நிலக்கோட்டை: தி.மு.க. உள்கட்சிப் பிரச்சினை! வெற்றிக்கு உலை வைக்குமா?

ss

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை ஆளும்கட்சியான தி.மு.க.வும், திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கைப்பற்றியுள்ளது.

இதில் நிலக்கோட்டை சட்டமன்றத் (தனி)தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றிபெற்று சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் தேன்மொழி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளர். அதனாலேயே கடந்த முறையும் தேன்மொழிக்கு சீட்டு வாங்கிக்கொடுத்து வெற்றிபெறவைத்தார்.

அதோடு விஸ்வநாதன் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால் தனது ஆதரவாளரான தேன்மொழிக்கு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியையும் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் தேன்மொழி வெற்றிபெறும்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாகவே வந்துவிடுவதால் தொகுதிப் பக்கம் சரிவரப் போவதில்லை.

தொகுதியில் நடக்கக்கூடிய நல்லதுகெட்டதுக்கு எம்.எல்.ஏ. தேன்மொழியின் கணவரான சேகர்தான் விசிட் அ

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை ஆளும்கட்சியான தி.மு.க.வும், திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் கைப்பற்றியுள்ளது.

இதில் நிலக்கோட்டை சட்டமன்றத் (தனி)தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றிபெற்று சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் தேன்மொழி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தீவிர ஆதரவாளர். அதனாலேயே கடந்த முறையும் தேன்மொழிக்கு சீட்டு வாங்கிக்கொடுத்து வெற்றிபெறவைத்தார்.

அதோடு விஸ்வநாதன் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால் தனது ஆதரவாளரான தேன்மொழிக்கு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவியையும் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் தேன்மொழி வெற்றிபெறும்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாகவே வந்துவிடுவதால் தொகுதிப் பக்கம் சரிவரப் போவதில்லை.

தொகுதியில் நடக்கக்கூடிய நல்லதுகெட்டதுக்கு எம்.எல்.ஏ. தேன்மொழியின் கணவரான சேகர்தான் விசிட் அடித்துவருவார். அதுபோல் பெயர் சொல்லுமளவுக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கட்சிக்காரர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற அதிருப்தி தொகுதி முழுக்கவே பரவலாக இருக்கிறது. இருந்தாலும் தொகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எந்த ஒரு கெட்ட பெயரும் வாங்காமல் பிரச்சனையில்லாத எம்.எல்.ஏ.வாக வலம்வருகிறார்.

ss

கடந்த தேர்தலில் தேர்தல் செலவுக்கு ஓ.பி.எஸ். மூலம் பணம் கொடுக்கப்படும் என்று தலைமை அறிவித்திருந்தது. ஆனால் கடைசியில் ஓ.பி.எஸ். பணம் கொடுக்காததால் தனது சொத்துக்களை விற்று தேர்தலில் செலவு செய்திருக்கிறார். அப்படியிருந்தும் தலைமையும் விஸ்வநாதனும் கண்டுகொள்ளாததால் கட்சி வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டுவதில்லை. கட்சிக்காரர்களையும் கண்டுகொள்வதில்லை. இதனால் தேன்மொழிமேல் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் அதிருப்தியில் இருந்துவருகிறார். மீண்டும் தேன்மொழிக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பேச்சும் ஒருபுறம் இருந்துவருகிறது. விராலிப்பட்டி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் தனலட்சுமி சின்னமுத்து, ஆத்தூர் முன்னாள் யூனியன் துணைத் தலைவர் கோபி உள்பட சில ர.ர.க்களும் இப்போதே சீட்டுக்காக மோதிவருகிறார் கள். கூட்டணிக் கட்சியான பி.ஜே.பி.யில் தொகுதி உறுப்பினர் சேர்க்கை தலைவர் கருப்புசாமியும் சீட் கேட்டு வருகிறார். ஜான்பாண்டியன் கட்சியிலும் தனது மகளுக்காக சீட் கேட்கவிருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.

