"ஹலோ தலைவரே, தமிழக பா.ஜ.க.வில் கலகக்குரல் அதிகமாகக் கேட்குது.''”
"ஆமாம்பா, மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது சர்ச்சை சூறாவளி சுழன்றடிக்கிதே?”
"ஆமாங்க தலைவரே, இப்ப அவர் மீது சாதி, மதம் சார்ந்த குற்றச்சாட்டு கள் கிளம்பியிருக்கு. குறிப்பாக, தமிழக பா.ஜ.க.வை அவர் கவுண்டர்களுக்கான கட்சியாக நடத்திக்கிட்டு இருக்கார் என்றும், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ. சரஸ்வதி, கோவை ஜி.நாகராஜ், முருகானந்தம் ஆகிய கொங்கு வேளாள சமூகப் பிரமுகர்களுக்கு மட்டும்தான் அவர் முக்கியத்துவம் தருகிறார் என்றும், மற்ற சமூகத்தினரை அவர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்றும் பெரும்பாலானோர் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.''
"மதுரை மேயர் கேண்டிடேட் பத்திப் பேசியும் அண்ணாமலை இன்னொரு சிக்கல்ல மாட்டிக்கிட்டாரே?''”
"ஆமாங்க தலைவரே, மதுரையில் தேர்தல் பிரச்சாரத் தில் பேசிய அண்ணாமலை, இந்த மாநகராட்சியில் நாங்கள் வெற்றி பெற்றால் ஒரு இஸ்லாமியரைத்தான் மேயராக்கு வோம்ன்னு சொல்லி இருக்கார். இதைக்கேட்டு அங்குள்ள பா.ஜ.க.வினர் கொந்தளித்துப் போய்விட்டார்கள். அதே போல் இஸ்லாமியத் தரப்பும், யாரை ஏமாற்ற எங்களைப் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்னு அவருக்கு எதிராக் கோபப்படறாங்க. மதுரையில் 10 வார்டுகளில் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவர் களாக இருக்கிறார்கள். அவர்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள். சௌராஷ்ட்ரா சமூகத்தினரை மேயாராக்குவோம்னு அண்ணாமலை சொல்லியிருந்தால் குறைந்தது 5 வார்டுகளையாவது பா.ஜ.க. ஜெயிக்குமேன்னு அவங்க தரப்பும் புலம்புது.''”
"கன்னட நடிகர் ராஜ்குமார் மகன் சிவராஜ்குமார், தன் மனைவியுடன் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருக்காரே? ஏதாவது அரசியல் மூவ்வா?''“
"முதல்வரை, ராஜ்குமார் மகன் சந்தித்தது பற்றி நானும் விசாரித்தேங்க தலைவரே... இதில் அரசியல் மூவ் எதுவும் கிடையாதாம். ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாட்டோடு நெருக்கம் உண்டு. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெ. இப்படி எல்லாருடனும் நட்பு உண்டு. அந்த வகையில், மு.க.ஸ்டாலின் குடும்பத்திடமும் நல்ல பழக்கம். ஸ்டாலின் முதல்வரான பிறகு அவரை சந்திக்கணும்னு இருந்திருக்காங்க. கொரோனா சூழல்களால் அப்பாயின்ட்மெண்ட் தள்ளிப் போய்க்கிட்டே இருந்திருக்கு. இப்ப தளர்வுகள் அதிகமான நிலையில், பிப்ரவரி 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு முதல்வரின் இல்லத்தில் சிவராஜ்குமாரும் அவர் மனைவியும் முதல்வர் குடும்பத்தினரை சந்திச்சி பேசினாங்க. அண்மையில் இறந்த சிவராஜ்குமாரின் சகோதரர் புனீத்ராஜ்குமார் பற்றியும் இரு குடும்பத்தினரும் உருக்கத்தோடு பேசியிருக்காங்க.’
"பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் எல்லாம் கவர்னரை வைத்து பாலிடிக்ஸ் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. தமிழக கவர்னரைப் போலவே, மேற்குவங்க மாநில கவர்னரும் ஏடாகூட பாலிடிக்ஸ் பண்றார் போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தன்கருக்கும் முதலமைச்சர் மம்தாவுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் கவர்னரை நீக்கவும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி நாடாளுமன்ற சபாநாயகரிடம் தீர்மானம் ஒன்றைத் தந்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். நாடாளுமன்றம் மீண்டும் மார்ச் மாதம் கூடுகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் சட்டசபையை 174-வது சட்ட பிரிவைப் பயன்படுத்தி முடித்து வைத்திருக்கிறார் அங்குள்ள கவர்னர். பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிளம்பியுள்ள ஹிஜாப் பிரச்சினையைத் திசை திருப்ப, இந்த பிரச்சனையை டெல்லி கொண்டுவந்துள்ளது என்கிறார்கள். இதற்கிடையே மாநில சட்டசபையை கவர்னர் முடித்து வைத்திருப்பதால் மார்ச்சில் தாக்கல் செய்யப்படவேண்டிய பட்ஜெட் கூட்டத்திற்கு சிக்கல் வந்துள்ளது. மேற்கு வங்க கவர்னரின் முடிவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் கண்டிச்சிருக்காங்க. கவர்னரோ, மாநில அரசு கேட்டுக்கொண்டபடிதான் சட்டமன்றத்தை முடித்து வைத்தேன்னு சொல்றாரு. அதே நேரத்தில், மூத்த வழக்கறிஞர்களிடமும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் அவசர ஆலோசனை நடத்தியுள்ள மம்தா, மோடிக்கு எதிரான மாநில முதல்வர்களிடம் கலந்தாலோசிக்கும் முடிவில் இருக்கிறாராம்.''”
"ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரசின் வியூகம் என்ன?''”
"ஹிஜாப் பிரச்சனை பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பியுள்ள சூழலில் தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான தகிப்பு அதிகம் தெரியுது. அதனால் காங்கிரஸ் தரப்பு நம்பிக்கையோடு இருக்கு. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், உ.பி.யின் முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்காவை அறிவித்தால் உ.பி.யைப் பிடித்து விடலாம்ன்னு ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. பிரியங்காவை அறிவித்து அவர் தோற்றுப் போனால், நேரு குடும்ப வாரிசுகளுக்கு செல்வாக்கில்லைன்னு பேச்சு வரும்னு சோனியா அதை மறுத்துவிட்டார். ஆனால், இப்ப உ.பி. பிரச்சாரத்தில் பிரியங்காவிற்குத் திரளும் பெண்களின் கூட்டத்தையும், தற்போதைய ஹிஜாப் பிரச்சனையையும் பார்க்கும்போது பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிச்சிருக்கலாமே என்று சோனியா ஆதங்கப்பட றாராம். கட்சியின் சீனியர்களோ, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. இப்பவே அறிவியுங்கள்னு சோனியாவை வற்புறுத்தறாங்களாம்.''”
"உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றியை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரஸ்டிஜ் இஷ்யூவா பாக்கறாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே... குறிப்பாக, உ.பி.யில் ஆட்சியை இழந்து விடக்கூடாது என நினைக்கிறார்கள். இதற்கு காரணம், உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது என்று மத்திய உளவுத்துறை யும், மோடி -அமீத்ஷா -ஜே.பி.நட்டா ஆகிய மூவர் கூட்டணி உருவாக்கிய சர்வே டீமும், அவர்களி டம் ரிப்போர்ட் பண்ணியிருக்கு. அதனால் இந்துக் களின் வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றத்தான் ஹிஜாப் பிரச்சனை உளவுத்துறை மூலம் வெடிக்க வைக்கப்பட்டிருக்குன்னு பலரும் சொல்றாங்க. பொதுவாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடைசி நேரத்தில் நாட்டுப்பற்றை உரு வாக்க பாகிஸ்தானுக்கு எதிராகக் குண்டு சத்தத்தை ஏற்படுத்துவார்கள். இப்போது அதைச் செய்ய முடியாது என்பதால், உள்ளூரில் மதப் பிரச் சனையை கிளப்புறாங்கன்னும் டாக் அடிபடுது.''
