Skip to main content

வந்தசெய்தி! விசாரித்த உண்மை!-

Published on 16/04/2018 | Edited on 22/04/2018
வந்தசெய்தி: துரைமுருகனுக்கு எதிராக மல்லுக்கட்டும் தி.மு.க. மா.செ., தொடரும் வாட்ஸ்-அப் வார்.விசாரித்த உண்மை: மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கம் என காட்டிக்கொள்ளும் வேலூர் மத்திய மா.செ. நந்தகுமார், சீனியரான கிழக்கு மா.செ. ராணிப்பேட்டை காந்தியை ஓரம்கட்டினார். போகப்போக தலைமைக்கழக முதன்மைச் செயலாளர... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமன்னா, காஜலை பார்த்து ஏமாந்துட்டோம்” - நிதி நிறுவனத்திடம் பணத்தை ஏமாந்த மக்கள்

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

"We were deceived by watching Tamanna Kajal"; people who borrowed money from the company

 

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி சுமார் ரூபாய் 200 கோடிக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

 

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளைத் துவங்கி தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 30% வரை வட்டி ஈட்டித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணமோசடியில் ஈடுபட்டது கடந்த சில தினங்களுக்கு முன் தெரியவந்தது. இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ரூசோ கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், இதேபோல் ஹேஷ்பே என்ற நிறுவனம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.எல்.எம் அடிப்படையில் ஆட்களைச் சேர்த்துவிட்டு கமிஷன் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 

மேலும், 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 300 நாட்களில் 3 லட்ச ரூபாயாக பணம் அதிகரிக்கும் என அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, நடிகைகள் காஜல், தமன்னா போன்றோரை அழைத்து விளம்பரம் செய்ததன் அடிப்படையில் நம்பி பணத்தை முதலீடு செய்ததாகவும் பணத்தை இழந்தவர்கள் பரிதாபமாகத் தெரிவிக்கின்றனர்.