"ஹலோ தலைவரே, தமிழக சட்டப்பேரவை விரைவில் கூடுவதற்கான அறிகுறிகள் தெரியுது.''”
"ஆமாம்பா, ஆறு மாதத்திற்கு ஒரு ஒருமுறை பேரவையைக் கூட்டனும்ன்னு விதிமுறை இருக்கே?'' ”
"உண்மைதாங்க தலைவரே, கடைசியாக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தது. அதன்படி, அடுத்த கூட்டத்தை நவம்பர் 10-ஆம் தேதிக்குள் கூட்டியாகணும். நவம்பர்ல முதல்வர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் இருக்கார். அதனால், அதற்கு முன்னதாகவே கூட்டத்தை நடத்திவிடலாம் என்பது அவரது எண்ணமாம். அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி வருவதால், அதையும் அனுசரித்து கூட்டத்தை முன்னதாகவே நடத்திடலாம்ன்னு அதிகாரிகளிடம் அவர் சொல்லி இருக்கிறாராம். அதிகபட்சம் 5 நாட்கள் வரை கூட்டம் நடக்கலாம் என்று கோட்டை வட்டாரம் சொல்லுது.'' ”
"இந்தக் கூட்டத்தில் ஏதேனும் சிறப்புத் தீர்மானம் வரப்போகுதா?'' ”
"ஜெ.வின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை ஆகியவை இந்தக் கூட்டத் தொடரின்போது பேரவையில் தாக்கல் செய்யப் படும்ன்னு தெரியுது. இவற்றில் ஜெ.’ மரணம் மற் றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ரிப்போர்ட்டு கள் சமீபத்தில் கேபினெட் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இவற்றின் மீது சட்ட வல்லுநர்களின் கருத்துகளை அறிந்து, அந்த அறிக்கை யுடன் பேரவையில் அறிக்கைகளை வைக்கலாம்ன்னு அப்ப முடிவு எடுக்கப் பட்டது. குறிப்பாக, ஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையம், சசிகலா, சிவக்குமார், விஜயபாஸ்கர், ராமமோகனராவ் ஆகியோர் மீது விசாரணை நடத்தப் பரிந்துரை செய்திருக்கிறது. இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் அரசு ஆலோ சித்ததாகத் தெரியவில்லை'' ”
"ஏன்?'' ”
"ஏனெனில் துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையமும், சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்திருக்கிறது. இப்போது இருக்கும் தி.மு.க. அரசோ, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பாத அரசு. அதனால், ஒரு ஆணையத்தின் பரிந்துரை களை ஏற்பதும், மற்றொரு ஆணையத் தின் பரிந்துரைகளை நிராகரிப்பதுமான முடிவுகளை தி.மு.க. அரசு எடுக்க வாய்ப்பில்லை. மேலும், ராமமோகன்ராவ் போன்ற அதிகாரிகளுக்கு எதிராக நட வடிக்கை எடுத்தால், அவர் அன்றைக்கு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக ளின் பல்வேறு விவகாரங்களை பொது வெளியில் பேசலாம். அது தி.மு.க. அரசுக்கு எதிராகவும் போக வாய்ப் புண்டு. அதேபோல் ஜெ.’விவகாரத்தில், சசிகலா மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட்டால், அது, சாதிரீதியாக சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. அதனால், பேரவைக்குத் தெரிவிக்கவேண்டும் என்கிற அள வில் மட்டுமே இந்த அறிக்கை கள், பேரவை யில் வைக்கப் படும்னு சொல்லப் படுது. பெருசா நடவடிக்கைகள் இருக்காது.'' ”
"சட்டமன்றம் கூடும்போது அ.தி.மு.க. பஞ்சாயத்தும் அங்கே வெடிக்குமேப்பா?'' ”
"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செய லாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப் பட்டதை அடுத்து பேரவையின் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்கி இருக்கிறார் எடப் பாடி. சட்டமன்ற அ.தி.மு.க.வின் புதிய துணைத் தலைவராக உதயகுமாரை நியமித்திருக்கிறார். இந்த நீக்கத்தையும் புதிய நியமனத்தையும் ஏற்குமாறு சபாநாயகர் அப்பாவுவிடம் ஏற்கனவே கடிதம் கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி. "இதை ஏற்கக் கூடாது'ன்னு ஓ.பி.எஸ்.ஸும் கடிதம் கொடுத்துள்ளார். இதில் என்ன முடிவு வரும் என பேரவை கூடும்போதுதான் தெரியும். அதேபோல் சட்டமன்றக் கட்சியின் துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ்.ஸை நீக்க, அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி எடுத்து வருகிறார்.''
"ஆனாலும் ஓ.பி.எஸ். இதுக்காக கொஞ்சமும் அலட்டிக்கலையேப்பா?'' ”
"அதுக்குக் கராணம் என்னன்னா, லோக்சபாவில் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே அ.தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப் பட்டுவிட்டதால், ரவீந்திரநாத்தை, அ.தி.மு.க. உறுப்பினராக அங்கீகரிக்க வேண்டாம் என்றும் அவரது அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் எடப்பாடித் தரப்பில் இருந்து கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்காமல், அ.தி.மு.க. உறுப்பினராகவே ரவீந்திரநாத்தை தொடர வைத்துள்ளார் சபாநாயகர். அதே பாணியில்தான் இங்குள்ள சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு யோசிப் பார்னு ஓ.பி.எஸ். நம்புகிறார். அதனால் தனது துணைத் தலைவர் பதவி பறிபோகாது என்று அவர் நினைக்கிறார். அதனால்தான் அவர் கூலாக இருக்கிறாராம்.''
