கனியாமூர் சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை ஏற்று 115 நாட்களுக்கு மேலாகிவிட் டது. இதுவரை குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. யால் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியவில்லை. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சரியாக விசாரிக்க வில்லை என ஸ்ரீமதியின் தாயார் செல்வி, தமிழக டி.ஜி.பி.யிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என கொடுத்த மனு மீது எந்த முடிவையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கிறது? உண்மையில் என்ன நடக்கிறது? என நக்கீரன், ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் விசாரித்தது. இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சிகள் ஸ்ரீமதியுடன் அவர் மரணமடைந்த அன்று தங்கியிருந்த மாணவிகள். அவர்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் ஸ்ரீமதியின் தாயார் செல்வி யுடன் பேச அனுமதிக்கவில்லை. அந்த மாணவி களுக்குத்தான் அன்றைய தினம் என்ன நடந்தது என்று தெரியும். அவர்களில் முக்கியமானவர்களை பல கிலோமீட்டர் தூரம் அலைந்து நக்கீரன் சந்தித்தது. அவர்களில் மிக முக்கியமானவர் மலர் என்கிற மாணவி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
தற்பொழுது வேறொரு பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் மலர், ஸ்ரீமதியுடன் ஹாஸ்டலில் ஒன்றாகத் தங்கியிருந்தவர். "ஸ்ரீமதி இறந்தபொழுது ஹாஸ்டலில் அவர் படுத்திருந்த மூன்றடுக்கு கட்டிலில் மூன்றாவது அடுக்கில் ஸ்ரீமதியும், இரண்டாவது அடுக்கில் கயல்விழியும் (பெயர் மாற்றப்பட்ட
கனியாமூர் சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையை ஏற்று 115 நாட்களுக்கு மேலாகிவிட் டது. இதுவரை குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. யால் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியவில்லை. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சரியாக விசாரிக்க வில்லை என ஸ்ரீமதியின் தாயார் செல்வி, தமிழக டி.ஜி.பி.யிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என கொடுத்த மனு மீது எந்த முடிவையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கிறது? உண்மையில் என்ன நடக்கிறது? என நக்கீரன், ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடம் விசாரித்தது. இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சிகள் ஸ்ரீமதியுடன் அவர் மரணமடைந்த அன்று தங்கியிருந்த மாணவிகள். அவர்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் ஸ்ரீமதியின் தாயார் செல்வி யுடன் பேச அனுமதிக்கவில்லை. அந்த மாணவி களுக்குத்தான் அன்றைய தினம் என்ன நடந்தது என்று தெரியும். அவர்களில் முக்கியமானவர்களை பல கிலோமீட்டர் தூரம் அலைந்து நக்கீரன் சந்தித்தது. அவர்களில் மிக முக்கியமானவர் மலர் என்கிற மாணவி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
தற்பொழுது வேறொரு பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் மலர், ஸ்ரீமதியுடன் ஹாஸ்டலில் ஒன்றாகத் தங்கியிருந்தவர். "ஸ்ரீமதி இறந்தபொழுது ஹாஸ்டலில் அவர் படுத்திருந்த மூன்றடுக்கு கட்டிலில் மூன்றாவது அடுக்கில் ஸ்ரீமதியும், இரண்டாவது அடுக்கில் கயல்விழியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கீழ் அடுக்கில் ஆசிரியை ஜெப ஜீவப்பிரியாவும் படுத்திருந்தார்கள். அதற்குப் பக்கத்தில் இருந்த கட்டில் அடுக்குகளில் நான் படுத்திருந்தேன். அன்று இரவு வழக்கம் போலத் தான் ஸ்ரீமதி இருந்தாள். அவள் அதற்கு முந்தைய தினம், தான் அணிந்திருந்த வெள்ளி பிரேஸ்லெட்டை தொலைத்துவிட்டாள். அதைப் பற்றி சோகமாக அழுது புலம்பினாள். இறந்த அன்று அவளிடம் அந்த வருத்தம் இல்லை.
