அரசியல் ஆதரவுப் பிரமுகர் மர்ம மரணம்! -அவிழ்க்கப்படாத முடிச்சுகள்!

vasan

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் சாதிக்பாட்சாவின் தற்கொலையும் அதன் மர்மங்களும் அரசியல் களத்தில் அதிர்வுகளை உண்டாக்கின. அது போலத்தான், இன்னொரு மர்ம மரணமும் அரசியல் களத்தில் அலசப்படுகிறது.

vasan

நவம்பர் 16ஆம் தேதி சென்னையில் அதிகாலை 4 மணிக்கு வாஸன் குழுமத்தின் உரிமையாளர் அருண் முருகையா அவருடைய இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக பரவிய தகவலால், தமிழகம் பரபரப்பானது. இவருடைய தந்தை வாஸன் முருகையா கரூர் முன்னாள் எம்.பி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் சாதிக்பாட்சாவின் தற்கொலையும் அதன் மர்மங்களும் அரசியல் களத்தில் அதிர்வுகளை உண்டாக்கின. அது போலத்தான், இன்னொரு மர்ம மரணமும் அரசியல் களத்தில் அலசப்படுகிறது.

vasan

நவம்பர் 16ஆம் தேதி சென்னையில் அதிகாலை 4 மணிக்கு வாஸன் குழுமத்தின் உரிமையாளர் அருண் முருகையா அவருடைய இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக பரவிய தகவலால், தமிழகம் பரபரப்பானது. இவருடைய தந்தை வாஸன் முருகையா கரூர் முன்னாள் எம்.பி., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவிக்கு பிறந்தவர் ரவி முருகையா. ஜி.கே. வாசனின் ஆதரவாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்ட பறந்து கொண்டிருக் கிறார். இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர், மருத்துவரான அருண் முருகையா. முன்னாள் மத்திய அமைச்சரின் ஆதரவாளராக இருக்கும் இவருக்கு இந்தியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் மொத்தம் 120க்கும் அதிகமான மெடிக்கல் கிளைகள் உள்ளன. அதோடு வாஸன் கண் மருத்துவமனை, ஏபிசி மருத்துவமனை, என நடத்தி வந்தார்.

மொரிசியஸ் நாட்டுடனான பண பரிவர்த்தனையால் அமலாக்க துறையின் பார்வை திரும்பியது. 2ஜி வழக்கில் இவரையும் ஒரு சாட்சியாக சேர்த்து, பலகட்ட விசாரணையை நடத்தியது. விசாரணைக்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளான இவருடைய எல்லா தொழில் சார்ந்த முடிவுகளையும் இவருடைய மனைவி நிர்வகிக்க துவங்கினார்.

கடன் தொல்லை ஒருபுறம் இருக்க, இவருடைய மாமனார் வீட்டில் இருந்து அடிக்கடி பண உதவி செய்துவந்த நிலையில், நெருக் கடிகளை மறக்க குடிப்பழக்க மும் சேர்ந்து கொண்டது. இவரது நிறுவனத்திற்கு மருந்து, மாத்திரைகளை சப்ளை செய்யும் பெரிய பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் தங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும் என்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

இவருடைய தொழில் 70 சதவீத பங்கு முன்னாள் மத்திய அமைச்சருடைய குடும்பத்துக்கு சொந்தமானது, 30 சதவீத பங்கே அருண் முருகையாவிடம் உள்ளது. அந்த 70% முதலீட்டை சம்பந்தப்பட்டவர்கள் திரும்பப் பெற்றதுதான் நெருக்கடிக்கு காரணம் என்கிறார்கள் நிலவரம் அறிந்தவர்கள். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வெளிநாட்டில் சில மாதங்கள் தங்கியிருந்த அருண் முருகையா, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்துள்ளார்.

கடன் நெருக்கடியால், நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அருண் முருகையா உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்கொலை சர்ச்சைகள் பரபரப்பாகியுள்ளன.

-துரை.மகேஷ்

nkn211120
இதையும் படியுங்கள்
Subscribe