ராங்கால் எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா! கனவில் மிதக்கும் பிரேமலதா! நீயா? நானா? கைது பீதியில் கமலாலயம்! அலறவிடும் ஆருத்ரா!

ff

"ஹலோ தலைவரே, தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் ஒருவித திகைப்பைப் பார்க்க முடிகிறது.''”

"ஆமாம்பா, தே.மு.தி.க. கூட்டிய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், பரபர காட்சிகள் எல்லாம் அரங்கேறுச்சே?''”

premalathavijayakanth

"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆனதைத் தொடர்ந்து அவர் தரப்பினரை சங்கடப்படுத்தும் விதமாக பல்வேறு வதந்திகள் உலவ ஆரம்பித்தது. இதனால் பதறிப்போன அவர் தரப்பு, இது குறித்து விளக்கங்களைக் கொடுத்தும், அவரது அபிமானிகளின் கவலை தீரவில்லை. இந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆன விஜயகாந்தை, கடந்த 14ஆம் தேதி அவசரமாகக் கூட்டப்பட்ட தே.மு.தி.க.வின் அந்தக் கூட்டத்திற்கு, வீல் சேரிலே அழைத்து வந்து விட்டார் பிரேமலதா. உடல் நலம் குன்றிய நிலையிலும் தொண்டர்களைப் பார்த்து கையசைக்க முயன்ற விஜய காந்த்தைப் பார்த்து, அனைவரும் பதட்டமாகிவிட்டார்கள். நாம் பல மாதங்களுக்கு முன்பே பேசிக்கொண்ட மாதிரி, இந்தக் கூட்டத்தில் பிரேமலதா, கட்சியின் முழு அதிகாரத்தை யும் கையில் எடுக்கும் வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் அதிகாரப் பூர்வமாக அமர்ந்தார். இதைத் தொடர்ந்து டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று தெரிவிப்போம் என்றும் பிரேமலதா அறிவித்திருக்கிறார். இது தே.மு.தி.க.விற்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.''”

"பிரேமலதா அதிகாரக் கனவில் மிதக்கிறார் என்கிறார் களே?''”

"யாருடன் கூட்டணி என்று டிசம்பரில் அறிவிப்பேன் என்று பிரேமலதா வெளியில் சொன் னாலும், அவரைப் பொறுத்த வரை, பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டாராம். தனக்கு ரோல்மாடல் ஜெயலலிதா என பிரேமலதா சொல்வ துடன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எம்.பி. தேர்தலில் தானே நின்று எம்.பி.யாகி, அதன்மூலம் ஒன்றிய அமைச்சராகவும் ஆகிவிடவேண்டும் என்பதுதான் பிரேம லதாவின் பிரதான கனவு என்கிறார்கள், அவர் மனநிலையை அறிந்திருக்கும் அக் கட்சியின் சீனியர்கள். அதற்காக இப்போதே பா.ஜ.க. தரப்புக்கு பலவிதத்திலும் அவர் தூது விட்டு வருகிறாராம். பிரேமலதாவின் மத்திய மந்திரியாகும் கனவுதான், மருத்துவமனையின் கிரிட்டி கல் கேர் யுனிட்டில் இருந்த விஜயகாந்தை, இத்தனை அவசரமாக கட்சியின் பொதுக்குழுவுக்கு அழைத்து வர வைத்து, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் அமர வைத்திருக்கிறது என்கிற அந்த சீனியர்கள், விஜயகாந்த் துக்கு இருக்கும் உடல் நிலையில், அந்தக் கூட்டத்தை இவ்வளவு அவசரமாக நடத்தி, அதற்கு அவரை அழைத்து வந்திருக்கக்கூடாது என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.''”

"அவரவருக்கும் அவரவர் கோணம். சரிப்பா, ஆருத்ரா நிதி நிறு வன மோசடி விவகாரம் எதிர்பாராத திசைகளில் எல்லாம் நகர்கிறதே?''”

annamalai

"ஆமாங்க தலைவரே, இந்த ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு பா.ஜ.க. தரப்பை மிக ம

"ஹலோ தலைவரே, தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் ஒருவித திகைப்பைப் பார்க்க முடிகிறது.''”

