லைமுறை கடந்தாலும் கம்பீரமான ஈர்ப்பு கொண்டவர் மகாகவி பாரதி. அவரது பிறந்தநாளையொட்டி, இளைய தலைமுறைக்கு பாரதியின் கவிதை வளத்தை அறிமுகம் செய்யவும், பாரதியைப் போன்ற கவிதை வளமுள்ள இளம் உள்ளங்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவும் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நக்கீரன் குழும இலக்கிய இதழான "இனிய உதயம்' இதழுடன் இணைந்து கவிதைப் போட்டியை அறிவித்தார்.

bharathi

மகாகவியின் பிறந்த தினமான டிசம்பர் 11-ஆம் தேதியன்று அவரது பிறந்த ஊரான எட்டய புரத்தில் பாரதி மணிமண்டபத்தில், நடந்த விழா வில் இந்த கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களை அறிவிக்கும் விழா நடை பெற்றது. கவிதைத் திருவிழாவுக்கு வந்திருந்தவர் களைத் தன் கவிச்சொற்களால் ஈர்த்து வரவேற் பளித்தார் "இனிய உதயம்' இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன். போட்டியில் கலந்துகொண்டு கவிதைகள் எழுதியவர்களின் கவிதைகளைக் குறித்தும் அதைத் தேர்ந்தெடுத்தபோது எழுந்த உணர்வுகளையும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அனைவருடனும் பகிர்ந்துகொண்டார். தொழில் துறை, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிபெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச் சர் கீதாஜீவன், மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முறுக்கு மீசைக்காரருக்கான கவிதைப் போட்டியை, இன்றைக்கு ஒரு பெரிய மீசைக்காரர் (நக்கீரன் ஆசிரியர்) விழாவாக எடுத்துக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள் எப்போதும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பார். தமிழ் மக்களின் மீது பிடிப்பு கொண்டவர். பாரதியின் புகழை நாம் அனைவரும் போற்றுவோம்!''’என பேசி விடைபெற்றார்.

Advertisment

bharathi

தலைமையுரையாற்றிய நக்கீரன் ஆசிரியர், "சத்தியமாகச் சொல்கிறேன்… இந்த விழா ஏற்பாடு, என்னுடையது இல்லை. சகோதரி கனிமொழி அவர்களுடையது. இந்த விழாவுக்காக அரும்பாடுபட்டவர் "இனிய உதயம்' இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன். பரிசுபெற்றவர்களைத் தேர்ந்தெடுத்த கவிஞர் ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இந்த நேரத்தில், துயரத்தை தூக்கிப்போட்டுவிட்டு வேலையைச் செய்துகொடுத்தார். பாரதி வாழும்போது உணவுக்குச் சிரமப்பட்டார். அது முக்கியமல்ல. ஒருவர் தன் காலத்துக்குப் பின் என்ன விட்டுச் சென்றார் என்பதுதான் முக்கியமானது. கவிஞரின் மறைவுக்குப் பின், இன்றைக்கு அவரைப் பேசாத ஊடகம் இல்லை. நாடு இல்லை.

ஆட்சிமாற்றம் என்பது எவ்வளவு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் எதிர்பார்ப்பைவிட கூடுதலாக முதல்வர் வேலைபார்ப்பதாக பாராட்டியிருக்கிறார். மகாகவி பாரதியார் பிறந்த தினத்தில் முதல்வரின் சுறுசுறுப்பை அவரது சகோதரியிடம் பார்த்தேன். பாரதியார் பிறந்த தினத்தில் பாரதியார் போட்டியில் வெற்றிபெற்றவர்களை அவரது மணிமண்டபத்தில் வைத்து தேர்ந்தெடுப்பது முக்கியமானது. மேடைக்கு பாரதி வேஷம் போட்டு வந்த ஒரு பெண் பிள்ளை, கனிமொழி எம்.பி.கிட்ட பேசிச்சு. "நான் தான் தூத்துக்குடியோட அடுத்த கலெக்டர்'னு. உடனே அவங்க தூத்துக்குடி கலெக்டர்கிட்ட அந்தப் பெண்ணைக் கொண்டுபோய், இவங்கதான் தூத்துக்குடி கலெக்டர்னு சொல்ல, உடனே தற்போதைய தூத்துக்குடி கலெக்டர் "உன் பேரென்னம்மா'னு கேட்க, விஜயலட்சுமினு சொன்னுச்சு. உடனே, "விஜயலெட்சுமி ஐ.ஏ.எஸ்.'னு திருத்துறார். பாரதி கண்ட கனவு இதுதான், விஜயலட்சுமி என்ற பெண் பிள்ளை கலெக்டராயிடுச்சு. இன்றைய நிகழ்வு எதுக்காக ஏற்பாடு செய்தோமா அது நடந்துடுச்சு''’என்று குறிப்பிட்டார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "விளாத்திக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் பேசும்போது, மூன்று லட்சம் ஏக்கர் கரிசல் பூமி இருக் கிறது. இதைக் கண்கொண்டு பார்க்கவேண்டுமென கோரிக்கை வைத்தார். இது கரிசல் பூமிதான். ஆனால் விடுதலை வேள்வியை உருவாக்கிய கந்தக பூமி என்பதை மறந்துவிடக்கூடாது. பராசக்தியிடம் பாரதியார் கோரிக்கை வைத்தார். அதேபோல பராசக்தியாக இருந்து கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினரிடம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அவர் கடைக்கண் பார்வை நிச்சயமாக இந்த பூமிக்குண்டு.