"அவங்க விட்ட ஏவுகணை அவங்க பக்கமே திரும்புதே?''”
"ஆமாங்க தலைவரே, கர்நாடகாவில் வெடித்த ஹிஜாப் பிரச்சனை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பா.ஜ.க.வுக்கு எதிரான கண்ட னங்களைக் குவிச்சிக்கிட்டு இருக்குது. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு ஆதரவான வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் தொழிலதிபர்களும் அறிவுஜீவி களும் கூட ஹிஜாப் பிரச்சனை தேவையற்றது. இஸ்லாம் அல்லாத நாடுகள் கூட இந்த விசயத்தில் இஸ்லாமியர்களை ஆதரிக்கின்றனன்னு ஆர்.எஸ். எஸ்.ஸிடம் தெரிவித்திருக்கிறார்களாம். அவர்கள் இதை மோடிக்கும் அமீத்சாவுக்கும் பாஸ் பண்ணி இருக்கிறார்களாம். இந்த நிலையில் உ.பி.யில் இருக்கும் 20 சதவீத முஸ்லீம்களும் கொதிப்பில் இருக்கிறார்கள். அவர்களில் 5 சதவீத பெண்கள், முத்தலாக் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றிய தால் பா.ஜ.க. ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால், இந்த ஹிஜாப் பிரச்சனையால் அவர்கள் ஆதரவையும் நாம் இழக்கப் போகிறோம்னு உ.பி. மாநில உளவுத்துறை ரிப்போர்ட் தந்திருக்கிறதாம்.''”
"ஜெ.வின் கொடநாடு கொலை கொள்ளைக் குற்றவாளிகளுக்கு இப்ப ராஜ உபசாரம் நடக்குதேப்பா.''”
"ஆமாங்க தலைவரே, கொடநாடு விவகாரத் தில் ஜெ.வின் கார் டிரைவர் கனகராஜ், திட்ட மிட்டே கார் விபத்தில் கொல்லப்பட்டார்னு விசாரணைக் குழு கண்டுபிடித்தது. அது தொடர் பாக தனபால், ரமேஷ் என்ற இருவரைக் கைது செய்தனர். உடனே பதறிப்போன எடப்பாடி தரப்பு, அவர்களின் வாயை அடைக்க ஜரூராக காய்களை நகர்த்தியது. இதைத் தொடர்ந்து அந்த இருவரும் இப்போது ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்கள். அவர்களை நீலகிரி பகுதியில் உள்ள ஒரு காஸ்ட்லி யான கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்திருக்கிறாராம் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் குமார். உளவுத்துறை யில் இருக்கும் சுபாஷினியோ, சகல வசதியும் செய்துகொடுத்து அவர்களை உபசரித்துவருகிறா ராம். குற்றவாளிகள் இருவரும், தங்கள் ஜீப், பைக் உள்ளிட்ட வாகனங்களையும் அங்கே கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஏகபோகமாக வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களாம்.'' ”
"உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அனல் பறக்குதே?''“
"ஆமாங்க தலைவரே.. அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் தனித்தனியா போட்டியிட்டாலும், பா.ஜ.க.வின் ஒரே நாடு ஒரே தேர்தல்ங்கிற முழக் கத்தை அந்தக் கட்சியைவிட அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங் கிணைப்பாளர் இ.பி.எஸ். இருவரும்தான் அதிகமா எழுப்புறாங்க. நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது, தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்னும், இன்னும் 27 அமாவாசைதான் தி.மு.க. ஆட்சி இருக்கும்னும் எடப்பாடி பழனிசாமி பேச ஆரம்பிச்சிட்டாரு. மேற்கு வங்கத்தில் கவர்னர் செய்த மாதிரி இங்கேயும் சட்டமன்றம் முடக் கப்படும்னு எடப்பாடி பேச ஆரம்பித்திருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கே ஆச்சரியமாத்தான் இருக்குது. எடப்பாடி யின் அமாவாசை கணக்குங்கிறது மாநில உரிமைகளுக்கு எதி ரான குரலா இருக்குன் னும் விமர்சனம் செய் யப்படுது. தற்போதைய நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்திய மில்லைன்னு பா.ஜ.க. நிர்வாகிகளும் சொல் றாங்க. உத்தரபிரதேச தேர்தல் முடிவைப் பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வு கள் இருக்குமாம்.''”