"ஆமாம்பா, தே.மு.தி.க. கூட்டிய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், பரபர காட்சிகள் எல்லாம் அரங்கேறுச்சே?''”

premalathavijayakanth

"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆனதைத் தொடர்ந்து அவர் தரப்பினரை சங்கடப்படுத்தும் விதமாக பல்வேறு வதந்திகள் உலவ ஆரம்பித்தது. இதனால் பதறிப்போன அவர் தரப்பு, இது குறித்து விளக்கங்களைக் கொடுத்தும், அவரது அபிமானிகளின் கவலை தீரவில்லை. இந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆன விஜயகாந்தை, கடந்த 14ஆம் தேதி அவசரமாகக் கூட்டப்பட்ட தே.மு.தி.க.வின் அந்தக் கூட்டத்திற்கு, வீல் சேரிலே அழைத்து வந்து விட்டார் பிரேமலதா. உடல் நலம் குன்றிய நிலையிலும் தொண்டர்களைப் பார்த்து கையசைக்க முயன்ற விஜய காந்த்தைப் பார்த்து, அனைவரும் பதட்டமாகிவிட்டார்கள். நாம் பல மாதங்களுக்கு முன்பே பேசிக்கொண்ட மாதிரி, இந்தக் கூட்டத்தில் பிரேமலதா, கட்சியின் முழு அதிகாரத்தை யும் கையில் எடுக்கும் வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் அதிகாரப் பூர்வமாக அமர்ந்தார். இதைத் தொடர்ந்து டிசம்பரில் யாருடன் கூட்டணி என்று தெரிவிப்போம் என்றும் பிரேமலதா அறிவித்திருக்கிறார். இது தே.மு.தி.க.விற்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.''”

"பிரேமலதா அதிகாரக் கனவில் மிதக்கிறார் என்கிறார் களே?''”

"யாருடன் கூட்டணி என்று டிசம்பரில் அறிவிப்பேன் என்று பிரேமலதா வெளியில் சொன் னாலும், அவரைப் பொறுத்த வரை, பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டாராம். தனக்கு ரோல்மாடல் ஜெயலலிதா என பிரேமலதா சொல்வ துடன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எம்.பி. தேர்தலில் தானே நின்று எம்.பி.யாகி, அதன்மூலம் ஒன்றிய அமைச்சராகவும் ஆகிவிடவேண்டும் என்பதுதான் பிரேம லதாவின் பிரதான கனவு என்கிறார்கள், அவர் மனநிலையை அறிந்திருக்கும் அக் கட்சியின் சீனியர்கள். அதற்காக இப்போதே பா.ஜ.க. தரப்புக்கு பலவிதத்திலும் அவர் தூது விட்டு வருகிறாராம். பிரேமலதாவின் மத்திய மந்திரியாகும் கனவுதான், மருத்துவமனையின் கிரிட்டி கல் கேர் யுனிட்டில் இருந்த விஜயகாந்தை, இத்தனை அவசரமாக கட்சியின் பொதுக்குழுவுக்கு அழைத்து வர வைத்து, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் அமர வைத்திருக்கிறது என்கிற அந்த சீனியர்கள், விஜயகாந்த் துக்கு இருக்கும் உடல் நிலையில், அந்தக் கூட்டத்தை இவ்வளவு அவசரமாக நடத்தி, அதற்கு அவரை அழைத்து வந்திருக்கக்கூடாது என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.''”

