முதல் போஸ்ட்மார்ட்ட அறிக்கை ஸ்ரீமதியின் தாயாருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டது. அந்த போஸ்ட்மார்ட்ட அறிக்கையில், ஸ்ரீமதி உடலின் முதுகுத் தண்டுவடம் அமைந்துள்ள வலதுபுறத்தில் உள்ள விலா எலும்புகள் நேர்கோட்டுப் பகுதி போல ஒரே சீராக பதினாறு இடங்களில் உடைந்திருந்தது. தலைப் பகுதியின் இடதுபுறத்தில் பெரும் இரத்தப் போக்கு ஏற்படும் அளவுக்கு காயம். வலது தோள்பட்டை, வலது கை, முழங்கையின் வலது பகுதி, வலது கால் பகுதிகள், வலது கால் பாதம் ஆகியவற்றில் காயங்கள் இருந்தன. வலது மார்பகப் பகுதியில் நகக் கீறல்கள் போன்ற சிராய்ப்புகள் மற்றும் விலா எலும்புகள் உடைந்து குத்தியதால் இதயம், நுரையீரல் போன்ற பகுதிகளில் ரத்தப் பெருக்கும், ஸ்ரீமதியின் வாய்ப் பகுதியும் மூக்குப் பகுதியும் ஒருசேர அழுத்தப்பட்டதால் மூக்கின் வேர்ப்பகுதியான மூக்கும் நெற்றியும் சேரும் இடத்தில் காயம் ஏற்பட்டது. ஸ்ரீமதியின் வாய்ப் பகுதி அழுத்தப்பட்டதால் அவரது இதயப் பகுதியில் ஒன்றரை லிட்டர் இரத்தம் உறையாமல் அப்படியே திரவ நிலையில் காணப்பட்டது. மூச்சுத் திணறலுக்கு உட்படும் மனிதர்களின் மலம் அவசர நிலையில் வெளியேறுவது போல, சிறுநீரும் மலமும் வெளியேறியுள்ளது. மொத்தம் நாற்பத்தி ரெண்டு காயங்கள் உள்ளன என குறிப்பிடப் பட்டுள்ளது.
இதை ஆராய்ந்த தடயவியல் துறை மருத்துவர்கள் "ஸ்ரீமதி மிகப்பெரிய ஒரு ஜீவமரணப் போராட்டத்துக்குப் பிறகுதான் மரணம் அடைந்துள்ளார் என்றும் அவரது மூக்கு மற்றும் இதயப் பகுதியில் உள்ள காயங்கள், அவரது உடலில் நிகழ்ந்த மல, சிறுநீர் வெளியேற்றம் போன்றவை உணர்த்துகிறது. எனவே இது கொலைதான்'' என தெரிவித்தார்கள்.
மரணமடைந்த ஸ்ரீமதி போட்டிருந்த ஆடைகளில் ஒரு கிழிசல்கூட இல்லை. ஸ்ரீமதி நிர்வாணப்படுத்தப்பட்டு சித்ரவதைக் குள்ளாக்கப்பட்டு மரணமடைந்த பிறகுதான் அவருக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டிருக் கிறது.
அதில் அவரது ஓவர்கோட்டில் இரண்டு பொத்தான்கள் சரியாக மாட்டப்படவில்லை என்பது ஸ்ரீமதியை பிணமாக நான்கு பேர் தூக்கி வரும் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி இருந்தது. ஏன் பொத்தான்கள் சரியாக மாட்டப்படவில்லை என ஸ்ரீமதியின் அம்மா சி.பி.சி.ஐ.டி.யினரிடம் கேள்வி எழுப்பியபோது, “ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அவர் உயிருடன் இருந்தாரா இல்லையா என்பதைக் கண்டறிய ஈ.சி.ஜி. சோதனை நடத்தப்பட்டது என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்ததாக” ஸ்ரீமதி அம்மா செல்வி கூறினார்.
