தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தாமதம்! சிரமத்தில் பொதுமக்கள்!

ss

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது விழுப்புரம் ஜானகிபுரம் பகுதி. 2022-ஆம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நாகப் பட்டினம் வரை 181 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிச் சாலை விரிவாக்க திட்டப் பணிகள் சுமார் 6441 கோடி மதிப்பீட்டில் உருவாக்கும் பணி துவங்கப்பட்டது. விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து எம்.என். குப்பம் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. அதேபோல் விழுப்புரம் -புதுச்சேரி இடையே சாலைப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் கண்டமங்கலம் ரயில்வே பாலம், வளவனூர் அருகே புதிய புறவழிச் சாலை சந்திப்பு ஆகிய பகுதிப் பணிகள் மட்டும் காலதாமதமாகின்றன. ஏன்?

வளவனூர் அருகே கெங்கராம்பாளை யம் பகுதியில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு புதிதாக புறவழிச்சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் நெய்வேலியிலிருந்து உயர் மின்னழுத்த மின்சாரம் செல்லும் டவர்கள் அமைந்துள்ளன. இந்த லைன்கள் பாலத்தைக் குறுக்கிடுவதால்,

சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது விழுப்புரம் ஜானகிபுரம் பகுதி. 2022-ஆம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நாகப் பட்டினம் வரை 181 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழிச் சாலை விரிவாக்க திட்டப் பணிகள் சுமார் 6441 கோடி மதிப்பீட்டில் உருவாக்கும் பணி துவங்கப்பட்டது. விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து எம்.என். குப்பம் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. அதேபோல் விழுப்புரம் -புதுச்சேரி இடையே சாலைப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் கண்டமங்கலம் ரயில்வே பாலம், வளவனூர் அருகே புதிய புறவழிச் சாலை சந்திப்பு ஆகிய பகுதிப் பணிகள் மட்டும் காலதாமதமாகின்றன. ஏன்?

வளவனூர் அருகே கெங்கராம்பாளை யம் பகுதியில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு புதிதாக புறவழிச்சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் நெய்வேலியிலிருந்து உயர் மின்னழுத்த மின்சாரம் செல்லும் டவர்கள் அமைந்துள்ளன. இந்த லைன்கள் பாலத்தைக் குறுக்கிடுவதால், அந்த லைனைப் பிரித்து மாற்று வழியில் கொண்டுசெல்ல வேண்டும். துறை சம்பந்தமான அதிகாரிகள் காலதாமதம் செய்துவருவதால் புறவழிச்சாலை மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

hh

சேலம் -கடலூர் தேசிய நெடுஞ் சாலையில் தலைவாசல் கூட்டு ரோடு பகுதியிலிருந்து வேப்பூர், விருத்தாசலம், வழியாக கடலூர் வரை சுமார் 140 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்றுவரு கிறது. இந்த நிலையில் விருத்தாசலம் நகரத்தை ஒட்டி கடலூர் செல்லும் புறவழிச் சாலையில் மேம் பாலம் அமைக்கும் பணி காலதாமதம் ஆகின்றது

இந்த இடத்திலும் நெய்வேலி அனல்மின் நிலையத்திலிருந்து கர்நாடகா, கேரளா செல்லும் உயர் மின்னழுத்தப் பாதை செல்கிறது. சாலையின் இருபுறமும் சுமார் 80% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மின்சார லைன் மாற்றி யமைக்காததால் பாலத்தின் மையப்பகுதி பணிகள் நிறுத்தப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் தாமதமாகியது. சில தினங்களுக்கு முன்புதான் லைன் மாற்றியமைக்கப்பட்டு மேம்பாலப் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன

வளவனூர் மேம்பாலப் பணி ஏன் கால தாமதம் ஆகிறது என்பது குறித்து கண்டமங்கலம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் நம்மிடம், "வளவனூர் புறவழிச்சாலை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை நெடுஞ்சாலைத் துறை செலுத்தாததால் விவசாயிகள் பணியை தடுத்துநிறுத்தி யுள்ளனர். மேலும் புறவழிச்சாலை மேம்பால கட்டுமான இடத்தில் இரண்டு உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளன. அவற்றையும் மாற்றியமைக்க வேண்டும். லைன்களை மாற்றி யமைப்பதற்கு சாலை ஒப்பந்த நிறுவனம், நாகாய் நிறுவனத்திற்கு அதற்குரிய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தாததால் மின்தளவாட உபகரணங்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு, இதன் காரணமாக சாலைப் பணிகள் தாமதமாகி வருகின்றன. எனவே சாலை ஒப்பந்ததாரர் இழப்பீட்டுத் தொகையை விரைவில் செலுத்தி லைனை அப்புறப்படுத்தி பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்கவேண் டும். இதேபோல் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் கெங்ராம் பாளையம் பகுதியில் 5 டவரும் அர்ப்பிசம் பாளையம் பகுதியில் இரண்டு டவர், வளவனூ ரில் மூன்று டவர், மலைராஜன் குப்பத்தில் இரண்டு டவர் என 12 டவர்கள் மாற்றியமைக் கும் பணி பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. டவர் மாற்றியமைக் கும் பணிகள் மேலும் காலதாமதமானால் பொதுச் செயலாளர் எடப்பாடியின் அனுமதி பெற்று பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்''’என்கிறார்.

hh

"சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு செய்யும்போதே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மின்சார கோபுரம் செல்வது தெரியாதா? டெண்டர்விட்டு பணி தொடங் கும்போதுகூடவா இந்த லைனை அப்புறப்படுத்தவேண்டும் என்பது தெரியாது? உரிய இழப்பீட்டுத் தொகையை செலுத்தி லைனை அப்புறப்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்பால பணியை முடித்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட அடிப்படை விவரங்கள்கூடவா நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் போய்விட்டது''’என்று கேள்வியெழுப்புகிறார் விருத்தாசலம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞரணி ராம்பிரகாஷ்.

விருத்தாசலம் புறவழிச்சாலை மேம்பால பணி காலதாமதம் ஆவது குறித்து நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சரவணனிடம் கேட்டோம். “"பாலத்தின் குறுக்கே உயர் அழுத்த மின்சார கோபுரம் செல்கிறது. அந்த மின்சார லைனை மாற்றி யமைக்க வேண்டி ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட மின்வழி பாதை பராமரிப்பு நிறுவனத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை செலுத்திவிட்டார். விரைவில் லைன் மாற்றியமைக்கப்பட்டு சில தினங்களில் மேம்பாலப் பணிகள் முழுமை பெற்று போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும்''’என்கிறார் சரவணன்.

இதே கேள்வியை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரிடம் கேட் டோம். "நெய்வேலியில் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக் கும் மின்சாரம் அனுப்பும் பணி மட்டும்தான் என்.எல்.சி. நிர்வாகத் தின் பொறுப்பு. மின்சாரத்தைக் கொண்டுசெல்வது, அந்த மின் பாதைகளை பராமரிப்பதற்கான தமிழ்நாடு காண்ட்ராக்ட், சன் டிரான்ஸ்கோ என்ற நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளது. மின்சாரப் பாதைக்கும் என்.எல்.சி. நிர்வா கத்திற்கும் தொடர்பு இல்லை'' என்கிறார் அந்த உயர் அதிகாரி.

-எஸ்.பி.எஸ்.

nkn040524
இதையும் படியுங்கள்
Subscribe