அதே நேரம், அ.தி.மு.க.வினருக்கு மட்டும் ஸ்பெஷல் பாஸ்களைக் கொடுத்து தீப தரிசனத்துக்கு அனுப்பினாங்க. கோயில் திரு
""ஹலோ தலைவரே, டெல்லியை முற்றுகை யிட்ட விவசாயிகள் போராட்டம் மோடியின் பா.ஜ.க. அரசைக் கிடு கிடுக்க வச்சிருக்கு.''
""ஆமாம்பா, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்ட திருத்த மசோதா மூன்றையும் வாபஸ் வாங்கனும்னு இந்திய விவசாயிகள் போராட்டக்குழு தீவிரமா களமிறங்கிடிச்சி.''
""உண்மைதாங்க தலைவரே, இந்த வேளாண்மை சட்ட திருத்த மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தும், அதைப் பொருட் படுத்தாமல் விடாப்பிடியா பா.ஜ.க. அரசு கொண்டு வந்துடுச்சு. இதைக் கண்டு கொதித்துப்போன பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் குடும்ப சகிதமா, டெல்லி நோக்கிப் பேரணியாகக் கிளம்பிட்டாங்க. கிட்டத்தட்ட 1 லட்சம் டிராக்டர்களிலும் ஏராளமான மற்ற வாகனங் களிலும் 1 கோடி விவ சாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். கொரோனா நெருக்கடியும், இப்ப வீசும் கடும் குளிரும் வாட்டினாலும் அதைவிட தங்கள் வாழ்க்கையையே பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதில் முனைப்பாயிட்டாங்க. ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகளைப் பாத்து மோடி அரசு மிரண்டு போயிடுச்சு. அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் துரத்த முயற்சி நடந்தது. இருந்தும் விவசாயிகளின் மன உறுதிக்கு முன்னால் அதிகாரத்தின் அடக்குமுறை எடுபடலை. அதனால் அவர்களை டெல்லிக்குள் இருக்கும் புராரி மைதானத்திற்குள் அனுமதிச்சிருக்காங்க.''
""பி.ஜே.பி.க்கு எதிராக அங்கே விவசாயிகள் போராடும் நேரத்தில், இங்கே அ.தி.மு.க. அரசை எதிர்த்து பா.ஜ.க.வே போராட்டம் நடத்தியிருக்கே?''
""ஆமாங்க தலைவரே, கொரோனாவைக் காரணம் காட்டி, மதுரை சித்திரைத் திருவிழாவை ரத்து செய்துட்டு, கோயில் திருக்கல்யாண உற்சவத்தை ஆன்லைனில் ஒளிபரப்பிய மாதிரி, திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்கு பக்தர்களை அனுமதிக்காத மாதிரி, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிலும் பொதுமக்களை அனுமதிக்கலை. போலீஸ் மூலம் மலையேறவும் எடப்பாடி அரசு தடை விதிச்சிடுச்சி. அதனால் அங்கே 2,668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றும் விழா ஆரவாரமின்றி நடந்தது- அதே நேரம், அ.தி.மு.க.வினருக்கு மட்டும் ஸ்பெஷல் பாஸ்களைக் கொடுத்து தீப தரிசனத்துக்கு அனுப்பினாங்க. கோயில் திருவிழாவில் அ.தி.மு.க. அரசு, பாரபட்சமா நடந்துக்கறதைப் பார்த்துக் கொதிச்சிப்போன பா.ஜ.க.வினரு,ம் இந்து முன்னணியினரும், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த, கூட்டணிக் கட்சியே போராட்டம் நடத்துதேன்னு ஆச்சரியமா பார்த்தாங்க.''
""பா.ஜ.க. தரப்பில் இருந்து வந்த இன்னொரு நியூஸ், சென்னை வந்த அமித்ஷா, ஆடிட்டர் குருமுர்த்தியிடம் கடும் கோபத்தைக் காட்டினார்ன்னு சொல்லுதே?''