இன்னொரு தோழியான தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார். இரவு சாப்பிட்டு விட்டு சிரித்துக்கொண்டே வந்த ஸ்ரீமதி, மறுநாள் காலையில் இறந்து விட்டார் என கூறி னார்கள். அவர் ஹாஸ்டலுக்குக் கீழே மல்லாந்த நிலையில் பிணமாகக் கிடப்பதை காலையில் மாணவிகள் அனைவரும் ஹாஸ்டலின் மொட்டை மாடியிலிருந்து பார்த்தோம். அதற்குப் பிறகு எங்களை ஒரு வகுப்பறையில் அமர வைத்தார்கள். அப்பொழுது எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
ஸ்ரீமதி எப்படி இறந்தாள் என எங்களுக்குப் புரியவில்லை. இரவு ஒரு மாணவி பாத்ரூமில் அந்தரங்க ஆடைகளை துவைத்துக் கொண்டிருந் தாள். அப்பொழுது அவள் மீது யாரோ ஒருவர் தண்ணீர் தெளித்தார்கள். பயந்து போன அந்த மாணவி, தண்ணீர் தெளித்தது யார் என தேடிய போது, ஸ்ரீமதிதான் எனத் தெரியவந்தது. மறுபடி யும் சிரித்துக்கொண்டே ஸ்ரீமதி அந்த மாணவி மீது தண்ணீர் தெளித்து விளையாடினாள். இப்படி சிரித்துக்கொண்டே சந்தோஷமாக ஸ்ரீமதி விளை யாடியபோது நேரம் இரவு பத்துமணியைக் கடந்திருந்தது. மிகவும் சந்தோஷமாக இருந்த ஸ்ரீமதி எப்படி பிணமாக மாறினாள் என எங்களுக்குப் புரியவில்லை. ஸ்ரீமதி மேல் அவரது அம்மா செல்வி மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அவர் இந்த விவகாரத்தை சும்மா விடமாட்டார் என எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
அதன் பிறகு பள்ளி நிர்வாகம் ஸ்ரீமதியின் உடமைகளை தனியாக எடுத்துக்கொண்டு சென்று விட்டது. இந்த நிகழ்வுகளை எல்லாம் பள்ளி நிர்வாகம் தானாகவே செய்தது. போலீசாரையும் அழைக்கவில்லை. அத்துடன் ஸ்ரீமதியின் இறந்த உடலை பள்ளித் தாளாளர் வீடு அமைந்துள்ள கோவில் பகுதி வழியாக சாந்தி, கிருத்திகா ஜெப ஜீவப்பிரியாவும் தூக்கிச் சென்றார்கள்.
ஹாஸ்டல் என்பது ஒரு தனிப்பகுதி. அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் இல்லை. வெளியே இருந்து யாரும் உள்ளே வர முடியாது. ஆனால், பள்ளி உரிமையாளரின் மகன்கள் சரண் மற்றும் சக்தி அங்கே சுற்றித் திரிவார்கள். மாணவி கள் உணவு சாப்பிடும் இடத்திற்கும் அவர்கள் அடிக்கடி வந்து செல் வார்கள். இதை நான் பார்த்துள்ளேன். இந்நிலையில் ஸ்ரீமதி எப்படி இறந்தார் என்பது மர்மமான புதிராகவே உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்னிடம் விசாரித் தார்கள். இந்த தகவல் களை எல்லாம் அவர் களிடம் சொல்லியுள் ளேன்'' என்றார் மலர்.
அந்தப் பள்ளியில் படிக்கும் கரிகாலன் (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்ற மாணவர் நம்மிடம், “ஹாஸ்டல் அமைந்துள்ள பாத்ரூம் பகுதிதான் ஸ்ரீமதி மரணத் தில் முக்கியமான பகுதி. ஸ்ரீமதி மரணமடைந்த வுடன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை எனச் சொல்லி பள்ளிக்கு லீவு விட்டார் கள். அந்த சமயத்தில் ஸ்ரீமதியின் மரணம் தொடர் பான செய்திகள் பள்ளிக்குள் பரவ ஆரம்பித்தது.
