தி.மு.க. கனி மொழியை எதிர்த்து தூத்துக் குடியில் களமிறக்கப்பட்ட பா.ஜ.க. நயினார் நாகேந்திரன், அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை வேட்பாளராக அறி விக்கப்பட்டார். தொகுதி மாற்றப்பட்டதிலும், சீட் வாங்கியதிலும் நயினார் நடத்திய டெல்லி சீக்ரெட் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் மனம்திறந்த தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், ‘"ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவர் நயினார். அரசியலிலும் தொழிலிலும் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஜோதிடர்களின் ஆலோசனையின்றி நடப்பதில்லை.
அந்த வகையில், ஜோதிடர்களின் யோசனையின்படியே தொகுதியை மாற்றி அறிவிக்கச் செய் திருக்கிறார் நயினார். அதாவது, வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப் படும்போதே சர்ச் சைக்குரிய விசயங் கள் அடிபட வேண் டும். தொகுதி மாற்றப்பட்டார் என்கிற செய்தி உங்களுக்கு நன்மை யைத் தரும். அதுவும் உங்களின் ஜாதகத்தில் இப் போ நடக்கும் கிரக சூழலை வைத்து பிரசன்னம் பார்க் கும்போது, கிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு மாறுவது அரசியலில் பலனளிக்கும் என ஜோதிடர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, நெல் லைக்க
தி.மு.க. கனி மொழியை எதிர்த்து தூத்துக் குடியில் களமிறக்கப்பட்ட பா.ஜ.க. நயினார் நாகேந்திரன், அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை வேட்பாளராக அறி விக்கப்பட்டார். தொகுதி மாற்றப்பட்டதிலும், சீட் வாங்கியதிலும் நயினார் நடத்திய டெல்லி சீக்ரெட் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் மனம்திறந்த தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், ‘"ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவர் நயினார். அரசியலிலும் தொழிலிலும் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஜோதிடர்களின் ஆலோசனையின்றி நடப்பதில்லை.
அந்த வகையில், ஜோதிடர்களின் யோசனையின்படியே தொகுதியை மாற்றி அறிவிக்கச் செய் திருக்கிறார் நயினார். அதாவது, வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப் படும்போதே சர்ச் சைக்குரிய விசயங் கள் அடிபட வேண் டும். தொகுதி மாற்றப்பட்டார் என்கிற செய்தி உங்களுக்கு நன்மை யைத் தரும். அதுவும் உங்களின் ஜாதகத்தில் இப் போ நடக்கும் கிரக சூழலை வைத்து பிரசன்னம் பார்க் கும்போது, கிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு மாறுவது அரசியலில் பலனளிக்கும் என ஜோதிடர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, நெல் லைக்கு கிழக்கில் இருப்பது தூத்துக்குடி தொகுதி. அதன் வேட் பாளராக முதலில் தன்னை அறிவிக்கும்படியும், பிறகு அதனை மாற்றி நெல்லைக்கு அறிவிக் கும்படியும் மேலிடத்தில் கேட்டுக்கொண்டார் நயினார். பா.ஜ.க. மேலிடமும் ஜோதிடத்தில் கண்மூடித்தனமான ஆழ்ந்த நம்பிக்கை கொண்டி ருப்பதால் நயினாரின் கோரிக்கைப்படியே நடத்தப்பட்டது.
நெல்லைக்கு இவர்தான் என 1 மாதத்திற்கு முன்பே கட்சித் தலைமை தீர்க்கமாக முடி வெடுத்த நிலையில், தொகுதி மாற்றி அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை; மேலும், தூத் துக்குடி த.மா.கா. வுக்கு முடிவான நிலையில் அத் தொகுதியை நயி னாருக்கு எப்படி ஒதுக்குவார்கள்? அதனால், இதெல் லாம் நயினாரின் ஜோதிடத் திட்ட மிடல். அவருக் கேற்ப கட்சி மேலிடமும் தூத்துக் குடியை முதலில் அறிவித்து, பிறகு நெல்லைக்கு மாற்றி நாடகம் ஆடியது''’என்று விவரிக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்களில் நயினார் நாகேந்திரனும், வானதி சீனிவாசனும் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து டெல்லிக்கு பறக்க வேண்டும் என திட்டமிட்டனர். ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு எம்.பி. சீட் தர தமிழக பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும், மூத்த தலைவர் களும் வலிமையாக எதிர்த்தனர். அதனை பா.ஜ. க.வின் டெல்லி மேலிடமும் புரிந்துகொண்டது.