""உண்மைதாங்க தலைவரே, சென்னையில் தன்னைச் சந்திக்க வந்த குருமூர்த்தியை அமித்ஷா, ரெண்டரை மணி நேரம் காக்க வச்சிருந்தாராம். காரணம், ரஜினி தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் காட்டி வந்ததோடு, தனது குடும்ப விவகாரம் முதல் பொருளாதார பரிமாற்றம் வரை தன்னைக் கலக்காமல் அவர் எதையும் செய்யமாட்டாருன்னும் குருமூர்த்தி சொல்லி வந்திருக்கிறார். மேலும் இங்கிருக்கும் சாதாரண நிறுவனங்கள் முதல், முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, இவர் நினைத்தால் எதையும் செய்வார்ன்னு நம்பும்படி நடந்துவந்தாராம். பிரதமர் மோடியின் பெயரைப் பயன்படுத்தி அவர் பெரிய அளவுக்கு ஆதாயம் அடைந்ததாகவும் டெல்லிக்குத் தகவல்கள் போயிருக்கு. இதையெல்லாம் முழுமையாகத் தெரிஞ்சிக்கிட்டதால்தான் அமித்ஷா, இந்தமுறை அவரைக் காக்க வச்சி, அதன்பிறகு காய்ச்சி எடுத்து விட்டாராம். இதனால் கடும் அப்செட்டில் இருந்த குருமூர்த்தி, ஆன்மீக அரசியலைக் குறிவைத்து, ரஜினி தன் யாத்திரையை ஜனவரியில் தொடங்கப்போறார்னு 29-ந் தேதி அமித்ஷாவுக்குத் தகவல் அனுப்ப, இது உண்மையான்னு டெல்லி விசாரிக்கச் சொல்லியிருக்கு.''
""ஆன்மீகத்தை அரசியலாக்கி வேல் யாத்திரையை மேற்கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனைப் பற்றி சமூக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வலம் வருதே?''
""அண்மையில் பழநிக்கு வேல்யாத்திரை சென்றிருந்த முருகன், ஒரு பா.ஜ.க. பிரமுகர் செருப்பைக் கழற்றிப் போட்டிருந்த இடத்தில், தன் கையில் இருந்த வேலினை வைத்திருந்த படம் சோஷியல் மீடியாக்களில் வெளியானது. இது வேலுக்கு ஏற்பட்ட அவமரியாதைன்னு பா.ஜ.க.வினரே கொந்தளிச்சாங்க. இந்த நிலையில், முருகன் குடும்ப உறவுகளின் மதம் பற்றி சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கு. அதோடு முருகனின் மாநில தலைவர் பதவியைக் குறிவைத்திருக்கும் சிலர், தேர்தல் நேரத்தில் புதிய தலைவரை நியமித்தால்தான் பா.ஜ.க. வெற்றி பெற முடியும்னு அகில இந்தியத் தலைமையிடம் கோரிக்கைவைக்க ஆரம்பிச்சிருக்காங்களாம்.''
""எடப்பாடி அரசு கொரோனா விதிமுறைகளில் கெடுபிடி காட்டத் தொடங்கியிருக்கே.''
""ஆமாங்க தலைவரே, குளிர்காலம் தொடங்கிடிச்சி. இதனால் கொரோனா தீவிரமாகப் பரவக்கூடிய ஆபத்து இருக்குன்னு தமிழகத்துக்கு டெல்லி எச்சரிக்கை மணி அடிச்சிருக்கு. இதைத் தொடர்ந்து பரபரப்பான முதல்வர் எடப்பாடி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்ப, 30% பேர் முகக்கவசம் அணிவ தில்லை. சமூக இடைவெளியையும் பறக்கவிட் டுட்டாங்கன்னு எடப்பாடி சொல்ல, விதிமுறையை மீறுவதில் ஆளும்கட்சியினரே முன் மாதிரியா இருக்காங்கன்னும் எடப்பாடியிடமே கலெக்டர்கள் தயக்கத்தோடு எடுத்துச் சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டுத் திகைத்த எடப்பாடி, இனி எங்கக் கட்சிக்காரங்களா இருந்தாலும் கொரோனா பாதுகாப்பை கடைபிடிக்க லைன்னா அவங்க மேல் நடவடிக்கை எடுங்கன்னு, தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கும் உத்தரவையும் பிறப்பிச்சிருக்கார்.''
""சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொரோனா பாதுகாப்பு பற்றி பேசுனப்ப, வயசானவங்களுக்குத்தான் மாஸ்க் தேவைப்படும்னு சொன்னது இதே முதலமைச்சரின் வாய்தானே?''
""தலைவரே, ஏற்கனவே இருமுறை பணி நீட்டிப்பைப் பெற்றிருக்கும் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரியோடு முடிவடையுது. மூன்றாவது முறையாக அவருக்குப் பணி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கத் தயாராக இல்லை. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது, புதிய தலைமைச் செயலாளர் ஒருவர் இருக்கனும்ன்னு டெல்லி விரும்புதாம். இந்த நிலையில், ஓய்வு பெற இருக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம், பெரிய முதலீட்டில் ரெசிடெண்சியல் ஸ்கூல் ஒன்றை தொடங்க இருக்காருன்னு கோட்டை வட்டாரத்தில் ஒரு தகவல் விறுவிறுப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''’
""சசிகலா தரப்பு, எடப்பாடிமீது கோபத்தில் இருக்குதாமே?''
""வரும் டிசம்பர் 5-ல் ஜெ’வின் நினைவு நாள் வருவதால், அதற்கு முன்பாகவே சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டு வரனும்னு அவர் தரப்பு துடிக்குது. ஆனால் எடப்பாடியோ, தன் பதவிக்கு ஆபத்து வந்துடுமோன்னு நினைச்சி, தேர்தல் முடியும் வரை சசிகலா வரக்கூடாதுன்னு டெல்லியிடம் ரகசியக் கோரிக்கை வைக்கிறாராம். சென்னையில் எடப்பாடியோடு அமித்ஷாவைச் சந்தித்த ஓ.பி.எஸ்., சசிகலா விரைவில் ரிலீஸ் ஆகறது நல்லதுன்னு சொல்ல, இதைக் கேட்டு எடப்பாடி இறுக்கமாயிட்டாராம். முதல்வர் வேட்பாளராக ஆகிவிடணும்னு ஓ.பி.எஸ். போடும் கணக்கை, அவர் தெரிந்து வைத்திருக் கிறாராம். சசிகலாவின் விடுதலைக்கு பிரேக் பிடிக்கும் எடப்பாடி மீது அவர் தரப்பு கடும் கோபத்தில் இருக்குது.''’’
""பா.ம.க.வுக்கு சாதகமாக எடப்பாடி நடப்பதாக அ.தி.மு.க.விலேயே சலசலப்பு கிளம்புதே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது ஒரு கேபினட் மந்திரி பதவியையும், 2 இணையமைச்சர்கள் பதவியையும் அ.திமு.க.வுக்கு ஒதுக்க இருக்கிறதாம் டெல்லி. வைத்திலிங்கம், ரவீந்திரநாத் ஆகியோருக்குப் போக, மீதமிருக்கும் ஒன்றை தம்பிதுரை குறிவைக்கிறாராம். கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் தம்பிதுரை சசிகலாவின் தீவிர விசுவாசி என்பதால், அவரை மத்திய அமைச்சராக்க விரும்பவில்லை எடப்பாடி. அவருக்குக் கொடுப்பதற்கு பதில் அந்த அமைச்சர் பதவியை பா.ம.க. அன்புமணிக்குக் கொடுத்தால், எம்.எல்.ஏ. தேர்தல் உடன்படிக்கையின் போது, கொடுத்த சீட்டை சைலண்டாக பா.ம.க. வாங்கிக்கொள்ளும்னு எடப்பாடி கணக்குப் போடுகிறாராம். இதையறிந்த அ.தி.முக. சீனியர்களே பா.ம.க.வுக்கு அமைச்சர் பதவியைத் தாரை வார்க்க நினைப்பதான்னு எடப்பாடிக்கு எதிராக கட்சியினரைக் கூர் சீவிவிடறாங்க.''
""அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை, அரசு அமைத்த கலையரசன் கமிஷன் விசாரிக்கத் தொடங்கிடுச்சே?''
""முதல்கட்டமாக சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் வேலையில் ஆணையம் இறங்கியிருக்கு. ஏற்கனவே முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்த புகார்களின் அடிப்படையில்தான் இந்த விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது. சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகார்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆணையத்துக்கு அனுப்பலாம்னு அது அறிவிச்சிருக்கு. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், இந்த விசாரணை கமிஷனைத் திரும்ப பெறனும்ன்னு அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கு. இதற்கிடையே சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், கமிஷன் தொடர்பான அதிருப்தியைக் கடுமையாகக் காட்டிவிட்டுச் சென்றதால், மெல்ல மெல்ல இந்த ஆணையத்துக்கு சிலீப்பிங் டோஸ் கொடுக்கும் முடிவில் இருக்குது எடப்பாடி அரசு.''’
""த.மா.கா.வின் 7 ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவை ஜி.கே.வாசன் சிம்பிளா கொண்டாடியிருக்காரே?''
""கடந்த 28-ந் தேதி தங்கள் கட்சி அலுவலகத்தில் ரொம்பவும் எளிமையா கட்சியின் தொடக்க நாள் விழாவை நடத்தினார் வாசன். இதுக்கு குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தாங்க. சமூக இடை வெளியோடு எல்லோரும் இருந்தும், கொரோனா பீதியால், தனக்குப் பொன்னாடை போர்த்தக்கூட அவர் யாரையும் அருகில் அனுமதிக்கலை. நிர்வாகிகளிடம் பேசிய வாசன், அ.தி.மு.க. கூட்டணியில் தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அவர்களிடமிருந்து கௌரவமான எண்ணிக்கையில் நமக்குத் தொகுதிகள் கிடைக்கும். ஜனவரியிலிருந்து தேர்தல் வேலையில் நாம் ஜரூராகனும்னு சொல்லியிருக்கிறார்.''
""அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க, ராகுல் சம்மதிச்சிட்டாருன்னு டெல்லிப் பக்கம் இருந்து தகவல் வருதே?''
"உண்மைதாங்க தலைவரே, ஜனவரியில் அகில இந்திய காங்கிரசின் மாநாடு டெல்லியில் நடக்குது. இதில் கட்சிக்குப் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்யனும்னு கட்சித் தலைமை முடிவெடுத்திருக்கு. இது நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட இருப்பதால், காங்கிரஸின் ஐ.டி.விங் சுறுசுறுப்பாக் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கு. கோவாவில் ராகுலோடு தங்கியிருக்கும் சோனியா, ராகுலின் மனதைக் கரைத்து தலைவர் பதவியை ஏற்கும் மன நிலைக்கு அவரைக் கொண்டுவந்துவிட்டாராம். அந்தத் தேர்வும் முறைப்படி நடக்கனும்னு நினைக்கும் சோனியா, ராகுலை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்ன்னும் அறிவிக்கச் சொல்லியிருக்கிறாராம்.''
""நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன். நுங்கம்பாக்கத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஒரு நபர், சைனிஸ் ஓட்டல் ஒன்றை நடத்துகிறார். இங்கு மாலை நேரத்தில் பிரபல திரைப்பட நடிகைகள் சிலரைப் பார்க்க முடிகிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கமான அந்த முகப்பேர் நபர், அவர்களுக்கு ஓட்டல் ஐட்டங்களோடு, அவர்களின் அந்தரங்கப் பசிக்கும் தேவையானதையும் அனுப்பி வைக்கிறாராம்.''