(12) என்ன கொடுமையடா...!
ஓராண்டுக்கு முன்னர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு திருமண வீட்டில் பேசும்போது, சுயமரியாதைத் திருமண முறையின் எளிமையைப் பாராட்டியும், ஏற்கனவே நம்மீது திணிக்கப்பட்டிருந்த இந்து திருமணச் சடங்குகள், அக்கினி வளர்க்கும் முறை ஆகியவற்றைத் திறனாய்வு செய்தும் பேசியிருக்கிறார். புரோகிதர் சொல்லும் மந்திரங்களின் பொருள் மணமக்களுக்குத் தெரியாது என்பதோடு, புரோகிதருக்குமே தெரிந்திருப்பதில்லை என்று நகை இழையோடப் பேசியிருப்பதோடு, அந்த மந்திரங்களின் உண்மைப் பொருள் மிக மோசமானது என்றும் விமர்சித்திருந்தார் என்பது நிகழ்காலத்தில் முகநூல் போன்றவற்றில் எடுத்துப் போடப்பட்டுப் பரவி வருகிறது.
இதற்கு ஸ்டாலினுக்கு இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் கவித்துவமும் அழகியலும் கொண்டவை என்றும், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு கேலி பேசியிருக்கிறார் ஸ்டாலின் என்றும் கண்டிக்கிறார் இராம.கோபாலன்.
மந்திரங்களில் கவித்துவம் இல்லை என்பது வாதமன்று. சமக்கிருதம் ஓசை நயமுடைய மொழி. பிராகிருதமாக இருந்த நிலையிலிருந்து அது சமக்கிருதமாகத் திருத்தி உருவாக்கப்பட்ட மொழி. அது உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்று.
அதனிடம் வேதம் இருப்பது இருக்கட்டும்; அது ஒருவகைத் தோத்திரத் திரட்டு; ஆனால் அதனிடம் இருக்கும் உபநிடதங்கள் ஈடு இணையற்றவை. ஆழமான மெய்யியல் ஓட்டமுடையவை. மனித அறிவு வளர்ச்சியில் உபநிடதங்களின் இடம் பெரியவை.
இவ்வளவு சிறந்த மொழியை மிகச்சிறந்த மூளையுடைய சமூகமாகிய
(12) என்ன கொடுமையடா...!
ஓராண்டுக்கு முன்னர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு திருமண வீட்டில் பேசும்போது, சுயமரியாதைத் திருமண முறையின் எளிமையைப் பாராட்டியும், ஏற்கனவே நம்மீது திணிக்கப்பட்டிருந்த இந்து திருமணச் சடங்குகள், அக்கினி வளர்க்கும் முறை ஆகியவற்றைத் திறனாய்வு செய்தும் பேசியிருக்கிறார். புரோகிதர் சொல்லும் மந்திரங்களின் பொருள் மணமக்களுக்குத் தெரியாது என்பதோடு, புரோகிதருக்குமே தெரிந்திருப்பதில்லை என்று நகை இழையோடப் பேசியிருப்பதோடு, அந்த மந்திரங்களின் உண்மைப் பொருள் மிக மோசமானது என்றும் விமர்சித்திருந்தார் என்பது நிகழ்காலத்தில் முகநூல் போன்றவற்றில் எடுத்துப் போடப்பட்டுப் பரவி வருகிறது.
இதற்கு ஸ்டாலினுக்கு இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் கவித்துவமும் அழகியலும் கொண்டவை என்றும், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு கேலி பேசியிருக்கிறார் ஸ்டாலின் என்றும் கண்டிக்கிறார் இராம.கோபாலன்.
மந்திரங்களில் கவித்துவம் இல்லை என்பது வாதமன்று. சமக்கிருதம் ஓசை நயமுடைய மொழி. பிராகிருதமாக இருந்த நிலையிலிருந்து அது சமக்கிருதமாகத் திருத்தி உருவாக்கப்பட்ட மொழி. அது உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்று.
அதனிடம் வேதம் இருப்பது இருக்கட்டும்; அது ஒருவகைத் தோத்திரத் திரட்டு; ஆனால் அதனிடம் இருக்கும் உபநிடதங்கள் ஈடு இணையற்றவை. ஆழமான மெய்யியல் ஓட்டமுடையவை. மனித அறிவு வளர்ச்சியில் உபநிடதங்களின் இடம் பெரியவை.
இவ்வளவு சிறந்த மொழியை மிகச்சிறந்த மூளையுடைய சமூகமாகிய நீங்கள் பேச்சுவழக்கற்றுப் போகச்செய்துவிட்டீர்களே! பெரிய சங்கராச்சாரியாரே, சின்ன சங்கராச்சாரியாரோடு சமக்கிருதத்தில் பேச முடிவதில்லையே!
உங்களுடைய மந்திரங்களின் கவித்துவத்தால் எங்களுக்கு ஆகப்போவது என்ன?
