ஆன்லைன் கேம் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு, கல்லூரி மாணவன் குருநாத்தின் கதையே துயர உதாரணம்.
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகேயுள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்த ஸ்ரீதரன், திக்கணங்கோடு ஊராட்சிமன்ற அ.தி.மு.க. கவுன்சிலராக இருக்கிறார். இவரது மனைவி அனுசுயா அந்த பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகன்தான் குருநாத். 19 வயதே ஆன குருநாத், நாகர்கோவில் கல்லூரி ஓன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, குருநாத், தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ள, அவரது குடும்பமே நிலைகுலைந்தது. எதற்காக இப்படி என்று மாணவனின் குடும்பத்தினர் தவித்தனர்.
இந்தச் சூழலில் அவர்களின் உறவுக்காரப் பெண் ஒருவர், குருநாத்தின் செல்போன் மற்றும் லேப்டாப்பை சோதித்தபோது, அவர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, ஏகத்துக்கும் பணத்தைப் பறி கொடுத்திருப்பதும், அந்த ஆன்லைன் கும்பலின் மிரட்டலுக்குப் பயந்தே குருநாத் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவர... இந்த விவகாரம் போலீஸ்வரை சென்றது.
இது குறித்து நம்மிடம் பேசிய குருநாத்தின் தந்தை ஸ்ரீதரன்... "எங்களுக்கு ஒரே பிள்ளை குருநாத். அதனால் ரொம்பவும் செல்லமாக வளர்த்தோம். காலேஜ் விட்டா வீட்டை தவிர வேறு எங்கும் போகமாட்டான். அப்படிப் பட்டவன் எப்படியோ ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாகியிருக்கிறான். இதில் பணம் கட்டி விளையாடச் செய்த அந்த ஆன்லைன் கும்பல், அதற்கான பணத் தேவைக்கு 03287872864, +8801904740824, +9232466005852 -இந்த எண்களைக் கொடுத்து, பணம் வாங்கிக்கொள்ள லாம் என்று சொல்லியிருக்கிறது. இதன் ஆபத்தை உணராமல் விளையாடியிருக்கிறான். குருநாத் செல்போனுக்கு அவர்கள் ஞப்ஹ்ம்ல் பழ்ஹக்ங், ஏழ்ர்ஜ்ய் ஹல்ல் என இரண்டு ஆப்பை அனுப்பியிருக்கிறார்கள். அதை அவன் இன்ஸ்டால் செய்து, அதன் மூலம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விளையாடி இருக்கிறான். அந்தப் பணத்துக்கு வட்டியும் கட்டி இருக்கிறான். இருந்தும் அந்த எண்களில் இருந்து குருநாத்தை தொடர்புகொண்ட மனீஷ், அயாத்அகிமெஸ் ஷாகிப் என பெயர் கொண்ட இருவர், மேலும் மேலும் பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு குருநாத் பணம் செலுத்திவிட்டேன் என்றதும், எங்கள் கணக்கில் பணம் வந்து சேர வில்லை என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து குருநாத் ரூ 8,500 அனுப்பியுள்ளான்.
அதன் பிறகும் அவர்கள் தொடர்ந்து பலவிதத்திலும் மிரட்டி வந்ததால் குருநாத் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து 60 ஆயிரம் ரூபாய்வரை அனுப்பியுள்ளான். இந்த பணம் அவனது படிப்புச் செலவுக்கு நாங்கள் போட்டு வைத்தது. ஒருகட்டத் தில் இந்த டீமிடமிருந்து தப்பிக்க நினைத்த குருநாத், "உங்களைப் பற்றி என் பெற்றோரிடம் சொல்லப் போகிறேன்' என்றிருக்கிறான். உடனே அந்த டீம் குருநாத்தின் படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து அனுப்பியதோடு, நீயும் உனது கல்லூரித் தோழியும் உரையாடிய செக்ஸ் ஆடியோவை உன் செல்போனில் இருக்கிற அத்தனை எண்ணுக்கும் அனுப்புவோம் என்றெல்லாம் திகிலூட்டி யிருக்கிறார்கள். இதனால், அந்தக் கும்பலின் டார்ச்சர் தாங்காமல்தான் குருநாத் தற்கொலை பண்ணிக்கொண்டிருக்கிறான். இப்போது இது குறித்தெல்லாம் போலீஸில் சொல்லியிருக்கிறேன். சைபர் க்ரைம் போலீஸ் விசாரித்துக்கொண்டி ருக்கிறது''’என்றார் கலக்கமாய்.