"சரிப்பா, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்காரே?'' ”
"இதுக்கு பல்வேறு காரணங்கள் பலராலும் சொல்லப்பட்டாலும், சுப்புலட்சுமி தரப்பைப் பொறுத்த வரை ராஜினாமாவில் எந்த உள்நோக்கமும் இல்லை என்கிறது. கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், தனது உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருக் கிறார். இந்த நிலையில், சுப்புலட்சுமிக்கு பதிலாக யார் துணைப் பொதுச்செயலாளராக அமரப்போகிறார் என்ற கேள்வி தி.மு.க.வில் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. தி.மு.க.வில் மா.செ.க்கள் தேர்தல் முடிந்து அடுத்த மாதம் நடக்கும் பொதுக்குழுவில் தான், புதிய துணைப் பொதுச்செயலாளர் யார் என்பது முடிவாகும். அதுவரை, சுப்புலட்சுமியின் ராஜினாமாவை தி.முக. ஏற்காது. அவரது விலகலை ஏற்பதாக கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில், அவரே அப்பதவியில் தொடர்வார் என்கிறார்கள்.''
"சுப்புலட்சுமி நாற்காலியில் அடுத்து அமரப்போவது யாராம்?”
"அந்தப் பதவிக்கு நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயர் பரபரப்பாக இப்போதே அடிபடத் தொடங்கி இருக்குது. தூத்துக்குடி எம்.பி. மற்றும் மகளிர் அணி செயலாளர் என்பதைத் தாண்டி, கனிமொழிக்கு கட்சியில் எந்தவித முக்கிய பொறுப்பும் இல்லாமல் இருக்கிறது. அதனால், துணைப் பொதுச் செயலாளராக கனிமொழியை நியமிக்க வேண்டும் என்று மகளிர் அணியினரும் அவரது ஆதர வாளர்களும் கோரிக்கை வைக்கிறாங்க. கனிமொழிக்கும் இதில் விருப்பம் என்றாலும் அவராக, தலைமையிடம் பதவி கேட்கமாட்டார் என்கிறார்கள். தென் மாவட்டங்களில் தி.மு.க.வை வளர்க்க கனிமொழிக்கு இந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும் என்பதே அவர் தரப்பினரின் கருத்து. இந்த நிலையில், கனிமொழிக்கு பதவி கொடுக்க தலைமை முடிவெடுத்தால் அதற்கு உள்வட்டத்தில் எந்தளவு ஆதரவு கிடைக்கும் என்ற பேச்சும் அறிவாலயத்தில் எதிரொலிக்குது.'' ”
"சென்னை தலைமைச் செயலக பணி யாளர் சங்கத்தின் தேர்தல், இந்தமுறை பரபரப்பில் தூள் பரத்துதே?”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசின் தலைமைச் செயலக சங்கத்தின் தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடக்குது. இது குறித்து கடந்த நக்கீரன் இதழில் விரிவாக எழுதியிருந்தோம். தலைமைச் செயலக சங்கத்தின் சிட்டிங் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி தலைமையிலான வின்னர்ஸ் அணியை எதிர்த்து டீம் அணி, அகரம் அணி, அச்சீவர்ஸ் அணி ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. இவற்றில் வின்னர்ஸ் அணிக்கும் சார்புச் செயலாளர் டாக்டர் தமிழ்ஜோதி தலைமையிலான டீம் அணிக்கும்தான் கடும் ஃபைட். இந்த டீம் அணியில் செயலாளர் பதவிக்கு வணிக வரித்துறையில் பணிபுரியும் மு.சதீஷ்குமாரும், இணைச் செயலாளர் (பொது) பதவிக்கு செய்தித்துறையில் பணிபுரியும் கவிஞர் சு.சுசித்ராவும் பொருளாளர் பதவிக்கு சு.சண்முகநாதனும் களமிறங்கி யுள்ளனர். தலைமைச் செயலக சங்கத்தின் நிர்வாகிகளாக இதுவரை பெண்கள் அதிகம் இருந்ததில்லை என்பதால், டீம் அணி, பெண் பணியாளர்களையும் ஈர்த்து வருகிறது.''
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின், ஆலோசனைக் கூட்டம் நடத்தியதையும், அப்போது அமைச்சர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று அவர் எச்சரித்தது குறித்தும் ஏற்கனவே நாம் பேசி இருக்கோம், இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை அமைச்சர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்களாம். இந்த நிலையில், அமைச்சர்களுக்கு தோதான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றியமைக்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம். அதனால் விரைவில் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் இருக்கலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.''
___________
இறுதிச் சுற்று!
பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் கைது! எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
செப்டம்பர் 22, வியாழன் காலை சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பி.எஃப்.ஐ. தலைவர் சலாம் வீடு உட்பட தமிழகத்தின் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உட்பட பல்வேறு பகுதிகளிலும் பி.எஃப்.ஐ. அலுவலகங்களில் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளைக் கைது செய்துள்ளனர். இந்த சோதனைக்குக் கண்டனம் தெரி வித்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாளர் களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-மணி