உங்களுடைய புரோகிதர்களுக்கே மந்திரங்களின் பொருள் தெரிவதில்லை என்று ஸ்டாலின் சொல்லிவிட்டாரே என்று பாய்வதற்குப் பதிலாக, அவர்களுக்கு அதைக் கற்பித்து, இந்த மாதிரியான சொல்லுக்கு இடமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே?
என்ன குறை என்று சொல்ல அனுமதித்தால்தானே குறையைக் களைந்துகொள்ள முடியும். குறை சொல்பவன்தானே அக்கறையுடையவன். "எப்படியோ தொலையட்டும்' என்று அலட்சியப்படுத்துவது பெருமையா? அல்லது அக்கறையோடு விமர்சிப்பது பெருமையா?
ஐயர் மந்திரம் ஓதும்போது மணப்பெண்ணை இந்திரனுக்குச் சந்திரனுக்கு மற்றும் இருக்கின்ற தேவாதி தேவர்களுக்கெல்லாம் மணமுடித்துவிட்டு, இறுதியாகத் தான் மணப்பதாக சமக்கிருதத்தில் ஐயர் சொல்லச் சொல்வதைச் சொல்கிறார். இதை ஐயர் தமிழில் சொல்லிக் கொடுத்தால் ரகளையாகிவிடாதா?
இத்தகைய மந்திரங்கள் ஓதப்படக்கூடாது என்பது எங்கள் கருத்தல்ல; அதை உங்களுடைய திருமணங்களில் வைத்துக்கொள்ளுங்கள்; எந்த மறுப்பும் இல்லை; அது உங்கள் உரிமை; அதை ஏன் எங்கள் தலையில் சுமத்துகிறீர்கள் என்பதுதான் கேள்வி.
இந்து என்ற சொல்லே ஒரு நூற்றாண்டுக்குச் சற்று முன்னர்தானே நடைமுறைக்கே வந்தது.
அப்படியானால் அதற்கு முன்பு நாங்களெல்லாம் என்னவாக இருந்தோம்? எங்களுக்கெல்லாம் மதமே இல்லையா?
சிவஞான போதம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், திருமந்திரம், தேவாரம், திருவாசகம் ஆகியவை எங்களுடைய மத நூல்களாக அறியப்பட்டிருக்கின்றன. இந்த நூல்கள் எதிலும் இந்து என்னும் சொல்லே இல்லை. வள்ளலாருக்கே அப்படி ஒரு சொல் இருப்பதே தெரியாது. அப்படியானால் வள்ளலாரின் மதம் என்ன? அதுதான் எங்கள் மதம்!
திருநாவுக்கரசரே "ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்' என்று இருவரையும் பிரித்துப் பேசுகிறாரே! எல்லாரையும் சேர்த்து ஒரு அவியலாக்குகிற பழக்கம் விவேகானந்தர் காலத்தில்தான் ஏற்பட்டது. அது வெள்ளைக்காரன் காலம். வெள்ளைக்காரன் மொத்தமாக இரண்டாகப் பகுத்துவிட்டான்; இந்து, முசுலிம் என்று.
வடநாட்டில் மெய்கண்டார், திருமூலர், திருநாவுக்கரசரெல்லாம் பிறக்காத காரணத்தாலும், வடநாட்டுப் பார்ப்பனரல்லாதார் தனியான மெய்யியல் கோட்பாட்டைப் பெற்றிருக்காத காரணத்தாலும், பார்ப்பனரல்லாதாராகக் "காயத்தா வகுப்பில்' பிறந்த விவேகானந்தர் பார்ப்பனர்களுக்காக ஆதிசங்கரர் வகுத்துக் கொடுத்த அத்வைதக் கோட்பாட்டைத் தங்களின் கோட்பாடாக வரித்துக்கொண்டு, அமெரிக்கா வரை சென்று பரப்பிவிட்டு வந்துவிட்டார். அதன் பின்னர் எல்லாரையும் சேர்த்து ஒரே உருண்டையாகப் பிடிக்கிற பழக்கத்தை, வெள்ளைக்காரன் "என்ன செய்கிறோம்' என்று புரியாமலேயே செய்து முடித்துவிட்டான்.
நம்முடைய திருமணங்களில், நம்முடைய புதுமனை புகுவிழாக்களில், நம்முடைய சாவில், பிறப்பில் அனைத்திலுமே பொருள் புரியாத வேற்றுமொழி மந்திரங்கள் கோலோச்சுகின்றன.
நாம் நம்முடைய சமயத்தின் தனித்தன்மையை இழந்தோம். நம்முடைய தமிழ் கேவலமாக எல்லா நிலைகளிலுமிருந்து வெளியேற்றப்பட்டது.
செட்டிநாட்டில் "இராங்கியம்' என்னும் ஓர் ஊர் உண்டு. அங்கே அகன்று விரிந்த "கறுப்பர் கோயில்' உண்டு. மிக வீச்சான தெய்வம்; கையில் அரிவாள் வேறு!
