நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மர்ம மரணத் தினைக் கண்டுபிடிக்க 8 தனிப்படை களை அமைத்துள்ளது நெல்லை மாவட்ட காவல்துறை. எனினும், "நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், கள்ளிகுளம் முன் னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தராஜ் மற்றும் சொந்த குடும்பத்தினரே குற்றவாளிகளாக இருக்கலாம்' என்கின்ற மூன்று கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் காவல்துறையினர்.
"அப்பாவின் செல்போன் அணைத்து வைக்கப் பட்டுள்ளது. 2ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் இன்னும் வரவில்லை' என 3ஆம் தேதி உவரி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மறுநாள் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்திலேயே "ஒரு அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தில் எரிந்த நிலையில் பிணம் கிடக்கின்றது' என தோட்டத் தொழிலாளி தகவலளிக்க... அந்த பிணம் கே.பி.கே. ஜெயக்குமாருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்சார வயர்களால் கை, கால்கள் கட்டப்பட்டும், வயிற்றில் மொசைக் கல் ஒன்றால் கட்டப்பட்டும் அரைகுறையாக எரிந்த நிலையில் கிடந்தது பிணம். இதேவேளையில் இறந்தவர் எழுதியதாக அன்றே ஒரு கடிதமும், ஞாயிறன்று ஒரு கடிதமும் வெளியானது. முதல் கடிதத்தில் 5 நபர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதையும், இரண்டாவது கடிதத்தில் 14 நபர்களிடமிருந்து தனக்கு வரவேண்டிய பணம் குறித்தும், பிளாட் விற்பனை குறித்தும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கோணம் 1 -எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்:
கொலையாளிகள் காஞ்சிபுரமா.? மறுகால் குறிச்சியா..?
ஏறக்குறைய 60 ஆண்டு கால காங்கிரஸ் பாரம்பரியத்தைக் கொண்டது கரைச்சுத்துப் புதூரில் மர்ம மரணமடைந்த கே.பி.கே.ஜெயக் குமாரின் குடும்பம். அப்பா கருத்தையா அன்றைய காலத்தில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தலைவராக பதவி வகித்தவர். பெரும் நிலபுலன்களைக் கொண்ட கே.பி.கே. ஜெயக்குமார், ரோடு காண்ட்ராக்ட்டிலும் வல்லவர். இதுதான் அந்த குடும்பத்திற்கு பெருத்த வருவாயை ஈட்டித் தந்துள்ளது ஒருகாலத்தில். இப்பொழுது பொருளாதாரத்தில் ஜீரோ. அரசுப்பணி ஒப்பந்ததாரரான இவர் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டது தனிக்கதை.
"அரசியல் பின்புலம் கொண்டாலும் நேரடி அரசியலில் இவர் கலந்துகொண்டதே இல்லை. இன்னாருக்காக, இவருக்காக என்றுதான் இவர் அரசியல் செய்வது வழக்கம். இப்பொழுது நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரூபி மனோகரனும் இவரும் துவக்கத்தில் நெருக்கமாக இருந்தனர். போகப் போக, தான் ஒரு எம்.எல்.ஏ. என்கின்ற மமதையில் இவரை சட்டை செய்வதில்லை அவர். நெருக்கமாக இருந்த காலத்தில் தன்னை அரசு ஒப்பந்தப்பணிக்கான பிளாக் லிஸ்டிலிருந்து எடுத்துவிடவும், சப் காண்ட்ராக்ட்கள் வாங்கிக் கொடுக்கவும் ஏகப்பட்ட லட்சங்களை ரூபி மனோகரனுக்கு அள்ளி இறைத்திருக்கின் றார். இதில் தங்கபாலுவும் அடக்கம். இதனை 30-04-2024 அன்று அவரால் எழுதப்பட்ட கடிதத்திலேயே காணலாம். எனினும், அவரை நம்பி வந்தார். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப் படுவது தெரிந்தவுடன் பணத்தை திரும்பக் கேட்டிருக்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பம் இது. அதனால் தன்னுடைய, தன் மகனுடைய அரசியல் வாழ்வு பாதிக்கும். அதுபோக பணம்... இரண்டுமாக சேர்ந்து கே.பி.கே.ஜெயக்குமார் மீது பகை அதிகமாகியிருக்கின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லையில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரூபி மனோகரன் அங்கு போட்டியிட பகீரத பிரயத்தனம் செய்தார். ஆனால், கட்சியின் மாவட்ட பொருளாளரான களக்காடு பால்ராஜை எம்.பி.க்கான போட்டி வேட்பாளர் பட்டியலில் இடம்பெறச் செய்தார் கே.பி.கே.ஜெயக்குமார். இறுதியில் ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக வந்தார். எனினும், ஜெயக் குமாரால்தான் தனக்கு எம்.பி. சீட் கிடைக்க வில்லை என்கின்ற காயம் உண்டாகியுள்ளது. இந்த கட்சிப் பகையினாலயே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்'' என்கிறார் கே.பி.கே. ஜெயக்குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவர்.