"அவரவருக்கும் அவரவர் கோணம். சரிப்பா, ஆருத்ரா நிதி நிறு வன மோசடி விவகாரம் எதிர்பாராத திசைகளில் எல்லாம் நகர்கிறதே?''”

annamalai

"ஆமாங்க தலைவரே, இந்த ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு பா.ஜ.க. தரப்பை மிக மோச மாகப் பாதிக்கும் அளவுக்கு விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்டிருக்கும் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான ராஜசேகர், வரும் 31 ஆம் தேதி சென்னைக்குக் கொண்டு வரப்பட இருக்கிறார். இவரிடம் பெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில், மோசடிக்கு ஆதரவாக இருந்த அண்ணாமலை தொடங்கி, பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளான அமர்பிரசாத் ரெட்டி, கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கைது செய்யப்படலாம் என்று அச்சம் அந்தத் தரப்பிற்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இவர் களைத் தப்ப வைக்க என்ன செய்யலாம் என்று பா.ஜ.க. வழக்கறிஞர்கள், தீவிர ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மோசடிப் பணத்தின் ஒரு பகுதியை ராஜசேகர் வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றதால், இந்த விவகாரத்தை தங்கள் வசமுள்ள அமலாக்கத்துறையிடம் தள்ளி விடலாம் என்று முடிவெடுத்து, அவர் களுக்கு வேண்டுகோளும் வைத்திருக் கிறார்கள். அதே சமயம் இந்த ஆருத்ரா விவகாரத்தை விசாரித்து வரும் மாநில பொருளாதாரக் குற்றப் பிரிவினரோ, இதைத் தங்கள் பிடியில் இருந்து நழுவவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். இத னால் இந்த விவகாரம் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான பிரச்சினையாக மாற லாம் என்கிற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.''

"அதுசரிப்பா, முதல்வரின் மழைவெள்ள நிவாரண நிதிக்கு காங்கிரஸ் தரப்பு உதவ முன்வரவில்லையே?''”

“"ஆமாங்க தலைவரே, மிக்ஜாம் தாக்கத்தால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்திருக்கும் நிலையில், அனைவரும் நிவாரண உதவிக்குத் தங்களால் ஆன நிதியை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார். முதல்வரும் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்து, ஆளும்கட்சியினரையும் நிதி வழங்கத் தூண்டினார். இதைத் தொடந்து பல தரப்பினரும் நிவாரணத்திற்கான நிதி வழங்கி வருகின்றனர். அதேபோல தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன், தன்னுடைய இரண்டு மாத பென்ஷன் தொகையை முதல்வரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தங்களின் 1 மாத சம்பளத்தை இதற்கு வழங்குவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ். அழகிரி அண்மையில் அறிவித்தார். ஆனால், இதை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏற்காததோடு, இப்படி வழங்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம்.''”

"அவர்களுக்கு இதில் என்ன தயக்கம்?''”

"காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட கருத்து இதுதான். ’தி.மு.க. ஆட்சியில் ஒரு காண்ட்ராக்ட் வேலை கூட நமக்கு கிடைப்பதில்லை. அத னால் வருமானமும் நமக்கு இல்லை. அப்படி இருக்க, நாம் எதற்கு தி.மு.க. அரசுக்கு உதவ வேண்டும்? இப்படி வசூலிக் கப்படும் தொகை முதல்வரின் பொது நிவாரண நிதிக்குதான் போகும். மிக்ஜாம் நிவாரண நிதி உதவி என தனி கணக்கு தொடங்கப்பட்டு அதன்மூலம் நிதி கேட்டிருந்தால் கூட நாம் யோசிக்கலாம். அதுவும் இல்லை. அதனால், நாம் கண்டு கொள்ளாமல் இருப்போம்’ என்று தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம். இதற்கிடையே முதல்வரிடம் நிதி கொடுப்பதை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவவரான ரஞ்சன் குமாரோ, இது குறித்து கே.எஸ்.அழகிரிக்கு எழுதிய கடிதத்தில், நம் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் 1 மாத சம்பளத்தைப் பெற்று, மக்களுக்கு தேவையான நிவாரணத்தை காங்கிரஸ் கட்சியே நேரடியாகக் களமிறங்கி வழங்க வேண்டும். அப்போதுதான் நம் கட்சி மீது மக்களுக்கு மதிப்பு வரும் என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.''”

"தன்னை முற்றுகையிட்டிருந்த பெரும் சிக்கலில் இருந்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டிருக்கிறாரே?''