அப்பொழுது பல்வேறு செய்திகளை எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். அதில் முக்கியமானது, நள்ளிரவு நேரத்தில் மாணவிகள் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையின் பாத்ரூமில் இருந்து ஒரு பெண்ணின் மரணஓலம் கேட்டது என அந்தக் கழிப்பறையை சுத்தம் செய்யும் சுகாதாரப் பணியாளர் ஒருவர் சொல்கிறார் என ஒரு செய்தி பரவியது. அந்த அலறலைக் கேட்ட பணியாளர், அந்த பாத்ரூம் பக்கம் செல்ல முயன்றார். அவரை சிலர் மிரட்டி அனுப்பி விட்டார்கள். நமக்கெதுக்கு வம்பு என அந்த சுகாதாரப்பணியாளர் ஓடிவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யசோதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது பெற்றோர் நம்மிடம் பேசும்போது, "ஸ்ரீமதி இறந்த அன்று முதல் ஏதோ பார்க்கக் கூடாத சம்பவத்தை பார்த்தது போன்று எனது மகளுக்கு கடுமையான ஜுரத்துடன் கூடிய பயம் வந்து விட்டது. அவளை நாங்கள் மருத்துவரிடம் கொண்டுபோய் காப்பாற்றினோம்' என்கிறார்கள்.
அனுராதா என்ற மாணவி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) விரிவாக நம்மிடம் பேசினார்.
"ஸ்ரீமதிக்கும் இன்னொரு மாணவனுக்கும் காதல். அதை ஸ்ரீமதியின் தாயார் கண்டித்தார். அந்த மன உளைச்சலில்தான் ஸ்ரீமதி தற் கொலை செய்து கொண்டார்' என சி.பி.சி.ஐ.டி., தங்களது விசாரணையின் முடிவு என சொல்லும் செய்தியை அந்த மாணவி உறுதியாக மறுத்தார். ஸ்ரீமதிக்கு யாருடனும் காதல் இல்லை என்ற அனுராதா, ஸ்ரீமதி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என மறுக்கிறார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் கயல்விழி என்கிற மாணவியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நக்கீரன் சந்திக்க எடுத்த முயற்சிகளை தடுத்தார் கள். கயல்விழி புதிதாகப் படிக்கும் பள்ளி நிர்வாகமும் அம்மாணவியின் முகவரியை நாம் கேட்டபோது சி.பி.சி.ஐ.டி போலீசார் எதிர்க் கிறார்கள் என்று சொல்லி தர மறுத்துவிட்டார்கள். யசோதா, கயல்விழி ஆகிய இரு மாணவிகள்தான் ஸ்ரீமதிக்கு நெருக்கமான தோழிகள். இந்த இரு மாணவிகளிடமும் “"ஸ்ரீமதி ஒரு மாணவனுடன் காதல்வயப்பட்டிருந்தார், அதை அவரது தாயார் எதிர்த்தார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் ஸ்ரீமதி தற் கொலை செய்துகொண்டார்'’என ஸ்டேட் மெண்ட் வாங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த இரு மாணவிகளை நாம் சந்திக்க எடுத்த முயற்சி களை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கோமதி, அந்த மாணவிகளின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் மிரட்டித் தடுத்தார் என்கிறது ஒரு சோர்ஸ். இவர்களைப் போலவே நமது முயற்சிக்கு மற்ற மாணவிகளின் பெற் றோர்களிடம் பேசி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் சி.பி.சி.ஐ.டி போலீசார்.
ஆனால் ஸ்ரீமதி காதல் வயப்படவில்லை என அவருடன் படித்த மற்ற மாணவிகள் தெளிவாகவே கூறுகிறார்கள். அதனால்தான் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த காதல் விவகாரத்தில் முக்கிய சாட்சியான டிரைவர் செந்தில்குமாரை மட்டும் வைத்து குழம்பிப்போய் நிற்கிறது சி.பி.சி.ஐ.டி. டிரைவர் செந்தில்குமாரும் காதல் விவகாரத்தில் உறுதியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்கிறது சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள்.