நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி பகுதிகளிலுள்ள குளம் குட்டைகளில் அளவுக்கதிகமாக மணல் கடத்தப்படுவது தொடர்கதையாகவருகிறது. குறிப்பாக, ஒரு வாகனத்திற்கு மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு அதே நடைச் சீட்டில் பல லோடுகள் கடத்தப்படுவது, காவல் மற்றும் வருவாய்த்துறை வரை எட்டியிருக்கிறதாம்.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி விஜயநாராயணம் அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மணல் திருடர்கள் ஜே.சி.பி. மூலமாக மணலை அள்ளிக் கடத்துவதாக போலீசாருக்குத் தகவல் வர, அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விஜயநாராயணம் போலீசார் சென்றபோது, ஜே.சி.பி. மற்றும் பைக் போன்ற வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு அருகிலுள்ள புதர்க்காடுகள் வழியாக மணல் திருடர்கள் தப்பியிருக்கிறார்கள். ஆனாலும் முயற்சியில் தளராத போலீசார், மணல் கொள்ளை சம்பவம் பற்றி விசாரித்தபோது, தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கங்கை ஆதித்தன் உட்பட அவரது சகாக்கள் சிலரைத் தேடி வந்திருக்கிறார்கள். அவர்களோ, போலீஸ் வருவதையறிந்ததும், நாங்குநேரி அல்லது விஜயநாராயணம் அல்லது திசையன்விளை வட்டம் போன்ற பகுதிகளில் பதுங்கிவிடுவதால், தங்கள் -மிட்டுக்குள் வரவில்லை யென்று போலீசார் திரும்பிவிடுவார்கள். இப்படியாகத்தான் மணல் கொள்ளையர்கள் தப்பி வந்திருக்கிறார்கள்.
தவிர, மணல் கொள்ளையின் மாஸ்டர் மைண்டான கங்கை ஆதித்தனை முன்பெல்லாம் போலீசார் அவரது வீட்டிலேயே வளைக்க முற்படும்போது, வீட்டை பூட்டிக்கொண்டு, "கொஞ்சம் பொறுங்க, டிரஸ்ஸ மாத்திட்டு வந்திடுறேன்'' எனக் கூறிவிட்டு வீட்டின் பின்புறம் வழியாக ஓட்டம்பிடித்து தலைமறைவாவது வழக்கமாக இருந்திருக்கிறது. கங்கை ஆதித்தன் ஆளுங்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் பிரதிநிதி என்கிறார்கள் அப்பகுதியினர். கங்கை ஆதித்தனின் டெக்னிக்கை புரிந்து கொண்ட விஜய நாராயணம் இன்ஸ்பெக்டரான நாககுமாரியும், போலீஸ் படையும், ஆகஸ்ட் 30ஆம் தேதி அதிகாலையில் சாத்தான்குளத்திலிருக்கிற அவரது வீட்டைச் சுற்றி வளைத்துள்ளனர்.
போலீசார் வீட்டின் கதவைத் தட்டிய போது, வெளியே வந்த கங்கை ஆதித்தனின் மனைவி, போலீசாரைக் கண்டு அதிர்ந்து, வீட்டுக்குள் செல்லவிடாமல் தடுத்திருக்கிறார். இதனிடையே, தன்னைக் கைது செய்ய போலீஸ் வந்ததையறிந்த கங்கை ஆதித்தன், வீட்டின் அறைக்குள் புகுந்து உட்பக்கம் தாளிட்டுக் கொண்டாராம். போலீசாரிடம் கங்கை ஆதித்த னின் மனைவி கடும் வாக்குவாதம் செய்திருக் கிறார். அடுத்ததாக, கங்கை ஆதித்தனின் உறவினர் களும் நண்பர்களும் திரண்டுவந்து போலீசாரைத் தடுத்திருக்கின்றனர். இதன் உச்சமாக, கங்கை ஆதித்தனின் மனைவி, தனது மகள், மகனை கேடயமாகப் பயன்படுத்தி போலீஸ் வாகனத்தை மறித்திருக்கிறார். போலீசாருக்கோ கையறு நிலை!
இந்தச் சூழலில் தான் யாருமே கற்பனை செய்யாத சம்பவம் நடந்தது. ஒரு திரைப்படத்தில் வடிவேலு தலைமையிலான போலீசார் பெண் கஞ்சா குற்றவாளியைப் பிடிப்பதற்காக அவரின் வீட்டினுள் செல்ல, அந்த பெண்ணோ, "உள்ள வராத. நா, அம்மணமா நிக்கேன்'' என்பார். ஆனால் வடிவேலு அதையும் மீறி துணிச்சலாக உள்ளே செல்ல, வடிவேலுவின் உடுப்புக்களை உருவிவிட்டு, அந்த பெண்மணி பின்கதவு வழியாக வெளியேறிவிடுவார். அப்போது இந்த நகைச் சுவைதான் தமிழகத்தில் டிரெண்டிங். இந்த டெக்னிக்கை அப்படியே மனதில் வைத்து துணிச்சலாக, "உள்ளார வராதீக, நா நிர்வாணமா இருக்கேன்'' என்று உரக்கக் கத்தி நிர்வாண மிரட்டல் விடுத்திருக்கிறார் கங்கை ஆதித்தன். அவரது நிர்வாண மிரட்டலைக் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் நாககுமாரி அதிர்ச்சியில் மிரண்டே போய்விட்டாராம். ஆனாலும் துணிச்சலை வர வழைத்த, இன்ஸ். நாககுமாரி, விஷயத்தை அப்படியே நாங்குநேரி ஏ.எஸ்.பி. பிரசன்னகுமா ருக்குத் தெரிவித்திருக்கிறார். அலர்ட்டான ஏ.எஸ்.பி. கூடுதல் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். வீட்டையே போலீசார் ரவுண்ட் கட்டியிருப்பதால் கங்கை ஆதித்தன் வெளியே வர, தப்பிக்க முடியாத நிலை என்பதால் கடைசி பாணமாக நிர்வாண மிரட்டல் அம்பை எய்திருப்பது தெரியவர, படையுடன் ஸ்பாட்டிற்கு வந்த ஏ.எஸ். பி.யிடம் "கைது நடவடிக்கை வேண்டாம்'' என்று கெஞ்சியிருக்கிறார் மணல் கொள்ளையனின் மனைவி.
இப்படியாக போலீ சார் நான்கு மணிநேரம் அவரைக் கைது செய்யப் போராடியிருக்கிறார்கள். அதற்குள் மின்னலாய் பரவிய தகவலால் கிராம மக்களின் கூட்டம் பரபரப்போடு அங்கே திரண்டிருக்கிறது. தான் நிர்வாணமாக நின்றால் போலீசார் கூச்சப்பட்டு உள்ளே வர மாட்டார்கள், தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஆடைகளைக் களைந்த கங்கை ஆதித்தன் நிர்வாணமாகவே நின்றிருக்கிறாராம். ஆனாலும் விக்கிரமாதித்ய முயற்சியாய் தளராத போலீசார் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அந்த நிலையிலிருந்த கங்கை ஆதித்தனை போர்வை யால் மூடிக் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.
"கங்கை ஆதித்தன் மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டி ருக்கிறார்'' என்றார் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன். கங்கை ஆதித்தனின் இது போன்ற அநாகரீகமாக ஆபாசமான அட்ராசிட்டி இரண்டாவது முறையாம்.
-ப.இராம்குமார்