இப்படி எதிர்ப்புகள் இருந்தும் சிட்டிங் எம்.எல்.ஏ.வான நயினாருக்கு எம்.பி. சீட் வழங்கி யிருக்கிறது டெல்லி. இது எப்படி சாத்தியம்? என்கிற அலசலைத்தான், தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் விறுவிறுப்பாக விவாதித்துக்கொண்டி ருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வில் மத்திய உளவுத்துறையின் (ஐ.பி.) ரிப்போர்ட்டுகளும் இருப்பதால், உளவுத்துறை சோர்ஸ் வட்டாரங்களில் இது குறித்து நாம் விசாரித்த போது, ‘’"நயினார் நாகேந்திரனைச் சுற்றி டெல்லியில் லாபி செய்யும் மீடியேட்டர்களும், தொழிலதிபர்களும் இருக்கிறார்கள். அவர்களின் காய் நகர்த்தல்கள்தான் தமிழக பா.ஜ.க. தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி நயினாருக்கு சீட் கிடைக்கச்செய்தது.
நயினாரின் ஹோட்டல் பிஸ்னெஸ் உள் ளிட்ட நிறைய தொழில்களை முத்துக்கிருஷ்ணன் என்ற தொழிலதிபர்தான் கவனித்து வருகிறார். இந்த முத்துக்கிருஷ்ணன், தமிழக அரசுக்கு சொந்தமான டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் ரெஸ்ட்ராண்ட் காண்ட்ராக்ட்டை எடுத்திருப்பவர்.
ஜெயலலிதா காலத்திலிருந்தே இந்த ரெஸ்டாரண்ட்டை தனது பிடியில் வைத்திருந்த முத்துக்கிருஷ்ணனை, ஒரு கட்டத்தில் அங்கிருந்து விரட்டியடித்தனர். முத்துக்கிருஷ்ணனுக்கு பல மாநிலங்களில் நிறைய மேலிடத் தொடர்புகள் இருக்கிறது. குறிப்பாக, ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனின் நெருக்கமான ஆலோசகர் பத்மநாபன், ஒடிஷா மாநில அரசின் ஆலோசகர் (கேபினெட் அந்தஸ்து பதவி) பாண்டியன் ஆகியோர் முத்துக்கிருஷ்ண னுக்கு நெருக்கம். இவர்களிடம் நயினாரை அறிமுகப்படுத்தி வைக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
கவர்னர் சி.பி.ஆருடன் நயினாருக்கு ஏற்கனவே தொடர்பிருப்பதால் மற்றவர்களின் நம்பிக்கையை நயினார் பெறுவது எளிதாக இருந்தது. முத்துக்கிருஷ்ணனை வைத்து இவர்களின் உதவி மூலமாக வட இந்தியாவில் சுரங்கத் தொழிலில் கோலோச்ச வேண்டுமென்பது நயினாரின் திட்டம்! அதற்கு, எம்.பி. பதவியும் ஒன்றிய அமைச்சர் பதவியும் வேண்டும்.
இந்த திட்டத்தின் அடிப்படையில்தான் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது லாபியிஸ்டுகள் நயினாரை ராஜ்யசபா எம்.பி.யாக்க தங்களுக்கிருக் கும் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளின் தொடர்புகளில் கடந்த 3 மாதங்களாக முயற்சி எடுத்தனர்.
உயரதிகாரிகளோ, ”லோக்சபாவில் ஜெயிக் கட்டும்; ராஜ்யசபாவை பிறகு பேசலாம் எனச் சொன்னதோடு, அவருக்கு லோக்சபா சீட் கிடைக்க அதிகார மையத்துடன் லாபி செய்தனர். அதன் விளைவாக நெல்லை தொகுதி உறுதி செய்யப் பட்டது. நயினாருக்கு சீட் தரக்கூடாது என பலத்த எதிர்ப்பு இருந்தும் அவருக்கு சீட் கிடைக்கச் செய்த டெல்லி சீக்ரெட் இதுதான்''” என்கிறார்கள் உளவுத்துறையினர்.
தாங்கள் திட்டமிட்டபடி எல்லாம் நடந்து வருவதால், "ஜெயித்தாலும், தோத்தாலும் நான் தான் தமிழகத்தின் அடுத்த மத்திய அமைச்சர்' என இப்போதே கான்ஃபிடண்டாக உதார்விட்டுக் கொண்டிருக்கும் நயினார், தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும், பிரதமர் மோடி மற்றும் அமித்சா போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணி செய்ய கிளம்புகிறார். அங்கு மத்திய அமைச்சருக்கான உறுதியைப் பெறுவதற்கான காய்களை நகர்த்தி வைத்துவிட்டே நயினார் தமிழகம் திரும்புவார். "நயினாரின் இந்த சீக்ரெட் மூவ்கள் பா.ஜ.க.வின் மாநில தலைவருக்கு கிலியை ஏற்படுத்தி யிருக்கிறது' என்கிறார்கள்.