"ஆமாங்க தலைவரே, சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிளை விரித்திருந்த பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு 150 கோடி ரூபாய் வரை நிதி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் கிளம்பியது. இதைத் தொடர்ந்து தலைமறைவான இதன் உரிமையாளர் மதன், மதுரையில் சரணடைந்து விட்டார். அடுத்து, இந்த மோசடி விவகாரத்தில், மதனின் மனைவி கார்த்திகாவும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்த நிதி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டிருந்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், இந்த மோசடி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குபீர் குற்றச்சாட்டு எழ, பிரகாஷ்ராஜ் தரப்பு ரொம்பவே மிரண்டுபோனது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்துவரும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், ’நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான புகார் குறித்து விசாரித்தோம். அவருக்கு மோசடியில் தொடர்பில்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே அவரை சம்மன் அனுப்பி நாங்கள் விசா ரிக்கப் போவதில்லை’ என்று அறிவிக்க, ’"அப்பாடா தம்பிச்சோம்டா சாமி'’என நிம்மதிப் பெருமூச்சுவிடத் தொடங்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.''”

"எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். தரப்பால் மீண்டும் ஒரு சட்டச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதே?''”

ff

"ஆமாங்க தலைவரே, கடந்த 2022 ஜூலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்ட நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தை யார் கைப் பற்றுவது? என்கிற கோதாவில் இறங்கிய எடப்பாடி தரப்பும், ஓ.பி.எஸ். தரப்பும், கடுமையாக மோதிக்கொண்டன. அபோது கட்சி அலுவலகத் துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றதாக ஓ.பி.எஸ். தரப்பு மீது, எடப்பாடித் தரப்பு போலீஸில் புகார் கொடுக்க, பதிலுக்கு, தங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக ஓ.பி.எஸ். தரப்பும், எடப்பாடித் தரப்பு மீது புகார் கொடுத்தது. இந்தப் புகார்கள் நிலுவையில் இருந்ததால், ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி.பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக எடப்பாடித் தரப்பு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு உத்தரவிட்டது. இந்த சூழலில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட பிரபாகரன், தங்களை எடப்பாடி தரப்பு எப்படி எல்லாம் தாக்கியது என்று பகீரூட்டும் வகையில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிற டாக் அவர்கள் தரப்பிலேயே எழுந்திருக்கிறது.''”

’"அ.தி.மு.க. சொத்துக்களை கட்சி நிர்வாகி ஒருவர் விற்றுக் கொண்டிருக்கிறார் என்கிற புகார் கிளம்பியிருக்கிறதே?''”

“"சென்னை லாயிட்ஸ் சாலையில், அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கத்துக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் இருந்தது. அது அண்மையில் கணிசமான விலைக்கு விற்கப்பட்டிருக் கிறது. இதேபோல் அண்ணா நகரில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிரவுண்ட் நிலமும் அவசர கதியில் விற்கப்பட்டிருக்கிறது. இப்படி கண்ட மேனிக்கும் கட்சி சொத்துக்களை விற்பவர், முன்னாள் எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாதான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதேபோல் கட்சிக்குச் சொந்த மான, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருந்த ஒரு சொத்தும் விற்கப் பட்டிருக்கிறதாம். சத்யாவிற்கு மாஜி மந்திரி வேலுமணியின் சப்போர்ட் இருப் பதால் இதைத் தடுக்கமுடியாமல் கைபிசைகிறாராம் எடப்பாடி. இந்தத் தக வல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.''”

ff

"ஆட்சியில் செல்வாக்கு பெற்றவராகக் காட்டிக்கொண்டிருந்த சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, டம்மி பதவிக்கு மாற்றப்பட்டி ருக்கிறாரே?''”