Advertisment

bharathibharathi

பாரதி கண்ட கனா பற்றிச் சொல்லவேண்டுமென்றால் "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் செய்வோம் பள்ளிச் சாலைகள் செய்வோமென' சொல்லியிருக்கிறான். ஒருகாலத்தில் கல்விச் சாலைகள் வைக்கும் பணியை கலைஞர் கொடுத்தார். அவர் திருமகன் ஆலை கள் வைக்கும் பணியை எனக்குக் கொடுத்திருக்கிறார். நிறைய ஆலைகளை உருவாக்கும் பாரதியின் கனவை தமிழக முதல்வர் நிறைவேற்றித் தருவார்'' என்று தனது மகிழ்வை வெளிப்படுத்தினார்.

அனைவருக்கும் பாரதியார் பிறந்த தின வாழ்த்துகள் சொல்லி தொடங்கிய கவிஞர் கனிமொழி எம்.பி., "நக்கீரன் குழுமத்தின் இனிய உதயத்தோடு இந்த நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பாரதி கவிதைப் போட்டி என்று அறிவித்ததும் 2000 பேர் கலந்துகொண்டு கவிதை எழுதியனுப்பினார்கள். அனைத்தையும் படித்து பரிசுக்குரிய கவிதை சிலவற்றை தேர்ந்தெடுத்த கவிஞர் தமிழ்நாடன் கீழ் பணியாற்றிய குழுவினருக்கு நன்றி.

மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சியின் நாயகன் நாயகிகளாக இருக்கும் முதன்மை பரிசு பெற்ற பிரியதர்ஷினி, தீபேஷ் வளன் இன்பராஜ், கலீல் ஜிப்ரான், கார்த்திகை மலர், பாரதி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். மற்ற பரிசுகளைப் பெற்ற ரேஷ்மா, ஆனி, ஈசன்தாஸ் மகராஜன், பரமாத்மிகா, நித்யஸ்ரீ, சிதம்பரம், ஜெருஷா, ஜெயராமன் ஆகி யோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எட்டுத் திக்கும் செல்வீர். வெவ்வேறு திக்கில் இருக்கும் கலைச்செல்வங்களை எல்லாம் கொண்டு வாருங்கள். தமிழ் மொழியை தமிழ் வாழ்வை வளப்படுத்துங்கள் என்று பாரதி தன் கவிதை வழியாகச் சொன்னார். இங்குள்ள மாணவர்களுக்கு முக்கியமாக ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே பாரதி மிக முக்கியமாகச் சொன்ன கருத்து.

அடுத்த தூத்துக்குடி கலெக்டர் நான்தான் என்று மேடைக்கு வந்துசொன்ன குழந்தையைப் போல… உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் கனவுகள் இருக்கும். அந்தக் கனவை எதற்காகவும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது.

வாழ்க்கையில் பாரதி பெருமையாகச் சொன்னார், எனக்குத் தொழில் கவிதை. வேறு யாரும் அப்படிச் சொல்வதில்லை. மருத்துவர், வழக்கறிஞர், கலெக்டர் என்று தொழிலைக் குறிப்பிடுவார்கள். கவிஞன் ஆகவேண்டுமென்று யாரும் சொல்வதில்லை.

இறுதி வரை கவிதை அவருக்கு பொருளையோ, அதிகாரத்தையோ, பெருமையையோ கொண்டு வந்து சேர்க்கவில்லை. பாரதி வாழ்ந்த காலத்திலே அவருக்கு அங்கீகாரம் கிடைத்ததா என்றால் இல்லை. தன் வாழ்நாளெல்லாம் தனது கனவுக்காக வாழ்ந்தவன் பாரதி.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஒன்றைச் சொல்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இந்த சமூகம் ஒன்றுகூடி நின்று எதிர்த்தாலும், எனக்கு ஒரு கனவு இருக்கிறது அதை நிறைவேற்றியே தீர வேண்டுமென என்ற உறுதியோடு வாழவேண்டும்.

பெண்ணிடம் பொதுவாக படிப்பு முக்கியமில்லை. போகுமிடத்தில் சென்று நன்றாக வாழவேண்டுமெனச் சொல்வார்கள். ஆனால் உங்களால் சாதிக்க முடியாததென எதுவுமில்லை என்று நான் சொல்வேன். தடைகளை எல்லாம் உடைத்து வென்றுகாட்ட வேண்டும் சாதித்துக் காட்டவேண்டும்.

இந்த சமூகத்திலே ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும். இணைந்துதான் வாழ்கிறோம். ஒருவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கவேண்டும். அதுதான் அடிப்படை. தாய்க்கும் சகோதரிக்கும் தரும் மரியாதையை, நம்முடன் படிக்கும் மாணவிகளுக்கு உடன் பணிபுரிபவர்களுக்கும் தரவேண்டும். அப்படிச் செய்யும்போது நம் சமூகத்தை மாற்றிக் காட்ட முடியும்'' என தன் உரையால் எதிர்கால மாணவச் சமூகத்தின் மனதில் நம்பிக்கையை விதைத்தார்.

வெகுநாட்களுக்குப் பின், எட்டயபுரம் மண்ணில் தன் பிறந்த நாள் அர்த்தத்தோடு கொண்டாடப்பட்டதையும், தன் கவிதைகள் பிஞ்சு நெஞ்சத்தில் ஊன்றப்பட்டதையும் கண்டு நிறை வோடு புன்னகைத்திருப்பான் முண்டாசுக் கவிஞன்.

-க.சுப்பிரமணியன், நாகேந்திரன்

படங்கள் : ப.இராம்குமார்