தேர்தல் நாளன்று சிவகாசி வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன் என்பவர், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று கொதித்துப்போய் பேசினார். "இத்தன வருஷமா தவறாம ஓட்டு போட்டுட்டு வந்திருக்கோம். இப்ப எங்க கையில வாக்காளர் அடையாள அட்டை இருக்கு. ஆனா.. ஓட்டு இல்லைன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப அக்கிரமமா இருக்கு. இதெல்லாம், யாரு பண்ணுற வேலைன்னே தெரியல''’என்றார் குமுறலுடன்.
அதே வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாமல் போன பொன்ராஜ், "எனக்கும் என் மனைவி கவிதாவுக்கும் ஓட்டு இல்ல. லிஸ்ட்ல பேரு இல்லன்னு சொல்லிட்டாங்க. 100 சதவீதம் வாக்களிக்கணும்னு விளம்பரம் பண்ணுறாங்க. ஆனா.. வாக் காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டு இல்லைங் கிறாங்க. டிஜிட்டல் இந்தியான்னு பெருமை பேசுற நாட்டுல, இந்திய குடிமக்களா இருந்தும், ஏதோ ஒரு காரணத்துக்காக, எங்களோட வாக்குரிமை மறுக்கப்படுதுன்னா, கொடுமை இல்லியா? எங்கள மாதிரியே, ஒவ்வொரு பூத்லயும் 30ல இருந்து 100 பேர் வரைக்கும் பட்டியல்ல இருந்து நீக்கிட்டதா சொல்றாங்க''’என்று ஆதங்கப்பட்டார்.
இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை, சாலிகிராமம் வாக்குச்சாவடியில் நடிகர் சூரியின் பெயர் பட்டியலில் இல்லாததால், அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. கோவை மக்களவைத
தேர்தல் நாளன்று சிவகாசி வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன் என்பவர், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று கொதித்துப்போய் பேசினார். "இத்தன வருஷமா தவறாம ஓட்டு போட்டுட்டு வந்திருக்கோம். இப்ப எங்க கையில வாக்காளர் அடையாள அட்டை இருக்கு. ஆனா.. ஓட்டு இல்லைன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப அக்கிரமமா இருக்கு. இதெல்லாம், யாரு பண்ணுற வேலைன்னே தெரியல''’என்றார் குமுறலுடன்.
அதே வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாமல் போன பொன்ராஜ், "எனக்கும் என் மனைவி கவிதாவுக்கும் ஓட்டு இல்ல. லிஸ்ட்ல பேரு இல்லன்னு சொல்லிட்டாங்க. 100 சதவீதம் வாக்களிக்கணும்னு விளம்பரம் பண்ணுறாங்க. ஆனா.. வாக் காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டு இல்லைங் கிறாங்க. டிஜிட்டல் இந்தியான்னு பெருமை பேசுற நாட்டுல, இந்திய குடிமக்களா இருந்தும், ஏதோ ஒரு காரணத்துக்காக, எங்களோட வாக்குரிமை மறுக்கப்படுதுன்னா, கொடுமை இல்லியா? எங்கள மாதிரியே, ஒவ்வொரு பூத்லயும் 30ல இருந்து 100 பேர் வரைக்கும் பட்டியல்ல இருந்து நீக்கிட்டதா சொல்றாங்க''’என்று ஆதங்கப்பட்டார்.
இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை, சாலிகிராமம் வாக்குச்சாவடியில் நடிகர் சூரியின் பெயர் பட்டியலில் இல்லாததால், அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இல்லாத நிலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மறுவாக்குப் பதிவு நடத்த கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் பா.ஜ.க.வினர் புகாரளித்துள்ளனர்.
சிவகாசி வாக்காளர் பொன்ராஜ் குறிப்பிடும் வாக்குரிமை என்பது மக்களாட்சி நடைபெறும் இந்திய நாட்டில் மிகமிக இன்றியமையாத ஒன்றாகும். குடியரசு தத்துவம், நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிமக்களுக்கே உண்டு என்கிறது. தங்களது அரசியல் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் குடிமக்கள் செலுத்துகின்றனர். இந்த வாக்குரிமை யைப் பயன்படுத்தித்தான், தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுத்து, தங்கள் சார்பில் அரசாங்கத்தை நடத்திவர, ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். இந்த அடிப்படையில்தான், நாடாளுமன்றம், சட்ட மன்றம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந் தெடுப்பதற்கு தேர்தல்கள் நடக்கின்றன.
தேர்தல் அலுவலர் ஒருவரிடம் ‘வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் மாயமானது ஏன்?’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.
"வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதும், வாக்களித்துவிடலாம் என்று பலரும் நினைக்கின்றனர். அது வாக்காளர் வைத்திருக்கவேண்டிய முக்கிய ஆவணமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டிய லில் பெயர் இருப்பது அவசியம். வாக்காளர் பட்டியல் என்பது வாக்களிப்பதற்குத் தகுதியான வர்களின் பெயரைத் தொகுக்கும் பட்டியலாகும். வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைபெறாமல் செய்வதையும், ஒரே வாக்காளர் பலமுறை வாக்குப் பதிவு செய்வதைத் தடுப்பதையும், இப்பட்டியல் உறுதிசெய்கிறது. தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் வெளியிடப் படுகிறது. அப்போது, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை வாக்காளர்கள் சரிபார்த்து உறுதிப்படுத்தியிருக்கவேண்டும்.
நியாயமான தேர்தல் முறையை உருவாக்குவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் சில வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் அடையாள (ஊடஒஈ) அட்டையை மேம்படுத்துவதற்கான சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பயோமெட்ரிக் தரவுகளைச் சேகரித்து, வீடு வீடாகச் சென்று சரிபார்த்து, மோசடிகளைக் கண்டறிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. அறிவிப்பு செய்து, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் முகாம்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது. இணைய வசதியோ, கைபேசியோ இல்லாதவர்கள், இந்த முகாம்களுக்கு நேரில் சென்று, வாக்காளர் பெயரைச் சேர்க்கவோ, நீக்கவோ, உள்விவரங்களில் திருத்தம் செய்யவோ முடியும். இதற்கும் மேலாக, வாக்காளர் சேவை போர்ட்டல் மூலமாக (ட்ற்ற்ல்ள்://ங்ப்ங்ஸ்ரீற்ர்ழ்ஹப்ள்ங்ஹழ்ஸ்ரீட்.ங்ஸ்ரீண்.ஞ்ர்ஸ்.ண்ய்) வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.
கவுண்டம்பாளையத்தில் 830 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விஷயத்துக்கு வருகிறேன். இந்த விவகாரம் குறித்து கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். 2022ல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நடந்தபோது, அந்தப் பகுதியில் வீடு வீடாக கணக்கெடுப்பாளர்கள் சென்றுள்ளனர். 830 பேர் அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பது தெரியவந்ததாலேயே, அவர்களுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. வரைவுப் பட்டியல் வெளியிட்டபோது, அரசியல் கட்சியினர் யாரும், கவுண்டம்பாளையத்தில் விடுபட்ட வாக்காளர்கள் குறித்து எந்தப் பிரச்சனையையும் எழுப்பவில்லை.. அப்போது மவுனமாக இருந்துவிட்டு வாக்குப்பதிவு நாளில் போராட்டம் நடத்தினார்கள், புகாரும் அளித்தார்கள். வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அலட்சியம்தான், பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறாததற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளைச் சரிசெய்வதற்காகவே, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், ஒருவருடைய பெயரில் உள்ள போலி அல்லது பல வாக்காளர் அடையாள அட்டைகள் திறம்பட நீக்கப்படும். அதேநேரத்தில், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்படவில்லை. ஆனாலும், இந்தத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்காளர்கள் சிலர், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், எங்கள் பெயரைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று வேதனையுடன் பேசியதைக் கேட்கமுடிந்தது. வாக்காளர்களுக்கு முறையாக பூத் சிலிப் வழங்காததும், இந்தத் தேர்தலில் பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது. பூத் நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் பணியைச் சரிவரச் செய்யாததும், மேலதிகாரிகள் அதனைக் கண்காணிக்காததும் பல இடங்களில் நடந்திருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும். ஆளும்கட்சியினர் தலையிட்டு கேட்டுக்கொண் டால், மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ள அலுவலரோ, தாலுகா அலுவலரோ, வாக்காளர் பட்டியலிலிருந்து குறிப்பிட்ட சிலரை நீக்கிவிடமுடியும். பெரிய அளவில் இல்லை யென்றாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இதெல்லாம் நடக்காமல் இல்லை''’என்று நேர்மையாகப் பேசினார்.
ஒருபக்கம், வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் பரிதவித்தவர்கள் அனேகம்பேர் என்றால், இன்னொரு பக்கம், நாட்டின் நலனைக் கருத்தில்கொள்ளாமல், ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறிய 1,90,36,781 பேர் வாக்களிக்காததும் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. மொத்தத்தில், வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வூட்ட இந்தியத் தேர்தல் ஆணையம் தவறிவிட்ட தென்பதே உண்மை.