தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 323, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 13, கல்லூரிகள் 6, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 3 உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை யும், 687 ஆலயங்களையும், 101 போதகர்களையும், 1,86,000 உறுப்பினர்களையும் கொண்டது. தென்னிந்திய திருச்சபைகளில் ஒன்றான நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலம். பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தை தலைமைப் பேராலயமாகக் கொண்ட நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தை நிர்வகிக்க 3 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தேர்த-ல் லே செயலாளர், பொருளாளர் உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவர்கள் பதவியேற்புக்கு பிறகே திருமண்டலத் திற்கென பேராயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 13-04-2021 அன்று நடைபெற்ற தேர்த-ல் லே செயலாளராக ஜெயசிங் என்பவரும், பொருளாளராக மனோகர் என்பவரும் தேர்ந் தெடுக்கப்பட்ட நிலையில் சரியாக ஒரு வருடம் கழித்தே பேராயராக பர்ணபாஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். துவக்கத்தில் சரியாக சென்றுகொண்டிருந்த நிர்வாகத்தில் சிலரின் ஈகோவால் பிரச்சனை உருவெடுத்தது.

ff

"13-4-2021 முதல் 12-4-2024 வரையிலான மூன்று ஆண்டு காலத் திற்குத் தேர்ந்தெடுக் கப்பட்ட திருநெல் வே- மறைமாவட் டத்தின் லே செய லாளராகவும், நிர்வாக உறுப்பினர்களாகவும் இருக்கிறோம். தென்னிந்திய திருச்சபையின் அரசியலமைப்பின் அத்தியாயம் யஒஒஒ விதி 12 (ஹ)இன் படி திருநெல்வே- மறைமாவட்டத்தின் அலுவலகப் பொறுப்பாளர்களாக செயல்பட எங்களுக்கு உரிமை உள்ளது. அதே நபர்களைக் கொண்டு மறைமாவட்டங்கள் மற்றும் சி.எஸ்.ஐ. மற்றும் அதன் சொத்துக்களின் நலன்களைப் பாதுகாப்பது எங்களின் கடமை ஆகின்றது. பிஷப்போ தன்னிச்சையாக சில சட்டவிரோத அரசியல் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு அவர் மட்டுமே நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலம் என்பதுபோல் நடந்து வருகின்றார். இதற்காக சபைக்கு சம்பந்தமில்லாத, உறுப்பினர் அல்லாத நபர்களை திருச்சபை நிர்வாகத்தில் நுழைத்துள்ளார். இது சட்டவிரோதம்.

இது இப்படியிருக்க 28-4-2023 அன்று செயற்குழு கூட்டத்தை தன்னிச்சையாகக் கூட்டி தேர்தல் அறிவிப்பை வெளியிடுகின்றார். அதாவது இப்பொழுது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு எதிராக, நிர்வாகிகளின் பதவிக்காலம் 12-4-2024 வரை இருக்கும் நிலையில், தேர்தல் அட்டவணையை அவர் வெளியிடுவது எந்த வகையில் நியாயம்..? பிஷப்பின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது. இதேவேளையில் இன்னொரு காரியத்தையும் சப்தமில்லாமல் செய்துவருகின்றது பிஷப் தரப்பு. திருச்சபைக்கு சொந்தமான சாரா டக்கர் கல்லூரியில் கையூட்டு வாங்கிக்கொண்டு 14-க்கும் அதிகமான பேராசிரியர்களை நியமித்துள்ளனர். ஒவ்வொரு போஸ்டிங்கிற்கும் தலா ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாய் லஞ்சம் பெற்று பணியினை வழங்கியுள்ளனர்'' என்கிறார் வழக்கறிஞரும், சொத்துக்குழு அலுவலருமான மூன்றடைப்பு ஜான்.

Advertisment

ff

பிஷப் பர்ணபாஸ் ஒரு அணியாகவும், லே செயலாளர், பொருளாளர் மற்றும் நிர் வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஓர் அணியாகவும் செயலாற்றிவந்த நிலை யில், 20-06-2023 அன்று லே செயலாளரின் அணியி-ருந்த மேரி சார்ஜெண்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கல்விக்குழு நிலைச் செயலாளர் ஆல்பியை தன்னிச்சையாக நீக்கம் செய்திருக்கின்றது பிஷப் தரப்பு. இதனால் திருச் சபையில் மிகுந்த கொந் தளிப்பு உருவானது.

அந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் அதற் கடுத்ததாக எம்.பி.யும், பாளையங்கோட்டை ஜான் ஹையர் செகன்ட்ரி பள்ளி யின் கல்விக்குழு நிலைச் செயலாளராகவும் இருந்த ஞானதிரவியத்தை நீக்கி யிருக்கின்றது பிஷப் தரப்பு. இது மேலும் கொந்தளிப்பை உண்டாக்கிய நிலையில், எம்.பி. ஞானதிரவியத் தின் ஆதரவாளர்கள் பள்ளி வளாகத்தி லுள்ள சில அறைகளை பூட் டிச் சென்றதாக கூறப்படுகின்றது.