"ஜெயக்குமாரின் மரணத்தில் கூலிப் படையாக காஞ்சிபுரம் டீமோ, மறுகால் குறிச்சி டீமோ செயல்பட்டிருக்கலாம் என்கிற கோணத் திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது காவல்துறை. இதற்காக எம்.எல்.ஏ. தரப்பு மொபைல் அழைப்புகளை ஆய்வு செய்துவரு வது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில், காங் கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந் தகையோ, "குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அடையாளப்படுத்த வேண்டியது காவல்துறை யின் பொறுப்பு' என்றிருக்கின்றார். இருப்பினும், "கொலை செய்யுற அளவிற்கெல்லாம் எம்.எல்.ஏ. போகமாட்டார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்தது உண்மை. சில மாதங்களுக்கு முன்பு கே.பி.கே.ஜெயக்குமாரின் கார் விபத்துக்குள்ளான நிலையில் அதை சீர்செய்து கொடுத்தது எம்.எல்.ஏ.வே' என்கின்றார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஒருவர்.
கோணம் 2 -கள்ளிக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தராஜ்:
"ரியல் எஸ்டேட் தொழிலில் துவக்கத்தில் கே.பி.கே.ஜெயக்குமாரும், ஆனந்தராஜும் நண்பர்களே. 18 வருடத்திற்கு முன்பு ஆனந்த ராஜுக்கு கொடுத்த ரூ46 லட்சத்திற்காக அவர் பெயரிலுள்ள வள்ளியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரிலுள்ள 7.8 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு கிரையமாக மாற்றியிருக்கின்றார் கே.பி.கே. ஜெயக்குமார். பெயரளவில்தான் இந்தப் பத்திரமே. பணம் கொடுத்தால் உனது பெயருக்கு மாற்றித் தருகின்றேன் என்றார் அப்பொழுது. இறுதி வரையிலும் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டும், இடத்தை தரவில்லை இவர். ஒருகட்டத்தில் கோபமாகி இடத்தின் மீது வழக்கினை தொடர்ந்திருக்கின் றார் ஆனந்தராஜ். இதுகுறித்து தனது மரண வாக்குமூல கடிதத்தில் பதிவு செய்தவர், "பணத்தைக் கேட்டால் பாம்பே ரவுடி நான் என மிரட்டுகின்றார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கின்றது'' என காண்பித்திருக் கின்றார். பணமும் போச்சு, இடமும் போச்சு என்ற நிலையில் இந்த கடிதத்தில் அவர் குறிப் பிட்டிருக்கலாம். இருப்பினும், ஆனந்தராஜின் இரண்டாம்கட்டத் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றோம்'' என்கிறார் தனிப்படை அதிகாரிகளில் ஒருவர். இதில், சம்பந்தப்பட்ட ஆனந்தராஜ் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோணம் 3: சந்தேக வளையத்தில் குடும்பத்தார்:
"முதல் நாள் காய்கறி வாங்கிக் கொடுத்து விட்டு மன்னார்புரம் சென்று வருகின்றேன் என காரை எடுத்துக்கொண்டு சென்றவரின் கார் மட்டும் எப்படி மீண்டும் அதே இடத்தில் நிற் கின்றது? எப்பொழுது திரும்ப வந்தார்? என் கின்ற முதல் கேள்வியிலேயே சிக்கலுக்குள்ளாகி யுள்ளனர் இறந்த கே.பி.கே.ஜெயக்குமாரின் குடும்பத்தார். மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத் தையா ஜெப்ரீன், ஜோஸ்பின், மகள் கேத்ரின் என அளவான குடும்பம். இதில் கடந்த 2023 ஜனவரியில் சொந்த அக்கா மகன் ஜெபாவிற்கு, மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மருமகன் ஜெபாவின் ஊர் கள்ளிக்குளம் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையில் பணியாற்றிவரும் இறந்த கே.பி.கே. ஜெயக்குமாரின் உறவினர் ஒருவரோ, "காணாமல் போய்ட்டார்னு தகவல் சொன்னப் பவே திருநெல்வேலி களக்காடு என ஊர், ஊராக தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை. மறுநாள் உவரி போலீஸ் ஸடேஷனில் கம்ப்ளைண்ட் கொடுத்தாங்க. அடுத்தநாள் அவருடைய தோட்டத்தி லேயே பிணமாக கிடந்திருக் கின்றார். கூடவே அது அவர்தான் என்பதற்காக அவருடைய அடையாள அட்டைகள்! கொலை செய்து போடுறவன் இவர் தான் இது என அடையாள அட்டை போட்டு வைப்பாய்ங்களா? என முதலிலேயே சந்தேகம் வந்துச்சு. மோப்ப நாயும் வீட்டிற்கு வடக்கு பக்கம் இருக்கின்ற வாசல் வழியாக தோட்டத்திற்கு சென்று, மீண்டும் அதே பகுதிக்கு திரும்பியது. வெளியில் கொலை செய்தால் இங்க வந்து போட முடியுமா? கை, கால்கள் எலக்ட்ரிக் வயர்களாலும், வயிற்றில் மொசைக்கல்லாலும் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றார். எரித்துதான் கொன்றார்கள் என்றால் அதற்கான தடயமான கேன் இல்லை. ஒருவேளை மின்சார ஷாக் கொடுத்து அவர் கொலை செய்யப்பட்டிருக்க லாமா? என்கின்ற கேள்வியும் இருக்கின்றது. முதல்நாள் காணாமல் போனவரை அருகி லுள்ள தோட்டத்தில் தேடவில்லை என்கின்ற கேள்வியும் உள்ளது. இன்னார், இன்னாரால் உயிருக்கு ஆபத்து என கடிதத்தை பரவ விட்டுள் ளார்கள். ஏன் முதலிலேயே போலீஸிற்கு தெரியப்படுத்தவில்லை. தனக்கு கடிதம் வர வில்லை என்பதனை எஸ்.பி.யே மறுத்திருக்கின் றாரே? கடுமையான பொருளாதார நெருக்கடி... வரவேண்டிய பணமும் வரவில்லை. இருப்ப தையும் காலி செய்துவிடுவாரோ? என்கின்ற அடிப்படையில் குடும்பத்தாரே செய்திருக்க லாமே.? என்கின்ற கோணத்திலும் விசாரணை யை முடுக்கியுள்ளோம்'' என்கின்றார் அவர்.
ஜெயக்குமாரின் மரணத்தின் போது எவ்வித அழுகையும் ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை குடும்பத்தார் என்பது குறிப் பிடத்தக்கது. மூன்றுவிதமான கோணங்களில் முன்னேறும் காவல்துறை விரைவில் குற்ற வாளியை முன்நிறுத்த வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கை.
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்