ஸ்ரீமதி பள்ளியின் மூன்றாவது மாடியிலுள்ள ஆஸ்டலில் இருந்து குதித்தார். அவர் மேலிருந்து கீழே விழும்போது அங் கிருந்த மரக் கிளையில் சிக்கினார். அந்த மரக்கிளைகள் அவரது மார்பகத்தில் காயத்தை ஏற்படுத்தியதால் ஸ்ரீமதிக்கு விலா எலும்புகள் நொறுங்கியது என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஸ்ரீமதி விழுந்ததாகச் சொல்லப் படும் இடத்தில் இருந்த மரம் ஒரு அலங்காரத் தென்னை மரம். ஸ்ரீமதியின் ஹாஸ்டல் இருந்த மூன்றாவது மாடி வரை அந்த தென்னை மரம் வளர்ந்திருந்தது. அதன் ஒரு ஓலை ஸ்ரீமதி மேல் பட்டு ஒடிந்து விழுந்தது என பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீமதியின் அம்மா செல்வியிடம் விளக்கம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் சி.சி.டி.வி. காட்சிகளில் வேறொரு இடத்திலிருந்து ஸ்ரீமதியைத் தூக்கிவந்தார் கள்.
ஸ்ரீமதியின் மரணம் ஒரு தற்கொலை. அதற்குக் காரணம் ஒரு காதல் தொடர்பாக ஸ்ரீமதிக்கும் அவரது அம்மாவுக்கும் நடந்த வாக்குவாதம் என்றும், ஸ்ரீமதி சரியாகப் படிக்கவில்லை என வேதியியல் ஆசிரியரும் கணக்கு ஆசிரியரும் திட்டியதால் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனவும் பள்ளி நிர்வாகம் கூறியது.
ஆனால், ஸ்ரீமதியை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் செந்தில்குமார் அதனை நடத்துவதற்கு தகுதியான மருத்துவர் இல்லை ட்யூட்டர்’ என்கிற பதவியை வகிப்பவர். எனவே, ஸ்ரீமதியை தகுதிவாய்ந்த டாக்டர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என ஸ்ரீமதியின் பெற்றோர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
அதைத் தொடர்ந்து கீதாஞ்சலி என்ற போஸ்ட்மார்ட்ட நிபுணர் அடங்கிய நான்கு மருத்துவர் கொண்ட குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழு ஸ்ரீமதியின் உடலை இரண்டாவதாக போஸ்ட் மார்ட்டம் செய்தது. இந்த இரண்டு போஸ்ட்மார்ட்டங்களையும் ஆய்வுசெய்து ஒரு அறிக்கை தர ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜிப்மர் குழுவின் அறிக்கை கடந்த 21-ஆம் தேதி ஸ்ரீமதி வழக்கை விசாரிக்கும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் குழு கொடுத்த அறிக்கையை நீதிமன்றம் ஸ்ரீமதியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதனிடம் வழங்கி யது.
அந்த அறிக்கையில் ஸ்ரீமதியின் பெல்விஸ் போன் (ல்ங்ப்ஸ்ண்ள் க்ஷர்ய்ங்) உடைந்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. பெல்விஸ் போன் என்பது இடுப்புப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு எலும்பு. அந்த எலும்பு உடைவது என்பது சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றல்ல. இதுபோல ஒரு எலும்பு ஸ்ரீமதியின் உடலில் உடைந்திருக்கிறது என் பதை முதல் போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் செந்தில்குமார் மறைத்து விட்டார் என குற்றம் சாட்டுகிறார்கள் ஸ்ரீமதி அம்மா செல்வியின் வழக்கறிஞர்களான காசி விஸ்வநாதனும் கிருஷ்ண மூர்த்தியும்.