குருநாத்தின் தாயார் அனுசுயாவோ, "அவன் தற்கொலை செய்துகொண்ட பிறகும்கூட அவன் செல்போனுக்கு மிரட்டல் மெசேஜ் வந்துருக்குன்னா பார்த்துக்கங்க. எங்க மகனின் பேங்க் அக்கவுண்ட் தொடங்கி, ஆதார் கார்டு, பேன் கார்டு, ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் செல்போன் சாட்டிங், கால் ரெக்கார்டர் என எல்லாம் விபரங்களையும் அந்தக் கும்பல் எடுத்திருக்கு. நிர்வாணக் கோலத்தில் பூணூலோடு இருந்த ஓருவருடைய புகைப்படத்தில் எனது மகனின் தலையை மார்பிங் செய்து, அந்த படத்தை அவனுக்கு அனுப்பி மிரட்டியிருக்கிறார் கள். இந்த மிரட்டலை சமாளிக்க முடியாமல், இப்படி ஒரு முடிவை எங்க மகன் எடுத்திருக்கான். இப்படிப்பட்ட ஆபத்தான ஆன்லைன் கும்பல் களிடம் இருந்து மாணவர்களையும் இளைஞர் களையும் மீட்டாக வேண்டும். அரசும் காவல்துறை யும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, யாரும் இவர்களால் பலியாகாமல் தடுக்க வேண்டும்'' என்றார் நீர் திரண்ட விழிகளோடு.
இது குறித்து நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசாரிடம் கேட்டபோது, "ஆன்லைனில் விளையாடுபவர்களுக்கு பணம் தேவை. இதற்கு வெளிநாடு மட்டுமல்ல, இந்தியாவிலே 100-க்கு மேற்பட்ட ஃபைனான்ஸ் ஆப் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானாவில் பல ஆன்லைன் டிரேடிங் பிசினஸ் நிறுவனங்கள் உள் ளன. குருநாத்துக்கு பணம் கொடுத்த ஆன்லைன் நிறுவனம் மகராஷ்டி ராவை சேர்ந்தது. அதேபோல் ஆன்லைனில் கேம் விளையாடும் போது அவர்களும் பணம் தேவை என்றால் ஓரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லு கிறார்கள். அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யும்போது, அது கேட்கும் நிபந்தனைகளை யாரும் படித்துப் பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் ஓ.கே. செய் கிறார்கள். அந்த நிபந்தனைகளில் ஒன்று "உங்க ளுடைய செல்போனில் அனைத்து டேட்டாக்களை யும் நாங்க பார்க்க உரிமை இருக்கிறதா?' என்று. அதற்கு ஓ.கே. சொல்வார்கள். அதன் பிறகு நம்மு டைய செல்போனில் நாம் என்ன செய்கிறோமோ, என்ன தகவல் வருகிறதோ... எல்லாம் டேட்டாவை யும் அவர்கள் எடுத்துவிடுவார்கள். அதன்பிறகு தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுவார் கள். குருநாத்தை பிளாக்மெயில் செய்து தற் கொலைக்கு தூண்டிய அந்தக் கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்''’என்றனர்.
உயிர்வேட்டை நடத்தும் ஆன்லைன் வில்லன்களை அரசு உடனடியாக ஒடுக்கவேண்டும்.