தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தையொட்டி, நயன்தாராவின் தனிப் பட்ட வாழ்க்கை, திரையுலக வெற்றிப்பயணம் என அனைத்தையும் பேசக்கூடிய "நயன்தாரா: தேவதைக்கு அப்பால்' என்ற ஆவணப்படத்தை தயாரித்து, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள பல திரைப்படங்களின் க்ளிப்பிங்குகள் ஆங்காங்கே இடம்பெற்றன. அவற்றில், நடிகர் தனுஷின் ஒண்டர்பால் நிறுவனத் தயாரிப்பில் உருவான "நானும் ரவுடிதான்' படக் காட்சிகள் இடம் பெற்றதாக வும், அதற்கான அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டி, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன் றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
அந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்குமிடையே காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், "சந்திரமுகி' படத்தில் இடம்பெற்ற படக் காட்சிகளை அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், அதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், அதற்கான பதிப்புரிமை பெற்ற நிறுவனம் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் லாபக்கணக்கை வெளியிட வேண்டு மென்றும் கூறப்பட்டுள்ளது. நயன்தாரா தரப்போ, செல்போனில் இருந்த காட்சிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித் துள்ளது. இதனால் நயன்தாராவுக்கு புதுத் தலைவலி உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான "குபேரா' பட விழாவில் பேசிய தனுஷ், தன் வளர்ச்சி பிடிக்கா மல் ஒரு கூட்டமே தனக்கு எதிராக வேலை பார்ப்பதாக மறைமுகமாக நயன்தாராவை சாடினார். இந்த நிலையில் "சந்திரமுகி' திரைப்பட பதிப்புரிமை பெற்ற ஏ.பி. இன்டர்நேஷனல் நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அந்த ஆவணப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்லியும் நீக்கப்படவில்லை என்பதால் 5 கோடி இழப்பீடு தர வேண்டு மென்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணப் படத்தைத் தொடர்ந்து ஒளிபரப்பிவரும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நயன்தாரா தரப்பு, லாப நோக்கில் செயல்படுகின்றது என்றும், இதனால் அந்த ஆவணப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பதோடு, லாபக்கணக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் செந்தில்குமார் ராமமூர்த்தி, இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே தனுஷ் போட்ட வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், தற்போது ஏ.பி. இன்டர்நேஷனல் நிறுவனமும் வழக்கு தொடர்ந்துள்ளதால் நயன்தாராவின் ஆவணப் பட சர்ச்சை தொடர்கதையாகியுள்ளது!