"பேசுறது இருக் கட்டும். கவனிப்பு தானே தேர்தல் களத்தில் வெற்றிக்கு துணையா இருக்கும்?''”
"தி.மு.க தன்னோட வாக்குறுதிகளை ஒழுங்கா கவனிக்கலைன்னு எடப் பாடி பிரச்சாரம் செய்றாரு. காணொலிப் பிரச்சா ரம் செய்யும் மு.க.ஸ்டாலினோ, அ.தி.மு.க. ஆட்சியால் கஜானா என்ன நிலையில் இருக்குதுன்னு சொல்லி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடமாட்டேன்னு உறுதி கொடுக்கிறாரு. களத்தில் நிற்கும் வேட்பாளர்களோ, வாக்காளர்களுக்கு எவ்வளவு கொடுப்பதுன்னு கணக்குப் போட்டு செயல்படுறாங்க. மாநகராட்சிகளில் ஓட்டுக்கு 500 வரை தருவதற்கு ரெடியா இருக்காங்க. ஒரு சிலர், 1000 ரூபாய் வரை ப்ளான் பண்ணுறாங்க. நகராட்சிகளில் ஓட்டுக்கு 200 முதல் 300 வரைன்னு கணக்கு போடப்பட்டிருக்குது.''”
"இது ஆளுங்கட்சி கணக்கா, எதிர்க்கட்சி கணக்கா?''”
"நான் சொல்றேன்.. வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய நினைக்கும் வேட்பாளர்களின் கணக்கு. ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி இரண் டிலுமே வெயிட் பார்ட்டிகள் இதில் கவனமா இருக்காங்க. போன ஆட்சியின் மணி மணியான மந்திரிகள் இருந்த மாவட்டங்களில் இப்பவும் ஆளுங் கட்சியை விட அவங்க தரப்புதான் அதிகமா செலவு பண்ணுது. டெல்டா மாவட்டத் தின் மாஜி மந்திரி தயவில் குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய்னு பேக்கேஜ் ஆஃபர் முறையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர் ஒருத்தர் உறுதி கொடுத்து, பட்டு வாடாவையும் ஆரம் பிச்சிட்டாரு.''”
________________
இறுதிச்சுற்று!
தலைவர் ரேஸ்!
பா.ஜ.க.வுக்கு சென்ற தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வுக்குத் திரும்பி வந்திருக்கிறார். பா.ஜ.க. மாநிலத் தலைவராக முருகன் இருந்தபோது பேசப்பட்ட டீல்கள் நிறைவேறவில்லை என்பதுதான் செல்வத்தின் ரிட்டர்னுக்கு காரணமாம். தற்போதைய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளும் திருப்தி தராததால் வி.பி.துரைசாமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் பா.ஜ.க.விலிருந்து வெளியேறும் மனநிலையில் இருக்கிறார்களாம். அண்ணாமலை பற்றி மேலிடத்திடம் முருகன் அளித்துள்ள புகார்களை சி.டி.ரவியும் ஆதரித்துள்ள நிலையில்... கோவையில் முருகன் பிரஸ் மீட் அளிக்க பா.ஜ.க மேலிடம் அனுமதித்தது. தமிழக பா.ஜ.க.வில் இதேநிலை நீடித்தால் அண்ணாமலையை கர்நாடகப் பொறுப்பாளராக்கிவிட்டு, தமிழக பா.ஜ.வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் அதில் சீனியரான பொன்னார் முந்துவதாகவும் கமலாலயத் தரப்பில் கூறுகிறார்கள்.
-பிரகாஷ்