""நாங்கள் இறந்துபோனால் மயானம்கூட எங்களுக்கு இல்லை!''’என்ற முறையீட்டுடன் வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப் போராட்டம் மூலமும், நக்கீரனில் வெளிவந்த செய்தியின் மூலமும் நீதி கிடைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியிலிருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூவலை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். அதே கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான 28 சென்ட் மயானத்தை, சென்னை போயஸ் கார்டனைச் சேர்ந்த செல்வந்தரான முனிருதீன் சில வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக பூவலை கிராமத்தைச் சேர்ந்த இருளர் குடியிருப்பு, பட்டியல் சமூகத்தை சேர்ந்த ரவி, நம்மிடம் பேசினார். ""நாங்க சுமார் 300 பேர் இந்த பகுதியில காலாகாலமா குடியிருந்து வர்றோம். எங்க முன்னோர்கள் இறந்த பிறகு, இதே பகுதியில இருக்கிற இருளர் சுடுகாட்டில் காலகாலமா புதைச்சும், எரிச்சும் இறுதிச் சடங்கு செய்வோம். அந்த இடத்தை திடீர்னு சென்னையைச் சேர்ந்த ஒருத்தர் அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து, சுற்றுச்சுவர் எழுப்பி வேலி போட்டு... உள்ளே போகாதபடி தடுத்துட்டாரு. இந்த நிலையில கடந்த 2020-ஆம் வருஷம், என்னோட அப்பா முத்தேளி இறந்துபோயிட்டாரு அவரோட பிணத்தைப் புதைக்கவே உள்ளவிடல. அப்புறம் ஊர்க்காரங்க ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தி புதைச்சாங்க. எங்க முன்னோர்களோட சமாதியெல்லாம் டிராக்டர் ஓட்டி தரைமட்டமாக்கிட்டு, திரும்பவும் வேலி போட்டு அடைச்சுட்டாரு. இதுதொடர்பா தமிழக விவசாயி சங்க நிர்வாகி தோழர் அருள் உதவியை நாடினோம்''’என்றார்.
தோழர் அருள் மேற்கொண்டு பேசினார். ""சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் மயானத்தை மறித்து நீச்சல் குளம், சுற்றுச்சுவர், சொகுசுப் பங்களா என்று கட்டி வைத்திருந்தனர். இந்த நிலம் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரம் கேட்டிருந்தோம். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் 28 சென்ட் நிலம் இருளர் மக்களின் சுடுகாடு எனவும், அதற்கு வரும் பாதை... அதனைச் சுற்றியுள்ள 4.70 ஏக்கர் அனாதையாக விடப்பட்ட நிலம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலம் தொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் வருவாய்த் துறை சார்பில் பூவலை கிராமம் இருளர் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டது. ஆனால் அதேவேளையில் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த முத்தேளியை அவர் களுடைய மயானத்தில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதிக்காத
முனிருதீன் அத்துமீறலைத் தட்டிக் கேட்டு ஊர்ப் பொது மக்களுடன் போராட்டம் நடத்தியதால் முனி ரத்தினம், பிரபாகரன், அருள் ஆகிய எங்கள் மூவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு 36 நாள் சிறைக்குச் சென் றோம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஊராட்சிமன்ற பெண் தலைவர் உட்பட 20 பேர் மீது முனிருதீனின் உறவினர் மூலம் பொய் புகார் கொடுத்து, பொய் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
ஒடுக்கப்பட்ட சமுதாயமான இருளர் மக்களின் நீதிக்காகவும் எங்கள் ஊர் பொது மக்களுக்காகவும் வாதாடிய வழக்கறிஞர் கள் சுபாஷ், சாருமதி, பரணி, வெற்றி ஆகி யோர் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி னார்கள், அதேபோல இந்தத் தகவலை நக்கீரனில் வெளியிட்டு எங்க ளுக்கும், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பட்டிய லின ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை வெளியே கொண்டு வந்ததற்கு நக்கீரனுக்கும் நன்றி.
இந்தச் செய்தி வெளியானபின் இருளர் மக்களின் மயானத்திற்கு சுமார் ரூ. 7 லட்சம் செலவில் சுற்றுச் சுவர், 3.68 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான 5 லட்சம் செல வில் எரிமேடை மற்றும் சிமெண்ட் சாலை. 7 லட்சம் செலவில் தரமான தார்ச்சாலை போடப் பட்டுள்ளது. இது மக்களின் போராட்டம் மட்டுமல்ல. வழக்கறிஞர்கள், நக்கீரன் செய்திப் பிரிவும் எங்களுடன் துணை நின்றார்கள். மேலும், எங்கள் போராட்டத்திற்கு துணை நின்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் எம்.பி. சுப்புராயன், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, தமிழக விவசாய சங்க தலைவர் மாசிலாமணி ஆகியோர் எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்துசெய்ய முதல்வரை நேரில் சென்று சந்தித்து மனு அளித்துள்ளனர். அவர் களுக்கும் கிராமம் நன்றிக்கடன் பட்டுள்ளது'' என்றார்.
-அரவிந்த்