பாலியல் வழக்குகளில் சாமியார் ஆசாராம் பாபு ஆயுள்தண்டனை பெற்றுள்ள நிலையில், பாலியல் வழக்கை எதிர்கொண்டு வரும் சாமியார் நித்தியானந்தா தனது மடத்திலேயே அரசியல் சேனை தொடங்கப் போகிறாராம்.

பாவம் அவரும்தான் என்ன செய்வார்? ரஞ்சிதாவுடனான வீடியோ சமாச்சாரத்திலிருந்து, பெண் சீடரை கற்பழித்த வழக்கு என்று அலைந்தார். திருவண்ணாமலையில் மலையை அபகரிக்க முயன்று விரட்டப்பட் டார். அதன்பிறகு மதுரை ஆதீனமாக முயற் சித்து அங்கிருந்தும் துரத்தப்பட்டார். பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களும் நித்தியின் தலையில் சரமாரியாக குட்டு வைக்கிறது.

nithy

இந்நிலையில்தான் திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றார். அந்த முயற்சியையும் பெரியார் இயக்கங்களும் சி.பி.எம். உள்ளிட்ட இயக்கங் களும் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து தனக்கும் அரசியல் ஆதரவு வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் உள்ள தனது சாதிக்காரர்களிடம் முறையிட்டார். அவர்களும் மறைமுகமாக உதவி செய்தார்கள்.

Advertisment

இப்படிப்பட்ட நிலையில்தான், தனது பெண் சீடர்களைக் கொண்டு த.மு.எ.க.ச.வைச் சேர்ந்த கருப்புக்கருணா, வெண்புறா சரவணன் உள்ளிட் டோரை ஆபாசமாகத் திட்டி வீடியோக்களையும் வெளியிடச் செய்தார் நித்தி. அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

சில மாதங்களுக்கு முன் கலைஞரையும், கனிமொழியையும் இதேபோல அவருடைய பெண் சீடர்கள் மிகவும் கொச்சையாக அர்ச்சனை செய்த வீடியோக்களை வெளி யிட்டனர். இதற்கும் கடும் எதிர்ப்பு உருவானது. தி.மு.க. பிரமுகர் ஒருவர் மூலம் நித்தி தயார்செய்து வைத்திருந்த சில இளைஞர் அமைப்புகள்கூட உதவிக்கு வரவில்லை.

இந்நிலையில்தான் சொந்தமாகவே அரசியல் கட்சியைத் தொடங்க நித்தி முடி வெடுத்துவிட்டார் என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சாமியார் அமைப்பு, அரசியல் அமைப்பு போன்றவை இருப்பதுபோல, நித்தி தனது மடத்துக்கு ஆதரவாக ஓர் அரசியல் அமைப்பை தொடங்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

"இந்த அரசியல் சேனை தேர்தலில் போட் டியிடும், பா.ஜ.க.வை ஆதரிக்கும்' என்றெல் லாம் சொல்கிறார்கள். உறுப்பினர் சேர்க்கைக்கு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள நித்தி ஆதர வாளர்கள், "அந்த அரசியல் சேனையில் ரஞ்சிதாவுக்கு என்ன போஸ்டிங் என்பதைச் சொல்லவே இல்லை' என்று செல்லமாகக் கோபிக்கிறார்கள்.

-து.ராஜா