"நீ யோக்கியனுமில்லை, உனக்குப் பூணூலுமில்லை'

நித்தியானந்தா என்பவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். மிக இளவயதில் பெரும் பொருளில், பெரும் வசதிகளில் புரள, என்ன செய்வது என ஆழமாக யோசிக்கிறார்.

எந்த அடிப்படையும் இல்லாமல் பல கோடிகளுக்கு உடைமையாளன் ஆவது என்றால் அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அரசியலில் நுழைவது, இன்னொன்று சாமியாராவது. இரண்டிலும் அடையாளங்கள் முக்கியம். இரண்டிலும் தில்லுமுல்லுகள் முக்கியம். இல்லாத ஒன்றை இருப்பது போல் பாவிப்பதும், இருக்கின்ற ஒன்றை இல்லவே இல்லை என்று சாதிப்பதும் முக்கியம். இரண்டுக்கும் பொய்தான் மூலதனம்.

நிகழ்காலத் தலைவர்கள் பலருக்கு இணையான திறமைகள் உடைய நித்தியானந்தா அரசியலுக்கு வந்தாலும் வெற்றி பெற்றிருப்பார்.

Advertisment

ஆனால் அவர் ஏனோ சாமியார் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். அரசியலில் வைப்பாட்டிகளை இரகசியமாக வைத்துக் கொள்ள வேண் டும். ஆசிரம வாழ்க்கையில் அந்தப் பாடுகள் இல்லை. நேரடியாகவே வெளிப்படையாகவே வைத்துக்கொள்ள லாம். இங்கே அவர்களுக்கு சீடப் பெண்கள் என்று பெயர்.

நம்முடைய மெய்யியல் கோட்பாடுகளில் தாந்திரிகம் என்னும் ஒரு வகை உண்டு.

அந்த மதப் பிரிவில் நிருவாணமான பெண்ணே வழிபடு தெய்வம்.

Advertisment

மாந்தனின் சிக்கலே மனம்தான். மனமற்ற நிலையே சமாதி நிலை. மனமற்ற நிலையை (ஙண்ய்க்ப்ங்ள்ள் ள்ற்ஹற்ங்) அடைவது எளிதில்லை.

பெண்ணுக்குச் சமநிலை வேண்டும் (ஊவ்ன்ஹப் ள்ற்ஹற்ன்ள்) என்பது வரைதான் ஐரோப்பியர்கள் சென்றார்கள். நம்மவர்கள் பெண்ணைத் தெய்வ நிலைக்குத் தூக்கினார்கள். தாந்திரிகத்தில் பெண்ணை நிருவாணமாக்கி அவளைச் சக்தியாக்கிப் பூசை செய்தார்கள்.

ஆண்-பெண் கூடுகையில் உச்சநிலையில் ஏற்படும் அதிர்வின்பத்தில், அந்தச் சில நொடிகளில் மனம் மறைந்து விடுகிறது. எண்ணங்களற்ற நிலை (பட்ர்ன்ஞ்ட்ற்ப்ங்ள்ள் ள்ற்ஹற்ங்) ஏற்படுகிறது.

முனிவர்கள், ஞானிகள், யோகிகள் பெரும்பாடு பட்டு அடைகின்ற அந்த நிலையை வண்டி இழுக்கிற வரதப்பனும், மூட்டை தூக்குகிற முனியப்பனும் எந்தப் பாடும் இல்லாமல் எளிதாக அடைய முடியுமென்றால், எதற்குப் பிற கடினமான வழிகள் என்று தாந்திரிக மெய்யியல் பள்ளி வினவியது.

ஒரு கட்டத்தில் இந்த மெய்யியல் கோட்பாட்டுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. அதனுடைய செல்வாக்கு ஓங்கி இருந்த காலத் தில்தான் வடக்கே ஆண்-பெண் சேர்க்கைச் சிற்பங்களும், நிருவாணப் பெண் சிற்பங்களும் பெரிய அளவில் வடிக்கப்பட்டு, கசுராகோ (ந்ஹத்ன்ழ்ஹட்ர்) என்னும் சிற்பக் கோயிலாக இன்றும் மிகப் புகழோடு விளங்கி வருகிறது.

பிறகு மக்கள் நடுவில் அந்தப் பள்ளி மங்கிவிட்டாலும், அதனுடைய செல்வாக்கு மெய்யியல் படிப்போரிடம் தொடர்ந்து நீடித்து வந்தது.

பாரதியிடம் கூட அது செல்வாக்குப் பெற்றிருந்திருக்க வேண்டும்.

""காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்,

கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்''.

இந்த வரிகள் பெண்ணைத் தெய்வமாக, சக்தியாகப் பாரதி பார்த்த நிலை. கடவுள் நிலை எய்தல் அவள் வழியாகவே நிகழ முடியும் என்று பாரதி கருதுவது அந்த மெய்யியலின் தாக்கத்தாலேதான்.

இதனால் இந்த மதத்திற்குச் சக்தி மதமென்றும், சாகித மதமென்றும் பெயர்.

பிற்காலங்களில் இதைப் போதிப்பாரும் கடைப்பிடிப்பாரும் குறைந்து விட்டனர்.

இந்த நிலையில் ஓசோ இரசனீசு அதைக் கையிலெடுத்தார். அவர் பெற்ற அளப்பரிய வெற்றி பலரை இதுபோன்ற ஆசிரமங்கள் அமைக்கத் தூண்டின.

ஆனால் செய்கின்ற வேலைக்கு மாறாகச் சந்நியாசி வேடம் பூண்டார் நித்தியானந்தா. சடாமுடி வளர்த்துக் கொண்டார். காவியுடை அணிந்து கொண்டார். நெற்றி நிறையத் திருநீறு, குங்குமம் என்று பெண்ணிலிருந்து விலகிய நிலை போல் காட்டிக் கொண்டார்.