“நான் போஸ்ட்மார்ட்டம் செய்த அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன். அவர் அதைக் கொடுக்கவில்லை. அதற்காக போலீசாரின் அனுமதியைப் பெற முயற்சித்தார். போலீசாரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொம்மைபோல அவர் செயல்பட்டார். அதனால்தான் எங்களுக்குத் தெரிந்த ஒரு டாக்டரை வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும்” என உயர்நீதிமன்றம் சென் றோம். உயர் நீதிமன்றம் இரண்டாவதாக போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு குழு மற்றும் அதைக் கண்காணிக்க ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் குழு என தீர்ப்பளித்தது.
தற்போது இடுப்புப் பகுதி எலும்பு முறிந்துள்ளது என்ற கண்டுபிடிப்பு வந்துள்ளது. இதை முதலில் போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் எப்படி கவனிக்கத் தவறினார் என்கிறார் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன். அது மட்டுமல்ல ஸ்ரீமதியின் மார்பில் இரண்டு ரத்தக் கட்டுகளாலான காயங்கள் இருக்கிறது என்று இரண்டாவது போஸ்ட்மார்ட்ட அறிக்கை கூறுகிறது. முதல் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொன்னபடி ஸ்ரீமதியின் விலா எலும்புகள் ஒரே சீராக உடையவில்லை. அவை பல விதங்களில் உடைந்துள்ளது என இரண்டாவது போஸ்ட்மார்ட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஸ்ரீமதி உடலின் இரு அறிக்கைகளும் காயங்களின் தன்மையை இரண்டு விதமாகக் குறிப்பிடுகின்றன. பொதுவாக அப்படி இருக்காது. இரண்டு அறிக்கைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும். இரண்டாவது அறிக்கையிலோ கூடுதலாக மார்பகப் பகுதியில் உள்ள திரவங்களை ரசாயனப் பரி சோதனைக்கு உள்ளாக்கியதாகச் சொல்கிறது.
இந்த இரண்டு அறிக் கைகளும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதைத் தெரிவிக்கவில்லை. ஸ்ரீமதியின் உடலில் செரிக்காத உணவு இருந்துள்ளது. அத்துடன் அவரது அந்தரங்க உறுப்புக்களில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய இரசாயன அறிக்கைகளை ஜிப்மர் மருத்துவமனை ஆராய்ந்துள்ளது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகுதான் ஸ்ரீமதியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவரும் என்கிறார்கள்.
இதற்கிடையே சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் நடந்தது என்ன என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவே, “அவர்கள் என்ன சொன்னாலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காயங்களை வைத்து ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டுள்ளார் என நாங்கள் வாதாடுவோம்”என உறுதி யாகவே தெரிவிக்கிறார் ஸ்ரீமதியின் வழக்கறிஞர் சங்கர சுப்பு.
இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது ஸ்ரீமதியின் உடலில் உள்ள இரத்தம் போன்ற திரவங்கள் அகற்றப்பட்டிருக்கும். வெறும் உடலை மட்டுமே பரிசோதிக்கக்கூடிய வகையில்தான் நடந்திருக்கும். அப்படி நடந்த போஸ்ட்மார்ட்டத்திலேயே இத்தனை புதிய விவரங்கள் கிடைத்துள்ளது என்பது அதிர்ச்சிகரமான விஷயம் என்கிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள்.
படங்கள் : அஜித், முகமது நியமத்துல்லா
__________
இறுதிச்சுற்று
ஜூலை 11-ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று வெளியான தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு, சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் தலைமையிலான அமர்வின்முன் நடைபெற்ற இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில், எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "அ.தி.மு.க.வின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலையில் உள்ளது. தனி நீதிபதியின் முடிவுகள் யூகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஓ.பி.எஸ். என்ற தனிநபர் பயனடையும் வகையில்தான் தனி நீதிபதி தீர்ப்பு உள்ளதே தவிர, தொண்டர்கள் பயனடையும் வகையில் இல்லை'' என்ற வாதத்தை முன்வைத்தனர்.