இத்தொகுதியில் 50 வருடங்களுக்கு முன்பு தி.மு.க. சார்பில் முனியாண்டி வெற்றி பெற்றார். அதன்பின் தொடர்ந்து கூட்டணிக் கட்சிக்கே தி.மு.க. தொகுதியை ஒதுக்கிவந்தது. கடந்த இரண்டு முறை மட்டும் தி.மு.க. இத்தொகுதியில் களமிறங்கியும்கூட உட்கட்சி கோஷ்டிப்பூசலால் வெற்றிபெற முடியவில்லை. இதனால் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை என இரண்டு ஒன்றியங்களாக இருந்ததை ஐந்து ஒன்றியங்களாக தலைமை பிரித்தது. இதில் வத்தலக்குண்டு வடக்கு ஒன்றியச் செயலாளராக முருகனும், தெற்கு ஒன்றியச் செயலாளராக கனிக்குமாரும் செயல்படுகிறார்கள். நிலக்கோட்டை ஒன்றியத்தில் தெற்கு ஒன்றியத்திற்கு மணிகண்டனும், மேற்கு ஒன்றியத்திற்கு கரிகாலபாண்டியன், வடக்கு ஒன்றியத்திற்கு சௌந்தரபாண்டியன் இப்படி நிலக்கோட்டை தொகுதியை ஐந்து ஒன்றியங்களாகப் பிரித்து கட்சிப் பொறுப்பாளர்களை களமிறக்கியும் கட்சி வளர்ச்சிக்கு சரிவர ஆர்வம் காட்டுவதில்லை.

கட்சிக்காரர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்வதில்லை, ஒரு மாட்டு லோன் உட்பட எந்த ஒரு லோனும் வாங்கித் தருவதில்லை. அந்த அளவுக்கு தொகுதியில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கும், தொண் டர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. இதையெல்லாம் அமைச்சர் ஐ.பி.யும், கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாரும் சரிசெய்யவேண் டும். இத்தொகுதியில் வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனூர், சேவுகம் பட்டி, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி ஆகிய ஐந்து பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், கவுன்சிலர்களும் இருந்தாலும்கூட இப்பகுதியில் உள்ள நகரச் செயலாளர்களான சின்னத்துரை, ஜோசப்கோவில்பிள்ளை, தங்கராஜ், ராஜாங்கம், அருண்குமார் ஆகியோர் கட்டுப்பாட்டில்தான் திட்டப் பணிகளே செயல்பட்டு வருகிறது.

இந்த பேரூராட்சிகளுக்கு பல கோடிக்கு திட்டப்பணிகள் வந்தும்கூட கவுன்சிலர்களையும், கட்சி கிளைப் பொறுப்பாளர்களையும் கண்டுகொள்ளாமல் தங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். இதனால் நகர பொறுப்பாளர்களும், கவுன்சிலர்களும், கட்சி கிளைப் பொறுப்பாளர்களும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் மாற்றம் வேண்டும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. ஐம்பதாயிரம் ஓட்டுக்கள் கூடுதலாக வாங்கியுள்ளது. எனவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் இத்தொகுதியை தி.மு.க. தக்கவைக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் தொகுதியில் இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்களின் உட்கட்சி கோஷ்டிப் பூசலை சரிசெய்தால் மட்டுமே அது நடக்கும். அதனாலேயே இப்போதே சீட்டுக்காக கரிகாலபாண்டியனின் மனைவி சுகந்தா, அன்பழகன், சௌந்தர பாண்டியன், வத்தலக்குண்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெனினாதேவி, நிலக்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவர் முருகேசன் உள்பட சில உ.பி.க்களும் சீட்டுக்காக களமிறங்கத் தயாராகிவருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபாண்டி சீட் கேட்கவிருக்கிறார். அதேபோல் விஜய் கட்சியில் கிழக்கு மாவட்டச் செயலாளர் தேவா சீட் கேட்கவிருக்கிறார்.

-சக்தி

nkn140525
இதையும் படியுங்கள்
Subscribe