நீட் தேர்வின் மீது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் விமர்சனம் நிலவிவரும் நிலையில், நீட் தேர்வு எழுதவரும் மாணவ-மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் நடத்தும் கெடுபிடிகள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடை இல்லாமல் தேர்வெழுதச் சொன்ன விவகாரம் கேரளாவில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

neetinkerala

ஜூலை 17 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் கொட்டாரக்கரா நகரை ஒட்டியுள்ள சடையமங்கலம் பகுதியின் ஆயூரின், மார்த்தோமா காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் நீட் தேர்வு எழுதப்போயிருக்கிறார்கள் மாணவ-மாணவிகள்.

நீட் தேர்வை நடத்துகிற நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியினர், மாணவ, மாணவிகளை எக்ஸாம் ஹாலுக்குள் செல்வதற்கு முன்பாக சோதனையிடுகிற பொறுப்பை ஸ்டார் செக்யூரிட்டி ஏஜென்சியிடம் குத்தகைக்கு ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த சப்-காண்ட்ராக்டை எடுத்தது கிரீன்வுட்.

வழக்கம்போல் மாணவர்களை ஆண்கள் சோதனையிட மாணவிகளை பெண்கள் சோதனையிட்டுள்ளனர். நவீன ஸ்கேனர், மெட்டல் டிடெக்டர் சகிதம், தலையிலிருக்குற கொண்டைப் பின்னை எடு, காது கழுத்து மூக்கு வளையத்தைக் கழட்டு, முழங்கைக்குக் கீழே உள்ள ஆடைகளுக்கு கத்தரி போட்ட ஏஜென்சி, சோதனை என்ற பெயரில் கடுமை காட்டியிருக்கிறார் கள். இந்த நிலையில், வரி சையில் வந்த ஒரு மாணவி யைச் சோதனையிடும் போது, டிடெக்டர் பீப் சத்தம் எழுப்பியிருக்கிறது.

Advertisment

dd

சந்தேகமாகப் பார்த்த சோதனையிட்டவ ரிடம், “"உள்ள பிரேசியர் போட்டுருக்கேன்'’என்று தெரிவித்திருக்கிறாள் அந்த அப்பாவி மாணவி. பிரேசியரிலுள்ள உலோக ஹூக்கால் பீப் சத்தம் வந்திருக்கு என மாணவி சொல்லியும், விடாத செக்யூ ரிட்டியினர், “"நீ போட்டிருக் கிற உள்பாடியை கழட்டி வெச்சுட்டுதான் எக்ஸாம் எழுதணும். இல்லன்னா அனுமதிக்க முடியாது'” என்று கெடுபிடி காட்டி யிருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியான அந்த மாணவி கண்ணீ ருடன் நின்ற நிலையிலும் பிரேசியரை கழட்டிவிட்டே அனுமதித்திருக்கின்றனர். இதுபோன்று உலோக ஹூக்குடனான உள்ளாடை அணிந்துவந்த 90 மாணவி களுக்கும் விதிவிலக்கின்றி உள்ளாடையை அகற்றவேண்டுமென ஈவிரக்கமின்றிச் சொல்லிவிட்டனர் சோதனையிட்ட பெண் அதிகாரிகள்.

புன்னகையோடு வந்த இந்த மாணவி கள், இந்த அரக்கத்தனமான ஆடை அவிழ்ப்புச் சோதனையினால் மன அழுத்தத்துடன் தேர்வை எழுதியுள்ளனர். தேர்வை முடித்துத் திரும்பிய மாணவிகள், நடத்தப்பட்ட உள்ளாடை அவிழ்ப்புச் சோதனைகளையும், உள்ளாடையின்றி தேர்வெழுத நேர்ந்ததையும் கதறலோடு தங்களின் பெற்றோர்களிடம் சொல்லியிருக்கின்றனர்.

அன்றைய இரவிலேயே கொட்டாரக்கரா டி.ஒய். எஸ்.பி.யான விஜயகுமாரிடம் புகார் கொடுத்துள்ளனர். விசாரணையை மேற்கொண்ட டி.ஒய்.எஸ்.பி. விஜயகுமார், கல்லூரியின் துப்புரவுப் பணியாளர்களான கே.மரியம்மா, எஸ்.மரியம்மா, சோதனையிட்ட செக்யூரிட்டிப் பெண் களான கீத்து, பீனா, ஜோபி என ஐந்து பேரை ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் கைது செய்திருக்கிறார். ஜூன் 21-ஆம் தேதி நீட் பார்வையாளர், தேர்வு ஒருங்கிணைப் பாளர் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

செய்தி வெளியே தெரிந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியினர், லீக் காங்கிரஸ், அதன் மாணவ அமைப்பு, பா.ஜ.க. என்று அனைத்துக் கட்சியினரும் கல்லூரி முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஒருசிலர் கல்லூரிக்குள் புகுந்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். கலவரமாகி விடக்கூடாது என்று பதறிய காக்கிகள் பெரும்பாடுபட்டு போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

"இந்த விவகாரத்தில் கல்லூரிக்குத் தொடர்பில்லை. நீட் தேர்வை நடத்தும் ஏஜென்சியின் ஆட்கள்தான் சோதனை நடத்தியுள்ளனர்'’ என்று பதற்றத்துடன் விளக்கமளித்துள்ளனர் தனியார் கல்லூரி நிர்வாகிகள். விஷயம் எதிர்பாராத திருப்பம் எடுத்துள்ளதை அறிந்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் தேசிய தேர்வு முகமை, உண்மை கண்டறியும் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது.

கேரளாவில் மாநில கல்வியமைச்சர் உள்ளிட்டோர் மத்திய அரசிடம் முறை யிட்டுள்ளபோதும், அனைத்து மாநிலங் களிலுமே இப்பிரச்சினை இருக்கிறது. தேர் வில் நவீன சாதனங்களின் துணையுடன் யாரும் ஏமாற்றிவிடக்கூடாது என்பது முக்கியம்தான். அதேபோல முரட்டுப் பிடிவாதத்துடன், தேர்வு எழுதுபவர்களை, தேர்வுக்கு முன்பே மனரீதியாக காயப்படுத் தும் போக்கை மத்திய தேர்வு முகமை கைவிடவேண்டியது இன்னும் முக்கியம்.

Advertisment

________________

இது பண்பாட்டுக் கொலை. ஆபத்தானது. -சமூக ஆர்வலர் ஷீஜா

இந்த சம்பவம் குறித்துப் பேசிய சமூக ஆர்வலரான நெய்யாற்றின்கரை ஷீஜா, “"நீட் தேர்வு எழுதவந்த மாணவிகளின் உள்ளாடை களைக் கழற்றியது பண்பாட்டுக் கொலை... கண்டிக்கத்தக்கது. போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தாலும் இனியும் இதுபோன்று சம்பவம் நடக்காமல் இருக்கும்படி தண்டனை இருக்கவேண்டும். நீட் பரிசோதனைக் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தவேண்டும். மாணவிகள் ஏற்கனவே தேர்வு பயத்தில் இருக்கும்போது, நகைகளைக் கழற்றுவது, உள்வஸ்திரங்களைக் கழற்றுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். பெற்றோர்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தும்''’என்கிறார்.

-மணிகண்டன்