வணக்கத்திற்குரிய நிலையில், இருக்க வேண்டுமென்று எண்ணும் ஒருவர்க்குத் தாந்திரிக மதம் உதவாது.

pp

ஆகவே நித்தியானந்தாவும் கோலத்தால் சந்நியாசியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் அவருடைய அடிப்படைத் தேவையோ சீடப் பெண்கள்தாம். பெண்ணை விலக்கி வைத்தால் அவள் எப்படி முக்தி அடைவாள் என்று கேட்டு, அவர்களை முக்தி அடையச் செய்வதற்காகவே ஆசிரமம் வைத்தவர் நித்தியானந்தா.

குறிப்பாக நடிகைகளை முக்தி அடையச் செய்வதைப் பெருநோக்கமாகக் கொண்டார் நித்தியானந்தா.

முக்தி நாட்டம் கொண்ட நடிகைகள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் மையங் கொண்டனர். பணத்திற்குப் பணம்; வசதிக்கு வசதி; முக்திக்கு முக்தி.

இதற்கு நடுவில் மதுரை ஆதீனத்திடம் ரூபாய் ஐந்து கோடி கொடுத்துத் தனக்கு இளவரசுப் பட்டம் கட்டச் சொன்னார் நித்தியானந்தா.

நம்முடைய அரசியல் தலைவர்கள் பெரும் பணம் பெற்றுக் கொண்டு, கல்வி நிறுவன அதிபர்களுக்குத் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை விற்று விடுவது போல, மடங்களின் இளவரசுப் பொறுப்புகளும் விலை போயின.

இளவரசுப் பட்டத்திற்கு ஐந்து கோடி விலை என்றால், அதனுடைய பொருள், மதுரை ஆதீனத்தின் சொத்துகளை மலிவாக வாங்கி விட்டார் நித்தியானந்தா என்று பொருள்.

ஆனால் மதுரை ஆதீனமும் சாமானியப் பட்டவரில்லை. ஐந்து கோடிக்கு இளவரசுப் பொறுப்பைப் பண்டமாற்றுச் செய்து விட்டு, அந்தப் பொறுப்பைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டு அவரை மடத்தை விட்டு விரட்டி விட்டார். கில்லாடிக்குக் கில்லாடி. பல பேரை ஏப்பம் விட்ட நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் ஏப்பம் விட்டு விட்டார்.

சைவ மடாதிபதியாக முயன்று தோற்றுப் போன நித்தியானந்தா, பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் பல குற்ற வழக்குகளுக்கு ஆளாகி, குசராத் வரை சென்று, அங்கே இரண்டு இளம் பெண்களைக் கைப்பற்றிப் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்று அந்தப் பெண்களின் தந்தையால் புகார் கொடுக்கப்பட்டு, குசராத் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்க, இடம் பெயர்ந்து விட்டார் நித்தியானந்தா.

"சடங்கான பெண்ணைத் தாசி வீட்டில் அடைக்கலமாக வைப்பார்களா' என்றொரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு. குசராத்காரருக்குத் தமிழ்ப் பழமொழி தெரியாதுதானே.

நம்முடைய நாட்டில் "மொல்லமாறித்தனத்தை'த் திறம்படச் செய்பவனை இன்டர்நேசனல் கே.டி. என்பார்கள்.

எல்லைகள் தாண்டிய புகழ் நித்தியானந்தாவுக்கு. அவர் இப்போது தென் அமெரிக்க நாடான ஈக்விடார் சென்று விட்டார். அங்கே ஒரு தனித்தீவையும் விலைக்கு வாங்கி விட்டார். அந்தத் தீவுக்குக் கைலாசம் எனப் பெயரிட்டு விட்டார். அதற்குத் தனிக் கொடியாம். அதற்குத் தனி அரசாம். இவர் உண்டாக்கிய கொடியில் லிங்கமும் நந்தியும் இடம் பெற்றிருக்குமாம்.

அந்தத் தீவைப் பராமரிக்க இராணுவம், நிதி, கல்வி, வர்த்தகம் என்னும் பல துறைகள் இருக்குமாம்.

கிறித்துவ மதத்தின் மையமாக ரோமாபுரி இருப்பது போல, அதற்குத் தனி நாணயத்தாள் (currency) உள்ளிட்ட தனி நாட்டுக்குரிய எல்லா அம்சங்களும் பல நூற்றாண்டுகளாக இருப்பது போல், உலகக் கிறித்துவர்களுக்குப் போப் தலைவராக இருப்பது போல, "இந்துக்களின் போப்பாக' முயல்கிறார் நித்தியானந்தா.

முதலில் இந்து மதம் என்றொரு மதமே கிடையாது. அப்படி ஒரு மதத்தின் பேரைச் சொன்னால் நமக்குச் சற்று முன் வாழ்ந்த கருணையே வடிவான வள்ளலாருக்கே தெரியாது.

மேலும் நித்தியானந்தா சனாதன இந்து தருமத்தைப் பாதுகாக்கப் போகிறாராம். சனாதனமெல்லாம் வேதத் தொடர்புடையது. வேதம் ஆரியத் தொடர்புடையது.

அவர் வெறும் முதுகோடு இருக்கிறார். பூணூல் இல்லாதவனெல்லாம் சனாதனம் பேச முடியாது.

வள்ளலாரைப் போல் இரக்கமே வடிவான பெருமான்களைத் திராவிடர்கள்தாம் பின்பற்றினார்கள். பூணூல் அணிந்தவர்களுக்கு வள்ளலாரும் ஒரு சூத்திரர்தான்.

நீர் யோக்கியருமில்லை, உமக்குப் பூணூலுமில்லை.

(தொடரும்)