பிஷப் ஆதரவாளர் ஒருவரோ, "எம்.பி. மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த அடிப்படை யில் நீக்கம் செய்யப் பட்டார். அதைவிடுத்து அறைகளைப் பூட்டச் செய்வது எந்த வகையில் நியாயம்..? அறைகளைத் திறக்கவே கிறிஸ்தவம் அடிப்படையிலேயே இட்டேரி பகுதியில் ஜே.எஸ்.எம். என்கின்ற தனித் திருச்சபை நடத்திவரும் பிஷப் காட்ப்ரே நோபுள் வந்தார். ஆனால் அரசியல்வாதி என்பதால் விவகாரம் பெரிதாகி அடிதடி வரை சென்றது'' என்கிறார் அவர். இந்தத் தாக்குத -ன் காரண மாக நெல்லை தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் உட்பட 33 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தணிக்கைக்குழு அலுவலரான ஸ்டா -ன் மைக்கேலோ, "காட்ப்ரே நோபுளிற்கும் இந்த திருச்சபைக்கும் என்ன சம்பந்தம்..? பிரச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்குடனே அடியாட்கள் சகிதம் வந்தனர். மராமத்து செய்கிறோம் என்கின்ற பெயரில் ஜே.சி.பி. எந்திரம் வாடகைக்கு எடுத்த கணக்கில் மட்டும் ரூ.40 லட்சத்தைத் திருடியுள்ளனர். அந்த பணத்தில் ஜே.சி.பி. இயந்திரமே வாங்கியிருக்கலாமே..? அதுபோக பிஷப் விடுமுறை அலவன்ஸ் எனும் பெயரில் ரூ.1,04,000 பில் கொடுத்தார். நாங்கள் அனுமதியளிக்கவில்லை. அதனாலேயே நிர்வாகத்தையே தன் பக்கம் கொண்டுவர பிஷப் எடுக்கும் முயற்சி இது'' என்கிறார் அவர்.

ff

Advertisment

இது இப்படி யிருக்க, தலைமையால் குட்டுப்பட்டு கட்சித் தலைமையிடம் விளக்க மளித்துள்ள ஞான திரவியம் தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், "இருப்பது இருப்பதுபோல் இருக்கட்டும். இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு மாவட்ட கல்வி அதிகாரிகளையே சாரும்'' என டி.இ.ஓ., சி.இ.ஓ.க்களுக்கு உத்திரவிட்டுள்ளது நீதிமன்றம்.

நுண்ணறி வில் பணியாற்றும் போலீஸாரோ, "அனைத்தும் இங்கு பணம்தான். ஏழைகளுக்கு கல்வி வழங்குவதற் காகவும், மருத்துவ உதவிகள் செய்வதற்காக வும், கல்வி நிலையங்களையும் மற்றும் மருத்துவமனைகளையும் நிர்வகிப்பதும் மட்டுமே நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் தலையாய பணி. ஆனால் இங்கு நடப்பது அத்தனையும் பணத்திற்காகவும், அந்தஸ்திற் காகவும் மட்டுமே. திருச்சபை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாற்ற பிஷப்பிற்கு எந்த அதிகாரமும் இல்லை. இருப்பினும் அவர்களது தற்போதைய இலக்கு எம்.பி. ஞானதிரவியமே. ஞானதிரவியத்திற்கு எதிராக பிஷப்பைத் தூண்டிவிட்டு தங்களது காரியத்தை சாதித்து வருகின்றனர் திரைமறை வில் இருக்கும் அரசியல்வாதிகள். ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியை குறிவைத்துத்தான் திருச்சபை அரசியலே நடக்கின்றது'' என்கின்றார் அவர்.

இதுகுறித்துக் கருத் தறிய பிஷப் பர்ண பாஸை தொடர்புகொண் டோம். பதில் இல்லை. அன்பை மட்டும் போதித்த கிறிஸ்துவின் பெயரால் இயங்கும் நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் அன்பு மட்டுமே துளிர்க்க வேண்டு மென்பது திருச்சபை மக்களின் விருப்பம்.

உணர்ந்து நடந்து கொள்வார்களா அரசியலில் சிக்கியவர்கள்?

___________

விளக்கம்!

நக்கீரன் Vol:36 Issue No:32 இதழில் வெளியான, "சிதைக்கப்பட்ட பகுத்தறிவு மன்றம்! குமுறும் மயிலாடு துறை உ.பி.க்கள்!'’கட்டுரைக்கு மயிலாடு துறை நகரச் செயலாளர் செல்வராஜ் தனது வழக்கறிஞர் எஸ்.சங்கரநாரா யணன் மூலம் விளக்கமளித்துள்ளார். அதில், கழகத்தினர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் முழுஉருவச் சிலையினை பகுத்தறிவு மன்ற வாச-ல் வைக்கக் கோரியதால், அதற்கான அனுமதி பெறவேண்டியிருப்பதாலேயே காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் கட்டுரையில் இடம்பெற்றுள்ள பினாமி பெயரில் ஒப்பந்தப் பணி, சொத்துக்கள் சம்பந்தமான தகவல்கள் சரியானவை யல்ல என தெரிவித்துள்ளார்.

(ஆர்.)