என்னுடைய தாயார் "கருப்பையா' என்று பெருங்குரலில் அழைத்தால் (அது இராங்கியத்திற்குக் கேட்க வேண்டாமா?), அவர்கள் படுக்கப்போகிறார்கள் என்று பொருள். அவர்களுக்குக் கறுப்பர்தான் ஒருநாள் முடிவிலான இறுதிச் சிந்தனை.
அந்தக் குலதெய்வத்தின் பெயரைத்தான் எனக்குச் சூட்டினார்கள்.
அண்மையில் கறுப்பருக்கு குடநீராட்டு விழா நடந்தது. அந்த விழாவுக்குப் பேச அழைத்தார்கள். கறுப்பர் நம்முடைய 'டங்ற் ஞ்ர்க்' ஆயிற்றே; ஆகவே போனேன்.
அந்தக் கோயிலின் பூசாரிகள் வேளாளர்கள்; பச்சைத் தமிழர்கள்!
குடநீராட்டு விழா முழுவதிலும் ஒரே சமக்கிருத நெடி. கறுப்பருக்கு பூசை நடக்கிறது; பூசாரிகள் சமக்கிருதத்தில் அருச்சனை செய்கிறார்கள். அந்த உச்சரிப்பைப் பார்ப்பனர்கள் கேட்டிருந்தால், திட்டமிட்டுச் சமக்கிருதத்தை அழிக்கின்ற சதி இது என்று பூசாரிகளின் மீது பாய்ந்திருப்பார்கள்.
நான், தலைமைப் பூசாரி, அறங்காவலர்கள் ஆகியோர் மேடையில் இருந்தோம்.
நான் பேசும்போது சொன்னேன். "பூசாரிக்கும் சமக்கிருதம் தெரியாது; கருப்பருக்கும் தெரியாது; அப்புறம் எதற்கு இந்த வேற்றுமொழி முழக்கம்?'
பேசி முடித்தவுடன் ஓர் அறங்காவலர், ""ஏம்பா... பூசாரிக்குச் சமக்கிருதம் தெரியாது என்று சொல்; அது சரிதான். கறுப்பருக்கும் தெரியாது என்று சொல்கிறாயே நியாயமா?' என்று கேட்டார்.
"கறுப்பர் கோயிலின் சிறப்பே ஆடு வெட்டல்தான். பல ஆடுகள் வெட்டப்பட்டு, அவற்றின் ஈரல், மாங்காய், தலைக்கறி, விலாக்கறி என்று இவையெல்லாம் குழம்பில் போடப்பட்டு கறுப்பருக்குப் படைக்கப்படுகின்றன. கறுப்பரின் விருப்ப உணவே அதுதான்' என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு "கறுப்பரும் ஓர் இந்துக் கடவுள்தான்; அவருக்குச் சமக்கிருத மந்திரம் சொன்னால் என்ன?' என அவர் கேட்டார்.
"கறுப்பர் ஓர் இந்துக் கடவுள் என்றால் பிராமணர்கள் இங்கு வழிபாடு செய்ய வருவதில்லையே ஏன்?' என நான் கேட்டேன்.
"இது ஆடு வெட்டுகிற கோயில்; மாமிசம் சாப்பிடாதவர்கள் வரமாட்டார்கள்தானே!'
"நானும்தான் மாமிசம் சாப்பிடுவதில்லை; முழுச் சைவம்; என்னுடைய துணைவியார் பட்டுப்பூச்சிகளைக் கொன்று நெய்யப்படுகிற பட்டுச்சேலைகளைக் கூட கட்டுவதில்லை; எளிய நூல் சேலைகளைத்தான் நாற்பது ஆண்டுகளாகக் கட்டுகிறார்கள். நாங்கள் இருவரும் கறுப்பர் கோயிலுக்கு வருகிறோமே! ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை தீர்மானமாகக் கறுப்பர் ஓர் சூத்திரக் கடவுள்தான்.'
அறங்காவலர் யோசனையில் ஆழ்ந்தார் ; தமிழன் எப்போதும் தாமதமாகத்தான் யோசிப்பான்.
வேதகால நாகரிகத்தின் தொடர்ச்சி ஆரிய மதம்; அதைத்தான் இப்போது இந்து மதம் என்கிறார்கள்.
உங்களுடைய மந்திரங்களுக்கு உங்களுடைய திருமணங்களில் என்ன வேலை என்று என்றுமே கேட்டதில்லை. எங்களுடைய திருமணங்களில் அதற்கு என்ன வேலை என்றுதான் கேட்கிறோம்.
"குனி; குதிரை ஏறவேண்டும்' என்கிறார்கள்.
"முடியாது' என்று சொன்னால், கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
குதிரை தெரிவிக்க வேண்டிய கண்டனத்தை,
அதன்மீது ஏறுகிறவன் தெரிவிக்கிறானே...
என்ன கொடுமையடா...!
(தொடரும்)