’"அண்மையில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. அதில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த அம்ரேஷ் பூஜாரியும் ஒருவர். ஆட்சிக்கு விசுவாசிபோல் காட்டிக்கொண்டிருந்த இவர், அமைச்சர் உதயநிதியை அழைத்து சில நிகழ்ச்சி களை நடத்தி, அவருக்கும் தான் நெருக்கமானவ ராக பலரையும் நம்ப வைத்தார். இருந்தும் அவரை இப்போது புகழூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையின் ffதலைமை கண்காணிப்பு அதிகாரியாக தூக்கியடித்திருக்கிறார்கள். கார ணம், பா.ஜ.க. தரப்போடு ரகசியமாக நெருங் கிய நட்பில் இருந்த பூஜாரி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. அரசு தொடர்பான சில தகவல்களை பகிர்ந்து வந்தாராம். இது தெரிந்ததால்தான், அவர் இப்போது டிரான்ஸ் பரில் தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறார் என்கி றார்கள். அதே சமயம், திருப்பூரில் 930 கோடி மோசடி செய்த பாசி நிறுவனத்தின் பெண் இயக்குனரை கடத்தி, பணம் பறித்தாக சி.பி.ஐ. வழக்கில் சிக்கியிருக்கும், சர்ச்சைக்குரிய அதி காரியான பிரமோத் குமார் ஐ.பி.எஸ்., தற்போது டான்ஜெட்கோ நிறுவன தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது காவல்துறை வட்டாரத்திலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.''”

"கோவை மாநகராட்சியில் பெரும் சலசலப்பு தெரிகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, கோவை மாநக ராட்சி கமிஷனராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதி காரியான சிவகுரு பிரபாகரனும், துணை மேய ரான வெற்றிச்செல்வனும் கைகோத்துக் கொண்டு, நிர்வாகத்தை ஆட்டி வைக்கிறார் களாம். மாநகராட்சியின் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் அனுமதி தராமல் இழுத்தடிக்கும் கமிஷனர், வெற்றிச்செல்வன் சொல்வதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டு செய்கிறாராம். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின் அலுவல கத்திலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவு களையும்கூட அவர் மதிப்பதில்லையாம். இது ஒருபுறம் என்றால் துணை மேயரான வெற்றிச்செல்வன், அங்குள்ள கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களையும், அலுவலர்களையும் சாதிரீதியாக விமர்சித்து, அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறாராம். இது சம்பந்தமான புகார்கள் தற்போது அறிவாலயம் வரை பறந்துகொண்டு இருக்கிறதாம்.''”

"இன்னும் கனிமவள சுரண்டல் நிற்கவில்லையே?''”

ff

"மணல் குவாரி பிசினஸில் கொடிகட்டிப் பறந்த மும்மூர்த்திகளான ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம் ஆகியோரைக் குறிவைத்து அதிரடி ரெய்டுகளை நடத்தி, அவர்களை முடக்கியது அமலாக்கத்துறை. இந்த நிலையில், நீர்வளத்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் என பலரையும் விசாரணைக்கு அழைத்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன் நோக்கம் மேலிடம்தான் என்பதைப் புரிந்து கொண்ட தமிழக அரசு, மணல் உள்ளிட்ட கனிமவள விவகாரத்தை விசாரிக்கும் உரிமை அமலாக்கத்துறைக்கு இல்லை என்று நீதிமன் றத்திற்குச் சென்றது. இந்த நிலையில், மணல் தொழிலை அப்படியே விட்டுவிட்டு எஸ்கேப் ஆனவர்களில், இப்போது கரிகாலன் தரப்பும் ரத்தினம் தரப்பும், ஆற்று மணலை விட்டு விட்டு, மெதுவாக கல்குவாரிகள் மற்றும் சவுடு மண் ஆகியவற்றின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி, ஜரூராக சுரண்டத் தொடங்கிவிட்டன. இவர்களால் கனிமவளத்துறை அதிகாரிகளின் காட்டிலும் ’அடைமழை ஆரம்பித்துவிட்டதாம்.''

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். மழைவெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு டிசம்பர் 24ஆம் தேதி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் புயல் வேகத்தில் நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டா லின், மாநாடு முடிந்த உடனேயே, வெளிநாடு செல்லத் திட்டமிட்டி ருக்கிறாராம். ஜனவரியில் சென்னையில் நடக்க இருக்கும் உலக முதலீட் டாளர்கள் மாநாடு தொடர் பான டூர் அது என்றும் சொல்கிறது கோட்டைத் தரப்பு.''

nkn201223
இதையும் படியுங்கள்
Subscribe